வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அவ்வை பிராட்டியார் Kovai ஆவி பஸ்ஸுக்காக காத்துக்கொண்டு இருக்கும் காட்சி.

பொதிகை மலையில் இன்று காலை....


முருகா....

 பழனி மலை ஆண்டவா ...   கால் ரொம்பவே கடுக்குதடா...

இன்னும் ஒன்னாம் தேதி புறக்க இன்னும் ஒரு நாள் தான் கீது.

அந்த கோவை ஆவிக்காரன் பஸ் புடிச்சு வாரேன்.  அங்கனேயே இரு கிழவி
அப்படின்னு செல்லுலே சொன்னானே...

நம்ம போய் ரீச் ஆறதுக்கு முன்னாடி மா நாடு முடிந்து விடும் போல இருக்கே ..
சசிகலா அம்மாவுக்கு ஒரு போட்டியே இருக்காது போல இருக்கே...

(முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார்.)

அவ்வை பிராட்டியே  ..  தமிழ் பதிவர் மா நாட்டுக்கு தாங்கள் செல்ல நினைத்தது குறித்து எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 

இதோ...இந்த மயில் வாகனத்தில் ஏறிக்கொள்ளுங்கள்.  அரை நொடியிலே வட பழனி சென்று விடுவோம். 


அங்கு தானே எம் உறைவிடம் உள்ளது .  அந்த கர்பகிருஹத்திற்குள்ளே சென்று ஒரு மணி நேரம் அமர்ந்து விட்டு செல்வோம். வாரு ங்கள். 

பதிவர் விழா துவங்குமுன்  அருகே உள்ள வட பழனி   சரவண பவனில் சூடான ஒரு டிக்ரீ காபி குடித்து விடலாம். 




துளசி மேடம் மலேசிய பயணத்தில் இருந்து அங்கு இருக்கும் சரவணா பவனில் பஜ்ஜி போண்டா வாங்கி அனுப்பி இருக்கிறார்கள். அதையும் ஒரு கை பார்க்கலாம்.  நீங்கள் போவதுற்க்குள்ளே அத்தனியும் காலியாகாம இருக்கணும். சுப்பு தாத்தா ஒன்டியாவே அத்தனையும் தின்னுடுவார்.  அத்தனை டேஸ்ட் , ஐ மீன் சுவை அவ்வை அன்னையே ....


முருகா.. ஆனந்த விஜய ராகவன் ஆவி  போன்ற தமிழ் அன்பர் பஸ் எடுத்து வருவதாகச் சொல்லியிருக்கிறாரே  ...  

அவரை ஏமாறச் செய்வது தகுமோ தகுமோ ?

வந்துகொண்டே இருப்பாரே  . கோவை லேந்து   வரவேண்டும் இல்லையா. நாம் இல்லை இன்றால் மனம் உடைந்து போய்விடுவாரே  பெட்ரோல் பங்கிலே ஏதேனும் க்யூவிலே .நிற்கிறாரோ ? 

நாமோ பொதிகை மலையில் உள்ளோம். 

வரேன் சொன்னா கண்டிப்பாக   வருவார். . இல்லையா..

அது சரி, தாங்கள் எங்கே இருக்கிறீர்கள்  அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னீர்களா ?   

ஆஹா...பொதிகை  மலை உச்சியிலே அப்படின்னு திருப்பி திருப்பி சொன்னேனே...

ஆவி புரிஞ்சுகிட்டேன் அப்படின்னு சொன்னாரே ....ஒரு வேளை அந்த ஆனந்த விஜய ராகவன் நடுவில் ஏதேனும் டிராபிக் ஜாமில் அகப்பட்டுக் கொண்டாரோ ??  

அவ்வையே  தமிழ் அன்னையே 
எத்தனை நேரம் நீங்கள் கால் கடுக்க காத்திருப்பது ?
நீங்கள் என்னுடன் வாருங்கள், பழனி மலைக்கே சென்று விடலாம்.

மன்னிக்கவேண்டும் முருகா.  எனக்கு பதிவர் மா நாடு செல்வது ஒரு தமிழ் தொண்டு. அது என் கடமையும் கூட.  

ஆக, என்னை விட உனக்கு தமிழ் தான் முக்கியமா அவ்வையே ..

இல்லையா முருகா..  தமிழ் தானே என் உயிர்... அதற்காகத்தானே இந்த தமிழ் பதிவர் மா நாட்டுக்கு கால் கடுக்கச் சென்று கொண்டு இருக்கிறேன்.
தமிழ் தமிழ் என்று ஒரு ஐந்து கோடி உலகத் தமிழினமே அந்த மா நாட்டினை சிறப்புற நடத்த செயல்பட்டு கொண்டுள்ளதே ..

அப்ப வைட் பண்ணு அவ்வையே...  அது வரைக்கும்

 சுட்ட பழமா சுடாத பழமா அப்படின்னு ஒரு பாட்டு போட்டிலே  அந்த காலத்துலே , அதை எடுத்து விடு. 


பஸ்  வர்ற வரைக்கும் அந்த ஞானப்பழத்தை எடுத்து போடு...


நானும் இன்னொரு தரம் கேட்கறேன்.  



  







8 கருத்துகள்:

  1. பதிவர் மாநாட்டுக்கு அவ்வை வருகிறாரா?

    யாரைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே....!

    (ஹிஹிஹி...)

    பதிலளிநீக்கு
  2. ஔவை பிராட்டியார் தான்.
    அதில் ஐயம் என்னவோ ?

    படத்தை பார்க்கவில்லையோ?
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. சரவணபவன்??? எனக்கு வேணாம்பா! ஸ்டிக்கர் பொட்டு மாதிரி இட்லி, வளையல் சைசுக்கு தோசை, சுண்டைக்காய் மாதிரி போண்டோ! யாருக்கு வேணும்! நான் வரலை! ஒன்லி கீதா பவன் ஒரிஜினல்!

    பதிலளிநீக்கு
  4. நல்ல நயமான பதிவு!.. ஆனால் நமக்குத் தான் வாய்ப்பு இல்லை!.. இருப்பினும் சிறப்புடன் நிகழ முருகன் திருவருள் முன் நிற்கும்!..

    பதிலளிநீக்கு
  5. சிறந்த கற்பனை, படிக்க படிக்கச் சுவை. தங்களைப் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதால் பதிவர் திருவிழா களைகட்டும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை,

    பதிலளிநீக்கு
  6. அச்சச்சோ, தாத்தா நான் பதிவை இப்போதான் படித்தேன். இப்படி ஆயிடுச்சே?

    தமிழுக்கு தீங்கிழைத்த ஆவி..(http://www.kovaiaavee.com/2013/09/blog-post_5.html)

    பதிலளிநீக்கு
  7. ஆவி சொன்ன மாதிரி அவ்வைப்பாட்டி செல்போனுடன் வந்திருந்தா இந்தத் தவறு நடந்திருக்காதே...:)

    பதிலளிநீக்கு