சுப்பு தாத்தாவின் அன்றாட அனுபவங்கள். அலசல்கள்.TO LAUGH AT ONESELF IS THE GREATEST GIFT OF GOD. I AM SO GIFTED AND I AM PROUD OF THAT.
வியாழன், 28 ஆகஸ்ட், 2014
வியாழன், 21 ஆகஸ்ட், 2014
டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்
இந்தக் காலத்துலே புள்ளைய, ப்ளஸ் டூவுக்குப் பின்னே, டாக்டருக்குப் படிக்க வைக்கறதை , புள்ள டாக்டர் படிப்பு படிக்கிறதை விட, லட்ச லட்சமா இல்ல கோடி கோடியா பணம் கொட்டிட்டு, அத திருப்பி எடுக்க என்ன வழி என்று தேடுவதை விட,
ஒரு லாப் Lab ஆரம்பித்து விட்டு அதில் இரண்டு மூணு டேக்நீஷியனை வேலைக்கு போட்டு, ஒரு ரேடியாலஜிஸ்ட், ஒரு டாக்டர் , வேலைக்கு அமர்த்தி, மாசம் மாசம் மினிமம் இருபது லட்சம் கிடைக்க வழி பண்ணலாம் என்று பல பெற்றோருக்கு ,
விஜய் டி.வி.கோபிநாத் அவர்களின் நீயா நானா ப்ரோக்ராம் பார்த்து தோன்றியிருக்கலாம் என்று சொன்னால்,
அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
என்ன ? ஒரு பத்து பதினைந்து டாக்டரோட கிருபை இருந்தா போதும். என்றும் தோன்றுகிறது.
எந்த வீதியிலும் இன்னிக்கு 2 அல்லது மூணு லாப், எக்ஸ் ரே, ஸ்கான் செண்டர் பார்க்கறோம்.
ஆடித் தள்ளுபடி இப்ப மாஸ்டர் ஹெல்த் செக் அப்புக்கும் வந்தாச்சு.
2500 ரூபா . அடுத்த 10 நாட்களுக்கு ரூபா 1499 ல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் நலனுக்காக.
என்ற போர்டு
ஏதோ புதுப்பட பேனர் banner மாதிரி ஆங்காங்கே காண்கிறோம்.
ஒவ்வொரு நாளும் எதுவாவது ஒரு இடத்தில், அவரிநேஸ் ப்ரோக்ராம் awareness program.
சக்கரை இருக்கா ? அர்த்ரிடிஸ் இருக்கா, blood pressure எத்தனை
?நீங்கள் குண்டா ? கவலைபடாதீர்கள். ஒரே நாளில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க முடியும்.
ஒல்லியாக இருந்தாலும் இவர்கள் விடுவதில்லை.
திடீர் என்று உங்களுக்கு எடை குறைந்து போய் இருக்கிறதா?
உங்கள் பி எம். ஐ. எத்தனை?
உங்களுக்கு கான்சர் இருக்கிறதா என்று செக் செய்தீர்களா?காச நோய் இருக்கிறதா ?
வயசானாலும் ப்ராஸ்டேட் செக் பண்ணிக்குங்க. பின்னாடி கஷ்டபடாதீக.
இது போல எங்க பார்த்தாலும் ஒரே விளம்பரம் கலர் கலரா.
நம்ம உடம்பு நல்லா இருக்கணுமே அப்படின்னு கவலைப் படரவங்க நிறையவே இருக்காங்க.
நம்ம போய் சேரும் வரை, கடைலே சக்கரை ஸ்டாக் இருக்கனுமே என்று ரேஷன் ஷாப் போகிறவர்களை விட,
நம்ம உடம்புலே சக்கரை இருக்கக் கூடாதே என்று டயக்நோச்டிக் செண்டர் போகிறவர்கள் தான் இன்று அதிகம்.
இல்லாத வியாதியைத் தேடி அலைகிறோம் என்று சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.
சில சமயம் வியாதிகளை நாமே வருந்தி வருந்தி அழைக்கிறோம் என்று சொன்னாலும் சரிதான். நல்ல உடம்பை வருத்திக்கொள்கிறோம் என்றாலும் உண்மைதான்.
கடந்த ஒரு இருபது வருசங்களா, என்னை மாதிரி கிழங்கள் , இன்னாடா, டாக்டர் கிட்டே போனோமா, மருந்து கொடுத்தாரா , சாப்பிட்டு இரண்டு நாள், மூணு நாள் , மாக்சிமம் அஞ்சு நாள்லே குணமானோமா இல்ல, போய் சேர்ந்தோமா என்று இல்லாம,
அந்த பிளட் டெஸ்ட் இந்த மோஷன் டெஸ்ட், சி.டி,ஸ்கான், டி.வி.டி. ஸ்கான், ஒரு பல் சொத்தையா போயிடுச்சுன்னா, வாய் முழுக்க அல்ட்ரா சோன் ஸ்கான் எல்லாம்...
போதுமடா சாமி என்று இருக்கிறது.
காஷ்யபன் மட்டும் இல்ல சுரேகா சார் மட்டும் அல்ல, , நிறைய பேருக்கு இந்த மருத்துவர்கள் படுத்தும் பாடு, பொது மக்கள் படும் வேதனை இருப்பதை அந்த ப்ரோக்ராம் லே பப்ளிக் பார்ட் லேந்து இரண்டு பேர் கோபப்பட்டு பேசியது, கோபிநாத் அவர்கள் நடு நடுவே டாக்டர்களை சாடினதுஎல்லாம் பார்த்து தெரிகிறது.
இத்தனையும் போதாது என்று அந்த ப்ரோக்ராமிலே ஒரு டாக்டர்,
"சார் !! நாங்கள் எல்லாம் நல்லவங்க சார், நம்புங்க சார், எங்களை சம்பளத்திலே வெச்சு இருக்கிற ஆஸ்பத்திரி கட்டாயத்துலே தான் இதெல்லாம் டெஸ்ட் செய்யச்சொல்லி சொல்றோம்" சத்யம் பண்றது போல ,
ஏதோ ஒரு புதுசா உண்மையை யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு சொன்னதும்
அந்த அப்சர்வர் ராஜ் குமார். எதோ ஒரு பெரிய ஹாஸ்பிடல்.சேர்மனாம் ஒருவர்
இன்னிக்கு தேதியிலே மருத்துவ இண்டஸ்ட்ரி முழுக்கவே யார் கையிலே இருக்கு அப்படின்னு புட்டு புட்டு வெச்ச பின்னே,
நல்லாவே நாம் புண்ய பூமியாம் நமது பாரத பூமியிலே என்ன என்ன நடக்குது அப்படின்னு தெரியறது. தெரிஞ்சுகிட்டோம்.
ஊரை புரிஞ்சுகிட்டேன். சாமி. கோபிநாத்துக்கு நன்றி.
ஆனா இன்னொரு பக்கம்.
அஞ்சு வருஷம் படிச்சு, அதுக்கப்பறம் இன்டர்ன் ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் பண்ணிட்டு வரவங்களுக்கு எல்லாருக்குமே கவர்ன்மெண்ட் வேல கொடுக்க முடியாத நேரத்துலே,
டாக்டர்களும் படிச்சு முடிச்சபரம், கை நிறைய சம்பாதிக்க என்னதான் பண்ணுவாங்க நீங்க சொல்லுங்க
ப்ரைவேட் ஆஸ்பத்திரி பெரிய ஹாஸ்பிடல், அங்க இருக்கிற பாஸ் சொல்றபடிதானே நடக்கணும்.
எங்கே யும் எப்போதும்
பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்
.Boss is Always right.
மனித நேயமாவது வெங்காயமாவது !!
சுப்பு தாத்தாவுக்கும் லேடஸ்டா ஒரு அனுபவம்.
சொல்றேன் கேளுங்க.
பேரப்புள்ள இப்பதான் பத்து வயசு முடிஞ்சு இருக்கு.
அமெரிகாவிலேந்து சம்மர் வெகேசனுக்கு வந்து இருக்காப்போல.
அந்த ஊர் கிளைமேட் இந்த ஊர் கிளைமேட், பகல் அங்கேன்னா நைட் இங்கே.
இந்த புள்ள, ராத்திரி 2 மணிக்குதான் தூங்க ஆரம்பிக்குது. பகல் ஒரு மணிக்குதான் எந்திருச்சு, உடனே ஐ. பாட் பார்க்க ...
அந்த புள்ளையோட அம்மாவுக்கு ஒரே கவலை. எனக்கும் தான்.
என்ன ?
மூணு நாளைக்கு ஒரு தரம், சில சமயம்,4 நாள், சில சமயம்
அஞ்சு நாளைக்கு ஒரு தரம் ஸ்டூல்ஸ் மலம் கழிக்க போகிறான்.
வல்லையே நான் என்ன செய்யட்டும் அப்படின்னு சொல்றான்.
நான் அடிக்கடி சொன்னா, டோண்ட் அன்னாய் மி
அப்படின்னு இங்க்லீஷ் லே திட்டறான்.
எதிர்த்தாபோல இருக்கற குழந்தை ஸ்பெசலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போனா என் பொண்ணு.
