புதன், 11 டிசம்பர், 2013

தாத்தா.. தாங்க்ஸ்

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே  

இன்னாம்மா இப்படி மனசு குஷியா இருக்கு ?
அப்படின்னு ஊட்டுக்காரி கிழவியை உசுப்பேத்தலாம்  என்று ஒரு கணம் நினைத்தேன்.

 ஆனால், அவளுக்கு மூட் சரியா இல்லையா என எனக்குத் தெரியவில்லை.
சைலண்டா இருக்கிறாள். 

 .மலரே மௌனமா 

அப்படின்னு கேட்க வாய் எடுத்தேன். ஊ ஹூம் அதுவும் வேண்டாம். 
 நான் எதோ கேட்க அவள் ஏதோ புரிஞ்சுண்டு அது வேறு புதுசா வம்பில் மாட்டிக்கொள்ள சுப்பு தாத்தா இன்னிக்கு நாட் ரெடி.

    இன்னிக்கு கண்டிப்பா மெது வடை பண்ணித் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறாள் 
 ஏதாவது சொல்லி மெது வடை கான்சல் ஆகிவிடுமே என்ற பயம் தொத்திக்கொண்டது. 
 இன்னிக்காவது let better wisdom prevail.
GO WITH THE WIND . 

வார்த்தை தவறிவிட்டால் என்ற பாட்டு திரும்பவும்  பாடக்கூடாதே.  என்னடி மீனாச்சி, மெது வடை என்னாச்சி  
Add caption

காலைலேந்து நாலு போன் கால். ஒவ்வொரு தடவையும் பேரப் பசங்க கிட்டேந்து தான் வந்திருக்கும் அப்படின்னு ஆவலுடன் எடுத்தா...

" சார், இன்னிக்கு நீங்க  ப்ரீயா இருந்தா நான் வரவா சார் " என்று அந்தப்பக்கத்திலேந்து குரல்.

இன்னிக்கு என்ன, என்னிக்குமே ப்ரீ தான். நானும் ப்ரீ, என்னுடைய சோதிட சர்வீசும் ப்ரீ. 

 காசுதான் கிடையாதே , கேட்டுத்தான் பார்ப்போமே என்று என் நண்பர்கள் அவர்கள் சுற்றங்கள், உற்றங்கள், முக நூல் அறிமுகங்கள் அவ்வப்போது வீட்டுக்கு வருவது இப்போதெல்லாம் வழக்கமாக போய்விட்டது.  

அதற்காக பிரசவத்துக்கு இலவசம் என்று போர்டு போட்டுக்கொள்வதும் இல்லை. நான் ஒரு ப்ரொபஷனல் இல்லை.ஒரு ப்யூர் அண்ட் சிம்பிள் அகடமிஷியன்.

      வருபவர்களுக்கு நான் ஏதோ இலவசமாக சேவை செய்கிறோம் என்ற எண்ணம்  இல்லை. சொல்லப்போனால், அவர்கள் தான் என்னை கீப் மீ எங்கேஜ்டு THE BEST WAY TO LOSE YOURSELF IS IN THE SERVICE OF OTHERS. மன உலைச்சல்களில் அவதி உறும் நண்பர்களுடன் அளவளாவுதல், அவர்களுடைய பிரச்னைகளை அப்ஜெக்டிவ்வாக அசெஸ் செய்யமுடிகிறது. இந்த வாய்ப்பு .காசில்லாத LEARNING EXERCISE..மற்றவர்கள் துன்பங்களில் பங்கு கொள்ளும்போது நம் துன்பம் (அப்படி ஒன்று இருந்தாலும் ) மறைந்து போகிரது. 

 
வாசல் பெல் அடித்தது.      காலை 10 மணிக்கே வருவதாகச் சொன்னவர் 9.30 க்கு வந்துவிட்டார்.

வந்தவர் எனது பழைய நண்பரின் first son . வந்தவரை ஒரு நாற்பது  வருடம் கழித்து பார்க்கிறேன். இன்னும் ஐம்பதை  தாண்டி இருக்கமாட்டார் என்று தோன்றியது . இருந்தாலும் தலை பாதி நிரை . கையில் புதுசா  பிங்க் கலர் பை. தி.நகர். எல்.கே.எஸ்.கிப்ட்.  
           நான் நரசிம்மன். உங்களை,  ... நான் சின்ன பையனா இருந்தபோது தஞ்சாவூருலே பார்த்தது. அப்பறம் பார்த்தது இல்லே.  நாப்பது  வருஷம் இருக்கும் நாங்க தஞ்சாவூரை விட்டு இங்கு வந்தது..
         இருக்கும். முதல்லே உட்காருங்கோ..
             
