வெள்ளி, 26 ஜூலை, 2013

இறை அருள் என்பது ஒரு ஜி. பி. எஸ். மாதிரி தாங்க.. அதை நீங்க இனிஷியேட் பண்ணுங்க. வழி தெரியும்.

PRAYERS CANNOT BE ANSWERED
UNLESS THEY ARE PRAYED.

ஒரு பொருள் இல்லாத வாழ்வும் பாலை.
ஒரு விதை இடாமல் அறுவையும் இல்லை.
இரு இலக்கு இல்லாமல் சாதனை உண்டோ !
ஒரு ஆன்மா இலாத  மனிதனும் கணினியோ

கடலை நோக்கி  கப்பல்கள் விரைவின்
கரையை நோக்கியும்  கப்பல்கள் விரையும்.
துணிந்து ஆடியவனுக்கு ஆட்டத்தில் ஜெயமே !!
பணிந்து பாடிய  துதிகளுக்கு  இறை அருள் நிஜமே !!



Life without purpose is barren indeed
There can't be a harvest unless you plant seed
There can't be attainment unless there's a goal
And man's but a robot unless there's a soul.

If we send no ships out, no ships will come in,
And unless there's a contest, nobody can win.
For games can't be won unless they are played,
And prayers can't be answered unless they are prayed.
So whatever is wrong with your life today
You'll find a solution if you kneel down and pray.
Not just for pleasure, enjoyment and health,
Not just for honors and prestige and wealth.

But pray for a purpose to make life worth living
And pray for the joy of unselfish giving.
For great is your gladness and rich your reward,
When you make your life's purpose the choice of the Lord.



இன்றுனது  வாழ்வில் என்னவெல்லாம் இடையூறோ
இன்றே அதன் தீர்வு நீ  இறைவனை  வாழ்த்தின உடனே
இன்பத்திற்காக இல்லை, உடல் நலத்திற்காக இல்லை
பெருமைக்காக இல்லை, புகழ், பணத்துக்காக இல்லை.

வாழ்விலே பொருள் காண  ஆண்டவனை வழிபடு
தன்னலமில்லா தானம் தரவே ஆண்டவனை வழிபடு
உன் மகிழ்வு பெரிது. எனின் நீ அடையும் பரிசும் பெரிதாம்.
உன் வாழ்வின் பொருளே இறைவனைத் துதிப்பதே.



இப்பாடலை இசையுடன் கேட்டு மகிழ இந்த தொடர்பினை கிளிக்கவும்.

நன்றி:
http://llerrah.com/prayerscantbeanswered.htm


இறை அருள் என்பது ஒரு ஜி. பி. எஸ். மாதிரி தாங்க..
அதை நீங்க இனிஷியேட் பண்ணுங்க. வழி தெரியும். 

 

இறைவன் படைத்த இயற்கையின் அற்புதத்தை அங்கு போனால் தானே ரசிக்க முடிந்தது.

நீங்களும் பாருங்கள்.  நன்றி: யூ ட்யூப்.

செவ்வாய், 23 ஜூலை, 2013

நயாகரா நயாகரா என்றால் இவரு ......... !!

நயாகரா நாளைக்குக் காலைல போகணும் சீக்கிரம் படுங்க.. என்றது கிழவி குரல்.

என்னது வியாகராவா ...என்ன இப்படி காலம் கெட்ட காலத்துலே வயாகர அப்படி எல்லாம் வம்பு புடிச்ச சமாச்சாரமெல்லாம் இவ பேசுறா  ?

 சந்தேகக் கண்களுடன் நான் ....

கருமாந்திரம்... கருமாந்திரம்.

சொல்றத சரியா காதுலே வாங்கிக்கோங்க..

நாளைக்கு நயாகரா நீர்விழ்ச்சிக்கு காலைலே ப்ளைட்டுலே .. லா கார்டியா ஏர் போர்ட்..

ஆஹா..

ஆமாம்.  மாப்பிள்ளை ஆல்ரெடி டிக்கெட் சௌத் வெஸ்ட் லே புக் பண்ணியாச்சு அப்படின்ன்னாரு. இல்லையா.  இரண்டு லக்ஸ். அதாவது இரண்டு பகுதிகளாக, முதல் பகுதி,   லா கார்டியா லேந்து சிகாகோ மிட்வே ஒரு லக். பின்னே சிகாகோவிலேந்து buffalo நயாகர பால்ஸ் ஏர்போர்ட் அடுத்த லக்.

ஒய் நோ டேரக்ட் பிளைட்?  என்றதற்கு...
வீக் எண்ட்ஸ்லே டேரக்ட் பிளைட் $ 700 டாலராம் ஆளுக்கு.
இந்த ரூட்லே அதுவே $ 200 டாலராம் ஆளுக்கு.  என்ன இப்படி ஒரு லாஜிக்கே இல்லயே என்றேன்.  இது அமேரிக்கா என்றார் மாப்பிள்ளை. எவரி திங் டிபெண்ட்ஸ் ஆன் டிமாண்ட் அண்ட் சப்ளை.   இதே டிக்கட் இன்னிக்கு $ 300 டாலர் .

வெள்ளிக்கிழமை வந்தது.

சரியா 4 மணிக்கு ஏர் போர்ட் போர்டிங் பாஸ் வாங்கியாச்சு.  மாப்பிள்ளைக்கு மட்டும் ஏ குரூப்பிலே முன்னாடியே போகலாம். அவரு பிரீக்வேன்ட் பிளையர்
மத்தவங்க.. சி க்ரூப். அதுவும் 55 முதல் 57 பொசிஷன்.

உள்ளே போறதுக்கு கம்ப்ளீட் பாடி ஸ்கானிங்.   பொண்ணுகளை மட்டும் ஸ்கானிங் மெஷின்லே பொண்ணுங்க தான் பாக்குராக.  அப்படிங்கறது தான் ஒரு ஆறுதல் விஷயம்.

ரகசியமா, ஒரு நாலு ஆப்பிள் சாஸ்  கப்பும், நாலு வாடர் பாட்டில் எல்லாம் கொண்டு வந்திருந்தேன். இதெல்லாம் லிக்விட் நாட் அலௌட்.அப்படின்னு சொல்லிட்டு, அந்த நாலு ஆப்பிள் சாஸையும் கொஞ்சம் கூட தாக்ஷண்யம் இல்லாம, தூக்கி போட்டுட்டாள் அந்த தாடகை.     வாட்டர்   பாட்டில் எல்லாத்தையும் தூக்கி போட்டுடறாங்க.. அப்படின்னு பார்த்த உடனே நான் ஒரு டிரிக் செஞ்சேன்.  இருக்கற வாட்டரை எல்லாம் நான் குடிச்சுட்டேன். இப்ப என்ன பண்ணுவே ?

ஆனா,  திடீர் அப்படின்னு ஒரு சந்தேகம்.   ப்ளாடர் புல் ஆயிடுச்சே... அதிலே இருக்கற வாட்டரை என்ன செய்யறது !!! அந்த பாட்டில் ஸ்கானர்லே தெரியுமோ தெரியாதோ தெரியல்லையே  !!!

சீடிங்கிலேயும் என்னது வேடிக்கையா கீது.  ஒரே பாமிலி அப்படின்னா ஒரே இடம் கிட்ட கிட்ட கிடையாதா ?

அதெல்லாம் இல்ல.  யார் வேணா எங்க வேனா உட்காரலாம். முதல்லே ஏ கருப்பிலே போறவங்க ஜன்னல் பக்கத்திலே, எயில் aisle சீட்லே உட்காருவாங்க.  பின்னே பி, சி, போறவங்களுக்கு நடு நடு சீட் தான் கிடைக்கிறது.  க்யுவிலே கூட முந்திட்டு முன்னாடி போக முடியாது. நம்ம க்யூ பொசிசன் என்னவோ அதுபடி தான் போகனும்.

நானு, என் வூட்டுக்காரி, பேத்தி. என் பொண்ணு , அவரு அதான் என் மாப்பிள்ளை,ஸோ, அஞ்சு  பேருமே அஞ்சு இடத்துலே உட்கார்ந்தோம்.போட்டி பாக் எல்லாம் எங்க வெச்சோம் என்றே தெரியல்ல.

ப்ளேன் கிளம்பினா மாதிரி ஒரு ரவுண்டு அடிச்சு வந்து நின்னுடுத்து.  என்னடா இது.. அரை மணி நேரமாச்சு, இன்னும் டேக் ஆப் take off ஆவல்லையே... ஒரு வேளை பைலட் ரன் வே லே வண்டிய நிறுத்திட்டு எதிர்த்த கடைலே டீ சாப்பிட போயிட்டாரோ ..  ??

அப்படின்னு நிமிர்ந்து பார்க்கும்போதே... 

அந்த சிகப்பா ஒரு நாப்பது அம்பது வயசு அம்மா ஒருத்தி ஏதோ சொல்றா. என்ன அப்படின்னே புரிய வில்லையே... இங்க்ளிஷா பேசறது..? உருப்படியா ஒரு வார்த்தை கூட புரியல்லையே !!

