புதன், 27 நவம்பர், 2013

மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா.

என்னது ஒரு தினுசா சுகமா ஒரு வாடை வருது ?
அப்படின்னு தாத்தா மூக்கை இன்னும் நன்னா உறிஞ்சி இழுத்து  பார்த்தாற்போல.

ஆமாம். நிசமாத்தான்.
நல்ல ஏதோ ஹல்வா மாதிரி வாடை வருதே !! ஆனா
என்ன இந்த கிழவியாவது அல்வா பண்றதாவது !! இந்த ஜன்மத்துக்கில்லை.

அப்ப என்ன அந்த வாசனை அப்படின்னு பார்த்தால்,
ஆமாம். லாப் டாப் லேந்து தான் வருது.

இப்ப எல்லாம் ஈ சிகரட் அப்படின்னு சொல்றாப்போல ஒரு ஈ அல்வா வும் வர நேரம் வெகு தூரமில்ல..  ஆல்ரெடி ஸ்மோக் செய்யறவங்க இங்கன போய் படிச்சா தப்பு இல்ல.

 இந்த எலக்ரானிக் டிவைஸ் சிகரட்டை ஊதினா ஸ்மோக் பண்ற பீலிங் வருமாம்.  அதனாலே கொஞ்சம் கொஞ்சமா சிகரட் ஸ்மோக்கிங் நிறுத்தி விடலாம் என்று இதை தயாரிப்பவர்கள் சொல்கிறார்கள்.

அது போல ஈ காபி , ஈ டீ , ஈ வெங்காய மசால் ரோஸ்ட், ஈ அல்வாவுக்கும் ஒரு நாளைக்கு ஒரு டிவைஸ் வரும் என்று திடமாக நம்புகிறார்.சுப்பு தாத்தா.

எல்லா புதிய கண்டுபிடிப்பவைகளுக்கு முன்னாடி ஒரு கனவு காணனும். அப்பத்தான் அதற்கான ஒரு சாத்தியக்கூறு இருக்கிறதா அப்படின்னு மூளை தேடும். So dream before U discover anything.
 

   அன்னிக்கு க்ராண்ட் ஸ்வீட்ஸ்,அடையார் ஆனந்த பவன் எல்லாமே அம்பேல் ஆயிடும்.

தயிர் வடை க்கு பதிலா தயிர் வடை வாடையே மலிவா கிடைச்சா நல்லது தானே.

+Durai A அப்பாதுரை சார் வரன்னிக்கு எந்த ஈ வடை, ஈ பொங்கல், ஈ பேப்பர் ரோஸ்ட் அப்படின்னு செஞ்சு கொடுத்தே ஒரு வகையா மேனேஜ் செஞ்சுடலாம்.


என்ன இந்த ஐ.ஐ.டி லே படிச்ச பசங்க பொண்ணுங்க  ஈ பொங்கல் , ஈ இட்லி, ஈ பிஸ்ஸா , அப்படின்னு இந்த வாடைகளையே கம்ப்யூடர் மூலமா ஸ்டிமுலேட் பண்ணி நம்மை ஒரு வகையா அடிக்ட் ஆக்கிவிடுவாங்க.

ஆனா அதுவரைக்கும் சுப்பு தாத்தா.இருக்கணுமே.மேஷ ராசிக்கு அஷ்டமத்துலே  எட்டிலே வேற சனி வரப்போறாரே .

அதுவரைக்கும் என்ன செய்யறது ?

அல்வாவே ...

வாராய். நீ வாராய்.. என்று பாடிக்கொண்டே இருப்பதால்  லாபம் எதுவும் இல்லை.

லோகத்துலே செய் இல்லைன்னா செத்து மடி. do or die அப்படின்னு இங்க்லிஷிலே சொல்லி இருக்கு இல்லையா ?

 1980லே என் நண்பர் வெங்கடரமணி சுத்தமா,சத்தமா சொல்வார்.

ஆடிட் லே அவர் தான் எங்களுக்கு சீனியர். அநேக விஷயங்கள்  கீதைலே போட்டு இருக்கு அப்படின்னு அடிக்கடி சொல்வார்.

 அது எதுக்கு கீதைலே போடணும். எங்க வீட்டு சீதையே  தினமும் சொல்றது தானே அது என்று நினைப்பேன். சொல்லமாட்டேன். அவர் கிட்ட ஒரு முதல் மரியாதை எப்பவுமே எனக்கு.

ஹல்வா  திரும்பவும் நினைவுக்கு வருகிறது. ஞாபகம் வருதே.வந்தது.