அப்பா தான் சொன்னார்.   சூரி கிட்டே சொல்லு எதுனாச்சும் சொல்யுசன் கிடைக்கும்  அப்படின்னு சொன்னார்.
ஒரு அஞ்சு நிமிஷம் தான்.உங்களை ரொம்ப சிரம படுத்த மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே  அங்கிருந்த  ஈசி சேரில் உட்கார்ந்தார். புதுசா இருந்தது கைப்பை.

 அதில் இருந்து ஒரு பழைய நோட் புத்தகத்தை திறந்து  ஒரு பக்கத்தை எடுத்தார். என்னிடம் நீட்டினார். .  

பர்ஸ்ட் ,ஒரு  காபி ஸ்ட்ராங்கா சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, மீனாச்சி என்று உள்ளே கிச்சன்  பக்கம் கண்ணிட்டேன்.

பார்க்கப்போனா..வேண்டாம். அப்படின்னு சொல்லணும் தான்  சார். ஆனா உங்க வீட்டு காபி ரொம்ப நன்றாக இருக்கும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்வார்.

அதற்குள் காபி வந்து விட்டது.

எனக்கு சக்கரை அதிகம் கூடாது என்று ஒன்று மில்லை என்றார். என்னைப் பார்த்தார்.

நீங்க ? என்றார் .
என் மனைவியைப் பார்த்தார்.

அவர் இப்பத்தான் இரண்டாவது காபி சாப்பிட்டார். நீங்கள்  சாப்பிடுங்கள் என்றாள் என் இல்லக்கிழத்தி.

மாமி,
நான் சௌண்ட் எஞ்சினியர்.
உங்காத்து  மாமாவோட அத்யந்த பிரண்டு ராமனோட செகண்ட் ஸன். இது   என்னோட மூத்த பெண் வந்தனா ஜாதகம். . போன வருஷம்  ஐ.ஐ.டி லே டிஸ்டிங்கஷன் .. ரிசல்டு வரத்துக்கு முன்னாடியே காம்பஸ் செலக்சன் ஆகிடுத்து.

ஆமாம். இப்ப எல்லாம் அந்தக் காலம்  இல்லையே .படிச்சுட்டு வேலை கிடைக்குமா கிடைக்காதா அப்படின்னு கவலைப்படரதுக்கு.!! ஐ.ஐ.டி. லே படிச்ச இரண்டு பேருக்கு ஒரு கோடி offer வந்து இருக்காமே !! 

நம்ம செலக்ட் பண்றதுக்கு அப்படின்னு இப்ப இல்ல. முன்னாடியே தானாவே செலேக்சன் ஆகிடறது.  பொண்ணு புத்திசாலியாவும் இருந்து லக்கியாவும் இருக்கறது கிரேட். என்கிறாள் என் மனைவி. 

நீயா நானா பார்க்க ஆரம்பிச்ச பின்னே  இவள் , கோபிநாத் மாதிரி ஈரெட்டா  but இண்டெலிஜெண்டா பேச கத்துண்டு இருக்காள்.. காலரை தூக்கிவிட்டுக்கொள்ள சட்டைக்குபின்னால் கையைக் கொண்டு போனேன்,. சட்டையே போட்டுக்கவில்லை என்று தெரிந்தது.  


அவ ஜாதகம் எப்படி இருக்கிறது  அப்படின்னு தெரிஞ்சுண்டு போக வந்தேன் என்று என் மனைவியைப் பார்த்து சொன்னார்.

சரிதான். ஒரு அர்த்தத்தோட இவள் என்னை பார்த்தாள்.

இந்தக்கிழத்துக்கு இன்னிக்கு வேலை கிடைச்சாச்சு.என்று மனசுக்குள் அசை போட்டுக்கொண்டு இருப்பாள். எனக்குத் தெரியும்.
ஆனா, சத்தமா, 

பகவான் அவரவர்க்கு அப்படின்னு ஒரு முடிச்சு போட்டு இருப்பான். பெத்தவாளுக்கு இப்ப எல்லாம் அதிகமா கவலை குழந்தைகள் வைக்கிறதில்லை..என்று ஆரம்பித்தாள்.

வந்தவர் கிழவி கமெண்டை ரசித்தாற்போல் இல்லை.

நீங்க பாத்து சொல்லுங்க சார். என்றார் வந்தவர் காபியை ஒரு மடக் குடித்தவாரே ..

சக்கரை போதுமா சொல்லுங்கள் என்றாள் என் மனைவி.

காபிலே சரியாத்தான் இருக்கு.  எதுலே இருக்கணுமே அதுலே இல்லையே என சன்னமாக அவர் சொன்னது விழுந்தது.

ஜாதகத்தை பார்த்த எனக்கு உடன் பெண்ணின் வயது தான் கண்ணில் பட்டது. வயது 23  அல்லது 24 தான் பெண்ணுக்கு இருக்கும். திருமணம் குறித்து தான் வந்திருகார்  . ஆனால்,  இந்தக் காலத்துலே பெண்ணைப் பெற்றவர்கள்  பெண் ஒரு வேலையிலே இரண்டு மூன்று வருஷம் ஆகி செட்டில் ஆனபிறகு தானே அடுத்ததை பற்றி யோசனை பண்ணுகிறார்கள். ..என் மனசு இன்னொரு ட்ராக்கில் ஓடியது .