என்ன சொல்றாக..அப்படின்னு பக்கத்திலே ஒருவர் பில் கேட்ஸ் மாதிரி இருக்கார். அவர் கிட்ட கேட்க அவரைப் பார்த்தேன். அவர் கையிலே தடியா ஒரு புத்தகம் . அதுலே அதுக்குள்ளேயே ஆழ்ந்து போயிட்டார். என்ன புத்தகம் அப்படின்னு பார்த்தேன்.   ஜேம்ஸ் ஸ்காட் எழுதிய டிரை டையிங்  சாக முயல்
கதையை விமர்சனத்தை இங்கே படியுங்கள்.
TRY DYING. by JAMES SCOTT BELL.

என்ன அது.. அபசகுனம் மாதிரி !!!

ஜர்னி துவக்கமே சரியா இல்லையே...!
 நினைச்சுண்டு, சரி, சரி, இதெல்லாமே ஒரு கோஇன்சிடன்ஸ்.

அந்த  அனௌன்ஸ் பன்றாகளே !!
என்ன விஷயம் அப்படின்னு அவர் கிட்ட கேட்க...

ஷி டாக்ஸ் இன் பிரெஞ்ச் . வைட் பார் இங்கிலீஷ் . என்றார்.
வைட்டினேன்.  சிக்னல் கிடைத்து விட்டதாம். இன்னும் இரண்டொரு நிமிடங்களில் டேக் ஆப ஆகும் என்கிறார்.  

ஓஹோ !! இது ஒரு பை லின்குவல்  பிரதேசம். பிரெஞ்சு மொழி பெசுவர்களும் இருக்காக  இல்லையா. அப்படின்னு புரிஞ்சது...

ஒரு தினுசா ப்ளேன் பறக்க ஆரம்பித்தது.

இரண்டு மணி நேர பிரயாணத்துக்கு திங்க ஒன்னுமே இல்லையா. அப்படின்னு நினைக்கும்போது ஒரு ஹோஸ்டஸ் ( என்ன விட கொஞ்சம் 30 வயசு தான் குறைச்சலா இருக்கும். ஆனா ஸ்மார்ட்டுன்னா ஸ்மார்ட். )

ஒவ்வொருத்தரிட்டமும் வந்து என்ன வேணும் அப்படிங்க ட்ரிங்க்ஸ்  ???
வேணுமா அப்படிங்கராக...  நோ டிராலி . அதுவும் இப்ப எல்லாமே இலவசம் இல்ல. மீல்ஸ் எல்லாம் காசு தரனும். அதுவும் டாலரிலே.. நாலு மணி நேரத்திற்கும் குறைவா இருந்தா சின்ன டிரிங்க்ஸ் தான்.

பக்கத்துலே இன்னொருவர் இரண்டு பாக்கெட் சின்னதா  தர்றார். ஒன்னு பிரிச்சேன். கடலை. வறுத்தது.ஹனி நனைத்தது. இன்னொன்னு பிஸ்கட் பிச்சு பிச்சு ஒரு தினுசா அசட்டு தித்திப்பா இருக்கு.  அல்பம், அல்பம். சுத்த அலபமா இருக்காகளே !! ஒரு இரண்டு வடை சமோசா தந்தா என்ன குறைஞ்சா போயிடுவாங்க.. அப்படின்னு மனசுக்குள்ளே அசை போட்டேன்.


அவங்கவங்க..  வைன் , பீர் அப்படின்னு எல்லாம் சொல்ல ...
நான் வாட்டர் என்று வாட்டமாக சொன்னேன். (  வைன் அதெல்லாம் டாலர் சமாசாரம்)(கையில் ஒரு காசும் இல்லை. கடன் கொடுப்பார் யாருமில்லை. )  ஒரு வேளை சிகாகோ வர்றேன் அப்படின்னு சொல்லி இருந்தால் அப்பாதுரை சார் கொடுப்பார். ஆனால் அவருக்கும் தெரியாது.

இரண்டு மணி நேரத்திற்கு பின் பிளேன்  சிகாகோ வந்தது. சிகாகோ மிட் வே என்று போட்டு இருந்தது.  என்னது ? இன்னமும் சிகாகோ வல்லையா .. நாம்ம எதுவும் நடுவுலே இறங்கிட்டோமா , ப்ளேன் கிளம்பு வதற்கு முன்னாடி திருப்பி ஏறிவிடுவோம் என்றேன் ?

இல்ல.  இது சிகாகோவிலே இன்னும்  ஒரு ஏர் போர்ட்.  பெயரு மிட் வே. சௌத் வெஸ்ட் கம்பெனி ப்ளேன்மட்டும் இல்ல .. எல்லாமே டு நயாகர இங்கே தான் வரும்.

வயறு கப கபா கபகபா ..பக்கத்துலே சீப்ராஸிலே இந்த நேரத்துலே காப்டன் சார் இருந்தா கொஞ்சம் கொறிக்க கொடுப்பார். சனிக்கிழமை எல்லாம் பஜ்ஜி, பக்கோடா கொண்டு வந்து கொடுத்தார். அந்த காலத்துலே.

இங்கே சிகாகோ ஏர்போர்ட்டிலே என்ன செய்யறது?
வீட்டிலேந்து எடுத்துண்டு வந்த தயிர் சாத டப்பாவை காலி பண்ணினேன்.  தொட்டுக்க எழுமிச்ச ஊருகாயை எடுத்து என் மகள் போடுவதற்கு முன்னாடியே சாப்பிட்டு விட்டேன்.

அப்படி என்ன அவசரம் !!  நயாகரா போயி சாப்பீட்டா என்ன ? என்றாள் இவள்.

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் அப்படின்னு யாருக்குமே தெரியாது.  இதையும் அடுத்த செக்கிங்க்லே தூக்கி போட்டுட்டா கஷ்டம். அதான் நான் சாப்பிட்டு விட்டேன்.  நீ சாப்பிடறது உன் இஷ்டம்.  என்றேன்.

அடுத்த நிமிஷம் என்ன நடக்கும் அப்படின்னு சொன்னது... ??? அந்த கிழவிக்கு சுட் ன்னு கோபம் வந்துடுத்து போல..

குரு ரண்டுலே இருக்கான் உங்களுக்கு. ..தத்து பித்துன்னு உளராதீக.  பலிச்சுடும் என்றாள் தர்ம பத்னி.

பலித்த மாதிரி தான் கிட்டதட்ட  அடுத்த  2  மணி  .நேரத்தில் 

இரண்டாவது லெக் துவங்கியது.

மணி 8.30 இருக்கும்.  ப்ளேன் போர்டிங் ஆரம்பித்தது.

ஒரு வழியா சிகாகோ ரன் வே வை விட்டு  ப்ளேன் .மூவ் ஆகும்பொழுது   இரவு 9 மணி ஆகிவிட்டது.

இந்த தடவை பகவான் அனுக்ரஹ த்தாலே கிட்டத்தட்ட எல்லோருக்கும் பக்கத்து பக்கத்துக்கு இடம். முக்கியமா,  நான், இவ, மாப்பிள்ளை ஒரு சைட்லே.என்று. பொண்ணும் அவ பொன்னும் பின் சீட்டிலே.


விமானம் ஒரு 25000 அடி உயரத்தில் சென்ற போது சிகாகோ நகரமே  ஒரு அலங்கார தேவதை மாயா புரியோ கந்தர்வ லோக  மாதிரி தோன்றியது. நண்பர் திரு கோபால கிருஷ்ணன் அவர்கள் வீட்டு நவ ராத்திரி கொலு நினைவுக்கு வந்தது. வெல் ஆர்கனைஸ்டு .   என்ன அழகான ப்ளாண்டு சிடி  இந்த சிகாகோ என்று வியந்தேன். 

 Disciplined Planning brings about more than ninety percent of the Desired Results.

 என்று மனேஜ்மெண்ட் பார்லன்சுலே சொல்வார்கள்.  இத பார்க்கணும். புரிஞ்சுக்கணும்

. ( நம்ம ஆட்களுக்கு முனிசிபாலிடி வாடர் கூட சரியா சம்ப் வரைக்கும் கொண்டு வர தெரியல ... கஷ்டமாத்தான் இருக்கு . Reality is too hard to swallow. )

இது மாதிரி ஒரு சிடி கூட இந்தியாவில் ஏன் இல்லை ?  இதோடு ஒப்பிட்டால்  நியூ யார்க் கூட கொஞ்சம் ஜிக் ஜாக் ஆகத்தான் இருக்கிறது.

அடுத்த ஒரு மணி நேரம் ....
அதிர்ச்சியோ அதிர்ச்சி.  !!!!

ப்ளேன் நடுங்கற மாதிரி ஒரு பீலிங்.   ஒண்ணுமில்ல.. இது மேகங்களுக்குள்ளே போகும்போது இருக்கற வாபிளிங் தான். என்று எடுத்த எடுப்பில் நினைத்தேன்.

