வலை நண்பர் செல்லப்பன் யக்ய சுவாமிக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லவேண்டும்.
அவர்தான் எனது முதல் பதிவை பார்த்துவிட்டு, சார்லஸ் நதியில் செல்லும் வாத்து படகு பஸ்ஸில் பிரயாணம் செய்து பாஸ்டன் நகரை பாருங்கள் என்று சொன்னார். (please click to know more about the Duck Boat Journey at Boston)
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
என்ற நியதிப்படி,
அவர் சொல்லைத் தட்டாது, எனது இரண்டாவது மாப்பிள்ளை பாஸ்டன்
நகரத்தில் இருப்பவர், நேற்று சொன்ன அடுத்த வினாடி, கிளம்பிவிட்டேன்.
இங்கிருந்து பாஸ்டன் நகரம் ஒரு நாற்பது மைல் கல் தொலைவே. ஒரு முப்பது நிமிடங்களில் அங்கு சேர்ந்தோம்.
நீங்கள்
ம்யுசியம் பார்க்கவேண்டுமா, திமிங்கலம் குதிப்பதை விளையாடுவதை காணவேண்டுமா, அல்லது பாஸ்டன் நகரத்தை சுற்றி பார்க்க வேண்டுமா ஒரு பஸ் அதற்காகவே ஒரு படகாகவும் தன்னை மாற்றிக்கொள்ளும். என்றார் அவர்.
கூடு விட்டு கூடு பாயும் சித்தர் விளையாட்டோ இது ?
இங்கும் இருக்கிறது .
பஸ் படகு ஆகிறது. படகு பஸ் ஆகிறது.
ஒரு டாக்சி டிரைவர் எந்த அளவுக்கு தன்னை முன்னேற்றிகொண்டு இருக்கிறார் என்பது நான் முதலில் கண் கூடாக பார்த்தது இங்கே.
பாஸ்டன் நகர 400 வருஷ சரித்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுத்து நமக்கு முன் புட்டு புட்டு வைக்கிறார். 1600 ம் வருடம் ஆங்கிலேய மற்றும் ஐய்ரொப்பா மக்கள் இங்கே வந்து குடியேற துவங்கிய காலம், பின் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த கலோனியல் ஆட்சி, பின் 13 அமைப்புகள் ஒன்று கூடி ஒரு அரசியல் சட்டத்தை கொண்டு வந்து அமெரிக்க சாசனம் எல்லாம் சுத்தமாக சொல்கிறார். ஒரு சரித்திர ஆசிரியர் இவர்.
ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு சிறப்பு. அதை காட்டுவதின் ஆர்வம் கொண்டவர் யார் ? கட்டியவர் யார்? இன்று அந்த கட்டிடத்தில் என்ன செயல் பாடுகள் என்று எல்லாம் இவர் விளக்க நமக்கு ஆச்சரியம்.
ஒவ்வொரு குழந்தையும் அந்த பஸ் கம் போட்டில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து ஒட்டு என்கிறார் அவர்.
என்னுடைய பேரன் உட்பட எல்லாக்குழந்தைகளும் அங்கு உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து தான் தான் ஒட்டுவதாக நினைத்து மகிழ்ந்து போகிறது.
ஆனந்திப்பது செல்வங்கள் மட்டுமல்ல. அவர் தம் பெற்றோருமே.
ஒரு பரவச காட்சி இது.
கவரச்செய்கிறது.
நாற்சந்தி முச்சந்தி மட்டுமல்ல, மற்ற மூலைகலிலுமே, சிக்னல் சிவப்பாக இருந்தால் அடுத்த முனையிலிருந்து ஏதும் வண்டி வராவிட்டாலும் கார்கள் நிற்கின்றன.
வேங்கட நாகராஜ் தன பதிவிலே தி.நகரிலே அவர் பின்னாடி சிக்னல் ரெட் ஆக இருந்தபோது ஏன்யா இப்படி நின்னுகின்னே இருக்கே அப்படின்னு சண்டை போட்டது நினைவுக்கு வருது.
பாவம் வேங்கட நாகராஜ் . ரூல்ஸை ஒபே பண்ணினா கூட பின்னாடி வர்றவன் சண்டை போடறான். பேசாம அமெரிக்கா வந்துடுங்க சார்.
சாலை ஓர காதல் காட்சிகள் ஏராளம் ஏராளம்.