அந்த டாக்டர் எம்.டி. டி.என்.பி. டிப் .சி.ஹெச். M.D.(paediatric) , DNB, Dip.in child health, அப்படின்னு எல்லாம் படிச்சவரு.
அவங்க மிசர்சும் டாக்டரு.
ஒரு இரண்டு நிமிஷம் கேட்டுட்டு,
பையனைப் பார்த்து டாக்டர் கேட்டாரு.
தினம் என்ன சாப்பிடற ? எப்ப சாபிடற ?
வாட் ? என்று கேட்டான் பேரன்.
டாக்டர், அவனுக்கு லோகல் தமிழ் புரியாது.பெட்டெர் யூ டாக் இன் இங்க்லீஷ் என்று தூய தமிழில் நான் சொன்னேன்.
உடனே, டாக்டர் அவனிடம், வென் டு யூ ஈட் ? என்றார்.
வென் ஐ டோன்ட் ஸ்லீப் என்றான் பேரன்.
டாக்டர் கொஞ்சம் பொறுமை ஜாஸ்தி.
ஒ.கே. வாட் டூ யூ ஈட் ? என்றார் .
சாக்லேட், பிச்சா என்றான் .
வேர் where டூ யூ ஈட் என்று டாக்டர் கேட்க,
ஹியர் என்று தன் வாயைக் காட்டினான்.
பையனை படுக்கச் சொல்லி,இந்த சைடு, அந்த சைடு அமுக்கி வலி இருக்கா என்றெல்லாம் கேட்டார்.
யூ ஆர் ஒன்லி பைநிங் மீ என்றான் பேரன்.
ஓகே ஓகே என்ற டாக்டர் அவனை உட்காரச் சொல்லிவிட்டு,
இது bowel movement ப்ராப்ளம் தானா இல்ல வேர ஏதாவது குடல்லே கன்ச்ற்றிக்சன் constriction , obstruction ப்ராப்ளமா என்று சீக்கிரம் முடிவு பண்ணியாகணும்
என்று சொல்லும்போதே,
எனக்கு வயற்றை கலக்கி கிட்டத்தட்ட அங்கேயே டூஸ் வந்து விட்டது.
எனது பெண் லேசா கண்களை துடைத்துகொண்டாள். பொது இடத்தில் அழுவது அவளுக்கு பிடிக்காது.
.சீரியஸ் ஸா இருபது டெசி பெல்லிலே கேட்டாள் .
எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துண்டு வாங்க. என்றார்.
அடுத்த நாள் காலை,
பக்கத்துலே ஒரு பிரபல லாப் சென்று எடுத்து வந்தோம்.
மொத்த செலவு 2500 ரூபா. சனிக்கிழமை வந்து வாங்கிக்கொண்டு போங்க. என்றார்கள்.
சனிக்கிழமை ரிபோர்டை எடுத்துண்டு வந்தா எல்லாமே டெஸ்டுமே நார்மல் தான்.
ஆனா, ரிபோர்ட் வருவதற்கு முன்னாடியே நான் எனக்குத் தெரிஞ்ச பாமிலி பிசிஷியன் கிட்ட( அவர் ஒரு சாயீ பக்தர் ) 55 வருஷ அனுபவஸ்தர். பாமிலி டாக்டர். போயி கேட்டா,
இதுக்கு போயி,அலட்டிக்கலாமா, என்று சிரிக்கிறார்.
சுரம் இருக்கா? இல்லை என்றேன்.
வயத்திலே வலி இருக்கா? இல்லை என்றேன்.
தண்ணி நிறையா குடிக்கிறானா? இல்லை என்றேன்.
தினசரி, வாழைபழம் கனிஞ்சதா காலை மாலை இரண்டு கொடுங்க. தினம் காலையிலேந்து இரவு வரை மொத்தம் 3 லிட்டர் வாட்டர் கொடுங்க.
போதும் இப்போதைக்கு. என்றார். தொடர்ந்து பத்து நாள் கொடுங்க. அப்பறம் வாங்க, தேவையால் இருந்தால்.என்றார்.
பீஸ் ?
அதெல்லாம் வேண்டாம்.
இந்தாங்கோ பாபா பிரசாதம் என்று ஒரு வாழை பழத்தை தந்தார்.
எனக்கா? பேரனுக்கா என்றேன்.
உங்களுக்கு. பேரனுக்கு ஒன்று போதாது. தினம் 4 முதல் 6 தாங்க.
முடிஞ்சா க்ரேப்ஸ், மாம்பழம், ஆப்பிள் தாங்க.
அத கேட்டுட்டு வருவதற்குள்ளே, ஊட்டுக்காரி, அதான் எங்க வூட்டுக்கிழவி, நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று , ஒரே ரகளை.
பூண்டு, சீரகம், அந்த முளைக்கீரை எல்லாம் பண்ணி போட்டா சரியாயிடும் அப்படின்னு பினாத்திக்கொண்டு இருந்தா. கொடுத்தாளா இல்லையா அப்படின்னு தெரியல்ல. விளக்கெண்ணை காஸ்டர் ஆயில் கொடுத்தால் நல்லது என்று எதிர்த்த வீட்டு பாட்டி சொன்னாள். இப்ப சுத்தமான விளக்கெண்ணை கிடைப்பதில்லை என்று அந்த பாட்டி வீட்டு தாத்தா சொன்னார்.
பேரப்புள்ள மட்டும் "நோ நோ ஐ டோன்ட் வாண்ட் திஸ்" என்று கத்திக்கொண்டு இருந்தது அப்பப்ப காதில் விழுந்தது.
இத்தனைக்கும்,நடுவிலே மாப்பிள்ளைக்கு ஆயுர்வெதத்திலே அபார நம்பிக்கை. அவரோட முழங்கால் டெண்டன்ஸ் tendons ஆக்சிடெண்ட்லே அவுட் ஆன போது எல்லா விதமான ஆர்த்தோ ட்ரீட் மென்ட் க்குப்பின்னே ஆபத் பாந்தவனா வந்தது என்னமோ பிண்ட தைலம் தான். , அந்த மகா வலி நிவாரணி நாராயணா தைலம் என்று தான் ஹெல்புக்கு வந்தது.
அவரு மாப்பிள்ளை பக்கத்துலே இருக்கற ஒரு எம்.எஸ். நாட்டு வைத்தியம் ஆயுர் வேத டாக்டர் கிட்ட போயி, கன்சல்ட் பண்ண, அவரும்
திருபலாதி சூர்ணம் நாளைக்கு இரண்டு தரம் என்று அஞ்சு நாள் கொடுங்க என்று ப்றேச்கிரிப்சன் prescription கேட்டுண்டு வந்தாரு.
இரண்டு நாள் இருக்கும்.
பேரப்புள்ள இப்ப திடீர்னு ஒரு நாளைக்கு மூணு தரம் நாலு தரம் அஞ்சு தரம் மோஷன் மோஷன் அப்படின்னு
ஸ்லோ மோஷன் இல்ல, பாஸ்ட் மோஷன்
அதுவும் லிக்விடா போறது என்று கம்ப்ளைன்ட் பண்ண,
அந்த எதிர்த்த சில்ரன் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போயி,
காத்திருந்தா பொண்ணு.
இன்னா, ரிப்போர்ட் எல்லாம் எடுத்தாச்சா என்று கேட்டார் டாக்டர்.
ரிபோர்ட் எல்லாத்தையும் காட்டினா என் பொண்ணு.
எல்லாம் நார்மலா இருக்கு. நோ வொர்ரி என்றார் டாக்டர்.
எதுக்கும் பர்கோலாக்ஸ் இரண்டு நாளைக்கு நைட் நைட் கொடுங்க. அது போதும். என்றார்.அவர். பைபர் டயட் , வெஜிடபில்ஸ் இருக்கணும். அப்பத்தான் மோஷன் சரியா இருக்கும் என்றார் அவர்.
"டாக்டர் பிரச்னை அதுவல்ல இப்ப , ஆப்போசிட் ஆயிடுத்து"
. என்றாள் என் பெண்.
என்ன என்று கேட்டார் டாக்டர்.
"இப்ப ஒரு நாளைக்கு அஞ்சு தரம் போறது."
ஒன்னும் கவலைபடாதீங்க.அதையும் சரி பண்ணிடலாம்.
எதுக்கும் இந்த லாபுக்கு போய், மோஷன் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
அமீபியாசிஸ் இருக்கா அப்படின்னு கன்பர்ம் பண்ணிக்கணும். என்றார்.
அமீபியாசிஸ் இல்லை என்றால், கூடவே ஒரு அப்டமன் அல்ட்ரா சன் இமேஜ் எடுத்துட்டா நல்லது.சொன்னார்.
அப்படியா என்று கவலையா கேட்டா என் பொண்ணு.
டோன்ட் வொர்ரி.
ரிபோர்ட் வர வரைக்கும் வைட் பண்ணுங்க.
அது வரைக்கும் இளநீர் , மோரு கொடுத்து கிட்டே இருங்க. எவரி ஹால்ப் அவர்.
யூ காச் மி என்றார் டாக்டர்.
பிபோர் காட்சிங் ஹிஸ் பீஸ் . .