ஒரு அஞ்சு பர்செண்ட் தான் அதில் சரி.
வழியில் ஏரியல் ரூட்டில் தண்டர் ஸ்டார்ம்.
நயாகராவில் தண்டர் ஸ்டார்ம்....
 பைலட்டால் இறங்க முடியவில்லை.
ப்ளேன் சுத்தி சுத்தி பபலோ நகரை  கொல கொலயா முந்திரிக்காய், நரியே நரியே சுத்தி வா என்று வருது.  அப்ப அப்ப ஒரு பக்கமா சாயுது. திடீர் அப்படின்னு ஒரு சில செகண்டுகள் கீழே 5000 feet  டிராப் ஆனது இல்ல ஆனது போல தோன்றியது.  ஒரு அமெரிக்க பெண்மணி, என்று கத்தி விட்டாள்.

நான்...  
மனசுக்குள்ளே திகில் தான்.  ஜன்னலுக்கு வெளிலே  பளிச் பளிச் செகண்டுக்கு அஞ்சு தரம்.

சாதாரணமா,  மின்னல் இடி எல்லாமே தலைக்கு மேலே   ஆகாயத்திலே தான் தெரியும்.  இங்கேயோ நம்ம உட்கார்ந்து இருக்கிற ப்லேனுக்குக் கீழே பக்கத்திலே மின்னல் ...மின்னல்...தண்டர் மின்னல்.

பயம் என்னை ஒரு ஸ்வைன் ப்ளூ போலத் தொட்டது. கையைப்பிடித்தவளின் கையைக் கொஞ்சமாய்ப் பிடித்தேன். நல்ல வேளை !  இவள் என் பக்கத்தில் இருக்கிறாள். என்று தைரியம் வேறு. 

நான் பயப்படுகிறேன் என்று அவள் உணர்ந்திருப்பாள் என நினைத்து அவளுக்கு தைரியம் சொல்ல, நான்
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. என்று வள்ளுவர் சொல்லியிருக்கார். என்றேன்.  நாம் அஞ்சி அஞ்சி சாவதை விட அஞ்சாது உயிர் விடுவது மேல் பாரதியார் சொல்லியிருக்கார் என்றாள் தர்ம பத்னி.பாரதியார் தானா வேற யாரா என்று யோசிக்க இப்ப நேரம் இல்ல.

வெளிலே பாருங்கோ என்றார் மாப்பிள்ளை. ஜன்னல் வழியே பார்த்தேன்.பிரும்மாண்டமான ப்ளேனுக்கு  இறக்கைக்கு பக்கத்திலே தான் நான் இருக்கேன். சைடுலே கீழே பலமான இடி மின்னல்கள் . தெரிகின்றன.  பளிச் பளிச் பளிச்..

டோன்ட் வொர்ரி மாமா, . பைலட் இஸ் அவாய்டிங் த தண்டர் ஸ்டார்ம் ரூட்.  சுத்திண்டு போறான் போல  இருக்கு, ஒரு வேளை பிட்ஸ்புர்க் பக்கமா இருக்குமோ என்னவோ அப்படின்னு சொல்றார் மாப்பிள்ளை.

 பைலட் அப்படின்னு சொல்றவா கிட்டே நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் இல்லையா ..என்று ஒரு சந்தேகமா அவரைப்பார்த்தேன்.

ஜெனரலி எஸ் என்று ஒரு ஹார்ட் பீட்டை கம்மி பண்ணினார்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்த உளமே புகுந்த அதனால்,
 ஞாயிறு, திங்கள், செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி, சனி பாம்பிரண்டும் உடனே ....
மாசறு நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே ...
என்று  கோளறு பதிகத்தை சொல்லி முடித்தேன்.

திங்கள் முதல் சனி முடிந்துவிடும் ஆனால் ப்ளேன் இறங்காது போல் இருந்தது.   வெளிலே பார்த்தா மின்னலான மின்னல்.ப்ளாஷிங்க்.
 ப்ளேனோ வாப்ளிங்..

எதற்கும் இருக்கட்டும் என்று. ...

த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம். உருவரகம் இவபந்தனாத்
 முக்ஷ்யோ முக்தி இவ மாம்ருதாத்.

அப்படின்னு

ம்ருத்யுஞ்சய மஹா மந்திரம் ஜெபிக்க ஆரம்பித்தேன்.  உருவாரகம் அப்படின்னா விலாம்பழமா வெள்ளரிப்பழமா அப்படின்னு வெங்கடராமன் சாரோட டிஸ்கஸ் பண்ணினது நினைவுக்கு வந்தது. ஏதோ ஒரு பழம். இன்னிக்கு எந்த பழமா இருந்தாலும் சரி.

உசிரு போற போது சட்டுன்னு போயிடனும். சிரமப்படக்கூடாது வெள்ளரி பழத்திலே இருந்து ஓடு பிரியராப்போலே இந்த உயிரும் உடலை விட்டுட்டு உடனே ஓடிப்போகனும்..   பகவானே அப்படின்னு த்யானம் பண்ற ஸ்லோகம். அது.

மரண பயம் இருக்கே அது தான் வெல்லப்பட வேண்டிய ஒன்று. மரணம் அல்ல.  இன்னிக்குத் தான் அந்த ஸ்லோக மகிமையே முழுக்க  புரியறது.

ப்ளேன் துடர்ந்து நடுங்கறது.
கால் டு க்ரூ
டேக் பொசிஷன்ஸ்
என்று ஒரு  சத்தம். யாரோ ஆர்டர் போடறா.. அதட்டரா மாதிரி ஒரு சத்தம்.
எங்கும் நிசப்தம்.


மாப்பிள்ளையும் லேசா சிரிக்கிறார்.  ஒன்னும் ஆகாது மாமா  கவலை படாதீக.. என்கிறார்.

லைப் போட் எங்க இருக்கு அப்படின்னு சுத்தி பார்க்கறேன். சீட்டுக்கு கீழே இருக்கிறது.  ஒரு வேளை நயாகரா மேலேயே இறக்கிட்டானனு என்ன பண்றது ?  இப்பவே எடுத்து கட்டிக்கலாமா என்று கேட்கப்போனேன் மாப்பிள்ளையை.    என்னை  இவள் அடக்கி உட்கார வைக்கிறாள்.

 ஏதாவது ஆயிடும் அப்படின்னா எல்லாருக்கும் பார சூட் தருவாளோ ? இல்ல என்ன மாதிரி கிழம்கட்டை இதுக்கு   எல்லாம்  எதுக்கு  ?? எப்படியும் போற கிராக்கிதானே அப்படின்னு அம்போன்னு விட்டு விடுவாகளோ ?
தெரியலயே என்றேன்.

 ஊட்டுக்கிழவியோ என்ன அப்படி ஒரு பயம்.   தைரியம் புருஷ லக்ஷணம் இல்லயோ ?? இரு நூறு பேரு உட்கார்ந்து இல்ல?  அவாளுக்கு என்ன நடக்குமோ அது தானே நமக்கும் ? என்று சொல்ல.. 

அவாளுக்கும் எதுவும் நடக்கக்கூடாதே என்று நான் முருகனை  பிரார்த்திக்க, அதைக் கேட்டு முருகன் பிரத்யக்ஷமாய் வந்து, டேய் ! சூரி !! 
அந்த கன்னபிரானோடு சேர்ந்து சொல்லாத நாள் இல்லை, சுடர் மிகு வடிவேலா அப்படின்னு நீயும் பாடினே இல்லையா  அத நான் மறந்துவிடுவேன் என்று நீ நினைக்கலாமா என்று அந்த முருகப்பெருமான் நினைக்கணுமே அப்படின்னு உருகி போய் நான் நிற்க.....



ப்ளேன் இறங்க முடியலே அப்படின்னாலும் சிகாகோவிக்கே  திரும்பிடலாம் இல்லையா என்று இழுத்தேன். நான் வேணா காக்பிட்டுக்குள்ளே போய் பைலட்டு கிட்டே கேட்கட்டுமா ...???   சரி, அப்படின்னு அவா நினைச்சாலும், மனசு இருந்தாலும்,  சபிஷயண்டா SUFFICIENT பெட்ரோல் இருக்குமோ இருக்காதோ அப்படின்னு ஒரு சந்தேகம். சோ ஐடியாவை டிராப் செய்தேன்.

மீனாக்ஷி தாயே !! காப்பாத்தும்மா .!!  கவிநயா பாட்டுக்கு அத்தனைக்கும் நான் தான் மெட்டு போட்டு இருக்கேன். உனக்கு தெரியாதா !!  சொக்க நாதா !! நீ கொஞ்சம் அட்வைஸ் பண்ணு அப்பனே ..

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.. 
தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாற்றவர்க்கும் இறைவா போற்றி.

 மெட்ராசுக்கு போன உடன் எவரி பிரதோஷத்துக்கும் இனிமே கயிலை நாதா கபாலீச்வரா!! உன்னை பார்க்க வறேன். அப்படின்னு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம் அப்படின்னு பார்த்தபோது செல் லிலே கனெக்ஷன் இல்லாது போக...