ஏ சர்டிபிகேட்டுக்கு மேலே இருக்கிறது.
நாங்கள் உட்கார்ந்து பெஞ்சிலேயே ஒரு வாலிபன் வாலிபியை தன மடிமேலே வைத்துக்கொண்டு ஜுஜுபி பண்ணிக்கொண்டு இருக்கிறான்.
சாதாரண
அடல்ட்ஸ் ஒன்லி இல்லை. எல்லாமே கஜூராஹோ டைப்.
அப்பாதுரை சார் பார்த்தா அது பத்தியும் அழகா ஒரு கதை எழுதுவார்
அனுபவம் புதுமை. அவளிடம் கண்டேன். ...
பாட்டு பாடலாம் என்று கூட நினைத்தேன். ஆனா என்ன பாடினாலும் அந்த ஜோடி அசஞ்சு கூட கொடுக்காது போல தோன்றியது.
நான் எங்கே கஜுராஹோ போனேன் !! இங்கேயாவது
கொஞ்சம் அமைதியா பார்ப்போம் .
அப்படின்னு வராஹ நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்.
என்றால் கிழவி வீடோ போடுகிறாள். சுட்டு எரிப்பது போல் ஒரு பார்வை .
அங்கே என்ன பார்வை !! என்ன பார்வை , என்ன பார்வை ?
வார்த்தையால் சுடுகிறாள்.
பஸ் நிற்கிறது. ஏன் என்று பார்க்கிறோம்.
ஒரு நாய் பெடஸ்ரியன் பாதை வழியே போகிறது.
அதற்குத்தான் முக்கிய சலுகை.
இங்கு, நாய்களுக்கு அடுத்த படி,
நான் கவனித்தேன்.
முதியவர்கள் பாதையைக் கிராஸ் செய்ய இருந்தாலும், அவர்களை நீங்கள் செல்லுங்கள் என்று சிக்னல்
தருகிறார்கள்.
கசமாலம் ... வீட்டிலே சொல்லிக்கினு வந்துட்டயா ...
நான் மெட்ராஸ் அதாகப்பட்டது சென்னையில் எனக்கு வழக்கமாக கேட்கும் சௌண்டு இங்கே காதில் விழவில்லை.
சார்லஸ் நதி. பேக் வாட்டர்ஸ் மாதிரி தான் இருக்கிறது.
நதியிலிருந்து மாபெரும் கட்டடங்கள்
எதிரிலே ஒரு போட் வந்தால் எல்லோரும் க்வாக் க்வாக் என கத்துகிறார்கள்.
ஒரே ஆரவாரம்.
ஒரே சிரிப்பு.
குழந்தைகளுக்கு கும்மாளம்.
எனது பேரன் தன கையிலிருக்கும் ஊதலை பலமாக ஊதுகிறான்.
கனோயிங் அப்படின்னு ஒரு விளையாட்டாம். என்னடா அப்படின்னு என் பேரனிடம் கேட்டேன். உங்கக்குப் புரியாது தாத்தா என்றான்.
ஓடம் திரும்பவும் ரோடுக்கு வருகிறது.
பிரும்மாண்டமான பாலத்திற்கு ஊடே எங்கள் போட் பிரவேசம்.
யோவ் !!
மெதுவா பாத்து போங்க..
மதில் சுவரை இடிசுடும் போல இருக்கு அப்படின்னு கத்திட்டேன் போல தெரியுது.
அந்த ஜோகர் என்னும் டிரைவர் கம் guide என்னைத் திரும்பிப் பார்த்து
புன்னகைக்கிறார்.
ஹோப் யு ஹாவ் என்ஜாய்டு உவர் ஜர்னி என்கிறார் ஜாகப் ஜோகர்
எஸ் அப்படின்னு இங்க்லிசிலே பதில் சொன்னேன்.
பெருமையா பெண்டாட்டியைப் பார்த்தேன்.
வீடு நோக்கி பயணம்
நாளைக்கு வேல் வாட்ச். என்றார் மாப்பிள்ளை.
இங்கேயும் சூர சம்ஹாரம் உண்டா என்றேன் நான்.
தாத்தா !! வேல் அப்படின்னா முதலை மாதிரி இருக்குமே திமிங்கலம் ...நீ பாத்ததில்லையா
என்றான் பேரன் பிரணவ்..
நான் உங்க பாட்டியைத் தான் பாத்திருக்கிறேன் என்றேன் நான்.
