திங்கள், 24 ஜூன், 2013

அவள் கொள்ளை அழகு.

ஹட்சன் நதி கிழே குடைந்து வடிவக்கப்பட்ட ஒரு பாலத்தின் வழியே நியூ யார்க் நகரத்தை ஒரு காரில் பயணித்த காணொளி.
 இன்று ஒரு தியேட்டருக்குப் போய் ஒரு நாடகம் பார்க்கப்போகிறோம் என்றார். என் மாப்பிள்ளை.  நியூ யார்க்கில் பிராட் வே என்னும் தியட்டரில் அதில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் WICKED என்னும் நாடகம்.
OZ என்பவர் எழுதிய நாடகங்களில் இருந்து ஒன்று.  witches of oz என்னும் நாடகங்களில் ஒன்று இது. இந்த கதையை படிக்க இங்கே செல்லவும். 
 பச்சை மா மலை போல் மேனி என்று பச்சை வர்ணத்தை புகழ்ந்து மன மகிழ்ந்து பாடும் நாம், அதே பச்சை நிறத்தில் நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்து விட்டால் எந்த ஒரு மன நிலைக்குச் செல்வோம்?


19ம் நூற்றாண்டு சூழ்நிலையில் ஒரு நாடகம். ஒரு வணிகனை மணந்த ஒரு பெண் , கருவுற்ற நிலையில், கணவன் தந்த ஒரு பச்சையான   வர்ண பானத்தை குடிக்கிறாளாம்.

அதன் பிறகு அவளுக்கு பச்சை நிறத்தோலுடைய ஒரு பெண் மகவு பிறக்கிறதாம். .  அதைக் கண்ட துணுக்குற்ற கணவன் தன மனைவியைப் பிரிந்து செல்கின்றான். 

ஊராரோ அந்தக்குழந்தை,  பெண் பிசாசு, துர் தேவதை, witch  எனக்கூறி அவளை ஒதுக்குகின்றனர்.



அப்பா, அந்த கணவனைக் குற்றம் சொல்லாதே என்று எச்சரிக்கிறார் என் மகள். உண்மை கொஞ்சம் கொஞ்சம் என்ன ரொம்பவே வேற...

அந்த பிறந்த மகவுக்கு அப்பா உண்மையிலே அந்த ஊர் வணிக கவர்னரே இல்லையாம். உண்மையான தகப்பன் ஒரு விசார்டு. wizard.  அம்மாவே கடைசி வரை தன்  பெண்ணிடம் அப்பா யார் எனச் சொல்லவில்லை. கடைசியில் அந்த பெண் அந்த விசார்ட் உடன் தன்னை காதலித்தவனுடன் சென்று விடுகிறாள்.
அந்த காலத்திலேயே ஆங்கில படங்களை பார்த்து விட்டு ஆளுக்கு ஆள் ஒரு கதை சொல்லுவோம்.

பத்து வருடங்களுக்கு மேலாக இந்த நாடகம் நடந்து கொண்டு இருக்கிறது. லட்சகணக்கான மக்கள் இதை கண்டு ரசித்து இருக்கின்றனர். இன்னமும் இந்த நாடகம் நடக்கும் அரங்கினிலே கூட்டம் அலை பாய்கிறது. முக்கிய வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் பலர். 

 ஒவ்வொருவர் திறனும் ஒவ்வொரு விதம்.  இதுவரை பிலியன் கணக்கில் இந்த நாடகக் கம்பெனி லாபம் ஈட்டி விட்டதாகச் சொல்கின்றனர்.

இந்த கதை அவ்வளவு சுவாரசியம் என்று சொல்ல இயலாவிடினும், இதில் எல்பாபா ஆக கிளிண்டா ஆக நடிக்கும் புகழ் பெற்ற நடிகையர் காதி சாந்தென் மற்றும் காட்டி ரோசி கிளார்க் ஆகியவரின் நடிப்பு, வியக்க வைக்கிறது.

 ஆர்செஸ்ட்றா அமைப்பாளர் பிரியான் பெர்ரி, இசை வல்லுநர் மைக்கேல் கெல்லர் அவர்களின் திறமை , ஒலி ஒளியின் அமைப்பு எல்லாமே பிரம்மாண்டம். நம்மை பிரமிக்க வைக்கிறது. 