சட் என்று  அவர்  கண்களை கூர்ந்தேன்.

நான் ஒண்ணுமே சொல்லல்ல.  இன் பாக்ட் , சொல்லும்படியாவும் இல்ல.  நீங்களே எல்லாம் பாத்து சொல்லுங்கோ என்கிறார்.

முதல்லே காபியை குடிங்க.. அப்பறம் இவர் எல்லாத்துக்கும் சொல்வார். கவலைப் படாதீர்கள். பெருமாள் பார்த்துப்பார் எல்லாத்தையும் என்றாள் இவள்.

பெருமாள் பார்த்துப்பார் என்று தானே  நினைச்சுண்டு இருந்தோம் நானும் அவளும். ஆனா, இவ...என்று ஏதோ துவங்கி நாக்கைக் கடித்துக்கொண்டு நிறுத்தி...

பத்து செகண்டு கழித்து

அந்த எப்.எம். ரேடியோ சத்தமா இருக்கிறது போல் இல்லை ?
என்றார் வந்தவர்.
இங்கிதம் தெரிந்த என் வீட்டுக் கிழவி சத்தமில்லாமல் அங்கிருந்து நழுவினாள் .

அந்த ரேடியோவில் ஏதோ சங்கீதம் ,SO BLARING.
 இந்தக்காலத்து நபர்களுக்கு அந்த காலத்து ஓல்டு இஸ் கோல்டு ப்ரோக்ராம்.

மறுபடியும் ஜாதகத்தில் கண்ணை திருப்பினேன். அஞ்சு நிமிஷம் அமைதி.
ஜாதகம் நன்றாகத்தான் இருந்தது. அதில் எந்த வித குறையும் இருப்பதாகப் படவில்லை.

ஒண்ணும் பிரச்னை இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே...என்று இழுத்தேன்.

இருக்கே... என்று அவர் இழுத்தார்.

நரசிம்மன்  ! எனக்கு தெரிஞ்ச விதத்தில்  ஜாதகம் நன்றாகத்தான் இருக்கிறது. பார்க்கப்போனால் குரு பலன் வர நேரம். பெருமாள் அனுக்ரஹம் பண்ணினால் சீக்கிரமே எனக்கு கல்யாண சாப்பாடு கிடைக்கும். மெது வடை இரண்டு கூட போடணும். பட்டர் கிட்டே சொல்லிடுங்கோ இப்பவே..

சீக்கிரம் கல்யாணம் நடந்துடுமா.. ???
நீங்க என்ன சார்  சொல்றேள் !
வந்தனாவோட அம்மா அதான் என்னோட ஆத்துக்காரி
 இந்த பொண்ணு சொல்ற படி நடந்ததுன்னா
 உயிரை விட்டுடுவா ஸ்வாமி...

அப்ப உங்க மிசர்சுக்கு ஏதாவது பிரச்னையா..? அவள் ஜாதகம் இருக்கா ? 

சுப்பு தாத்தா வெகுளி . எல்லாரும் நம்பணும். 

சார், நீங்க ரொம்ப கிண்டல் பண்றேள். பிரச்னை பண்றதே  இந்த பொண்ணு தான்.

என்ன பிரச்னை ? என்று நான் கேட்டு முடிக்கவில்லை.

 பூக்களைத் தான் பறிக்காதீக ..  காதலைத் தான் முறிக்காதீங்க....
 என்று எப்.எம்.ரேடியோ அலறியது. என் கேள்விக்குத்தான்   காத்திருந்தது போல.  

(உங்க மனசுலே ஒரு கேள்வி எழுந்தது அப்படின்னா அதற்கான பதில் எங்கேயோ இருக்கிறது. அதை நோக்கி நீங்கள் போவீர்கள் . இது நிச்சயம். ) So says my Guru, tells my good friend Mr.Venkataraman. thank u sir. 

அவரை ஒரு அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன். எனக்கு புரிந்து விட்டது.

அத, அத அதைத்தான் நான் சொன்னேன்
என்று அவர் சொல்லவில்லை. அவர் பார்வையே சொல்லியது.

மாமி, கொஞ்சம் ரேடியோவை சன்னமா வையுங்களேன்
என்று ஒரு அப்பீல் பண்றார். வந்தவர்.

இதோ செஞ்சுட்டேன். சொல்றாளே தவிர செய்யல்ல. 

நரசிம்மனா.. அதானே உங்க பேரு.

ஆமாம்.

உங்க பொண்ணு, வந்தனாவா,  அவ சொல்றத நீங்க கேட்கணும் அப்படின்னு நினைக்கிறா  இல்லையா ..  ?