சம் டைம்ஸ் டாக்டர் இஸ் ஆல்சோ வைஸ் இப் அவர் டைம் இஸ் குட்.
sometimes, doctor is also wise, if our time is good.
சாரி சார். டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்.
நம்ம டைம் தான் அப்பப்ப சரி இல்ல.
Sorry. Most of the doctors are wise.
They know the tricks of the trade.
A quote from artha sasthra , a famous sanskrit text devoted to principles of economics.
அபிஷக்யா கதிர்ஞாதும் பததாம் கே பதத்ரிணாம்
நது ப்ரச்சந்த பாவாநாம் யுக்தாநாம் சரதாம் கதி:
-அர்த்தசாஸ்த்ரம்
courtesy: sundarjiprakash.blogspot.in
ஒரு லாப் Lab ஆரம்பித்து விட்டு அதில் இரண்டு மூணு டேக்நீஷியனை வேலைக்கு போட்டு, ஒரு ரேடியாலஜிஸ்ட், ஒரு டாக்டர் , வேலைக்கு அமர்த்தி, மாசம் மாசம் மினிமம் இருபது லட்சம் கிடைக்க வழி பண்ணலாம் என்று பல பெற்றோருக்கு ,
விஜய் டி.வி.கோபிநாத் அவர்களின் நீயா நானா ப்ரோக்ராம் பார்த்து தோன்றியிருக்கலாம் என்று சொன்னால்,
அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
என்ன ? ஒரு பத்து பதினைந்து டாக்டரோட கிருபை இருந்தா போதும். என்றும் தோன்றுகிறது.
எந்த வீதியிலும் இன்னிக்கு 2 அல்லது மூணு லாப், எக்ஸ் ரே, ஸ்கான் செண்டர் பார்க்கறோம்.
ஆடித் தள்ளுபடி இப்ப மாஸ்டர் ஹெல்த் செக் அப்புக்கும் வந்தாச்சு.
2500 ரூபா . அடுத்த 10 நாட்களுக்கு ரூபா 1499 ல்
சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் நலனுக்காக.
என்ற போர்டு
ஏதோ புதுப்பட பேனர் banner மாதிரி ஆங்காங்கே காண்கிறோம்.
ஒவ்வொரு நாளும் எதுவாவது ஒரு இடத்தில், அவரிநேஸ் ப்ரோக்ராம் awareness program.
சக்கரை இருக்கா ? அர்த்ரிடிஸ் இருக்கா, blood pressure எத்தனை
?நீங்கள் குண்டா ? கவலைபடாதீர்கள். ஒரே நாளில் உங்கள் எடையை 10 கிலோ குறைக்க முடியும்.
ஒல்லியாக இருந்தாலும் இவர்கள் விடுவதில்லை.
திடீர் என்று உங்களுக்கு எடை குறைந்து போய் இருக்கிறதா?
உங்கள் பி எம். ஐ. எத்தனை?
உங்களுக்கு கான்சர் இருக்கிறதா என்று செக் செய்தீர்களா?காச நோய் இருக்கிறதா ?
வயசானாலும் ப்ராஸ்டேட் செக் பண்ணிக்குங்க. பின்னாடி கஷ்டபடாதீக.
இது போல எங்க பார்த்தாலும் ஒரே விளம்பரம் கலர் கலரா.
நம்ம உடம்பு நல்லா இருக்கணுமே அப்படின்னு கவலைப் படரவங்க நிறையவே இருக்காங்க.
நம்ம போய் சேரும் வரை, கடைலே சக்கரை ஸ்டாக் இருக்கனுமே என்று ரேஷன் ஷாப் போகிறவர்களை விட,
நம்ம உடம்புலே சக்கரை இருக்கக் கூடாதே என்று டயக்நோச்டிக் செண்டர் போகிறவர்கள் தான் இன்று அதிகம்.
இல்லாத வியாதியைத் தேடி அலைகிறோம் என்று சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.
சில சமயம் வியாதிகளை நாமே வருந்தி வருந்தி அழைக்கிறோம் என்று சொன்னாலும் சரிதான். நல்ல உடம்பை வருத்திக்கொள்கிறோம் என்றாலும் உண்மைதான்.
கடந்த ஒரு இருபது வருசங்களா, என்னை மாதிரி கிழங்கள் , இன்னாடா, டாக்டர் கிட்டே போனோமா, மருந்து கொடுத்தாரா , சாப்பிட்டு இரண்டு நாள், மூணு நாள் , மாக்சிமம் அஞ்சு நாள்லே குணமானோமா இல்ல, போய் சேர்ந்தோமா என்று இல்லாம,
அந்த பிளட் டெஸ்ட் இந்த மோஷன் டெஸ்ட், சி.டி,ஸ்கான், டி.வி.டி. ஸ்கான், ஒரு பல் சொத்தையா போயிடுச்சுன்னா, வாய் முழுக்க அல்ட்ரா சோன் ஸ்கான் எல்லாம்...
போதுமடா சாமி என்று இருக்கிறது.
காஷ்யபன் மட்டும் இல்ல சுரேகா சார் மட்டும் அல்ல, , நிறைய பேருக்கு இந்த மருத்துவர்கள் படுத்தும் பாடு, பொது மக்கள் படும் வேதனை இருப்பதை அந்த ப்ரோக்ராம் லே பப்ளிக் பார்ட் லேந்து இரண்டு பேர் கோபப்பட்டு பேசியது, கோபிநாத் அவர்கள் நடு நடுவே டாக்டர்களை சாடினதுஎல்லாம் பார்த்து தெரிகிறது.
இத்தனையும் போதாது என்று அந்த ப்ரோக்ராமிலே ஒரு டாக்டர்,
"சார் !! நாங்கள் எல்லாம் நல்லவங்க சார், நம்புங்க சார், எங்களை சம்பளத்திலே வெச்சு இருக்கிற ஆஸ்பத்திரி கட்டாயத்துலே தான் இதெல்லாம் டெஸ்ட் செய்யச்சொல்லி சொல்றோம்" சத்யம் பண்றது போல ,
ஏதோ ஒரு புதுசா உண்மையை யாருக்கும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு சொன்னதும்
அந்த அப்சர்வர் ராஜ் குமார். எதோ ஒரு பெரிய ஹாஸ்பிடல்.சேர்மனாம் ஒருவர்
இன்னிக்கு தேதியிலே மருத்துவ இண்டஸ்ட்ரி முழுக்கவே யார் கையிலே இருக்கு அப்படின்னு புட்டு புட்டு வெச்ச பின்னே,
நல்லாவே நாம் புண்ய பூமியாம் நமது பாரத பூமியிலே என்ன என்ன நடக்குது அப்படின்னு தெரியறது. தெரிஞ்சுகிட்டோம்.
ஊரை புரிஞ்சுகிட்டேன். சாமி. கோபிநாத்துக்கு நன்றி.
ஆனா இன்னொரு பக்கம்.
அஞ்சு வருஷம் படிச்சு, அதுக்கப்பறம் இன்டர்ன் ஆறு மாசம் இல்ல ஒரு வருஷம் பண்ணிட்டு வரவங்களுக்கு எல்லாருக்குமே கவர்ன்மெண்ட் வேல கொடுக்க முடியாத நேரத்துலே,
டாக்டர்களும் படிச்சு முடிச்சபரம், கை நிறைய சம்பாதிக்க என்னதான் பண்ணுவாங்க நீங்க சொல்லுங்க
ப்ரைவேட் ஆஸ்பத்திரி பெரிய ஹாஸ்பிடல், அங்க இருக்கிற பாஸ் சொல்றபடிதானே நடக்கணும்.
எங்கே யும் எப்போதும்
பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்
.Boss is Always right.
மனித நேயமாவது வெங்காயமாவது !!
சுப்பு தாத்தாவுக்கும் லேடஸ்டா ஒரு அனுபவம்.
சொல்றேன் கேளுங்க.
பேரப்புள்ள இப்பதான் பத்து வயசு முடிஞ்சு இருக்கு.
அமெரிகாவிலேந்து சம்மர் வெகேசனுக்கு வந்து இருக்காப்போல.
அந்த ஊர் கிளைமேட் இந்த ஊர் கிளைமேட், பகல் அங்கேன்னா நைட் இங்கே.
இந்த புள்ள, ராத்திரி 2 மணிக்குதான் தூங்க ஆரம்பிக்குது. பகல் ஒரு மணிக்குதான் எந்திருச்சு, உடனே ஐ. பாட் பார்க்க ...
அந்த புள்ளையோட அம்மாவுக்கு ஒரே கவலை. எனக்கும் தான்.
என்ன ?
மூணு நாளைக்கு ஒரு தரம், சில சமயம்,4 நாள், சில சமயம்
அஞ்சு நாளைக்கு ஒரு தரம் ஸ்டூல்ஸ் மலம் கழிக்க போகிறான்.
வல்லையே நான் என்ன செய்யட்டும் அப்படின்னு சொல்றான்.
நான் அடிக்கடி சொன்னா, டோண்ட் அன்னாய் மி
அப்படின்னு இங்க்லீஷ் லே திட்டறான்.
எதிர்த்தாபோல இருக்கற குழந்தை ஸ்பெசலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போனா என் பொண்ணு.