நம்ம நயாகர பாக்கத்தானே வந்தோம்.
ஸ்ட்ரைட் ஆ    நாராயணன் கிட்டயே போயிடுவோம் போறோம் போல இருக்கே... என்றேன்.

அப்பன்னு பார்த்து வீல் அப்படின்னு ஒரு சத்தம்.
ஹார்ட் ஒரு செகண்டுக்கு நின்னுட்டு திரும்பவும் ஸ்டார்ட்.
என்னதுன்னு பாத்தா ஒரு சின்ன குழந்தை அழறது.   எனக்கு முன்னாடி ஒரு சீட்லே ஒரு சின்ன அமெரிக்க அம்மா (லேசா த்ரிஷா மாதிரி ஒரு ஜாடை, , என்ன இருந்தாலும் ரசிக்கிற சூழ் நிலையா !! ) அதே ஆரீராரோ பாட்டு அவங்க ராகத்துலேபாடுறாங்க... நல்ல குரல். சுப்ரானோவா மெஸ்ஸோ சுப்ரானாவோ அதுலே மனசு போகலே ...

டிங்..டிங்...
ஒரு அனவ்ன்ஸ்மெண்ட் ஒலிப்பெருக்கியில்.  அதுவும் பிரெஞ்சில் முதலில்.
ப்ளேன் இறங்கும்போது கொஞ்சம் பம்பிங் bumping இருக்கும். பயப்படாதீங்க. அப்படின்னு சொல்றாக... என்றார் இவர்.

 மை ஹார்ட் ஏற்கனவே பம்பிங் ஹார்டு. இதுல ப்ளேன் வேற BUMPING ஆஆ ?

தண்டர் ஸ்டார்ம் கடந்து போச்சாம்.  அப்பாடி.  B.P. 200/180 லேந்து திரும்பவும்
140/80 க்கு வந்தா மாதிரி ஒரு உணர்வு.பீலிங்.
அதற்குள்,  ப்ளேன் லேண்ட் ஆகத் துவங்கியது.

50 நிமிச பிரயாணம் 2 மணி 30 நிமிடத்தில் முடிந்தது.  கொட்டும் மழையிலே ப்ளேன் லேண்ட் ஆனது. கொஞ்சம் கூட எதிர்பார்க்காம தமிழ் சினிமா ஆண்டி க்ளைமாக்ஸ் மாதிரி அவ்வளவு ஸ்மூத் லாண்டிங்.

 ஒரு வேளை தண்ணீர்லே இறங்கிடுத்தோ ?
 நயாகரா பால்ஸுக்கு நடுவிலே இறங்கிடுத்தோ ? இல்லை. தரைல தான் இறங்கி இருக்கிறது. அப்பாடா !! பெரு மூச்சு ஒன்று விட, வேகமா டயர்லே ஓடற பீலிங் வருது..     ஹார்ட் ரேட் நார்மலுக்கு வருது.  ஹாண்ட் பாக்லே இருக்கற பிள்ளையார்பட்டி பிள்ளையாரை போட்டோ வை எடுத்து கண்ணில் ஒத்திக்கொள்ள தேடுகிறேன்.  ஹாண்டு பாக் எங்கேயோ காணோம்.

ப்ளேன் கம்ஸ் டு எ ஹால்ட்.

சக பிரயாணிகள் எல்லோரும் கோரஸ்  ஆ கை தட்டுகிறார்கள். சைமல்டேனியஸ்ஸா .இட் வாஸ் எ டிலைட் டு வாச்.

 பைலட்டுக்கு தாங்க்ஸ் சொல்ல்றாக.
நம்ம ஊராய் இருந்துச்சுன்னா ஆளுக்கு ஆள்... என்ன செய்வாக..?  நான் சொல்லணுமா ?

 சிலர் காட் ப்ள்ஸ் அஸ் ஆல் என்கிறார்கள்.   ஒருவர் முகத்திலாவது ஒரு சின்ன பயம் கூட இப்ப இல்லை.

Why Fear When I am Here
ஒய் பியர் வென் ஐ ஆம் ஹியர் ...
பாபா சொன்னது நினைவுக்கு வர்றது.
இப்ப மனசுக்கு வருவதெல்லாம் பத்து நிமிசத்துக்கு முன்னாடி வல்லையே !!


யாமிருக்க பயமேன். 
பாபா சொல்றார் இல்லையா. !!
அவர் கூட வந்திருந்தா சொல்வாரோ என்னவோ ? இல்லை, அவரும்
ஒரு வேளை கூட வந்திருக்கிறாரோ என்னவோ ?

எப்படியோ...
அப்பாடி....
மாந்துரையான் காப்பாத்திவிட்டான்.

பல ஸ்ருதி

சீக்கிரம் வாங்க.. ரெண்டல் கார் காரன் ராத்திரி 12 மணிக்கு மூடிடுவான். கடையை. என்று சொல்கிறார் மாப்பிள்ளை.

மூடிட்டா.. இங்கேயே ஏர் போர்டிலேயே படுத்துக்கலாமா ?
முடியாது.  இங்கே ஒரு ஹோட்டல் எடுத்து ஸ்டே பண்ணனும்.

எகைன், எம்பெருமான் துணை இருக்கார்
எம்பெருமான் எங்கே தூங்கிடப்போராரோ என்று அவர் மார்பிலே தாயாரும் இருக்கா. 

நான்தான் தினப்படி ராஜேஸ்வரி வலைக்குப் போயிண்டு அவங்க சொல்ற சாமியெல்லாம் பிரார்த்திச்சுண்டு , பாடிண்டு இருக்கேன் , எனக்கொரு ஆபத்து கண்டிப்பா வராது அப்படின்னு எனக்கே ஒரு சமாதானம் சொல்லிக்கறேன்.

ராகு பகவான் நாலுலே  இருந்தா மனக் க்லேசம் டிராவல் போதெல்லாம் இருக்கத்தான் செய்யும். ஆனா  எனக்கோ என் ஜாதகத்திலே ராகு பகவான் பதினிரண்டு இடத்துலேயும் இருக்கப்போலே இன்னிக்கு ஒரு பாவனை.

************************
இந்த தண்டர் ஸ்டாரமில் கீழே விழுந்த ஒரு மரத்தை அடுத்த நாள் நாங்கள்
நயாகரா நதி பக்கத்தில் பார்த்தோம்.

 
 மற்ற படங்களும் வீடியோக்களும் அடுத்த பதிவில் வரும்.
****************************************************************************

ரெண்டல் கார் எடுத்துண்டு இந்த பபலோ நகரிலேந்து ஒரு நாப்பது மைல் தொலைவிலே இருக்கும் நயாகரா பால்ஸ் நகருக்கு கிளம்பினோம்.  வழி நடுக
மழை.  சில இடங்களிலே கார்லே போட்டிருக்கிற ஜி. பி. எஸ்  கூட   ஒத்துழைக்க வில்லை. அதுக்கெல்லாம் கூட ட்யூடி அவர்ஸ் உண்டோ என்று வியந்து போகிறேன்.  இல்லை, மின்னல் இடி நேரத்திலே சிக்னல் சரியா கிடைக்காது. இப்ப கிடைச்சுடும் ..என்கிறார் மாப்பிள்ளை.
உத்தேசமா இதுதான் ரூட் அப்படின்னு மாப்பிள்ளை வண்டி ஓட்டறார்.

 மெதுவா போங்கோ அப்படின்னு மெதுவா சொல்றேன்.

வருஷம் முழுவதும் அவர் மழை, பனிலே தானே வண்டி ஓட்டறார் ...அவருக்குத் தெரியாதா. என்கிறாள் இவள்.  மிதமாகவும் சொல்லணும் அதையும் ஹிதமாகவும் சொல்லணும். இது அவளோட பாலிசி.

சஞ்சு ( என் பேத்தி ) எங்கே என்று பாத்தேன்.
இத்தன அமர்க்களம் நடக்கறது.  இந்த சின்னப்பொண்ணு மட்டும், அந்த புஸ்தகத்திலே முழுகி இருக்கு.  இந்த கையிலே ஒரு பிரெஞ்சு ப்ரை. அந்த கையிலே ஒரு பொஸ்தகம். அது தான் இன்றைய பிஞ்சுகளின் உலகம்.
என்ன புஸ்தகம் .அது ?  ஜோடி பிகால்ட் எழுதிய பத்தொன்பது நிமிடங்கள்.
கதையின் சாராம்சம் இங்கே.

வந்தாச்சு வந்தாச்சு
எது ?
ஹாம்டன் இன் .
அப்படின்னா ?
இதான் ஹோட்டல்.  த்ரீ  ஸ்டார் .

மொத்தம் ஸ்டார் பதி மூணு இல்லயோ என்றேன்.
அது அமெரிக்க தேசக் கொடிலே தாத்தா.  ...இது த்ரீ  ஸ்டார் ஹோடல் என்றாள் என் பேத்தி.