அந்த நீங்கன்னு நீங்க சொல்றதுலே   நான் இன்க்லூடட்  இல்ல. என் வீட்டுக்காரி.

சரி. அவளுக்கு என்ன பிரசனை.

சார் . நீங்க என் அப்பாவோட க்ளோஸ் பிரண்டு அப்படிங்கரதுனாலே சொல்றேன்.  தன்னோட வயத்துலே பிறந்த பெண் தான் சொல்றபடி தான் கேட்கணும் அப்படின்னு என் பார்யாள் நினைக்கிறாள். 

ஏன் ?

ஏனா ? அவளுக்கு அவள் பிறந்த வீட்டுலே தெரிஞ்சா  கௌரவக் குறைச்சலா போயிடும் அப்படின்னு சொல்றா.  அவ சொல்றதும் நியாயமாகத்தான் தோன்றது.   மேற்கொண்டு.....

என்ன ?

அவ சொந்தத்தில் தெரிஞ்ச இரண்டு பையன்கள் இருக்கிறாங்க. நல்ல குடும்பம். நம்மைவிட ஹை லிவிங். ஒரு பையன் ஆல்ரெடி அமெரிக்கன் சிடிசன். இன்னொரு  பையனுக்கு க்ரீன் கார்டு கிடைக்கப்போறது. அங்க தான் அலையன்ஸ் வச்சுக்கணும் அப்படின்னு பிடிவாதம். இந்த இரண்டுலே ஒண்ணு சூஸ் பண்ணட்டுமே அப்படின்னு சொல்றாள்.

பொண்ணு என்ன அதுக்கு  சொல்றா?

சார், நிஜத்தை சொல்லணும் னா , அவ அம்மா சொல்ற அலையன்சு  பத்தி தீவிரமா பேச ஆரம்பிச்ச பின்னே தான் , இது எல்லாம் ........எங்களுக்குத் தெரியறது....  ...

 ((1,2,3..........4... 10 செகண்டு வால் க்ளாக் சத்தம் இப்ப கேட்கிறது. ) 

பெருமாள் அவர் தூங்கிண்டு இல்ல. நாங்களும் தூங்கிண்டு தான் இருந்திருக்கோம். .. 

இந்த பையன் படிச்சவன் தானே..

ஆமாம்.

கூட வேலை பார்க்கிறானோ...?

ஆமாம். ஒரு வருசமா...

அப்பா அம்மா எப்படி ?  குடும்பம் எப்படி ?

நல்லவா தான் அப்படின்னு பொண்ணு சொல்றது. நான் எப்படி போய் பார்க்கமுடியும் ?

பையனைப் பார்த்தீகளா ?

முந்தா நாள் அன்னிக்கு அவ ஆபீஸ் லே காண்டீன் லே எனக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணி வச்சாளே ? நல்ல டீசெண்டா இருக்கான். இவ இருப்பதற்கு மேல் டையர் லே இருக்கிறான் போல் தோன்றுகிறது. பாசிபிளி ப்ராஜக்ட் மேனேஜர் காடர்.

பின்னே என்ன ?

நமக்கு ஒரு சம்பிரதாயம் இருக்கிறது இல்லையா..
கூட பந்துக்கள் அவர்களோட பந்துக்கள் இருக்கிறவா நம்ம மேல வச்சு இருக்கிற மதிப்பு இதெல்லாம் பார்க்கணும் இல்லையா..?  நாளைக்கு ஒரு நல்லது கெட்டது  எல்லாத்துக்கும் எல்லாரும் வரணும் இல்லையா ?

நரசிம்மரே.. உங்க பொண்ணுக்கு தன் ப்யூசர் மேல அக்கறை இருக்காதா என்ன ? இஸ் ஷி நாட் காம்பிடண்ட் டு அனலைஸ் த சிசுவேஷன் ?

அப்படி இல்லை.  ஷி  இஸ் ரியலி  ஸ்மார்ட் அண்ட் இண்டெலிஜெண்ட்.

அப்போ, த ப்ராப்ளம் இஸ் மோர் வித் அஸ் இல்லையா ?

சார் ! நான் உங்ககிட்டே ஜோசியம் பார்க்கத்தான் வந்தேன். நீங்க சைகாலஜிஸ்ட் ஆ பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள். ....

 ஐ ஆம் ஒன்லி அனலைசிங் யுவர் ப்ராசஸ் ஆப் தாட்.

அடுத்தவளுக்கு கஷ்டமா ஆயிடுமே..?  ஹூ வில் ஹாவ் அலையன்சு வித் அஸ் . 

அப்ப, மூத்தவளா பிறந்தா சாக்ரிபைஸ் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறேள்.

நான் மட்டும் இல்ல. நம்ம சமூகம் சொல்றதே..

அவரவர் வாழ்வை அவரவர் முடிவு செய்ய கூடிய ஒரு சூழ்நிலையை உண்டு பண்ண முடியாதா பெற்றோர்களாலே...?