அந்த டாக்டர் எம்.டி. டி.என்.பி. டிப் .சி.ஹெச். M.D.(paediatric) , DNB, Dip.in child health, அப்படின்னு எல்லாம் படிச்சவரு.
அவங்க மிசர்சும் டாக்டரு.
ஒரு இரண்டு நிமிஷம் கேட்டுட்டு,
பையனைப் பார்த்து டாக்டர் கேட்டாரு.
தினம் என்ன சாப்பிடற ? எப்ப சாபிடற ?
வாட் ? என்று கேட்டான் பேரன்.
டாக்டர், அவனுக்கு லோகல் தமிழ் புரியாது.பெட்டெர் யூ டாக் இன் இங்க்லீஷ் என்று தூய தமிழில் நான் சொன்னேன்.
உடனே, டாக்டர் அவனிடம், வென் டு யூ ஈட் ? என்றார்.
வென் ஐ டோன்ட் ஸ்லீப் என்றான் பேரன்.
டாக்டர் கொஞ்சம் பொறுமை ஜாஸ்தி.
ஒ.கே. வாட் டூ யூ ஈட் ? என்றார் .
சாக்லேட், பிச்சா என்றான் .
வேர் where டூ யூ ஈட் என்று டாக்டர் கேட்க,
ஹியர் என்று தன் வாயைக் காட்டினான்.
பையனை படுக்கச் சொல்லி,இந்த சைடு, அந்த சைடு அமுக்கி வலி இருக்கா என்றெல்லாம் கேட்டார்.
யூ ஆர் ஒன்லி பைநிங் மீ என்றான் பேரன்.
ஓகே ஓகே என்ற டாக்டர் அவனை உட்காரச் சொல்லிவிட்டு,
இது bowel movement ப்ராப்ளம் தானா இல்ல வேர ஏதாவது குடல்லே கன்ச்ற்றிக்சன் constriction , obstruction ப்ராப்ளமா என்று சீக்கிரம் முடிவு பண்ணியாகணும்
என்று சொல்லும்போதே,
எனக்கு வயற்றை கலக்கி கிட்டத்தட்ட அங்கேயே டூஸ் வந்து விட்டது.
எனது பெண் லேசா கண்களை துடைத்துகொண்டாள். பொது இடத்தில் அழுவது அவளுக்கு பிடிக்காது.
.சீரியஸ் ஸா இருபது டெசி பெல்லிலே கேட்டாள் .
எதுக்கும் இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துண்டு வாங்க. என்றார்.
அடுத்த நாள் காலை,
பக்கத்துலே ஒரு பிரபல லாப் சென்று எடுத்து வந்தோம்.
மொத்த செலவு 2500 ரூபா. சனிக்கிழமை வந்து வாங்கிக்கொண்டு போங்க. என்றார்கள்.
சனிக்கிழமை ரிபோர்டை எடுத்துண்டு வந்தா எல்லாமே டெஸ்டுமே நார்மல் தான்.
ஆனா, ரிபோர்ட் வருவதற்கு முன்னாடியே நான் எனக்குத் தெரிஞ்ச பாமிலி பிசிஷியன் கிட்ட( அவர் ஒரு சாயீ பக்தர் ) 55 வருஷ அனுபவஸ்தர். பாமிலி டாக்டர். போயி கேட்டா,
இதுக்கு போயி,அலட்டிக்கலாமா, என்று சிரிக்கிறார்.
சுரம் இருக்கா? இல்லை என்றேன்.
வயத்திலே வலி இருக்கா? இல்லை என்றேன்.
தண்ணி நிறையா குடிக்கிறானா? இல்லை என்றேன்.
தினசரி, வாழைபழம் கனிஞ்சதா காலை மாலை இரண்டு கொடுங்க. தினம் காலையிலேந்து இரவு வரை மொத்தம் 3 லிட்டர் வாட்டர் கொடுங்க.
போதும் இப்போதைக்கு. என்றார். தொடர்ந்து பத்து நாள் கொடுங்க. அப்பறம் வாங்க, தேவையால் இருந்தால்.என்றார்.
பீஸ் ?
அதெல்லாம் வேண்டாம்.
இந்தாங்கோ பாபா பிரசாதம் என்று ஒரு வாழை பழத்தை தந்தார்.
எனக்கா? பேரனுக்கா என்றேன்.
உங்களுக்கு. பேரனுக்கு ஒன்று போதாது. தினம் 4 முதல் 6 தாங்க.
முடிஞ்சா க்ரேப்ஸ், மாம்பழம், ஆப்பிள் தாங்க.
அத கேட்டுட்டு வருவதற்குள்ளே, ஊட்டுக்காரி, அதான் எங்க வூட்டுக்கிழவி, நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் என்று , ஒரே ரகளை.
பூண்டு, சீரகம், அந்த முளைக்கீரை எல்லாம் பண்ணி போட்டா சரியாயிடும் அப்படின்னு பினாத்திக்கொண்டு இருந்தா. கொடுத்தாளா இல்லையா அப்படின்னு தெரியல்ல. விளக்கெண்ணை காஸ்டர் ஆயில் கொடுத்தால் நல்லது என்று எதிர்த்த வீட்டு பாட்டி சொன்னாள். இப்ப சுத்தமான விளக்கெண்ணை கிடைப்பதில்லை என்று அந்த பாட்டி வீட்டு தாத்தா சொன்னார்.
பேரப்புள்ள மட்டும் "நோ நோ ஐ டோன்ட் வாண்ட் திஸ்" என்று கத்திக்கொண்டு இருந்தது அப்பப்ப காதில் விழுந்தது.
இத்தனைக்கும்,நடுவிலே மாப்பிள்ளைக்கு ஆயுர்வெதத்திலே அபார நம்பிக்கை. அவரோட முழங்கால் டெண்டன்ஸ் tendons ஆக்சிடெண்ட்லே அவுட் ஆன போது எல்லா விதமான ஆர்த்தோ ட்ரீட் மென்ட் க்குப்பின்னே ஆபத் பாந்தவனா வந்தது என்னமோ பிண்ட தைலம் தான். , அந்த மகா வலி நிவாரணி நாராயணா தைலம் என்று தான் ஹெல்புக்கு வந்தது.
அவரு மாப்பிள்ளை பக்கத்துலே இருக்கற ஒரு எம்.எஸ். நாட்டு வைத்தியம் ஆயுர் வேத டாக்டர் கிட்ட போயி, கன்சல்ட் பண்ண, அவரும்
திருபலாதி சூர்ணம் நாளைக்கு இரண்டு தரம் என்று அஞ்சு நாள் கொடுங்க என்று ப்றேச்கிரிப்சன் prescription கேட்டுண்டு வந்தாரு.
இரண்டு நாள் இருக்கும்.
பேரப்புள்ள இப்ப திடீர்னு ஒரு நாளைக்கு மூணு தரம் நாலு தரம் அஞ்சு தரம் மோஷன் மோஷன் அப்படின்னு
ஸ்லோ மோஷன் இல்ல, பாஸ்ட் மோஷன்
அதுவும் லிக்விடா போறது என்று கம்ப்ளைன்ட் பண்ண,
அந்த எதிர்த்த சில்ரன் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போயி,
காத்திருந்தா பொண்ணு.
இன்னா, ரிப்போர்ட் எல்லாம் எடுத்தாச்சா என்று கேட்டார் டாக்டர்.
ரிபோர்ட் எல்லாத்தையும் காட்டினா என் பொண்ணு.
எல்லாம் நார்மலா இருக்கு. நோ வொர்ரி என்றார் டாக்டர்.
எதுக்கும் பர்கோலாக்ஸ் இரண்டு நாளைக்கு நைட் நைட் கொடுங்க. அது போதும். என்றார்.அவர். பைபர் டயட் , வெஜிடபில்ஸ் இருக்கணும். அப்பத்தான் மோஷன் சரியா இருக்கும் என்றார் அவர்.
"டாக்டர் பிரச்னை அதுவல்ல இப்ப , ஆப்போசிட் ஆயிடுத்து"
. என்றாள் என் பெண்.
என்ன என்று கேட்டார் டாக்டர்.
"இப்ப ஒரு நாளைக்கு அஞ்சு தரம் போறது."
ஒன்னும் கவலைபடாதீங்க.அதையும் சரி பண்ணிடலாம்.
எதுக்கும் இந்த லாபுக்கு போய், மோஷன் டெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
அமீபியாசிஸ் இருக்கா அப்படின்னு கன்பர்ம் பண்ணிக்கணும். என்றார்.
அமீபியாசிஸ் இல்லை என்றால், கூடவே ஒரு அப்டமன் அல்ட்ரா சன் இமேஜ் எடுத்துட்டா நல்லது.சொன்னார்.
அப்படியா என்று கவலையா கேட்டா என் பொண்ணு.
டோன்ட் வொர்ரி.
ரிபோர்ட் வர வரைக்கும் வைட் பண்ணுங்க.
அது வரைக்கும் இளநீர் , மோரு கொடுத்து கிட்டே இருங்க. எவரி ஹால்ப் அவர்.
யூ காச் மி என்றார் டாக்டர்.