நயாகராவின் சரித்திரத்தை இங்கே படிக்கவும்.


Around Twenty Percent of ALL Fresh Water in the World flow at Niagara River and Falls.

வீராணம் லேந்து சென்னைக்கு பைப் போட்டவங்க , இங்கேந்து ஒரு பைப் போட்டு தமிழகத்துக்கு தண்ணி கொண்டு வர முடியுமா ?
தெரியலயே !!!
தொடரும்.....

மாந்தரால் உருவாக்கப்பட்டதா  பனி மலை மேகங்கள் ???!!!!


 
நயாகரா இந்த வேகம் என்றால் சுவர்க்கத்தில் இருந்து அந்த கங்கை கீழே விழும்போது என்ன வேகத்தில் இருந்திருக்கவேண்டும் ?

பகீரதனால் முடியாது என்பதினால் தான் சிவன் தன தலையைக் கொடுத்தாரோ ?

நயாகரா சிவன் கோவிலில் ஒரு சிறப்பு. என் திகைப்பு. 

அடுத்த பதிவில்.

நயாகரா என்றால் இவரு வயாகராவா?என்கிறாரே !!

செவ்வாய், 16 ஜூலை, 2013

யாரு யாரை காபி அடிச்சாக ?


யாரு யாரை காபி அடிச்சாக ?

இது அன்ன கென்றிக் *பிச் பர்ப்க்ட் + வென் ஐ அம கான்.



Music video by Anna Kendrick performing Cups (Pitch Perfect's "When I'm Gone") (Director's Cut). (C) 2013 Universal Music Enterprises, a Division of UMG Recordings, Inc.



இது டி. எம். எஸ். பாடியது சிவாஜி சாருக்காக. 




This is pure Raag Mohanam. Classical. SO NO ONE HAS COPIED ANYONE.

கீழே நீங்கள் காண்பது அதே கப் சாங் எனது பேத்தி பாடியது.
 சஞ்சிதா அண்மையில் அவளது பள்ளியில் அவள் தோழிகளுடன் இந்த பாடலை பாடினாள்.




ஞாயிறு, 14 ஜூலை, 2013

கிழவன் உளறுகிறான். நீங்கள் கேட்கவேண்டும்


Warning as you start reading:

(கிழவன் உளறுகிறான். நீங்கள் கேட்கவேண்டும்  
  என்ற தேவை இல்லை   கேட்டுவிட்டு நீங்கள் திட்டினாலும் பரவாயில்லை என்று தான் எழுதுகிறேன். )

இது நான் ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த படம் அல்லது கார்டூன்.

நாங்கள்  ஏதேனும் ஒரு பொருள் பழுது பட்டால் அதை நாங்கள் தூக்கி எறிவது இல்லை.

இதை கருத்தில் கொணரும்போழ்து இரண்டு உண்மைச்சம்பவங்கள் என் கண் முன்னே விரிந்தன.

அவற்றினை நான் வலை நன்பர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவலானேன்.

கடந்த முப்பது ஆண்டுகளில் நான் சந்தித்த இரு குடும்பங்களில் காட்சிகள் இவை:

முதல் நிகழ்வு.

எனது நண்பர் ஒருவர்  மூன்றாம் நிலை ஊழியராக இருந்து பின்  அவருடைய தொழில் முறை தகுதியின் அடிப்படையில் முதல் நிலை ஆபீசராக தேர்வு பெற்று என்னுடன்  கணினி பிரிவகத்தில் ப்ரோக்ராமர் ஆக இருந்தார்.

 அவருடைய சலியா உழைப்பும் பேசும் திறமையும் எல்லோரிடமும் நட்புடன் பழகும் விதமும் எல்லோருக்கும் பிடித்து இருந்தது    அதனாலேயே அவர் வணிக மேலாளர் ஆக திறன் கொண்டவர் என்று சிபாரிசு செய்யப்பட்டது. சிபாரிசு செய்த . அநேகம் பேர்களில் நானும் ஒருவன்.

நாளடைவில் அவர் நிர்வாக பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு பிராஞ்ச் மேனேஜர் என்னும் நிலைக்கு பொறுப்பு தரப்பட்டது.   அவர் சென்னையிலிருந்து தஞ்சை கிளைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு சோதனை துவங்கியது.  இறைவனே தந்த சோதனையா ?

ஒரு வாரம் பத்து நாள் என்று தொடர்ந்து பெய்த பேய் மழை காரணமாக அவர் இருந்த மாவட்டம் முழுவதுமே வெள்ளம். ரோடுகளில் மழை நீர் தேக்கம். மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை.  மின்சார தந்தி கம்பிகள் ஆங்காங்கே தொங்கி கொண்டு இருக்கும் நிலை.

சுத்தமான தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. இடையூறுகள் பல  இருந்தும் எங்கள் நிறுவனம் அன்றாட வேலையை நிறுத்த இயலாது.

அந்த சமயம் என்று பார்த்து, ஒரு நாள் மேல் அலுவலகத்தில் இருந்து ஒரு மேல் நிலை அதிகாரி அந்த கிளைக்கு ஒரு புதிய கட்டடத்தை தேர்ந்து எடுக்க அந்த ஊருக்கு சென்றார்  . அது அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை.


  வந்த அந்த அதிகாரியை கூட்டி செல்லும் வழியில் ஒரு மரம் எனது நண்பர்  கார் மேல் விழுந்தது.  கார் அப்பளம் போல் நொறுங்கியது.  டிரைவர் இடத்தில் அமர்ந்திருந்த எனது நண்பர்  மேலே மரத்தின் அடிவாரம் இடியென  விழுந்தது.

இவர் பலத்த அடிபட்டு காயத்துடன் மூர்ச்சை அடைந்தார்  உயிர் இருப்பது போலத் தோன்றியதால் கிராம வாசிகள் அங்கு பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதில் ,  அங்கு இவரை மருத்துவம் பார்க்க வசதிகள் இல்லை. உடனே திருச்சிக்கு எடுத்து ( கவனிக்கவும் ) செல்லவும் என்ற அறிவுரை.

இவருக்கு தண்டு வடத்தில் பலத்த அடி. அடுத்த சில  மணி நேரங்களில் அவர் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை திருச்சியில் ஒரு பிரபல மருத் துவகத்தில் சேர்த்து ஒன்றல்ல, இரண்டல்ல ஒரு பத்து நரம்பு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒரு மாத கால கட்டத்தில்.  உயிர் பிழைத்து கொண்டார்.  எனினும் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. தலைக்கு கீழே எந்த வித உணர்வும் இல்லை. 

அறுவை சிகிச்சைகள் ஒரு வாறு முடிந்து உயிர் தப்பிதாயிற்று என்ற நிலையில் அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கும் தீவிர சிகிச்சைகள் தரப்பட்டன.

சென்னை மற்றும் வேலூர் நரம்பு மருத்துவர்கள் பலர் அவருக்கு சிகிச்சையில் உதவி செய்தனர்.  இருந்தாலும் எந்த வித மாற்றமும் இல்லை.
கை கால் செயல் பாடுகள் முற்றிலும் அற்ற நிலையில் அடுத்த 2 ஆண்டுகள் இருந்தார்.

விபத்து நடந்த அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் காப்பு இன்சூரன்சு தந்த உதவித் தொகையை விட அவர்கள் கையில் சேமித்து வைத்த எல்லாவற்றையும், நகைகள், வீடு என எல்லாவற்றையுமே இழந்து விட்டிருந்தனர்.

விபத்து நடக்கும்போது சென்னையில் அவரது குடும்பம். அவர்   மனைவி ஒரு வங்கியில் வேலை. இரு குழந்தைகள். இரண்டும் பள்ளியிலே படித்து கொண்டு இருந்தன.

அடுத்த வருடம்  அதாவது 2002 முதல்  சென்னையில் இருந்து திருச்சிக்கே சென்று விடலாம் என்று அவர்கள் எண்ணியிருந்த வேளையில் நடந்த இந்த விபத்து அந்த குடும்பத்தை சீர் குலைய வைத்தது.

அடுத்த 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் அவரால் நடக்க இயலவில்லை.  நிற்க முடிகிறது.   சக்கர நாற்காலியில் அலுவலகத்திற்கு வருகிறார்.  நிர்வாகம் அவரை திரும்ப அலுவலக வேலைக்கே அழைத்து விட்டது அதுவும் ஒரு கருணையின் அடிப்படையில் தான்.  இதுவே தனியார் நிருவனாமாக  இருந்தால் அவர் வேலை போயிருக்கும்.

அவரது மனைவி மனம் தளரவில்லை.  தான் உழைத்து கணவனை அல்லும் பகலும் உடன் இருந்து மனம் தளராமல் பார்த்து கொள்கிறாள்.   தூங்குகிறாளா என்றே சந்தேகம்.   தான் உயிருடன் இருப்பதே தன கணவனுக்கும் குழந்தைகளுக்காகத்தான் என்று நினைக்கிறாள் அவள்.  