பாட்டி உன்னை திமிங்கலம் அப்படின்னு சொல்றா தாத்தா என்கிறான் பேரன்.
கொலஸ்ட்ரால் இன்னும் ஜாஸ்தியாகவே இருக்கு அப்படின்னு சன்னமா
சொல்கிறாள் சக தர்மினி.
அவர்தான் எனது முதல் பதிவை பார்த்துவிட்டு, சார்லஸ் நதியில் செல்லும் வாத்து படகு பஸ்ஸில் பிரயாணம் செய்து பாஸ்டன் நகரை பாருங்கள் என்று சொன்னார். (please click to know more about the Duck Boat Journey at Boston)
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு
என்ற நியதிப்படி,
அவர் சொல்லைத் தட்டாது, எனது இரண்டாவது மாப்பிள்ளை பாஸ்டன்
நகரத்தில் இருப்பவர், நேற்று சொன்ன அடுத்த வினாடி, கிளம்பிவிட்டேன்.
இங்கிருந்து பாஸ்டன் நகரம் ஒரு நாற்பது மைல் கல் தொலைவே. ஒரு முப்பது நிமிடங்களில் அங்கு சேர்ந்தோம்.
நீங்கள்
ம்யுசியம் பார்க்கவேண்டுமா, திமிங்கலம் குதிப்பதை விளையாடுவதை காணவேண்டுமா, அல்லது பாஸ்டன் நகரத்தை சுற்றி பார்க்க வேண்டுமா ஒரு பஸ் அதற்காகவே ஒரு படகாகவும் தன்னை மாற்றிக்கொள்ளும். என்றார் அவர்.
கூடு விட்டு கூடு பாயும் சித்தர் விளையாட்டோ இது ?
இங்கும் இருக்கிறது .
பஸ் படகு ஆகிறது. படகு பஸ் ஆகிறது.
ஒரு டாக்சி டிரைவர் எந்த அளவுக்கு தன்னை முன்னேற்றிகொண்டு இருக்கிறார் என்பது நான் முதலில் கண் கூடாக பார்த்தது இங்கே.
பாஸ்டன் நகர 400 வருஷ சரித்திரத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து எடுத்து நமக்கு முன் புட்டு புட்டு வைக்கிறார். 1600 ம் வருடம் ஆங்கிலேய மற்றும் ஐய்ரொப்பா மக்கள் இங்கே வந்து குடியேற துவங்கிய காலம், பின் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த கலோனியல் ஆட்சி, பின் 13 அமைப்புகள் ஒன்று கூடி ஒரு அரசியல் சட்டத்தை கொண்டு வந்து அமெரிக்க சாசனம் எல்லாம் சுத்தமாக சொல்கிறார். ஒரு சரித்திர ஆசிரியர் இவர்.
அமெரிக்காவில் ஆங்கிலேய ஆட்சி காலம் முதல் ஜார்ஜ் வாஷிங்க்டன் காலம் வரை அவர் சொல்லும் சரித்திரம் நம்மை வியக்க வைக்கிறது.
ஒவ்வொரு கட்டடத்துக்கும் ஒரு சிறப்பு. அதை காட்டுவதின் ஆர்வம் கொண்டவர் யார் ? கட்டியவர் யார்? இன்று அந்த கட்டிடத்தில் என்ன செயல் பாடுகள் என்று எல்லாம் இவர் விளக்க நமக்கு ஆச்சரியம்.
ஒவ்வொரு குழந்தையும் அந்த பஸ் கம் போட்டில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து ஒட்டு என்கிறார் அவர்.
என்னுடைய பேரன் உட்பட எல்லாக்குழந்தைகளும் அங்கு உட்கார்ந்து ஸ்டியரிங் பிடித்து தான் தான் ஒட்டுவதாக நினைத்து மகிழ்ந்து போகிறது.
ஆனந்திப்பது செல்வங்கள் மட்டுமல்ல. அவர் தம் பெற்றோருமே.
ஒரு பரவச காட்சி இது.
நாற்சந்தி முச்சந்தி மட்டுமல்ல, மற்ற மூலைகலிலுமே, சிக்னல் சிவப்பாக இருந்தால் அடுத்த முனையிலிருந்து ஏதும் வண்டி வராவிட்டாலும் கார்கள் நிற்கின்றன.