பிபோர் காட்சிங் ஹிஸ் பீஸ் . .
சம் டைம்ஸ் டாக்டர் இஸ் ஆல்சோ வைஸ் இப் அவர் டைம் இஸ் குட்.
sometimes, doctor is also wise, if our time is good.
சாரி சார். டாக்டர்ஸ் எல்லாமே நல்லவங்க தான்.
நம்ம டைம் தான் அப்பப்ப சரி இல்ல.
Sorry. Most of the doctors are wise.
They know the tricks of the trade.
A quote from artha sasthra , a famous sanskrit text devoted to principles of economics.
அபிஷக்யா கதிர்ஞாதும் பததாம் கே பதத்ரிணாம்
நது ப்ரச்சந்த பாவாநாம் யுக்தாநாம் சரதாம் கதி:
-அர்த்தசாஸ்த்ரம்
வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது அறியலாம். ஆனால், வெளியில் எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள், எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.
courtesy: sundarjiprakash.blogspot.in
திங்கள், 11 ஆகஸ்ட், 2014
தருமம் தானோ !!!!!!
ஒரு பத்து நாட்கள் முன்பு தான் அறிமுகமான ஒரு நபர் வீட்டுக்கு சென்று அங்கு வாசலில் இருக்கும் காலிங் பெல் அடித்தால் என்ன நடக்கும் என்று ...
நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பீர்களோ ....
அது தான் நடக்கும் என்று சுப்பு தாத்தா நம்பினார். .
காலிங் பெல்லை அழுத்தினார் ..
ட்ரிங் .. ட்ரிங் ...
வயதான கிழவி ஒருவர் வந்து கதவைத் திறந்து வெளியே வந்தார்கள்.
நீங்கள் அழைக்கும் நபர் உள்ளே .இருக்கிறார். உறங்கி கொண்டு இருக்கிறார்.
இன்னமும் ஒரு தரம் பெல்லை அடியுங்கள் என்று சொல்லி சென்று விட்டார்.
வீடு வாசல் கதவு திறந்து இருந்தது. இருந்தாலும் சுப்பு தாத்தாவுக்கு வீட்டுக்குள்ளே சுதந்திரமாக நுழையும் அளவுக்கு பரிச்சயம் ஆகாத வீடு. ஆதலால், மறுமுறை பெல் அடித்தார்.
அடுத்த கணம் ஒரு விபரீதம்.!!!
ஒரு குட்டி நாய் பாய்ந்து வந்தது.
சுப்பு தாத்தா மேல் பாய்ந்து குதறி விட்டது.
அய்யோ..அம்மா.. என்று சத்தம் போட்டார் சுப்பு தாத்தா.
ஓடவும் விடவில்லை அந்த பாமநேரியன் நாய்க்குட்டி. சுற்றி சுற்றி இரு கால்களையும் பிராண்டியது.
அந்த குறுகிய இடை வெளியில், அவர் ஓட யத்தனித்த போது, பக்கத்தில் இருந்த பூச்சட்டி இரண்டு சுப்பு தாத்தா கால்களில் விழுந்தது.
சுப்பு தாத்தா வலியினால் துடித்தார்.
அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர் வந்தார். அதே வீட்டில் இருந்த ஒரு வாலிபர் வந்தார்.
ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
நாய் ஸ்டெரிலைஸ் செய்த நாய் தான். ஊசி போட்டு இருக்கிறது. என்றார் அந்த பெரியவர். பெடடின் ஆயிண்ட்மெண்ட் போட்டு விடட்டுமா ? அது போதும் என்றார் அவர்.
வாலிபர் சமயோசிதமாக வீட்டுக்குள் சென்று தண்ணீர் பஞ்சு கொண்டு வந்து ரத்தத்தை துடைத்து எடுத்தார்.
அதற்குள் நான் செல்லடிக்க, எனது மகன் பைக்கில் வந்து " வா, பக்கத்தில் இருக்கும் ஹாசிபிடல் எதுக்காவது செல்வோம் என்று சொல்ல,நாங்கள், பைக்கில் புறப்பட இருந்த போது,
நான் அழைத்த நபர் வந்தார்.
மாமா, கவலைபடாதீர்கள். வளர்ப்பு நாய் தான். பெடடின் ஆயிண்ட்மெண்ட் இருந்தால் போடுங்கள் , போதும் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
ரத்தம் வழிவதையோ நான் துடிப்பதையோ அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
நானும் என் பையனும் பக்கத்தில் இருந்த ராயல் ஹாஸ்பிடல் சென்றோம்.
காயத்தை சுத்தம் செய்தார்கள்.
டெட்டனஸ் டாக்சைடு ஊசி போட்டார்கள்.
நாய் பிராண்டியது போலும் இருக்கிறது. கடித்தது போலும் இருக்கிறது.
எதற்கும் தற்காப்பாக ஆண்டி ரேபீஸ் ஊசி ரேபி பூர் போடவேண்டும். 24 மணி நேரத்திற்குள். என்று அட்வைஸ் செய்தார் டாக்டர்.
எதற்கும் எனக்கு பழக்கமான டாக்டர் வீ. ஆர். கணேசன் அவர்களிடம் சென்றேன்.
அவரது கிளினிக்கில் ரிசப்ஷன் ஹாலில் பிரும்மாண்டமான சாயி பாபா படம்.
என்னை ஆசிர்வதித்தது. வொய் பியர் வென் ஐ ஆம் ஹியர் என்று சொன்னது.
டாக்டர் பார்த்தார். என்னைக் கேட்டார்.
கடித்திருக்கிறதா இல்லை பிராண்டி மட்டும் இருக்கிறதா என்று சொல்ல இயலாத நிலையில்,
அவரும் ஊசி போடவேண்டும் என்று சொல்லி எஸ் 2 ரேபி வாக்ஸ் ஊசி போட்டு விட்டு, இன்னும் இரண்டு 7 வது நாள், 30 வது நாள் போடவேண்டும் என்று
.சொல்லி,
காயம் ஆற, ஆண்டி பயாடிக் மருந்துகள், வலி வீக்கத்துக்கான மருந்துகள்,
ஆண்டி பயாடிக் மருந்து சைடு எபக்ட் வராமல் இருக்க ப்ரோ பயாடிக் மருந்துகள் தந்து, அடுத்த மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் வரச்சொன்னார்.
நாய் எப்படி இருக்கிறது என்று கவனித்து வாருங்கள். பத்து நாட்களுக்குள் நாய் எப்படி இருக்கிறது என்று என்னிடம் சொல்லுங்கள். நாய்க்கு ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு இன்னமும் இரண்டு ஊசிகள் தேவையாக இருக்கும் என்றார்.
என் தலை விதியை, அஷ்டமத்து சனியை ஐம்பது தடவை என் கோபம் தீர திட்டி வீடு திரும்பினேன்.
ஒரு நாலைந்து நாலைந்து நாட்கள் மனசு திக் திக் என்று இருந்தது. எப்போது கடுமையான ஜுரம் வரும் ? எப்போது நான் லொள் லொள் என்று குலைப்பேனோ என்று காத்து இருப்பது போலும் தோன்றியது.
கீழாத்து மாமி, நாய் கடித்து அவர் அப்பா இறந்த விவரம் சொன்னார்.
ஐம்பது வருஷம் முன்னாடியாம்.
என்னை பார்க்க வந்த சிலர் நாய்க்கடி பட்டவர்கள் என்னதான் ஊசி போட்டாலும் பிழைப்பது சிரமம் என்று பயமுறுத்தினார்கள். சிலர் ஒன்றுமே இல்லை தேவை இல்லாமல் பயப்படவேண்டாம் என்றார்கள். தேங்காய் எண்ணை தடவு போதும் என்றார் சிலர்.
அடுத்த வாரம் திரும்பவும் அதே வீட்டுக்கு சென்றேன். மனசிலே ஒரு வேகம்.
நாய் எப்படி இருக்கிறதோ என்ற பயமும் ஒரு ஐம்பது பர்சென்ட்.
என்னதான் இருந்தாலும், ஒரு முதல் உதவி செய்யக்கூட அவருக்குத் தோன்ற வில்லையே என்ற வருத்தம் , கோபம் என்று சொல்லமுடியாது.
அந்த வீட்டு கதவில் ஒரு போர்டு இருக்கக் கூடாதா...!!!
நாய் ஜாக்கிரதை என்று போட்டு இருந்தால் இது நடந்து இருக்காது.
நான் அங்கு போய் இருக்கவேண்டியதே இல்லை.
அது இருக்கட்டும், நாய் கடித்து விட்டது, என்று பார்த்தும், ஒரு முதல் உதவி செய்ய அவர்களிடம் முதல் உதவி மருந்து இல்லை.
எது எப்படி இருப்பினும்,
நாய் எப்படி இருக்கிறது என்று .பார்க்கவேண்டும்.
அந்த நாய் சொந்தக்காரர் பற்றி இப்பொழுது கொஞ்சம் சொல்லவேண்டும்.
அவர் நாய் மட்டும் அல்ல, கிளி, குயில்,என்று பலதை வளர்த்துக்கொண்டு இருப்பவர்.