முடியும். இல்லைன்னு சொல்லல. இன் பாக்ட் , அடுத்தவ மூத்தவ கட்சி.
என்னைப் பத்தி கவலைப்படாதீங்க அப்பா  பி போல்டு அப்படின்னு சொல்லிட்டா.. 

அப்ப என்ன பிரச்னை ?  எஸ்ஸுனு இங்கிலிஷ்லே சொல்லிடுங்க...

திரும்ப திரும்ப என்னை சொல்லாதீக.   நான் ஒத்து போகணும் அப்படின்னு தான் சொல்ரேன்.  நான் இப்பவே போன் போட்டு என் பார்யாளை வரச்சொல்றேன். நீங்க கன்வின்ஸ் பண்ணுங்க. ப்ளீஸ் ,


கார்த்தி அப்பா.. அப்படின்னு பக்கத்து ரூம்லே ந்து ஒரு சத்தம்.
கொஞ்சம் இருங்க. என்னன்னு பார்த்துட்டு வரேன் அப்படின்னு அடுத்த ரூமுக்கு சென்றேன்.

என்ன விஷயம். கூப்பிட்ட ?

இன்னிக்கு, நான் பேச நினைப்பதெல்லாம் என்னங்க.. நீங்க பேசறீங்க...

அது சரி. எதுக்காக கூப்பிட்ட ?

உங்க பிரண்டு பெங்களூரு லேந்து இரண்டு தரம் போன் பண்ணிட்டார். அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசறேன்னு சொல்லி இருக்கார். இந்தாங்க. இந்த செல்லை பிடிங்க.. என்று ஒரு செல்லை என்னிடம் திணித்தாள்.

செல்லை வாங்கிக்கொண்டு, நரசிம்மன் அமர்ந்திருந்த ஹாலுக்குச் சென்றேன்.

இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தார் என்று தோன்றியது.

யார் ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒரு முப்பது செகண்டு ஓடியிருக்கலாம்.

சார், இன்னும் ஒரு விஷயம் இருக்கு. எனக்கு இரண்டே பெண்கள் தான். பையன்கள் இல்லை.

இனிமே நோ சான்ஸ். வீட்டுக்காரிக்கும்   வயசாயிடுத்து. என்றேன்.

உங்களுக்கு எப்பவுமே கிண்டல் தான்.
நமக்கு வயசானப்பறம் எங்க போய் இருப்பது ? நமக்கு ஒரு ஆதாரம் வேண்டும் இல்லையா ?  

ஸோ , த ப்ராப்ளம் கன்சர்ன்ஸ்  யூ,        நாட் யுவர் டாட்டர்.

செல் அடித்தது.

எடுத்தேன்.

பிரண்டு வெங்கடராமன் தான் பேசினார்.

நம்ம காலனிக்கு ஆதார் கார்டு கொடுக்க,   தேதி ,போட்டோ எடுக்கிற  இடம் எல்லாம் அசோசியேஷன் நோட்டிஸ் லே போட்டிருக்கு அப்படின்னு சந்திரசேகர் சொல்றாரே...

அப்படியா...ஆதாரம் வந்துடுத்தா !! போய் பார்த்துட்டு வர்றேன். சத்தமா பதில் சொல்லிக்கொண்டே வந்தவரையும் பார்த்தேன். 

அப்படியே அந்த லிஸ்டுலே என்னோட நம்பர் என்னன்னு பார்த்துட்டு போன் செய்யுங்க.  என்றார்.

செல்லை வைத்துவிட்டு நரசிம்மனை பார்த்தேன்.

நரசிம்மன், பகவான் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் போட்டு இருப்பார் என்றேன். நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதரமா? அப்படின்னு ஒரு வசனம் இருக்கு தெரியுமோ ?

இப்ப பிலாசபி பேசறேள்.

அது சரி. அப்பா எப்படி இருக்கார் ?

அவருக்கென்ன ? தினப்படி கீதை பாராயணம் பண்ணிண்டு இருக்கிறார்.

அவர் கிட்ட கேட்கலையா ?

அவர் விஷயம் தெரிஞ்சன்னிக்கே :
நான் என்னத்தடா சொல்றது ? நீயாச்சு, உன் பொண்ணாச்சு.. அப்படிங்கறார். 

லோகத்துலே நடக்கிரதுக்கெல்லாம் நம்ம   ஒரு சாட்சி தாண்டா..எல்லாத்தையும் என் தலை மேல் போட்டுடு அப்படின்னு பெருமாள் சொல்லி இருக்காராமே..

அனன்யாஸ் சிந்தயிந்தோ மாம் யே ஜனா பர்யுபாசதே
தேஷாம் நித்யம் அபியுகதானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்.
ஸ்லோகம் வேர சொல்றார். 