உடன் ,  வீர தீரத்துடன் பாண்ட் நாடாவை இறுக்கி முடிஞ்சுண்டு, சட்டையை சரியாத்தான் போட்டு இருக்கேனா அப்படின்னு கன்பர்ம் பண்ணிண்டபிறகு

எதிர்த்த வெஜிடபிள் கடைக்கு சென்று அரை கிலோ பம்ப்கின் வாங்கி. வந்தேன்.  பம்ப்கின் அப்படின்னா மஞ்சள் கலர் பூசணிக்காய். மெட்ராஸ் லே இத சில பேரு பரங்கிக்காய் அப்படின்னும் சொல்றாக.

ஹல்வாவுக்கு வேண்டியது மற்றதெல்லாம் அதாவது நெய்,பாதாம்பருப்பு, மிந்திரி, திராட்சை,ஏலக்காய் வீட்டில் எங்கெங்கே என்ன என்ன இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

ஸோ , ஒரு சிறிய வாணலி பத்திரத்தில் பம்ப்கின்னை நல்ல சின்ன சின்ன துண்டமா நறுக்கி , நீர் ஊற்றி வேக வைத்து, ஸ்டவ்வை சன்னமாக எரிய வைத்து , அடி தீஞ்சு போகாம பக்கத்துலே இருந்து பாத்து பாத்து ,

பம்ப்கின் உடைய   அந்த பச்சை வாடை அடங்கிய உடனே, கொஞ்சமா அந்த ஹலுவா அழகிலே அசந்து போய், அதை அழகே அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்,  , என்று முனுமுனுத்துக்கொண்டே சக்கரை 10 ஸ்பூன் போட்டு, நல்ல கிளரி, விட்டு,

கேசரி பௌடர் , பொடி செய்த ஏலக்காய், போட்டு,

பக்கத்தில் இன்னொரு ஸ்டவ்வில், ஆவின் நெய் எடுத்து அதில் பத்து மிந்திரி, ஐந்து பாதம் , ஒன்றிரண்டு பிஸ்தா போட்டு, மிந்திரி நல்ல பொன் நிறம் வரும் வரை,

 காத்திருந்தேன் காத்திருந்தேன், என காத்து,

அந்த பம்ப்கின் சக்கரை கலவையை நன்றாக ஒரு பேஸ்ட் ஆகி விட்டதா என்று கவனித்து பார்த்து, அதற்குப்பின் அதற்குள்ளே அந்த நெய்யில் பொரித்த மிந்திரி,பாதம் பிஸ்தா வை கலந்து ,

ஆஹா, ஆஹா , என்னமா மணக்கிறது.

இந்த வாசத்துக்கு ஒரு உதாரணம் சொல்லணும் அப்படின்னா,
மனசுக்குள்ளே மறைஞ்சு மறைஞ்சு வரும் அந்த பாடல் ட்யூன் :

இப்ப காதிலேந்து மூக்குக்கு வந்தது
 காற்றிலே வாசமே காதலின் சுவாசமே .  

  அந்த வாணலியைத் திறந்தேன்.

(Courtesy:thank U Sangeetha Nambi Madam for your excellent recipes blog )

இதுதான் பம்ப்கின் அல்வா.
மனமனக்குது. ருசி அப்படின்னு குறைச்சு சொல்லிடக்கூடாது. தேவாம்ருதம்.


அல்வா வாணலியை ஒரு கிடுக்கியினாலே பத்திரமா தூக்கி நடு ஹாலிலே இருக்கிற ஊஞ்சல் முன்னாடி இருக்கிற மேசை மேலே வைச்சேன்.

அந்த ஊஞ்சல்லே உட்கார்ந்துண்டு இந்த ஹல்வாவை ருசிச்சிண்டு, டி.வி.லே அந்த காலத்து ஆஷா போன்ஸ்லே பாட்டு ஒண்ணு கேட்கணும் அப்படின்னு மனசு ஓடறது.  இல்ல பறக்கறது.


அத கொஞ்சம் ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டேன். போட்டா அப்படியே வழுக்கிட்டு வயத்துக்குள்ளே போயிடுத்து.

ஆஹா என்ன சுகம் என்ன சுகம் !!!

அடுத்த பீஸ் எடுத்து வாய்க்குள்ளே போடறதுக்குள்ளே அது ஸ்பூன் லேந்து நழுவி கீழே விழுந்து விட்டது .