சிறிய அளவில் காட்டரிங் தொழில். ஒரு நாற்பது பேருக்கு தினம் லஞ்ச், இரவு டிபன் தோசை, இட்லி, சப்பாத்தி தருகிறார்.
ஒரு இருபது வருசமாக செய்கிறார். அது தான் அவர்களுக்கு ஜீவனம். அந்த வருமானத்தில் தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து, முதல் பையன் ஸீ ஏ பைனல் செய்ய, இரண்டாவது பெண் பி.காம் முடித்து விட்டு ஏதேனும் வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்>
பிள்ளைகளும், தாய் தந்தை வருத்தம் தெரிந்து படிப்பது மட்டும் அல்லாமல், அம்மா அப்பா குக் செய்த உணவுகளை ஹோம் டெலிவரி செய்கிரார்கள்.
நடுத்தர குடும்ப சூழ்நிலை இருந்தாலும், பாமநேரியன் நாய் வளர்ப்பதன் காரணம் புதிராக இருந்தது.
Pomanerian dogs are highly unpredictable. Beautiful they are no doubt but bite their own masters.
என் வீட்டுக்காரி ஞாபகம் ஏனோ வந்தது.
நாயை காண்பியுங்கள், நான் பார்க்கவேண்டும் என்று என் பையன் சொல்ல அதை மறுபடியும் அவர்கள் காட்டினார்கள். அது நன்றாகத்தான் இருந்தது.
அப்பாடி. ஒரு பேரு மூச்சு விட்டேன். அந்த நாய் நன்றாக இருக்க ,
தன்வந்திரி பகவானிடம் ஒரு ப்ரேயர் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.
என் நண்பர் சக்ரபாணியிடம் பாதுகா சஹாஸ்ரத்தில் இதுக்கென்று விஷ ஜந்துக்களிடம் இருந்து தப்புவதற்கு ஏதாவது ஸ்லோகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொண்டு அடுத்த 48 நாட்கள் பாராயணம் பண்ணவேண்டும். .
லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து.என்பது வாக்கியம்.
லோகத்திலே மற்றவர்கள் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்று என் அம்மா சொல்வாள்.
அந்த " மற்றவர்கள் " என்ற சொல்லில் ஒரு நாயும் இருக்கும் என்று இத்தனை வருஷம் எனக்குத் தெரியவில்லையே !! மண்டுடா நீ சுப்பு தாத்தா என்று என்னையே கடிந்து கொண்டேன்.
இன்னமும் நாலு நாட்கள் ஆகின.
ஆண்டி பயாடிக் மருந்துகளால், காயம் சற்று ஆறி விட்டது எனினும் மனதில் பயம் இருந்தது. உடல் தொய்ந்து போய் விட்டது. நடமாட தெம்பு அதிகம் இல்லை.
அமெரிக்காவில் இருந்து வந்திருந்த என் மகளோ தன் மச்சினனை அவங்க வீட்டு நாய் , அதுவும் பாமநேரியன், இது வரைக்கும் ஏழு தரம் கடிச்சிருக்கு. ஒன்னும் ஆகவில்லை. என்றாள்.
மாப்பிள்ளையும் ஆமா ஆமா என்று வழக்கம் போல் தலை ஆட்டினார்.
மகனும், மருமகளும் லீவ் முடிந்து திரும்பவும் வெளி நாடு செல்லும் நாள் வந்தது.
" அந்த ஆத்திலேந்து ஒன்னும் வாங்க வேண்டாம் அப்பா " என்று திடீர் என்று மருமகள் சொன்னாள்.
என்ன காரணம் என்று கேட்காமல் அவளை கூர்ந்து பார்த்தேன்.
சாப்பாடு நல்ல ருசியாத்தானே இருக்கு என்று சொல்லவும் செய்தேன்.
அதுக்கு, அவளோ, நம்ம ஆத்து பன்க்சன் நடந்த அன்றே பார்த்தேன். அந்த நாய் வீடு முழுக்க ஒடி ஒடி
சாப்பாடு செய்து வைத்து இருக்கும் எல்லா பாத்திரங்களையும் அசிங்கபடுத்துகிறது.
எனக்கு ருசிக்கல்ல. என்றாள்
இதை முன்னமே சொல்லி இருக்க கூடாதோ !! என்று நான் நினைக்கத்தான் செய்தேன். சட் என்று வாய் விட்டு சொல்ல .இயலவில்லை.
என்னதான் இருந்தாலும், அப்பா அப்பா தான், மாமனார் மாமனார் தான்.
எதுக்கும் நாமே சென்று அந்த வீட்டு சூழ்நிலையை நேரடியாக பார்த்து விடுவோம் என்று தைரியத்தை வர வழைத்து கொண்டுசென்றேன். நானே பார்த்தேன்.
பக்கத்து வீட்டுக்காரரும் அதையே தான் சொல்கிறார். ஆனா அவரோட நோக்கு வேற மாதிரி இருந்தது.
நீங்க சொல்வது கரெக்ட் தான் அந்த நாய் வீடு முழுக்கா அசிங்கம் பண்றது. ஆனால், . நம்ம மாதிரி கிழங்களுக்கு இது மாதிரி வேளா வேளைக்கு யார் சாப்பாடு வீட்டுக்கு கொண்டு வந்து தருவார்கள் இந்த காலத்துலே !!
சுத்தம் கித்தம் என்று குத்தம் சொன்னால் நாம பட்டினி கிடக்க வேண்டியது தான் என்று நகைத்தார்.
இந்த உணவையா என்னைப்போன்ற எட்டு பத்து கிழங்கள் எங்கள் காலனியில் தினமும் வாங்கி சாப்பிடுகிறார்கள் ?
பார்த்த காட்சி என்னை திடுக்கிட வைத்தது.
எங்கள் காலனியில் இருக்கும் பெரிசுகள் மேலே எனக்கு பரிதாபம் தோன்றியது.
அதே சமயம் இந்த தொழிலையே நம்பி இருக்கும் காடரிங் நண்பர் மேலே ஒரு இரக்கமும் இருந்தது.
காலனியில் நிறையா பெரிசுகள், என்னை மாதிரி , வாடகை கொடுக்காத டெனன்ட் .
தாராள மனசு கொண்ட தமது மகன் மருமகள் பெருந்தன்மையில் குடி இருப்பவர்கள்.
ஒரு சமூக பார்வை எப்போதுமே சுப்பு தாத்தாவுக்கு உண்டு.
இந்த பொல்யுடட் சுத்தமற்ற உணவை தடுக்க வேண்டும். என்ற நினைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.
தனக்கு இருக்கும், அல்லது இருப்பதாக நினைக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி செக்யூரிடி இடம் சொல்லி,
அந்த உணவு வழங்க வரும் நபரை இரண்டு நாள் முன்னாடி நிறுத்தி விட்டார்.
தாம் செய்ததை, மற்ற யாரிடமும். சொல்லவில்லை.
நல்லது தானே செய்கிறோம்.அதைக்கூட சொல்லிட்டுத் தான் செய்யனுமா என்ன !! என்ற எண்ணம் அவருக்கு.
நேற்று மாலை. வழக்கம் போல காலனி பெஞ்சில் அவர் .
அஞ்சாறு பேரு கூட சுற்றி இருந்தனர்.
எங்கே அந்த சுப்பையாவா ராமையா வா , அவரைக் காணோம் என்றார் ஒருவர்.
பாவம் ராமையா . ஹை டயாபெடிக். தெரியுமோ சேதி ..என்றார் ஒருவர்.
தெரியுமே என்றார்.
தனியா இருக்கார். வீட்டுக்காரி அமெரிக்கா போய் இருக்கிறார்.
காலையும் மாலையும் சாப்பாடு கொண்டு வருபவரை
நம்பித்தான் இருக்கார்.
அதுனாலே என்ன ? என்று அப்பாவித்தனமாக இன்னொருவர் கேட்டார்.
நேற்று சாப்பாடு வரவில்லை.வரும் வரும் என்று காத்திருந்து,சாப்பாடு வரவில்லை. ஹைபோ க்லீசிமியா வந்து விட்டது. மயக்கமாயிட்டார்.
நான்தான் அவரை ஹாஸ்பிடல் லே அட்மிட் பண்ணி இருக்கேன்.ஹி இஸ் ஆல்மோஸ்ட்ஓகே. நாளைக்கு வந்து விடுவார் என்றார்.
சுப்பு தாத்தா
மனசு இருக்கே
அது ஒரு விபரீத பிராணி.
தேவை இல்லாதபோது தான் அது பேச ஆரம்பிக்கும்.
சுப்பு தாத்தா !!! இதெல்லாம் நீ செய்யனுமா ?
உன்னை அந்த நாய் கடிச்சு இருக்கலாம். அதனாலே உனக்கு மனசு, உடம்பு பாதிச்சு இருக்கலாம். 2000 3000 நீ செலவளிச்சு இருக்கலாம்.
அந்த வீடும் சுத்தமா இல்லாம இருக்கலாம்.
ஆனா, அதனால, நல்லது அப்படின்னு நினைச்சு, நீ செஞ்சது
எப்படி முடிஞ்சு இருக்கு பார்த்தாயா !!