இரண்டாவது பகுதி முதல் பகுதியை விட அதிக ம்யூசிகல். கிட்டத்தட்ட ஒரு நூறு வாத்தியக் குழவினர் திரை அரங்கின் கீழே அமர்ந்து தமது திறமைகளை நமக்கு கண்கூடு ஆக காண்பிக்கின்றனர்.



பெண் குரல்கள் எல்லாமே மெஸ்ஸொ சுப்ரானோ வில் அமைந்திருந்தது. கிட்டதட்ட எல்லாமே கிளாசிகல். ஒரு பாட்டின் மெலடி பொழுது மட்டும் எனக்கு இந்துஸ்தானி கிளாசிகல் நினைவு வந்தது.
ஆண் குரல் ஒன்று சோகத்தில் ஒலித்த பொழுது எனக்கு சைகாலும் கண்ட சாலாவும் நினைவுக்கு வந்தனர்.

காதற்சுவையிலே    சிருங்காரம் சுவர்க்கம் . எனின்,
 சோகத்தில் பிழிந்து எடுத்த சங்கீதம் உண்மையிலே சுகம்.

( காதல் + சுவை ) = காதற்சுவை. 
அப்பா + துரை = அப்பாதுரை .  அப்பாத்துரை இல்லை.


இந்த நாடகம் வசனம் எனக்குத் தொடச்சியாக புரியவில்லை என ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். உங்கள் காது தான் பிரச்சினை என்கிறாள் பெண். இல்லை, தாத்தாவுக்கு இந்த உச்சரிப்பு புரியவில்லை என்கிறாள் பேத்தி.

 பேசப்படுவது எளிய ஆங்கிலம் தான் எனினும் நாம் முக்கியமாக இந்தியர் பேசும் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடைவெளி அதிகரித்து விட்டது.   நாடகம் முடிந்தபின் வெளி வந்தபோது எனது பேத்தி வரிக்கு வரி என்ன வசனம் என்று சொல்கிறாள் .  காரணம் இந்த உச்சரிப்பு .  வசனத்தை அல்லது கதையை நமக்கு முன்னமேயே தந்து இருந்தால் நல்லதோ !

கல்லூரி படிப்பின் இறுதி ஆண்டில் எனது ஆங்கில ப்ரொபசர் பாதர் சிக்வீரா என்னை தொடர்ந்து ஒரு லெக்சரராக பணி புரிய தன விருப்பத்தை சொல்லி இருந்தது நினைவுக்கு வர,  எப்படி இருந்தவன் எப்படி ஆயிட்டேன் என்று சொல்லிகொண்டேன்.

ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் இடையே ஒரு சில துளி வினாடிகள் கூட இல்லை. எப்படி இவ்வளவு அலர்ட் ஆக நடிகர்கள் ,மற்றும் சப்போர்ட் ஊழியர் அனைவருமே ஒரு டீம் ஆக செயல் படுகிறார்கள் என்பது அதிசயமாக இருக்கிறது.  நம்ம நாட்டு பப்ளிக் செக்டார் லீடர்ஸ் எல்லாருக்கும் ஒரு டீம் என்றால் எப்படி செயல் படவேண்டும் என்று சொல்வதற்கு ஒரு செயல் முறை விளக்க பாடம் இதுவே. A perfect Lesson for Team Management Indeed !

முக்கிய நடிகர்கள் அனைவருக்கும் ஒரு ஸ்டாண்ட் பை வைத்து இருக்கிறார்கள்.  இன்று நடித்த க்ளிண்டா பாத்திரத்தில் நடித்த நடிகை ஒரு இரண்டு ஆண்டுகட்கு பிறகு இன்று தான் நடிக்கிறாராம்.  அவர் நடிப்பைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை.  கிளிண்டா கண்களிலே அவர் பாத்திரமே பிரதி பலிக்கிறது. அவர் குரலிலே அந்த பாத்திரத்தின் இதயம் தெரிகிறது.

.