மேலே, நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. என் பிரண்டு சூரிக்கிட்டே கேட்டுக்கோ அப்படின்னு சொல்லிட்டார். அதான் நானும் வந்தேன். 

எனக்கு மனசுக்குள்ள் சிரிப்பு வந்தது.
அவர் அந்த காலத்து லப்ட் கம்யூனிஸ்ட்.
மிலிடண்ட் ட்ரேட்  யூனியனிஸ்ட்.
இன்னிக்கு ராதே ஷ்யாம்.   ரைட் அபௌட் டர்ன். 

நரசிம்மன் !!
இட் இஸ் குட் வி கோ பை த ஸ்ட்ரீம். என்றேன்.


புரியறது. வரேன். என்றார்.  
பத்திரிகையோட வாங்கோ என்றேன்.
         
                             *****************************************


இரண்டு நாள் கழிச்சு ஒரு போன் வந்தது.

என் மனைவி போனை எடுத்தாள். எதோ இரண்டு வார்த்தை பேசிவிட்டு என்னிடம் போனை தந்தாள்.

யாருன்னே தெரியல்லே. சின்ன பொண்ணு குரல் மாதிரி இருக்கு.

சூரி ஹியர் என்றேன்.

தாத்தா தாங்க்ஸ் .

தாங்கஸா ? நீங்க யாரு. ?

நானா ?

ஆமாம்.

நான் உங்க தஞ்சாவூர் ப்ரண்டோட பேத்தி.     நரசிம்மன் டாட்டர்.

ஹலோ .. என்ன ஆச்சு.

அதான் சொன்னேனே. தாங்க்ஸ்.

அப்பறம்

விழுப்புரம். ...

கல கல என்று சிரிப்பு. 
வரப்போரத்து ஓடையிலே புதிய வெள்ளம்  பாய்ஞ்சு வராப்போல .....

போன் கட் ஆகிவிட்டது.
ஆனா அந்தப்பிஞ்சு மனசுக்குள்ளே இன்னிக்கு இருக்கும் ஆனந்தம்  
கண்டின்யூ ஆகும் பார் எவர் அண்ட் எவர்.

அது என்ன விழுப்புரம்?
 புரியவில்லை.
கிழவி கிட்டே கேட்டேன்.

என்ன இது கூட தெரியாம.  சரியான .ட்யூப் லைட்..
அங்க தானே  ட்ரைனுக்கு  என்ஜினை மாத்தறா?

அப்படின்னா ?
மக்கு மக்கு.  அப்பா அம்மா என்ஜினை கயட்டிட்டு மாப்பிள்ளை என்கிற டீசல் என்ஜினை மாட்டி இருக்கா...
இந்த மாதிரி சமாசாரங்கள் லே கிழவி ஆல்வேஸ்  எ லிட்டில் அஹெட்.
காதல் ஓவியம் பாடும் காவியம்.

இந்த இளசுகளுக்கு  ஆசைகள் எங்கிருந்து வருகுதோ !!
எல்லாமே அந்தந்த வயசுக்கான கெமிஸ்ட்ரி. 
அந்த ஹார்மோன் படுத்தற பாடு எல்லாம் 
 ரஹ்மான் ரசிகர்களுக்குத்தானே புரியும்.. 

கிட்டப்பா காலத்துலே இருக்கிற நமக்கு இதெல்லாம் 
எட்டாதப்பா...

யுகத்துகேற்ற சங்கீதம். சுகம். 

என் மனசுக்குள்ளே  அந்தப்படம்  ப்ளாக் அண்ட் வைட்டாத்தான்  ஓடியது.

காதில் சத்தம் ஒன்றும் வரவில்லை.
காரணம் காதை ஓரம் கட்டிவிட்டு

மூக்குக்கு வந்தது.ஒரு சூப்பர் ஸ்மெல்.  நறுமணம்.

அந்தந்த வயசிலே அந்தந்த ஆசை.
அப்படின்னு வியக்க வைத்தது.

இந்த பெரிசுக்கு இன்னும்
சின்ன சின்ன ஆசை.

மெது வடை.கொஞ்சம்  கொத்தமல்லி சட்னி
மெது வடை கொஞ்சம் தேங்காய் சட்னி.
அதுவே எனக்கு
திவ்ய நாம சங்கீர்த்தனம்.

யார் யாருக்கு எப்ப எப்ப என்ன என்ன கொடுக்கணும் அப்படின்னு
அவனுக்கு நன்றாவே தெரியும்.




வாழ்வே இனிமை.
மெதுவடை கொத்தமல்லி சட்னி பண்ணிக்கொடுத்த பட்டினியே ..

சீ சீ ... பத்தினியே என் தர்ம பத்தினியே
நீ மட்டுமல்ல.

எல்லோரும்
வாழ்க வளமுடன்.  

இரண்டு தரம் சத்தமா சொன்னா போதுமா ?
இந்த கணக்கு இந்த பார்முலா புரிஞ்சாலே போதுமே.