மனசு இடிச்சுண்டு இருக்கிறது.
யாராவது சுப்பு தாத்தாவுக்கு நியாயம்தான் நீ செஞ்சது
இது
செஞ்சது தருமந்தான் அப்படின்னு
சொல்லுங்க.
சொல்லுவாங்களா ????
*****************************************************************************************************
( ஒரு எழுபது பர்சென்ட் உண்மை, பின் வரும் முப்பது பர்சென்ட் கற்பனை கலந்த நிகழ்ச்சி )
நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பீர்களோ ....
அது தான் நடக்கும் என்று சுப்பு தாத்தா நம்பினார். .
காலிங் பெல்லை அழுத்தினார் ..
ட்ரிங் .. ட்ரிங் ...
வயதான கிழவி ஒருவர் வந்து கதவைத் திறந்து வெளியே வந்தார்கள்.
நீங்கள் அழைக்கும் நபர் உள்ளே .இருக்கிறார். உறங்கி கொண்டு இருக்கிறார்.
இன்னமும் ஒரு தரம் பெல்லை அடியுங்கள் என்று சொல்லி சென்று விட்டார்.
வீடு வாசல் கதவு திறந்து இருந்தது. இருந்தாலும் சுப்பு தாத்தாவுக்கு வீட்டுக்குள்ளே சுதந்திரமாக நுழையும் அளவுக்கு பரிச்சயம் ஆகாத வீடு. ஆதலால், மறுமுறை பெல் அடித்தார்.
அடுத்த கணம் ஒரு விபரீதம்.!!!
ஒரு குட்டி நாய் பாய்ந்து வந்தது.
சுப்பு தாத்தா மேல் பாய்ந்து குதறி விட்டது.
அய்யோ..அம்மா.. என்று சத்தம் போட்டார் சுப்பு தாத்தா.
ஓடவும் விடவில்லை அந்த பாமநேரியன் நாய்க்குட்டி. சுற்றி சுற்றி இரு கால்களையும் பிராண்டியது.
அந்த குறுகிய இடை வெளியில், அவர் ஓட யத்தனித்த போது, பக்கத்தில் இருந்த பூச்சட்டி இரண்டு சுப்பு தாத்தா கால்களில் விழுந்தது.
சுப்பு தாத்தா வலியினால் துடித்தார்.
அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்த பெரியவர் வந்தார். அதே வீட்டில் இருந்த ஒரு வாலிபர் வந்தார்.
ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.
நாய் ஸ்டெரிலைஸ் செய்த நாய் தான். ஊசி போட்டு இருக்கிறது. என்றார் அந்த பெரியவர். பெடடின் ஆயிண்ட்மெண்ட் போட்டு விடட்டுமா ? அது போதும் என்றார் அவர்.
வாலிபர் சமயோசிதமாக வீட்டுக்குள் சென்று தண்ணீர் பஞ்சு கொண்டு வந்து ரத்தத்தை துடைத்து எடுத்தார்.
அதற்குள் நான் செல்லடிக்க, எனது மகன் பைக்கில் வந்து " வா, பக்கத்தில் இருக்கும் ஹாசிபிடல் எதுக்காவது செல்வோம் என்று சொல்ல,நாங்கள், பைக்கில் புறப்பட இருந்த போது,
நான் அழைத்த நபர் வந்தார்.
மாமா, கவலைபடாதீர்கள். வளர்ப்பு நாய் தான். பெடடின் ஆயிண்ட்மெண்ட் இருந்தால் போடுங்கள் , போதும் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.
ரத்தம் வழிவதையோ நான் துடிப்பதையோ அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
நானும் என் பையனும் பக்கத்தில் இருந்த ராயல் ஹாஸ்பிடல் சென்றோம்.
காயத்தை சுத்தம் செய்தார்கள்.
டெட்டனஸ் டாக்சைடு ஊசி போட்டார்கள்.
நாய் பிராண்டியது போலும் இருக்கிறது. கடித்தது போலும் இருக்கிறது.
எதற்கும் தற்காப்பாக ஆண்டி ரேபீஸ் ஊசி ரேபி பூர் போடவேண்டும். 24 மணி நேரத்திற்குள். என்று அட்வைஸ் செய்தார் டாக்டர்.
எதற்கும் எனக்கு பழக்கமான டாக்டர் வீ. ஆர். கணேசன் அவர்களிடம் சென்றேன்.
அவரது கிளினிக்கில் ரிசப்ஷன் ஹாலில் பிரும்மாண்டமான சாயி பாபா படம்.
என்னை ஆசிர்வதித்தது. வொய் பியர் வென் ஐ ஆம் ஹியர் என்று சொன்னது.
டாக்டர் பார்த்தார். என்னைக் கேட்டார்.
கடித்திருக்கிறதா இல்லை பிராண்டி மட்டும் இருக்கிறதா என்று சொல்ல இயலாத நிலையில்,
அவரும் ஊசி போடவேண்டும் என்று சொல்லி எஸ் 2 ரேபி வாக்ஸ் ஊசி போட்டு விட்டு, இன்னும் இரண்டு 7 வது நாள், 30 வது நாள் போடவேண்டும் என்று
.சொல்லி,
காயம் ஆற, ஆண்டி பயாடிக் மருந்துகள், வலி வீக்கத்துக்கான மருந்துகள்,
ஆண்டி பயாடிக் மருந்து சைடு எபக்ட் வராமல் இருக்க ப்ரோ பயாடிக் மருந்துகள் தந்து, அடுத்த மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் வரச்சொன்னார்.
நாய் எப்படி இருக்கிறது என்று கவனித்து வாருங்கள். பத்து நாட்களுக்குள் நாய் எப்படி இருக்கிறது என்று என்னிடம் சொல்லுங்கள். நாய்க்கு ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு இன்னமும் இரண்டு ஊசிகள் தேவையாக இருக்கும் என்றார்.
என் தலை விதியை, அஷ்டமத்து சனியை ஐம்பது தடவை என் கோபம் தீர திட்டி வீடு திரும்பினேன்.
ஒரு நாலைந்து நாலைந்து நாட்கள் மனசு திக் திக் என்று இருந்தது. எப்போது கடுமையான ஜுரம் வரும் ? எப்போது நான் லொள் லொள் என்று குலைப்பேனோ என்று காத்து இருப்பது போலும் தோன்றியது.
கீழாத்து மாமி, நாய் கடித்து அவர் அப்பா இறந்த விவரம் சொன்னார்.
ஐம்பது வருஷம் முன்னாடியாம்.
என்னை பார்க்க வந்த சிலர் நாய்க்கடி பட்டவர்கள் என்னதான் ஊசி போட்டாலும் பிழைப்பது சிரமம் என்று பயமுறுத்தினார்கள். சிலர் ஒன்றுமே இல்லை தேவை இல்லாமல் பயப்படவேண்டாம் என்றார்கள். தேங்காய் எண்ணை தடவு போதும் என்றார் சிலர்.
அடுத்த வாரம் திரும்பவும் அதே வீட்டுக்கு சென்றேன். மனசிலே ஒரு வேகம்.
நாய் எப்படி இருக்கிறதோ என்ற பயமும் ஒரு ஐம்பது பர்சென்ட்.
என்னதான் இருந்தாலும், ஒரு முதல் உதவி செய்யக்கூட அவருக்குத் தோன்ற வில்லையே என்ற வருத்தம் , கோபம் என்று சொல்லமுடியாது.
அந்த வீட்டு கதவில் ஒரு போர்டு இருக்கக் கூடாதா...!!!
நாய் ஜாக்கிரதை என்று போட்டு இருந்தால் இது நடந்து இருக்காது.
நான் அங்கு போய் இருக்கவேண்டியதே இல்லை.
அது இருக்கட்டும், நாய் கடித்து விட்டது, என்று பார்த்தும், ஒரு முதல் உதவி செய்ய அவர்களிடம் முதல் உதவி மருந்து இல்லை.
எது எப்படி இருப்பினும்,
நாய் எப்படி இருக்கிறது என்று .பார்க்கவேண்டும்.
அந்த நாய் சொந்தக்காரர் பற்றி இப்பொழுது கொஞ்சம் சொல்லவேண்டும்.
அவர் நாய் மட்டும் அல்ல, கிளி, குயில்,என்று பலதை வளர்த்துக்கொண்டு இருப்பவர்.
சிறிய அளவில் காட்டரிங் தொழில். ஒரு நாற்பது பேருக்கு தினம் லஞ்ச், இரவு டிபன் தோசை, இட்லி, சப்பாத்தி தருகிறார்.
ஒரு இருபது வருசமாக செய்கிறார். அது தான் அவர்களுக்கு ஜீவனம். அந்த வருமானத்தில் தனது இரு பிள்ளைகளையும் படிக்க வைத்து, முதல் பையன் ஸீ ஏ பைனல் செய்ய, இரண்டாவது பெண் பி.காம் முடித்து விட்டு ஏதேனும் வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்>
பிள்ளைகளும், தாய் தந்தை வருத்தம் தெரிந்து படிப்பது மட்டும் அல்லாமல், அம்மா அப்பா குக் செய்த உணவுகளை ஹோம் டெலிவரி செய்கிரார்கள்.