வேலூர் புனர் வாழ்வு மையத்திற்கும் சென்னைக்கும் அவள் தந்த டாக்சி, பஸ் செலவுகளே ஆயிரக்கணக்கில் .  அங்கு வேலூர் புனர் வாழ்வு மையத்தில் அவளுக்கு எந்த வித உறுதியோ அல்லது எத்தனை வருடம்  அவர் நட மாட இயலுமென்று யாரெல்லாம் நரம்பு தொடர்புள்ள நிபுணர்களோ அவர்கள் யாராலும் சொல்ல முடியவில்லை இன்னமும். 

இந்த பெண்மணி, இன்னமும் தன கணவனை தெய்வமாக மதிக்கிறாள். உன்னால் எனக்கு கஷ்டம் தான், என விலகிப்போக நினைக்கவில்லை.

இன்னும்  ஒன்று அல்லது  இரண்டு வருடங்களில் மூத்த பெண்ணுக்கு ஐ.டி. யில் ஏதேனும் ஒரு நல்ல வேலை கிடைத்துவிடும். அவளும் அமேரிக்கா செல்வாள்.  அப்பாவை விட்டு விட்டு வந்துவிடு, அவரை ஏதேனும் ஒரு இல்லத்தில் சேர்த்து விடலாம் என்று அம்மாவுக்கு அறிவுரை அளிக்கவில்லை. அளிக்கவும் மாட்டாள். 

தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யென பெய்யும் மழை.  
என்னும் குறளுக்கு ஒரு உதாரணம் என்றால் இந்தப் பெண்மணி ஆகத்தான் இருக்கவேண்டும்.


பொருள் ஈட்டும் திறன் குறைந்ததால் கணவனை மதிக்காது அவள் , நான் என்ன செய்யட்டும், என்னையும் குழந்தைகளையும் பார்த்து கொள்வதே கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.

இரண்டாவது நிகழ்வு.

எனது மேல் அதிகாரி 1987 ல் நான் சந்தித்தவர். மிகவும் கண்டிப்பானவர்.
முதுகலை பட்டம் பெற்றபின் நேரடியாக முதல் நிலை ஆபிசராக வந்தவர் நாளடைவில் மண்டல வணிக மேலாளராக உயர்வு பெற்றவர்.

அவரது குடும்ப சூழ்நிலை அலுவலகத்தில் யாருக்குமே தெரியாது.  சிலருக்கு மட்டுமே தெரியும்.  அலுவலகத்தில் மிகவும் கண்டிப்பான அவர் வீட்டிலோ சாந்த ஸ்வரூபி

ஏன் ? 

அவர் மனைவி தன முதல் குழந்தை பிறந்த சில நாட்களிலே ரத்த அழுத்தம் காரணமாக ஸ்ட்ரோக் வந்ததால், நடக்கும் சக்தியை இழந்து விட்டாள். சக்கர நாற்காலியிலே ஒரு வருடம் அல்ல, இருபத்தி ஐந்து வருடங்கள் தன மனைவியை தன குழந்தை போல பாதுகாத்து வருகிறார்.

அவருக்கு அவர் ஊரில் உள்ள செல்வாக்குக்கும், படிப்புக்கும், அழகுக்கும் அந்தஸ்தததுக்கும் இன்னொரு திருமணம் புரிந்து கொண்டு இருக்கலாம்.

திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறந்த பின் அவர் எந்த வித இல்லற தாம்பத்திய சுகத்தையும் அனுபவித்திருக்ககூடிய வாய்ப்பு இல்லை.  ஒரு  க ணவனாக, தன புதல்விக்கு அன்புத்தந்தையாக மட்டுமே வாழ்ந்தார்.  மனைவியை அவர் நினைத்து இருந்தால், ஒரு காப்பு இல்லத்தில் சேர்த்து இருக்கலாம். 

அவர் செய்யவில்லை.  கரம் பிடித்து தன் இல்லத்துக்கு அழைத்து வந்த அவளை, அன்று திருமணமான அன்று எத்தனை அன்புடன் இருந்தாரோ, காதலித்தாரோ, அதுபோல் முப்பது வருடம் கழித்தும் அதே நிலை.  தானே காலையில் எழுந்து சமைத்து தன கையால் தன மனைவிக்கு ஊட்டுகிறார்.
வேலைக்குச் செல்லும்போது மட்டும், அவள் துணைக்காக, அவள் உதவிக்காக, ஒரு பெண்மணி நியமிக்க பட்டு இருந்தாள்.

ஒரு ஐந்து  வருடங்களுக்கு முன்பு, அவரது பெண்ணுக்கு திருமணம் நடந்தது. அவள் தனது கணவருடன் அமேரிக்கா சென்று விட்டாள்.

இங்கு ஒரு நாள். ஒய்வு பெற்ற இவர் திடீரென மனைவிக்கு உடல் நலம் குறைய, அவளை  பக்கத்தில் உள்ள மருத்துவ மனைவிக்கு அழைத்துச் செல்ல இருக்கையில் ஆம்புலன்ஸ் வரும்பொழுது இவர்  திடீரென இறந்து போனார். மாசிவ் ஹார்ட் அட்டாக் என்றார்கள்.

தனது 62 வது வயது  தனக்காக  வாழாது தனது கை பிடித்த , மனைவிக்காக அவள் பெற்ற செல்வக்குழந்தைக்காக வாழ்ந்தவர். 

*********************************************************************

நான் சொன்னது எனது இரண்டு நண்பர்களின் உண்மைக்கதைகள்.
அவர்கள் பெயரை நான் வெளியிட வில்லை. 

இந்தக் கதைகளை நான் சொல்வதற்கு காரணம் இதுவே.

மனைவியோ கணவனோ ஒரு சரி செய்ய இயலாத நோயினால் பீடிக்கப்பட்டும் அவரை தொடர்ந்து ஆதரித்து வரும் கணவன் மார்கள், மனைவி மார்கள் பல இன்னும் உளர் நமது நாட்டிலே.  இதை போற்றவேண்டுமா அல்லது

எனக்கு என்று ஒரு வாழ்க்கை வேண்டும். என்று மனைவியோ கணவனோ நினைத்து தன வாழ்க்கைத் துணைவரை அல்லது துணைவியை ஒரு elders Home காபக்கத்தில் சேர்த்து விட்டு தான் இன்னொரு திருமணம் செய்து கொள்வது இல்லையேல் இப்பொழுதெல்லாம்  வரும் லிவிங் டுகெதர் அமைப்பாக இருப்பதை போற்றவேண்டுமா ? 

Conceding that there could be rare cases as is reported in SOLVATHELLAAM UNMAI in RAJ TV., is it fair on the part of writers to glorify such happenings which are few and far between ?

எந்த ஒரு  சூழ்நிலையிலும் தனது மனைவி அல்லது கணவன் ஒருவரை ஒருவர் எக்காலத்தும்பிரியாது இருப்போம் என்று இருப்பவர்கள் இவர்கள் எல்லாம் பைத்தியக்கார்களோ என சிலர் நினைக்கின்றார்கள்

 A few thinkers assume themselves to be progressive also.

பைத்தியக்கார்கள் என்று சிலர் முடிவெடுத்து அதற்கு ஏற்றவாறு தமது கதைகளை அமைக்கிறார்கள்.

ஒரு பேனா கிடைத்துவிடின் என்ன எழுதலாம் ?

 எது வேண்டுமானாலும் !!

உங்களுக்கு ஒரு சுதந்திரம் இருக்கிறது. அல்லவா ?

நிற்க.


ஒரு நல்ல மனைவி ஒரு நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை மறைகள் சொல்லுகின்றன. வேதம் சொல்கிறது. மந்திரங்கள் சொல்கின்றன
என்றெல்லாம் சொல்லப்போவதில்லை.

திருமண மந்திரங்களில் சிலவற்றிற்கு திரு என். கணேசன் அவர்கள் இங்கு தமிழில் பொருள் சொல்கிறார்கள். இங்கு கிளிக்கினால் தெரிந்து கொள்ளலாம்.

ஒரு இல்வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதை வள்ளுவன் சொல்லியதை விட வேறு எவரும் வேறு எவ்விதமாகவும் சொல்லிட முடியாது.

இது தான் நமது பண்பாடு எனப்படுவது :

.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

என்று தான் வள்ளுவன் சொன்னானே தவிர

அறன் என்ற வார்த்தையிலே பொருள் என்ற பொருள் தொனிக்க அவன் விடவில்லை.  அறன் என்பதற்கு சுகம் என்னும் பொருளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அன்பு என்பதற்கு இந்த நவீன எழுத்தாளர்கள் கொள்ளும் பொருளும் என்ன என்று புரியவில்லை.

 ஒரு காப்பகத்தில் என் கணவனை சேர்த்துவிட்டேன் , இனி அவரும் நலமாக இருப்பார், நானும் குஷியாக இருப்பேன். என்பதா. ?
எனக்கு உண்மையில் புரியவில்லை.



திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. நல்ல மனங்களும் சுவர்க்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன.