அத எடுக்க குனிந்தேன் பாருங்க...
குனிஞ்சு எடுக்கவும் செஞ்சுட்டேன்.
எழுந்திருக்கும்போது அந்த டேபிள் மேலே தலை இடிச்சு,
அய்யய்யோ ..

டேபிள் மேலே இருக்கற அந்த அல்வா வாணலி அப்படியே கவிழ்ந்து
எல்லா அல்வா வும் கீழே கொட்டி.....

என்ன ஒரு அதிருஷ்டம்...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.....
அல்வா வாணலி தலை கீழா கவிழ்ந்து கிடக்கிறது.


என்ன இது கால சர்ப்ப யோகம் !!! (ஜாதகத்திலே ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவிலே எல்லா கிருகங்களும் இருந்தா இந்த யோகம். இது என்ன படுத்தும் எப்படி படுத்தும் அப்படி எல்லாம் விலா வாரியா படிக்க சுப்பையா வாத்தியார் பதிவுக்கு செல்லவும். )

 சர்விஸ் டயத்தில் தான் ரொம்ப படுத்தியது. ரிடையர் ஆகி 12 வருஷம் ஆகிவிட்டது. என்னை இன்னுமா படுத்தும்.?


அப்படின்னு என்னையே நொந்து நூடுல்ஸ் ஆனபோது

ஊட்டுக்காரி கிழவி வரா...

எனக்கா கை கால் எல்லாமே உதர்றது. இதெல்லாம் தேவையா மத்தியான நேரத்துலே.. என்று கண்டிப்பா சத்தம் போடுவா ..அந்த சத்தம்

அய்யய்யோ?
ஆபத்பாந்தவா அனாத ரக்ஷகா என்று நான் கிருஷ்ண பரமாத்மாவை கூப்பிடலாமா என்று யோசிப்பதற்குள்

என்ன சத்தம் இந்த நேரம்...
என்று அந்த புன்னகை மன்னன் ஒரிஜினல் பாட்டை பாடிட்டே ... வரா.. வரா எங்க ஊட்டுக்கிழவி

என்னமா அந்த கிருஷ்ணன்  பாடுறான் அப்படியே ஜூனியர் எஸ்.பி.பி. மாதிரி இருக்குது. என்னங்க.. அந்த விஜய் டி.வி.பாக்கலியா ..?
அப்படின்னு கேள்வி  வேற ...



புன்னகை மன்னன் பாடலை எப்படி வைரமுத்து சார் இயற்றினார் என்று அவரே சொல்றார் பாருங்க.. ..

ஒரு காதலனும் காதலியும் நதியோரம் செல்கிறார்கள். எல்லா விதமான காதல் உணர்வுகளோடும் செல்லும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தற்கொலை செய்துகொள்ள செல்கிறார்கள். 

கிழவி எங்கே கீழே விழுந்து கிடக்கிற அல்வா வாணலி யைப்பார்த்து விடப்  போகிறாளோ என்ற பயத்திலே,.

அவளை திசை திருப்பும் முயற்சியிலே

இங்கே இந்த பாரு.


நான் இந்த பாட்டு  கேட்டுட்டு இருக்கேன்.

ஆகம்  மலஹர்

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இசை.
நம் தொல்லைகளுக்கு சிறிது நேரம்
விடுதலை கொடுக்கும் இசை.

மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா. இதை கொஞ்சம் கேட்போம் அய்யா.என்று இதில் லயித்து இருந்தேன்.

அப்படின்னு சொல்லிகிட்டே ஒரு சிகப்பு டவலை எடுத்து அந்த கொட்டிய அல்வாவை பாதி மூடினேன்.



நல்ல வேளை . கிருஷ்ண பரமாத்மா காப்பாத்திவிட்டார்.

 கொட்டிய அல்வா வை கவனிக்காமலே அந்த இசையை மட்டும் சிறிது நேரம் ரசித்து விட்டு,

அன்னிக்கு இளையராஜா முன்னாடி நம்ம வீரமணி ட்ரம்ஸ் இன்னும் நல்லா இருந்தது இல்லையா... என்றாள். இன் பாக்ட் அந்த கிரியேடிவிடி பிலான்க்ஸ் டு லெப்ட் ப்ரைநீஸ் ஒன்லி. என்று சொல்லி மனைவி என் கண்களை விட்டு மறைந்தாள் .

ஆப்டர் நூன் காட் நாப் பூனைத் தூக்கம் அவளோட பாக்கியம்.  அவள் பேசாமல் தூங்கிக்கொண்டு இருப்பது என்னோட  பாக்கியம்.