நடுத்தர குடும்ப சூழ்நிலை இருந்தாலும், பாமநேரியன் நாய் வளர்ப்பதன் காரணம் புதிராக இருந்தது.
Pomanerian dogs are highly unpredictable. Beautiful they are no doubt but bite their own masters.
என் வீட்டுக்காரி ஞாபகம் ஏனோ வந்தது.
நாயை காண்பியுங்கள், நான் பார்க்கவேண்டும் என்று என் பையன் சொல்ல அதை மறுபடியும் அவர்கள் காட்டினார்கள். அது நன்றாகத்தான் இருந்தது.
அப்பாடி. ஒரு பேரு மூச்சு விட்டேன். அந்த நாய் நன்றாக இருக்க ,
தன்வந்திரி பகவானிடம் ஒரு ப்ரேயர் மனசுக்குள் சொல்லிக்கொண்டேன்.
என் நண்பர் சக்ரபாணியிடம் பாதுகா சஹாஸ்ரத்தில் இதுக்கென்று விஷ ஜந்துக்களிடம் இருந்து தப்புவதற்கு ஏதாவது ஸ்லோகம் இருந்தால் கேட்டு தெரிந்து கொண்டு அடுத்த 48 நாட்கள் பாராயணம் பண்ணவேண்டும். .
லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து.என்பது வாக்கியம்.
லோகத்திலே மற்றவர்கள் நன்றாக இருந்தால் தான் நாமும் நன்றாக இருக்க முடியும் என்று என் அம்மா சொல்வாள்.
அந்த " மற்றவர்கள் " என்ற சொல்லில் ஒரு நாயும் இருக்கும் என்று இத்தனை வருஷம் எனக்குத் தெரியவில்லையே !! மண்டுடா நீ சுப்பு தாத்தா என்று என்னையே கடிந்து கொண்டேன்.
இன்னமும் நாலு நாட்கள் ஆகின.
ஆண்டி பயாடிக் மருந்துகளால், காயம் சற்று ஆறி விட்டது எனினும் மனதில் பயம் இருந்தது. உடல் தொய்ந்து போய் விட்டது. நடமாட தெம்பு அதிகம் இல்லை.
அமெரிக்காவில் இருந்து வந்திருந்த என் மகளோ தன் மச்சினனை அவங்க வீட்டு நாய் , அதுவும் பாமநேரியன், இது வரைக்கும் ஏழு தரம் கடிச்சிருக்கு. ஒன்னும் ஆகவில்லை. என்றாள்.
மாப்பிள்ளையும் ஆமா ஆமா என்று வழக்கம் போல் தலை ஆட்டினார்.
மகனும், மருமகளும் லீவ் முடிந்து திரும்பவும் வெளி நாடு செல்லும் நாள் வந்தது.
" அந்த ஆத்திலேந்து ஒன்னும் வாங்க வேண்டாம் அப்பா " என்று திடீர் என்று மருமகள் சொன்னாள்.
என்ன காரணம் என்று கேட்காமல் அவளை கூர்ந்து பார்த்தேன்.
சாப்பாடு நல்ல ருசியாத்தானே இருக்கு என்று சொல்லவும் செய்தேன்.
அதுக்கு, அவளோ, நம்ம ஆத்து பன்க்சன் நடந்த அன்றே பார்த்தேன். அந்த நாய் வீடு முழுக்க ஒடி ஒடி
சாப்பாடு செய்து வைத்து இருக்கும் எல்லா பாத்திரங்களையும் அசிங்கபடுத்துகிறது.
எனக்கு ருசிக்கல்ல. என்றாள்
இதை முன்னமே சொல்லி இருக்க கூடாதோ !! என்று நான் நினைக்கத்தான் செய்தேன். சட் என்று வாய் விட்டு சொல்ல .இயலவில்லை.
என்னதான் இருந்தாலும், அப்பா அப்பா தான், மாமனார் மாமனார் தான்.
எதுக்கும் நாமே சென்று அந்த வீட்டு சூழ்நிலையை நேரடியாக பார்த்து விடுவோம் என்று தைரியத்தை வர வழைத்து கொண்டுசென்றேன். நானே பார்த்தேன்.
பக்கத்து வீட்டுக்காரரும் அதையே தான் சொல்கிறார். ஆனா அவரோட நோக்கு வேற மாதிரி இருந்தது.
நீங்க சொல்வது கரெக்ட் தான் அந்த நாய் வீடு முழுக்கா அசிங்கம் பண்றது. ஆனால், . நம்ம மாதிரி கிழங்களுக்கு இது மாதிரி வேளா வேளைக்கு யார் சாப்பாடு வீட்டுக்கு கொண்டு வந்து தருவார்கள் இந்த காலத்துலே !!
சுத்தம் கித்தம் என்று குத்தம் சொன்னால் நாம பட்டினி கிடக்க வேண்டியது தான் என்று நகைத்தார்.
இந்த உணவையா என்னைப்போன்ற எட்டு பத்து கிழங்கள் எங்கள் காலனியில் தினமும் வாங்கி சாப்பிடுகிறார்கள் ?
பார்த்த காட்சி என்னை திடுக்கிட வைத்தது.
எங்கள் காலனியில் இருக்கும் பெரிசுகள் மேலே எனக்கு பரிதாபம் தோன்றியது.
அதே சமயம் இந்த தொழிலையே நம்பி இருக்கும் காடரிங் நண்பர் மேலே ஒரு இரக்கமும் இருந்தது.
காலனியில் நிறையா பெரிசுகள், என்னை மாதிரி , வாடகை கொடுக்காத டெனன்ட் .
தாராள மனசு கொண்ட தமது மகன் மருமகள் பெருந்தன்மையில் குடி இருப்பவர்கள்.
ஒரு சமூக பார்வை எப்போதுமே சுப்பு தாத்தாவுக்கு உண்டு.
இந்த பொல்யுடட் சுத்தமற்ற உணவை தடுக்க வேண்டும். என்ற நினைப்பு அதிகரித்துக்கொண்டே சென்றது.
தனக்கு இருக்கும், அல்லது இருப்பதாக நினைக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி செக்யூரிடி இடம் சொல்லி,
அந்த உணவு வழங்க வரும் நபரை இரண்டு நாள் முன்னாடி நிறுத்தி விட்டார்.
தாம் செய்ததை, மற்ற யாரிடமும். சொல்லவில்லை.
நல்லது தானே செய்கிறோம்.அதைக்கூட சொல்லிட்டுத் தான் செய்யனுமா என்ன !! என்ற எண்ணம் அவருக்கு.
நேற்று மாலை. வழக்கம் போல காலனி பெஞ்சில் அவர் .
அஞ்சாறு பேரு கூட சுற்றி இருந்தனர்.
எங்கே அந்த சுப்பையாவா ராமையா வா , அவரைக் காணோம் என்றார் ஒருவர்.
பாவம் ராமையா . ஹை டயாபெடிக். தெரியுமோ சேதி ..என்றார் ஒருவர்.
தெரியுமே என்றார்.
தனியா இருக்கார். வீட்டுக்காரி அமெரிக்கா போய் இருக்கிறார்.
காலையும் மாலையும் சாப்பாடு கொண்டு வருபவரை
நம்பித்தான் இருக்கார்.
அதுனாலே என்ன ? என்று அப்பாவித்தனமாக இன்னொருவர் கேட்டார்.
நேற்று சாப்பாடு வரவில்லை.வரும் வரும் என்று காத்திருந்து,சாப்பாடு வரவில்லை. ஹைபோ க்லீசிமியா வந்து விட்டது. மயக்கமாயிட்டார்.
நான்தான் அவரை ஹாஸ்பிடல் லே அட்மிட் பண்ணி இருக்கேன்.ஹி இஸ் ஆல்மோஸ்ட்ஓகே. நாளைக்கு வந்து விடுவார் என்றார்.
சுப்பு தாத்தா
மனசு இருக்கே
அது ஒரு விபரீத பிராணி.
தேவை இல்லாதபோது தான் அது பேச ஆரம்பிக்கும்.
சுப்பு தாத்தா !!! இதெல்லாம் நீ செய்யனுமா ?
உன்னை அந்த நாய் கடிச்சு இருக்கலாம். அதனாலே உனக்கு மனசு, உடம்பு பாதிச்சு இருக்கலாம். 2000 3000 நீ செலவளிச்சு இருக்கலாம்.
அந்த வீடும் சுத்தமா இல்லாம இருக்கலாம்.
ஆனா, அதனால, நல்லது அப்படின்னு நினைச்சு, நீ செஞ்சது
எப்படி முடிஞ்சு இருக்கு பார்த்தாயா !!
மனசு இடிச்சுண்டு இருக்கிறது.
யாராவது சுப்பு தாத்தாவுக்கு நியாயம்தான் நீ செஞ்சது
இது
செஞ்சது தருமந்தான் அப்படின்னு
சொல்லுங்க.
சொல்லுவாங்களா ????
*****************************************************************************************************
( ஒரு எழுபது பர்சென்ட் உண்மை, பின் வரும் முப்பது பர்சென்ட் கற்பனை கலந்த நிகழ்ச்சி )
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)