H =  R - E 
So simple a mathematical formula.
If u want to keep your HEAD high and keep high your esteem,
understand this simple equation.

Happiness is just Reality minus Expectations. 

 யாரு சொன்னாவா ?  இங்கே போய் பாருங்க. 




*******************************************************************************

கற்பனை ஆங்காங்கே கலந்த உண்மைக்கதை. உண்மை இருக்கும் இடங்களிலே பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பொய்மையும் வாய்மை இடத்த
பொய் தீர்ந்த நன்மை பயக்குமெனின்.







22 கருத்துகள்:

  1. நல்ல பாடல்களுடன்.... பெற்றவரைச் சமாதானப்படுத்தி...... ஒரு பெண்ணின் சந்தோஷத்தை அதிகப்படுத்தி....... மெதுவடை சட்னி... திவ்யம்!

    பதிலளிநீக்கு
  2. காலத்துக்கேற்ற கருத்துள்ள பதிவு.பகவத் கீதா ஜெயந்தியை ஒட்டிய சிறப்புப் பதிவுன்னு போட்டிருக்கலாமோ!!.. மிக்க நன்றி தாத்தா!!!

    பதிலளிநீக்கு
  3. இங்கேயும் இப்படித் தான் ஒரு பெண் ஜாதகம் கேட்டதுக்கு இப்போத் தான் 23 வயசாறது. வேலைக்குப் போய் இரண்டு வருஷம் இன்னும் முடியலை. இன்னும் நாலைந்து வருஷம் போகட்டும்னு பெரியவங்க சொல்றாங்க. :)))) அதுக்குள்ளே இந்தப் பெண்ணும் ஜோடியைத் தேடிப்பா! :))))

    தப்பு யார் மேலே!

    பதிலளிநீக்கு
  4. முதல்லே கொடுத்த கமென்டு போச்சா, போகலையானு தெரியலையே! :)

    :)))))) எழுத்து ஆங்காங்கே கொஞ்சம் இல்லை, நிறையச் சின்னது. கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டி இருந்தது. மெதுவடை சூடா இருந்தால் அப்படியே சாப்பிடலாம். இல்லைனா சாம்பார் வடையாவோ, ரச வடையாவோ சாப்பிட்டுக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் கொடுத்த அஞ்சு விரல்லே ஒன்னு சின்னது ஒண்ணு பெரிசு.
      ஒண்ணு மீடியம். ஒன்னு எல்லாத்தையும் விட சின்னது. ஆனா அது இல்லேன்னா மத்த நாலு இருந்தும் பிரயோஜனம் உண்டோ ?

      நம்ம ஸ்வபாவமே இதுக்கு அட்ஜஸ்ட் பண்ணிண்டு போக கற்றுக்கொண்டு விட்டோம்.

      புதுசா வரவங்க கிட்ட தான் ப்ராப்ளம்

      கொஞ்சம் டேக் நிறையா கிவ் .

      என்னது... உங்க பதிலுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையா !!

      நீக்கு
  5. வரப்போரத்து ஓடையிலே புதிய வெள்ளம் பாய்ஞ்சு வராப்போல .....

    அருமையான கல்யானம்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடம்,
      உங்க ஆதிசேஷா, அனந்த சயனா பாடலை மலைய மாருத்திலே பாடிவிட்டு
      வியாழக்கிழமை என்பதாலே மைலை பாபா கோவிலுக்கு சென்றேன்.

      அந்த க்யூவும் எனக்கு முன்னே ஒரு 500 பேர் இருக்கலாம் ஆதி சேஷன் போல நெளிஞ்சு நெளிஞ்சு போனது.

      நானும் அதிலே ஒரு துளியா நின்னு பாபா கால்லே விழுந்தேன்.

      எல்லாம் அந்த பெருமாள் தந்த பாக்கியம்.

      நீக்கு
  6. உங்கள் வலைக்கு வந்தாலே ஒருவித மகிழ்ச்சி ஏற்படுது ஐயா... நன்றி... நன்றி... இணைப்புகளுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைப்புகள் பிணைப்புகளை ஏற்படுத்தும்.
      சில சமயம், இனிப்புகளையும் எடுத்துத் தரும்

      நீக்கு
  7. ஒரு மிகப் பெரிய பிரச்சினையை ஈசியா சால்வ் செய்ததற்கு, வந்தனா சொன்ன தாங்க்ஸ் பத்தாது. இன்று மெதுவடை சாப்பிட்டு விட்டீர்களா?
    நாளை வந்தனாவிடம் ட்ரீட் கேளுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. சுப்புதாத்தாவின் வலைப்பதிவினுள் புதுமையைக் கண்டேன்.