 நானோ,
அந்த இசையிலே தூங்கி இருப்பேன்  போல இருந்தது. அதில் ஒரு கனவு. ஓஷோ மெடிடேசன் சென்டரில் வீரமணி ட்ரம்ஸ் வாசிக்கிறார்.  2010 ல் நான் அனுபவித்த நிகழ்ச்சி. திரும்பவும் ஒரு தரம் மனத்திரையில்.

நீங்களும் கேட்கவேண்டும்.  கேட்பீர்களோ தெரியாது.

சூரி சார் !! என்று ஒரு குரல்.
யாரது ? கூவுது? என்று கணினியைத் திறந்தால் ...!!!

எனக்கென்றே ஒரு பதிவு இட்டு இருக்கிறார்கள்.  தனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ... ஒரு மூத்த பதிவர்.  

இந்தக்காலத்து மாமியார்கள் மருமகள்   பற்றிய சிறப்பாய்வு அங்கே.

 மருமகள் கொடுமையாம்.  திருமணத்திற்கு இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் டிமாண்ட்ஸ் செய்யறாங்க.. அப்படின்னு ..அவங்க நோக்கிலே ...

அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.

(தொடரும்.....)

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கார்த்திகை தீபம்.


கார்த்திகை தீபம்.


பக்தி பரவசத்தில் ஒரு பக்தர் பாடுகிறார்.

புதன், 6 நவம்பர், 2013

யார் சரி யார் தப்பு ?

செவ்வாய் கிரகத்திற்கு செவ்வாய்கிழமை அன்று ஒரு செயற்கை கோளை அனுப்பியிருக்கிறார்கள் நமது அரசாங்கம்.
Add caption

ரூபாய் 450 கோடி செலவு தான் . இதனால் என்ன லாபம் என்று நேற்று எங்கள் காலனி வெட்டி அரட்டை கிழடுகள் போட்டி போட்டு வாதித்துகொண்டு இருந்ததில் காதில் விழுந்த சில கருத்துக்கள் விமர்சனங்கள்.

1.  கந்த சஷ்டி அன்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய அனுப்பி இருக்கிரார்கள்.

2.  செவ்வாயில் தண்ணீர் இருந்தால் அதை குழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரலாம்.

3.  சென்னையில் இட நெருக்கடி முற்றிப்போய் விட்டது.  புதிய பிளாட்கள் அங்கே அமைக்க முடியுமா என்று பார்க்கலாம். '

4.  மன்மோஹன் சார் இன்னும் அங்கு மட்டும் தான்  போகவில்லை.  அடுத்து வரும் எலக்ஷனுக்குள் போகலாமா என்று முடிவு செய்யலாம்.



5. ஹரிஹோட்டாவில் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் சோம்பேறி ஆகிவிடுவார்கள்.

6. உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாகும் வாய்ப்பு.

7.  இங்கே இருந்து செவ்வாய்பேட்டை பக்கம் தானே. அதற்கு எதற்கு 450 கோடி செலவாகிறது என்று சொல்கிறாங்க...  பகற்கொள்ளையா தெரியறது ..

8.  இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்று ஆளுக்கு ஆள் மந்திரி சபைலே சொல்றாக.  நம்ம எதுனாச்சும் முடிவு எடுத்து இளவரசர் ராகுல் எதுனாச்சும் சொல்லிட்டா ஆபத்து. பேசாம கொஞ்ச நாளைக்கு அங்க போய் ரெஸ்ட் எடுத்துப்போம் அப்படின்னு மன்மோஹன் சார் முடிவு செஞ்சா அதுலே என்ன தப்பு சாரே ?

8. இனிமேல் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எல்லாருமே நாங்க ஒரு ட்ரிப் போயிட்டு வந்துட்டோம். இனிமேல் செவ்வாய் எங்களை ஒண்ணும் செய்யாது என்றும் சொல்லலாம்.


யார் சரி யார் தப்பு ?
*******************************************************************

இது ஒருபுறம் இருக்க, கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிரார்கள் என்று கண்ணீர் விடும் அரசாங்கம் ஆம் ஆத்மிக்காக அல்லும் பகலும் உழைக்கும் இந்த அரசாங்கம் இந்த செலவு செய்யலாமா என்று ஒரு கேள்விக்கு ஐ.எஸ். ஆர். ஓ. நிறுவனம் என்ன பதில் தருகிறது என்பதை இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

How does a country with one of the lowest development levels in the world justify spending on a space program?”

 People who are really serious about knowing about this great feat may click HERE