வேங்கட நாகராஜ் தன பதிவிலே தி.நகரிலே அவர் பின்னாடி சிக்னல் ரெட் ஆக இருந்தபோது ஏன்யா இப்படி நின்னுகின்னே இருக்கே அப்படின்னு சண்டை போட்டது நினைவுக்கு வருது.
பாவம் வேங்கட நாகராஜ் . ரூல்ஸை ஒபே பண்ணினா கூட பின்னாடி வர்றவன் சண்டை போடறான். பேசாம அமெரிக்கா வந்துடுங்க சார்.
சாலை ஓர காதல் காட்சிகள் ஏராளம் ஏராளம்.
ஏ சர்டிபிகேட்டுக்கு மேலே இருக்கிறது.
நாங்கள் உட்கார்ந்து பெஞ்சிலேயே ஒரு வாலிபன் வாலிபியை தன மடிமேலே வைத்துக்கொண்டு ஜுஜுபி பண்ணிக்கொண்டு இருக்கிறான்.
சாதாரண
அடல்ட்ஸ் ஒன்லி இல்லை. எல்லாமே கஜூராஹோ டைப்.
அப்பாதுரை சார் பார்த்தா அது பத்தியும் அழகா ஒரு கதை எழுதுவார்
அனுபவம் புதுமை. அவளிடம் கண்டேன். ...
பாட்டு பாடலாம் என்று கூட நினைத்தேன். ஆனா என்ன பாடினாலும் அந்த ஜோடி அசஞ்சு கூட கொடுக்காது போல தோன்றியது.
நான் எங்கே கஜுராஹோ போனேன் !! இங்கேயாவது
கொஞ்சம் அமைதியா பார்ப்போம் .
அப்படின்னு வராஹ நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்.
என்றால் கிழவி வீடோ போடுகிறாள். சுட்டு எரிப்பது போல் ஒரு பார்வை .
அங்கே என்ன பார்வை !! என்ன பார்வை , என்ன பார்வை ?
வார்த்தையால் சுடுகிறாள்.
பஸ் நிற்கிறது. ஏன் என்று பார்க்கிறோம்.
ஒரு நாய் பெடஸ்ரியன் பாதை வழியே போகிறது.
அதற்குத்தான் முக்கிய சலுகை.
இங்கு, நாய்களுக்கு அடுத்த படி,
நான் கவனித்தேன்.
முதியவர்கள் பாதையைக் கிராஸ் செய்ய இருந்தாலும், அவர்களை நீங்கள் செல்லுங்கள் என்று சிக்னல்
தருகிறார்கள்.
கசமாலம் ... வீட்டிலே சொல்லிக்கினு வந்துட்டயா ...
நான் மெட்ராஸ் அதாகப்பட்டது சென்னையில் எனக்கு வழக்கமாக கேட்கும் சௌண்டு இங்கே காதில் விழவில்லை.
சார்லஸ் நதி. பேக் வாட்டர்ஸ் மாதிரி தான் இருக்கிறது.
நதியிலிருந்து மாபெரும் கட்டடங்கள்
எதிரிலே ஒரு போட் வந்தால் எல்லோரும் க்வாக் க்வாக் என கத்துகிறார்கள்.
ஒரே ஆரவாரம்.
ஒரே சிரிப்பு.
குழந்தைகளுக்கு கும்மாளம்.
எனது பேரன் தன கையிலிருக்கும் ஊதலை பலமாக ஊதுகிறான்.
கனோயிங் அப்படின்னு ஒரு விளையாட்டாம். என்னடா அப்படின்னு என் பேரனிடம் கேட்டேன். உங்கக்குப் புரியாது தாத்தா என்றான்.
ஓடம் திரும்பவும் ரோடுக்கு வருகிறது.
பிரும்மாண்டமான பாலத்திற்கு ஊடே எங்கள் போட் பிரவேசம்.
யோவ் !!
மெதுவா பாத்து போங்க..
மதில் சுவரை இடிசுடும் போல இருக்கு அப்படின்னு கத்திட்டேன் போல தெரியுது.
அந்த ஜோகர் என்னும் டிரைவர் கம் guide என்னைத் திரும்பிப் பார்த்து
புன்னகைக்கிறார்.
ஹோப் யு ஹாவ் என்ஜாய்டு உவர் ஜர்னி என்கிறார் ஜாகப் ஜோகர்
எஸ் அப்படின்னு இங்க்லிசிலே பதில் சொன்னேன்.