தான், தனது இன்பம், தனது வாழ்வு தான் முக்கியம், எனத் தன்னை தான் யாரிடம் இணைத்துகொண்டோமோ அவரிடம் இருந்து தன்னை ஒருவாறு உருவிக்கொள்வது நமது பண்பாடா ? ( Taking advantage of loopholes in the law of the land )

அவ்வாறு உருவிக்கொள்பவர்களை ஒரு  ஹீரோ போல சித்தரித்து எழுதுவது நல்ல எழுத்தா ?


உலகத்திலே எனக்குப் புரியாத அல்லது பிடிபடாத விஷயங்கள் பல இருந்தாலும் அதில் ஒன்று ...

கதை,

பன்மொழிகளில் பலர் பல படிப்புகள் (both art and science )படிக்கிறார்கள் பல்வேறு நாடுகளுக்குச் செல்லும்போதும், அங்குள்ள நடப்புகளால், அங்குள்ள சமூக இயல்புகளால், அவர்தம் வாழ்வியல் முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.  நமது நாட்டில் இருந்து சென்ற சிலர் செல்லும் நாட்டு பண்பு முறைகளை , வாழ்வு இயல் முறைகளை பின் பற்றவும் செய்கிறார்கள்.

அப்பொழுது தாம் பிறந்த மண்ணின் பண்பாட்டில் இருந்து விலகி போகும் நிர்ப்பந்தமான சூழ்நிலையில், தாம் செய்ததை சரிதான் என சொல்ல வேண்டிய மன அழுத்தமும் உண்டாகிறதோ என
நினைக்கிறேன்

அமெரிக்க மண்ணில் வாழும் பல தமிழர்கள் உணர்வுகள் இன்று தமிழகத்தைத் தாண்டி, தமிழ் பண்பாடுகளைத் தாண்டி பல
கல் தொலைவு சென்று விட்டன.

இங்கு தமிழ் மொழியில் வெளியிடப்படும் சில வார  இதழ்கள்,இவற்றினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது  .   இவற்றில் எழுதும் ஆசிரியர்கள் பொதுவாக, நமது பண்புகளை மதிக்கும் போற்றும் வகையில் எழுதுகிறார்கள்.

 ஆயினும், சிலரது கதைகள் மானுட நெறிகளுக்கே முரணான வகையில் இருப்பதையும்  காண்கிறேன்  பேச்சு சுதந்திரம் , எழுத்து சுதந்திரம் இங்கே இருக்கிறது.

நீங்கள் எதையும் எழுதலாம்.   எதையும் பேசலாம்.

அமெரிக்காவின்  செகரடரி  Secretary of State.  அவர் ஒரு முறை ஐரோப்பாவில் சொன்னாராம். 

 First I thought he was joking. I realized only later he meant it.  Still later conceded the truth behind it.

அமெரிக்காவில் உங்களுக்கு முட்டாளாக இருப்பதற்கு சுதந்திரம் இருக்கிறது.
You have a right to be stupid in America , he said, if I remember right, his words  

In America,
 You Have a Right to Be Stupid,’ Kerry Says in Defense of Free Speech


உண்மை.



வியாழன், 11 ஜூலை, 2013

ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவில், வெஸ்லி ஸ்ட்ரீட், ஆஷ்லண்ட் 

சுப்பு தாத்தா நேற்று பாஸ்டன் (பக்கத்தில் உள்ள ஆண்டோவர் ) என்னும் இடத்திற்கு அருகில் உள்ள மாலை புறப்பட்டார்.

வழி நெடுக மழை. பாஸ்டன் நெருங்க நெருங்க டிராபிக் வேறு கடுமை. சுமார் 40 நிமிடத்தில் போய்ச்சேரவேண்டிய இடம்

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாகி விட்டது.

லக்ஷ்மி ஆகியவளாயிற்றே. அவள் அருள் கிடைக்கவேண்டும் என்றால், உழைப்பும் முக்கியம் தானே.


 கீழே இருப்பது ஸ்ரீ லக்ஷ்மி கோவிலின் வலைப்பதிவின் முதற்பக்கம்.
இதை க்ளிக்கி இந்த கோவிலின் விவரங்கள், தினப்படி முறைகளை அறியலாம்.


                                          மஹாலக்ஷ்மி தாயார்
 நடுவில் அமர்ந்திருக்க 
பெருமாள்  அருகில் நின்ற கோலத்தில் திருப்பதி பாலாஜி ஆக கோவிந்தனாக, நாராயணனாக, வெங்கடேச பெருமாளாக திவ்ய தரிசனம் தருவது கண் கொள்ளா காட்சி.

                           கோவிந்தா கோவிந்தா ..நாராயணா நாராயணா .

                              பெருமாளுக்கு எதிரே கருட பகவான்.
          

    மெயின் ஹாலில் இடது வரிசையில்  ஐயப்ப சன்னதி,
   அடுத்து வருவது,

                                                   நூற்றுகணக்கில் சிவலிங்கங்கள்
                                                     ஒரு பெரிய சிவலிங்கத்தின்
                     ஒவ்வொரு தட்டிலும அமர்ந்து சஹஸ்ர லிங்கமாக
                             காட்சி அளிப்பது உலகத்தில் இங்கு தான் என நினைக்கிறேன்.

                                   ஹாலின் வலது பக்கத்தில் சிவபெருமான்
சந்திர மௌலீச்வரராக அன்னையுடன் அருள் பாலிக்கிறார். அதன் கீழே இன்னொரு பீடத்தில்,
       சிவ பெருமான் உருவாக காட்சி மேலே அளிப்பவர் அருவாக காட்சி.

                                பக்கத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான்.

                                                     ஹனுமத் சன்னதி
                                      
                                   பக்கத்தில் நவ க்ருஹங்க்கள்.

                   எந்த ஒரு கோவிலிலும் அமெரிக்காவில், பிரசாதம் ஒரு ஹாலில் வைக்கப்பட்டு இருக்கிறது. பக்கத்தில் பேப்பர் ப்ளேட், ஸ்பூன், டிஸ்ஸ்யு பேப்பர்.  கை அலம்பியபின் கைகளை ட்ரையர் ஒன்று கீழே வைத்து காய வைத்துக்கொள்ளனும்.

                 பட்டர் ஸ்வாமிகள் அவர்களுடன் பேச்சு கொடுத்தேன். பாண்டிச்சேரி அவரது ஊராம். இங்கே வந்து செட்டில் ஆகிவிட்டாராம்.  அவரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோது அவருக்கு இந்த வேலை போரடித்து போனது போல தோன்றியது.

       ஒரு தரம் ஊருக்குப் போய்விட்டு வாருங்களேன்.  அதுவரை நான் நீங்க சொல்ற எல்லா ஆசார அனுஷ்டானங்களையும் பண்ணிண்டு இருக்கேன் என்று சொல்ல வாயெடுத்தேன். நீங்கள் சொல்ற மந்த்ராதிகள் தாயார் அஷ்டோத்தரங்கள் எல்லாமும் சொல்வேன். என்று சொல்லலாம் என்று ஆரம்பித்தேன்.

       ஆகஸ்டு 1ந்தேதி சென்னைலே இருக்கணும்னு நியாபகம் இருக்கா இல்லையா என்றாள் பக்கத்திலே வீட்டு தாயார்.

      விசா தான் 6 மாதத்திற்கு இருக்கே என்றேன். இன்சூரன்சு  2 மாசத்துக்குதானே இருக்கு.  என்று சொல்கிறாள் இவள். தர

     தாயார் நினைச்சா ச்வர்கத்துக்கே விசா தர முடியும்.  பி 1 விசா இல்லை.
சிடிசன்ஷிப்பே        தர முடியும். 

     உங்களுக்கு எலிஜிபிலிட்டி இருக்கணுமே என்று குறுக்கிட்டாள் ஐம்பது வருசத்துணைவி     

     நியாயம் தான் .

    கோவிலில் இன்னும் இரண்டு மணி நேரம் இருந்து பெருமாளை சேவிக்கணும், தாயாரை சேவிக்கணும் என்று ஆசைதான்.

     குழந்தைகளுக்கு பசி வந்துடுத்து. இப்ப கிளம்பினாத்தான் 10 மணிக்காவது
திரும்பலாம் என்கிறார் கூட்டிக்கொண்டு வந்த மாப்பிள்ளை.  சாவகாசமாக
ஒரு நாள் ஞாயிறு அன்று வரலாம் என்றார்

     எந்த சண்டே ?

   ஆகஸ்டு 11 கருட அபிஷேகம். கருட ஹோமம். 10ந் தேதி அன்னிக்கு ஆண்டாள் உத்சவம்.

    தாயார் எங்கும் இருக்கிறாள். நம்மை காக்கிறாள். காப்பாள்.

   


       
                              
     

திங்கள், 8 ஜூலை, 2013

A whirlwind tour of Boston by Bus and Boat (Duck Boat on River Charles)

வலை  நண்பர் செல்லப்பன் யக்ய சுவாமிக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லவேண்டும்.