இந்த நாடகத்தின் கட்டணம் ஒரு நபருக்கு 110 டாலர்  நாங்கள் முதல் பால்கனியின் பக்க விளாகத்தில் அமர்ந்தோம். அங்கு தான் சேர்ந்து ஐந்து பேருக்கு அமரும் இடம் கிடைத்தது. இத்தனைக்கும் முதல் நாளே என் மகள் ரிசர்வ் செய்து இருந்தாள். . திரை அரங்கில் சுமார் 1500 பேருக்கு மேல் அமர்ந்திருக்க இயலும். திரைக்கு நேர் வரிசையில் அமர்ந்திருக்க 200 டாலர். மேடை அருகே அமர 300 டாலர் வரை கட்டணம். எல்லோருக்கும் எந்த எந்த இடம் என்று முன்னமேயே கணினி மூலம் பதிவு செய்து விடுகிறோம்.

தியேட்டரின் உள்ளே செல்லும் வழியில் நமது பையில் உள்ள எல்லாவற்றையும் பரிசோதித்த பின்பு தான் நம்மை அனுமதிக்கிறார்கள்.
எங்களை மட்டும் ( பாவம் டா !! வயசானவங்க..எஸ்கலேடர் கூட முடியாது. இந்தா பா.. இவுகளை மட்டும் அந்த லிப்ட் லே கூட்டியண்டு போய் அந்த இடத்திலே உட்கார வச்சுடு என்று ஒரு பொறுப்புள்ள பெண் அலுவலர் எங்களை அழைத்துச் சென்று விட்டார்.)

என்ன ஒரு காட்சி  அரங்கத்திலே !! இது நமது நாட்டிலே காண இயலாத ஒன்று.   இதை பற்றி சில வார்த்தைகள் கூறினால் நல்லது என நினைக்கிறேன்.

காட்சிகள் நடக்கும்பொழுது எந்த வித சத்தமோ,சீழ்க்கையோ, விசில் சத்தமோ இல்லை. நாடகத்தின் ஒரு காட்சி முடியும்போது தான் கரங்கள் ஒலிக்கின்றன
காட்சி நடக்கையிலே நடுவில் எழுந்து போதல், முன்னே பின்னே உட்காருபவருடன் சண்டை, சீண்டல் இது போன்று எதுவுமே இல்லை. .

வந்திருந்தவர்கள் பல்வேறுஇனத்தவர்  நாடுகளைச் சார்ந்தவர்கள் என்றே நினைக்கின்றேன.  அங்கேயும் பற்பல நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றனவாம்.  நடிகர்களுக்கும் யூனியன்கள் இருக்கின்றன.சில குறிப்பிட்ட நடிகர், நடிகையர் நடிக்கும்போது டிக்கட் கிடைப்பது கடினம் என்று சொல்கிறார்கள்.

அனைவரிலும் காணப்படுவது ஒரு ஆர்டர்லினஸ்.( தமிழில் என்ன சொல்வது ? அப்பாதுரை சார். ஹெல்ப் ஹெல்ப்..) இது நமது திரை அரங்குகளிலோ அல்லது நாடக அரங்குகளிலோ காண இயலாத ஒன்று.


காமிராக்கள், செல், புகைப்பட கருவிகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் எதற்குமே உள்ளே எடுத்து செல்ல அனுமதி இல்லை. எந்த ஒரு விதத்திலும் காட்சிகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ காமிராவில் படம் எடுக்க முடியாது.



ஒரு அழகான பாடல்  அந்த நாடகத்திலிருந்து. இதோ யூ ட்யூபுக்கு நன்றி. : இதில் நடித்த க்ளிண்டா பாத்திர நடிகை வேறு. நான் பார்த்தவள் வேற. அவள் கொள்ளை அழகு. ( நல்ல வேளை .கிழவி பக்கத்திலே இல்ல நான் எழுதும்போது.)

பாப்புலர் ஆவது எப்படி?  ஒன்றுக்கு மேற்பட்ட ரகசியங்கள்.
அவசியம் இந்த
விடியோவை பாருங்கள்.




அந்த காலத்து ராஜ மாணிக்கம் நாடகம் பார்த்து இருக்கிறேன். மனோகர் நாடகமும் பார்த்து இருக்கிறேன். அதிலே இருக்கும் டெடிகேஷன் என்னை வியக்க செய்து இருக்கிறது.

நாடகம்  நடக்கும் கால கட்டத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார்கள் என்றால் மிகையில்லை.