    //இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
    மலரே மௌனமா
    வார்த்தை தவறிவிட்டாய்
    பூக்களைத் தான் பறிக்காதீக .. காதலைத் தான் முறிக்காதீங்க....
    நான் பேச நினைப்பதெல்லாம்
    ராதே ஷ்யாம்.
    காதல் ஓவியம் பாடும் காவியம்.
    என்னென்ன சுகம் வருமோ !!
    வாழ்க வளமுடன். //

    மேலே உள்ள பாடல்களை க்ளிக் செய்து பார்த்தேன். வீடியோ பாடல்களைக் கண்டும் கேட்டும் ரசித்தேன்.

    // THE BEST WAY TO LOSE YOURSELF IS IN THE SERVICE OF OTHERS.//

    இதனுள் மகாத்மா காந்தியின் படம்.

    பதிலளிநீக்கு
  9. // இன்னிக்கு என்ன, என்னிக்குமே ப்ரீ தான். நானும் ப்ரீ, என்னுடைய சோதிட சர்வீசும் ப்ரீ. காசுதான் கிடையாதே , கேட்டுத்தான் பார்ப்போமே என்று என் நண்பர்கள் அவர்கள் சுற்றங்கள், உற்றங்கள், முக நூல் அறிமுகங்கள் அவ்வப்போது வீட்டுக்கு வருவது இப்போதெல்லாம் வழக்கமாக போய்விட்டது.//

    இந்த பதிவிற்குப் பிறகு உங்கள் வீட்டிற்கு வலைப்பதிவர்கள் விஜயம் அதிகம் இருக்கும். அடிக்கடி கார்கள் வந்து போகும். அக்கம் பக்கம் விசாரிப்பார்கள். வாழ்த்துக்கள்!

    நீங்கள் உங்கள் வீட்டு அம்மாளை செல்லமாகத் திட்டும் போதெல்லாம் பாக்கியம் – ராமஸ்வாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டி ஞாபகம் வருகிறது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பதிவர்கள் பலரும் ப்ரொபஷனல் வீடுகளுக்குத்தான் செல்வார்கள்.

      அங்கு தான் அவர்களுக்கு பிரச்னை, குழப்பங்கள் இவற்றிற்கு என்ன பரிஹாரம் என்றெல்லாம் சொல்லுவார்கள்.

      நானோ,
      செய்தீவினை இருக்க, தெய்வத்தை நொந்தக்கால்
      எய்த வருமோ இருநிதியம் - வையத்து
      அறும்பாவம் என்றுஅறிந்து அன்றுஇடார்க்கு இன்று
      வெறும்பானை பொங்குமோ மேல்



      வினைப்பயனை அனுபவிக்கத்தான் வேண்டும் எனச்சொல்லி, அதற்கான மனப்பக்குவத்தை ஏற்படுத்தும் கௌன்செலர்

      பரந்தாமனின் பாதங்களை நோக்கி பயணிக்கச்சொல்லும்
      சக பயணி.

      நீக்கு
  10. தாத்தா இங்கு வந்தேன். பதிவு ரெம்ப நீளமாக இருந்தது.
    பாதியல் நிறுத்திவிட்டுப் போகிறேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  11. தாத்தா இங்கு வந்தேன். பதிவு ரெம்ப நீளமாக இருந்தது.
    பாதியல் நிறுத்திவிட்டுப் போகிறேன்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்ன பாதியல் ?

      வேதியல், இயற்பியல், எல்லாம் சரி.

      நீக்கு
  12. அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்.


    அது போகட்டும், மெது வடை பார்க்கும்போதே....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அட்டகாஸம்! ஒரு நாலு எனக்கும் எடுத்து வையுங்கோ. வந்து கொண்டே இருக்கேன்:-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா. துளசி கோபால் வர்றாங்களா !

      அந்த அக்காரவடிசல், அந்த மெதுவடை, அந்த புளியோதரை
      அந்த அறுபதாம் ஆண்டு நிறைவு நாளன்று உண்டு மகிழ்ந்தது
      ஞாபகம் வருதே. ஞாபகம் வருதே..


      அவசியம் எங்கள் வீட்டுக்கு ம் வரவும்

      மீனாச்சி பாட்டி

      நீக்கு
  13. நடைமுறைகளுடன்
    அனுதின வாழ்வியலை
    பாடல்களுடன் கொடுத்தமை
    மிகவும் அழகு ஐயா...

    பதிலளிநீக்கு
  14. situationக்கு ஏத்த மாதிரி
    songsஅப்புறம் sayings
    நிஜமாவே super சார்

    பதிலளிநீக்கு
  15. அவரவர்கள் தேடிப்பார்த்துக் கொள்வதுதான் நாகரீகமாகிவிட்டதே. ரஸித்து ரஸித்துப் படித்தேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு.
    குழந்தைகள் இப்போது தங்கள் வாழ்க்கையை தேர்வு செய்வதில் வல்லவர் ஆகி விட்டார்கள், அதை அழகா வந்தானாவின் அப்பாவிடம் சொன்னதற்கு வந்தனாவின் நன்றி.

    பதிலளிநீக்கு