அவர்தான் எனது முதல் பதிவை பார்த்துவிட்டு, சார்லஸ் நதியில் செல்லும் வாத்து படகு பஸ்ஸில் பிரயாணம் செய்து பாஸ்டன் நகரை பாருங்கள் என்று சொன்னார். (please click to know more about the Duck Boat Journey at Boston)

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள்  மெய்பொருள் காண்பது அறிவு

 என்ற நியதிப்படி,
அவர் சொல்லைத் தட்டாது, எனது இரண்டாவது மாப்பிள்ளை பாஸ்டன்
நகரத்தில் இருப்பவர், நேற்று சொன்ன அடுத்த வினாடி, கிளம்பிவிட்டேன்.

இங்கிருந்து பாஸ்டன் நகரம் ஒரு நாற்பது மைல் கல் தொலைவே.  ஒரு முப்பது நிமிடங்களில் அங்கு சேர்ந்தோம்.


நீங்கள்
ம்யுசியம் பார்க்கவேண்டுமா, திமிங்கலம் குதிப்பதை விளையாடுவதை காணவேண்டுமா, அல்லது பாஸ்டன் நகரத்தை சுற்றி பார்க்க வேண்டுமா ஒரு பஸ் அதற்காகவே ஒரு படகாகவும் தன்னை மாற்றிக்கொள்ளும். என்றார் அவர்.

கூடு விட்டு கூடு பாயும் சித்தர் விளையாட்டோ இது ?

இங்கும் இருக்கிறது . 

பஸ் படகு ஆகிறது. படகு பஸ் ஆகிறது.

ஒரு டாக்சி டிரைவர் எந்த அளவுக்கு தன்னை முன்னேற்றிகொண்டு இருக்கிறார் என்பது நான் முதலில் கண் கூடாக பார்த்தது இங்கே.

பாஸ்டன் நகர 400 வருஷ சரித்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுத்து நமக்கு முன் புட்டு புட்டு   வைக்கிறார்.  1600 ம் வருடம் ஆங்கிலேய மற்றும் ஐய்ரொப்பா மக்கள் இங்கே வந்து குடியேற துவங்கிய காலம், பின் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த கலோனியல் ஆட்சி, பின் 13 அமைப்புகள் ஒன்று கூடி ஒரு அரசியல் சட்டத்தை கொண்டு வந்து அமெரிக்க சாசனம் எல்லாம் சுத்தமாக சொல்கிறார்.  ஒரு சரித்திர ஆசிரியர் இவர்.

ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு சிறப்பு. அதை காட்டுவதின் ஆர்வம் கொண்டவர் யார் ? கட்டியவர் யார்?  இன்று அந்த கட்டிடத்தில் என்ன செயல் பாடுகள் என்று எல்லாம் இவர் விளக்க நமக்கு ஆச்சரியம்.


















ஒவ்வொரு குழந்தையும் அந்த பஸ் கம் போட்டில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து ஒட்டு என்கிறார் அவர்.

என்னுடைய பேரன் உட்பட எல்லாக்குழந்தைகளும் அங்கு உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து தான் தான் ஒட்டுவதாக நினைத்து மகிழ்ந்து போகிறது.
ஆனந்திப்பது செல்வங்கள் மட்டுமல்ல.    அவர் தம் பெற்றோருமே.

ஒரு பரவச காட்சி இது.


கவரச்செய்கிறது.

நாற்சந்தி முச்சந்தி மட்டுமல்ல, மற்ற மூலைகலிலுமே, சிக்னல் சிவப்பாக இருந்தால் அடுத்த முனையிலிருந்து ஏதும் வண்டி வராவிட்டாலும் கார்கள் நிற்கின்றன.
வேங்கட நாகராஜ் தன பதிவிலே தி.நகரிலே அவர் பின்னாடி சிக்னல் ரெட் ஆக இருந்தபோது ஏன்யா இப்படி நின்னுகின்னே இருக்கே அப்படின்னு சண்டை போட்டது நினைவுக்கு வருது.

பாவம் வேங்கட நாகராஜ் .  ரூல்ஸை ஒபே பண்ணினா கூட பின்னாடி வர்றவன் சண்டை போடறான். பேசாம அமெரிக்கா வந்துடுங்க சார்.


























சாலை ஓர காதல் காட்சிகள் ஏராளம் ஏராளம்.

ஏ  சர்டிபிகேட்டுக்கு மேலே இருக்கிறது.

நாங்கள் உட்கார்ந்து பெஞ்சிலேயே ஒரு வாலிபன் வாலிபியை தன மடிமேலே வைத்துக்கொண்டு ஜுஜுபி பண்ணிக்கொண்டு இருக்கிறான்.

சாதாரண
அடல்ட்ஸ் ஒன்லி இல்லை.  எல்லாமே கஜூராஹோ டைப்.

அப்பாதுரை சார் பார்த்தா அது பத்தியும் அழகா ஒரு கதை எழுதுவார்

அனுபவம் புதுமை. அவளிடம் கண்டேன். ...
பாட்டு பாடலாம் என்று கூட நினைத்தேன். ஆனா என்ன பாடினாலும் அந்த ஜோடி அசஞ்சு கூட கொடுக்காது போல தோன்றியது.



நான் எங்கே கஜுராஹோ போனேன் !! இங்கேயாவது
கொஞ்சம் அமைதியா பார்ப்போம் .
அப்படின்னு வராஹ நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்.
என்றால் கிழவி வீடோ போடுகிறாள். சுட்டு எரிப்பது போல் ஒரு பார்வை .

அங்கே என்ன பார்வை !! என்ன பார்வை , என்ன பார்வை ?
வார்த்தையால் சுடுகிறாள்.





































பஸ் நிற்கிறது. ஏன் என்று பார்க்கிறோம்.

ஒரு நாய் பெடஸ்ரியன் பாதை வழியே போகிறது.

அதற்குத்தான் முக்கிய சலுகை.

இங்கு, நாய்களுக்கு அடுத்த படி,
நான் கவனித்தேன்.
முதியவர்கள் பாதையைக் கிராஸ் செய்ய இருந்தாலும், அவர்களை நீங்கள் செல்லுங்கள் என்று சிக்னல்
தருகிறார்கள்.

கசமாலம் ... வீட்டிலே சொல்லிக்கினு வந்துட்டயா ...

நான் மெட்ராஸ் அதாகப்பட்டது சென்னையில் எனக்கு வழக்கமாக கேட்கும்  சௌண்டு  இங்கே காதில் விழவில்லை.





சார்லஸ் நதி. பேக் வாட்டர்ஸ் மாதிரி தான் இருக்கிறது.

நதியிலிருந்து மாபெரும் கட்டடங்கள்







எதிரிலே ஒரு போட் வந்தால் எல்லோரும் க்வாக் க்வாக் என கத்துகிறார்கள்.
ஒரே ஆரவாரம்.
ஒரே சிரிப்பு.
குழந்தைகளுக்கு கும்மாளம்.
எனது பேரன் தன கையிலிருக்கும் ஊதலை பலமாக ஊதுகிறான்.
















கனோயிங் அப்படின்னு ஒரு விளையாட்டாம். என்னடா அப்படின்னு என் பேரனிடம் கேட்டேன். உங்கக்குப் புரியாது தாத்தா என்றான்.











ஓடம் திரும்பவும் ரோடுக்கு வருகிறது.














பிரும்மாண்டமான பாலத்திற்கு ஊடே எங்கள் போட் பிரவேசம்.
யோவ் !!

மெதுவா பாத்து போங்க..

மதில் சுவரை இடிசுடும் போல இருக்கு அப்படின்னு கத்திட்டேன் போல தெரியுது.

அந்த ஜோகர் என்னும் டிரைவர் கம் guide என்னைத் திரும்பிப் பார்த்து 
புன்னகைக்கிறார்.







ஹோப் யு ஹாவ் என்ஜாய்டு உவர் ஜர்னி என்கிறார் ஜாகப் ஜோகர் 
எஸ் அப்படின்னு இங்க்லிசிலே பதில் சொன்னேன்.
பெருமையா பெண்டாட்டியைப் பார்த்தேன்.











வீடு நோக்கி பயணம்

நாளைக்கு வேல் வாட்ச்.  என்றார் மாப்பிள்ளை.

இங்கேயும் சூர சம்ஹாரம் உண்டா என்றேன் நான்.  

தாத்தா !!  வேல் அப்படின்னா முதலை மாதிரி இருக்குமே திமிங்கலம் ...நீ பாத்ததில்லையா
என்றான் பேரன் பிரணவ்..


நான் உங்க பாட்டியைத் தான் பாத்திருக்கிறேன் என்றேன் நான்.

பாட்டி உன்னை திமிங்கலம் அப்படின்னு சொல்றா தாத்தா என்கிறான் பேரன்.

கொலஸ்ட்ரால் இன்னும் ஜாஸ்தியாகவே இருக்கு அப்படின்னு சன்னமா
சொல்கிறாள் சக தர்மினி.