19 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. உண்மையாச் சொல்லப்போனா,இந்த மாதிரி ஒரு தியேட்டர் அனுபவம் எனக்கு புதுசு. அமைதியா ஒரு ம்யூசிகல்
      நாடகத்தை ஒரு ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இரண்டரை மணி நேரத்திற்கு ரசிக்கிறார்கள். அதுலே நானும் ஒருவன். ரொம்பவே எக்சைடிங்க்.

      இந்த நாடகம் முடிஞ்சப்பறம் பக்கத்துலே ஒரு இருபது மைல் தொலைவிலே ப்ளசிங் அப்படின்னு ஒரு சபர்ப். அங்கன நம்ம சித்தி வினாயகர்
      தக தக அப்படின்னு சில்வர் மூஞ்சூர் மேலே உட்கார்ந்துண்டு ஜொலிச்சுண்டு இருக்கார். இந்திய மக்கள் ஏகப்பட்ட பேர்.

      அந்த கோவில்லே சுத்தி பார்த்து , அப்பா வினாயகா , எல்லோரையும் காப்பாத்துப்பா அப்படின்னு கன்னத்துலே போட்டுண்டு,பின்னாடி, அந்த கான்டீன்லே க்யூவிலே நின்னு முறுகலா, நெய் ரவா மசாலா ரோஸ்ட், வடை சுட சுட
      சாப்பிட்டது இன்னமும் அருமை.

      கோவில் தீபாரதனை முடிஞ்ச உடன், பிரசாதம் அப்படின்னு ,ஒரு க்யூவிலே போய் நின்னா, பேப்பர் ப்ளேட்,ஸ்பூன் வைச்சு, ரவா பொங்கல், கேசரி,
      வடை, கொழக்கட்டை, புளியஞ்சாதம், எலுமிச்சை சாதம் , பாயசம் அப்படின்னு எல்லாத்துலேயும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து திக்கு முக்காட செய்துவிட்டார்கள்.

      நீக்கு
  2. காரில் பயணித்த காணொளி முதற் கொண்டு அனைத்தும் அசத்தல்... ரசனைக்கு வாழ்த்துக்கள் தாத்தா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹட்சன் நதிக்கு கீழே கட்டப்பட்ட டன்னல் பாலம் இது. நாலு லேன்ஸ் சாலைகள் இருக்கின்றன.
      கார்கள் போகும் வேகம் தான் கொஞ்சம் பயமா இருக்கிறது. மினிமம் ஸ்பீட் 80 எம்.பி.ஹெச்.

      ஒரு பாலம் நதிக்கு மேலே. இன்னொண்ணு நதிக்கு கீழே.

      நீக்கு
  3. முடிந்தால் book of mormon பாருங்கள்.

    ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு விதமாகப் பேசுவதால் எந்த ஊர்ப் வழக்கும் குறைந்து விடுவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஜூலை மாதம்12ந்தேதி ஒரு ஷோ இருக்கிறது. ஆனால் டிக்கட் 450 டாலர் கிட்டத்தட்ட.
      சான்ஸே இல்லை.

      கதை, ரெவ்யூ எல்லாம் கூகிள்லே படிச்சேன். இரண்டு மூணு பாட்டு யூ ட்யூபிலே பார்த்தேன்.
      அம்புடுதேன்.

      நீக்கு
  4. தாத்தாவுக்கு இந்த உச்சரிப்பு புரியவில்லை என்கிறாள் பேத்தி.

    பேசப்படுவது எளிய ஆங்கிலம் தான் எனினும் நாம் முக்கியமாக இந்தியர் பேசும் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் இடைவெளி அதிகரித்து விட்டது. நாடகம் முடிந்தபின் வெளி வந்தபோது எனது பேத்தி வரிக்கு வரி என்ன வசனம் என்று சொல்கிறாள் . காரணம் இந்த உச்சரிப்பு . வசனத்தை அல்லது கதையை நமக்கு முன்னமேயே தந்து இருந்தால் நல்லதோ !//

    நீங்க சொல்வது உண்மை தான். ஆங்கிலப் படங்களும் பிரிட்டிஷ்காரங்க படம்னால் புரிஞ்சுக்கறது கொஞ்சம் சுலபமாகவே இருக்கும் தான்.