பெருமையா பெண்டாட்டியைப் பார்த்தேன்.
வீடு நோக்கி பயணம்
நாளைக்கு வேல் வாட்ச். என்றார் மாப்பிள்ளை.
இங்கேயும் சூர சம்ஹாரம் உண்டா என்றேன் நான்.
தாத்தா !! வேல் அப்படின்னா முதலை மாதிரி இருக்குமே திமிங்கலம் ...நீ பாத்ததில்லையா
என்றான் பேரன் பிரணவ்..
நான் உங்க பாட்டியைத் தான் பாத்திருக்கிறேன் என்றேன் நான்.
பாட்டி உன்னை திமிங்கலம் அப்படின்னு சொல்றா தாத்தா என்கிறான் பேரன்.
கொலஸ்ட்ரால் இன்னும் ஜாஸ்தியாகவே இருக்கு அப்படின்னு சன்னமா
சொல்கிறாள் சக தர்மினி.
இங்கு, நாய்களுக்கு அடுத்த படி,
பதிலளிநீக்குநான் கவனித்தேன்.
முதியவர்கள் பாதையைக் கிராஸ் செய்ய இருந்தாலும், அவர்களை நீங்கள் செல்லுங்கள் என்று சிக்னல்
தருகிறார்கள். //
அமெரிக்கா முழுதுமே இப்படித்தான். தெருவைக் கடப்பவர்களுக்கே முன்னுரிமை தருவாங்க. இதை எங்கேயும் பார்க்க முடிகிறது.
நான் எனது இரண்டாவது மாப்பிள்ளையுடன் தங்கி இருக்கும்
நீக்குஅபர்ட்மென்ட்சுலேயும் நாய்கள், பூனைகள், வளர்க்கிறார்கள்.
எல்லாமே ஹை பெடிக்ரீ .
எனக்கென்னமோ ஒரு அப்சர்வேஷன் . சரியா தப்பா என்று
தெரியவில்லை.
நாய்கள் குட்டிகளாக இருக்கும்பொழுது அவைகளை ( சாரி, அவர்களை
தத்து எடுத்துகொண்டு வந்து தமது வீட்டில் வைத்துகொள்கிறார்கள்.
அதே சமயம் தாய் தந்தை வயதாகிவிட்டால் அவர்களை ஒரு முதியோர் இல்லத்தில், காப்பகத்தில் சேர்த்து விடுகிறார்கள். இல்லை, அவர்களே சேர்ந்து விடுகிறார்கள்.
தாம் சொல்வதை தலையாட்டி கொண்டு தனக்கு பின்னால் வரும் ஜந்துக்கள் தான் இந்தக்காலத்து குழந்தைகளுக்குத் தேவை
The trend I am able to see is quite revealing.
God Bless our children.
subbu thatha.
இங்கு, நாய்களுக்கு அடுத்த படி,
பதிலளிநீக்குநான் கவனித்தேன்.
முதியவர்கள் பாதையைக் கிராஸ் செய்ய இருந்தாலும், அவர்களை நீங்கள் செல்லுங்கள் என்று சிக்னல்
தருகிறார்கள். //
அமெரிக்கா முழுதுமே இப்படித்தான். தெருவைக் கடப்பவர்களுக்கே முன்னுரிமை தருவாங்க. இதை எங்கேயும் பார்க்க முடிகிறது.
படங்களுடன் கூடிய அருமையான வர்ணனைக்கு நன்றி.
பதிலளிநீக்குபடங்கள் அருமை.
பதிலளிநீக்குசும்மா புகுந்து விளையாடியிருக்கீங்க. எஞ்சாய்.
பதிலளிநீக்குவேல் வாச்சுறப்போ கவனமா இருங்க.. வயித்தைப் புரட்டி எடுத்துரும் சில நேரம்.
எனக்கென்னமோ இங்கு இந்தியா தமது பூர்வீகம் என்று சொல்லிகொள்பவர்களின் நடை உடை பாவனை சிந்தனைகள் .
நீக்குஇன்னும் அதிகமாக குமட்டும் போல...
நான் கொஞ்சம் தள்ளி நிற்கிறேன்.
நேற்றும் இங்கே ஒரு ஹை சொசைட்டி இந்தியன் பாமிலியை கணவர் (50+) மனைவி (45+) பையன்கள் ( 14 + 10 ) கவனித்தேன்.