    இதுக்குத் தான் எங்க பேத்தி சின்னவ தாத்தா, பாட்டிக்காகத் தமிழ் கத்துக்கறா. எங்களுக்குப் புரியறாப்போல் சொல்லுவாளாம்! :)))))

    பதிலளிநீக்கு
  5. Enjoying ?:) nice
    எனக்கும் அமெரிக்க ஆங்கிலம் புரிவதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயே இருந்து பேசினா இல்ல ந்யூஸ் கேட்டுகிட்டே இருந்தா புரிய ஆரம்பிச்சுடும்.
      ஆனா அதுக்கு சான்ஸு இல்ல. தேவையும் இல்ல.

      சுவர்க்கமே என்றாலும்
      நம்ம ஊரு போல ஆகுமா !

      நீக்கு
  6. காரில் உங்களுடனே பிள்ளையாரும் கூட வந்தார் போல இருக்குதே/......
    அடுத்தடவை நீயூயார்க் போகும் போது Flasing Temple ( கணபதி ) போக தவறாதீர்கள் சாப்பாடு மிக பிரமாதமாக இருக்கும். இன்னும் நீயூஜெர்ஸி பாலாஜி கோயில் போகவில்லையா என்ன> அதைபற்றி நிறைய படங்கள் எடுத்து பதிவு போடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கார்லே மட்டும் இல்ல. நடந்து போனால் கூட நம்மோட கூட வருபவர் தான் வினாயகர்.

      அவர் எங்கும் இருப்பார். எதிலும் இருப்பார்.

      எவர்கள் உண்மை பேசுகிறார்களோ அவர்கள் இதயத்தில் என்றுமே இருப்பார்.


      ஃப்ளெஷிங் வின்யாகர் கோவில் சாப்பாடு அப்படின்னு சொல்லதீக. ஒரு கரான்ட் டின்னர்.

      ஒரு செய்தி. என்ன இது. !! vinayakar temple கான்டீன் லே இங்க்லீஷ் காரங்க எல்லாம் வந்து
      சாப்பிடராக அப்படின்னு மாப்பிள்ளையை கேட்டேன்.

      ஒரு பேப்பர் ரோஸ்ட் பக்கத்து சரவண பவன்லே 15 முதல் 17 டாலர். இங்கே 5 டாலர். பொங்கல் 3 டாலர்.
      வடை 1 டாலர். காபி 2 டாலர்.

      சீப்போ சீப்பு. அம்மா இங்கனயும் ஆரம்பிச்சுட்டங்க போல.

      நீக்கு
    2. ERRATA:
      Saravana Bhavan Price : Dosa 8 to 12 dollars ( depends upon the variety) At the Phleshing Vinayaga Temple: dosa ; 4 to 6 dollars; vadai 3 dollar. coffee 2 dollar.
      2 masal dosai, 1 paper rost, 2 idli, 2 thayir vadai, 2 sadha medhu vadhai, oru dappa maysor paku, oru dappa kara sevai, oru venbongal, oru plate thayir sadhar, 2 coffee, Total cost $50 only. The same would have cost around 80 to 90 at Saravana bhavan new york.
      Further information: This canteen issues token and calls customers by their numbers and delivers . This temple canteen has attracted of people in and around, who do not appear to be devotees of Lord Ganesha. But Lord Ganesha attracts all and bestows His Grace on All,irrespective of caste, creed, religion or language. Knowing this, all come and have a grand full sappaadu.
      More than anything else, I met a lot of Tamil people .

      நீக்கு
  7. ரசிக்கத்தெரிந்தவர் நீங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ருசிக்கத் தெரிஞ்சவரும் கூட.

      நெய் ரவா வெங்காய ஸ்பெஷல் மசாலா ரோஸ்ட். என்ன்ன டேஸ்ட் !!

      சித்தி வினாயகர் கோவில், ஃப்லேஷிங் சபர்ப்லே...சூபர்.

      நீக்கு
  8. பகிர்வுகள் .. பிரம்மாண்டம். பிரமிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அமுத பாற்கடலின் பிரும்மாண்டத்திற்கு

      முன்னே இவையெல்லாம் ....???

      நீக்கு