இந்திய பண்பாடுகளை மறந்து அவர்கள் வெகு காலமாகிவிட்டது.
ஐ ஆம் சாரி டு ஸே திஸ்.
அங்கே தான் எல்லாமே ஜுஜுபி தானே...!
பதிலளிநீக்குபடங்களுடன் கூடவே நாங்களும் பயணித்தோம்... நன்றி தாத்தா...
பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன் அவர்களே !!
நீக்குஅங்கே நமது நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா ?
காவிரியில் தண்ணீர் வருகிறதா ?
இல்லை கண்ணீர் தான் வருகிறதா.
''...தெருவைக் கடப்பவர்களுக்கே முன்னுரிமை தருவாங்க. ..'''here (in Denmark) too also. good pics and story. Thank you Thaththa..
பதிலளிநீக்குVetha.Elangathilakm.
What was surprising, is that senior citizens are we are are also classified in the category of domestic pets.
நீக்குAre we !
பஸ் படகு ஆகிறது. படகு பஸ் ஆகிறது.
பதிலளிநீக்குபரவசமான பயண பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
பஸ் வெகு லாவகமாக படகு ஆனது வியப்பாக இருந்தது.
நீக்குஉள் இருப்பது உள்ளே இருக்க
வெளி மட்டும் மாறியது. What happened to the wheels?
ஓடுவது மிதக்கிறது.
மிதந்தது ஓடியது.
உள்ளுக்குள் இருக்கும் அதுவோ அதுவாகவே இருந்தது.( you may call one's soul if u so feel)
உடனே உங்கள் பெயரை மாற்றுங்கள். அதென்னய்யா ‘தாத்தா’ ? அப்படி என்ன வயதாகிவிட்டது உங்களுக்கு? ‘சுப்பு மாமா’ அல்லது ‘சுப்புஅங்க்கிள்’ ...ஆம், கிடைத்துவிட்டது சரியான பெயர்! இனிமேல் நீங்கள் ‘அங்க்கிள்சுப்பு’. எப்படி இருக்கு? (இப்போது அந்த ‘கஜுராஹொ’ மேட்டருக்கு வருவோமா?)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவாசகர் வட்டத்தில் 2006 முதல் திருமதி கவிநயா அவர்களது வலையில் எழுதும் பாடல்களுக்கு நான் மெட்டு அமைத்து நானும் பாடி இருக்கிறேன்.
இப்போதும்.
அவர்கள் என்னை அன்புடன் தாத்தா என அழைத்தது எனக்கு மன மகிழ்வே.
எனக்கு ஐந்து பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள்.
2011 ல் என் வீட்டுக்கு அவர் தன தந்தையுடன் வந்தபோது கூட என்னை அவர் தன தந்தைக்கு சுப்பு தாத்தா என்று தான்
அறிமுகப்படுத்தினார்கள்.
எனது தாத்தா எனக்கு வைத்த பெயர் சுப்பு ரத்தினம்.
பள்ளியில் சூரிய நாராயணன். வேலைக்கு வந்த பின்னே, சக தோழர்கள் என்னை சூரி என்று அழைப்பார்கள். பிற்காலத்தில் என்னை சார் என்று தான் எல்லோருமே எங்கள் கல்லூரியில் அழைத்தார்கள். எனது பாஸ் கூட என்னை சூரி சார் என்று தான் அழைத்தார்.
அது என்ன சார் மோர்? தஞ்சைக்குச் செல்லும்போது தான் அங்கு இருக்கும் எனது பழைய நன்பர்கள் என்னை இன்னும் சூரி என்றே அழைக்கின்றனர்.
எனக்கென்னவோ சுப்பு த்தாத்தா என்ற பெயர் இயல்பாகத் தெரிகிறது.
அது சரி.
அது என்ன கஜுராஹோ மேட்டர்? புரியல்லையே !!
கொஞ்சம் இருங்க... எங்க வீட்டுக் கிழவிகிட்டே கேட்டுட்டு விளக்கமா
சொல்ரேன்.
இந்த வேல் ஷோ பற்றிப் படித்து வயிறு வலிக்க சிரித்தேன்.
பதிலளிநீக்குஉங்களை ஒன்று கேட்க வேண்டுமே மீனாக்ஷி மாமி படிப்பதுண்டா உங்கள் பதிவை.
நல்ல ரசனையுடன் கூடிய பதிவு.