வெள்ளி, 6 டிசம்பர், 2013

மாறி வரும் உலகத்துலே...


காலம் ரொம்ப மாறிப்போச்சுங்க ...

 ஏன் அப்படி சொல்ற...?

 நம்ம காலத்துலே இருந்த மாதிரியா ஊர் உலகம் சனங்க இருக்குது ?

புரியல்லையே...

 என்ன இல்ல.. படிப்பு மாறிப்போச்சு . ஸ்கூலு எல்லாமே மாறிப்போச்சு.

எல்லாம் காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா  அப்படில்ல இருக்குது..

நீங்க படிச்ச மாதிரியா இப்ப இருக்குது ?

நான் என்னத்த படிச்சேன் ..?

அப்ப நீங்க ஒண்ணுமே படிக்கலையா... உங்க அம்மா என் புள்ள கிராஜுவேட் அப்படி எல்லாம் சொன்னாகளே ?  என்னாத்த தான் படிச்சீக..?

நான் உன்னை நினைச்சேன். பாட்டு படிச்சேன். 

அது தான் காமெடியா முடிஞ்சு போச்சுல்லே..இப்ப எதுக்கு அதெல்லாம் ?

அப்ப வேற என்ன மாறிப்போச்சு ?

இப்ப படிக்கிற புள்ளைங்க என்ன கொட்டம்  அடிக்கிராக..  பாடுறாக...படிச்சுபாத்தேன்...ஏறவில்ல    பாருங்க..


ஆமா.. அப்ப பசங்க வாத்தியார்  வராருன்னா  பயப்படுவாக.
 இப்ப வாத்தியார் அம்மா  பசங்களை பாத்து பயப்படுராக.. நமக்கு இன்னா அப்படின்னு ஒதுங்கி போயிடராக ....

 நம்ம பசங்க படிச்ச படிப்பு மட்டும் இல்ல. பாத்த வேலை மாறிப்போச்சு.நேரம் மாறிப்போச்சு.  ஆணுங்க பொண்ணுங்க அப்படின்னு வித்யாசம் இல்லாம் நைட் புல்லா வேலை பாக்குராங்கலாமே ...

அது அப்படி இல்ல மீனாச்சி.  இங்கன இருக்கறவங்க போன் மூலமா கம்ப்யுடர் வழியா அமெரிக்காவிலே இருக்கறவங்க ஆபீஸ் லே ஒர்க் பண்றாக. அவங்க டைம் வேற இல்லையா.  

அதுனாச்சும் கிடக்கட்டும். அப்பைக்கெல்லாம் பையன் வெளியூரா இருந்தா பொண் குடுக்கவே பயப்படுவாக இல்லையா.

இப்ப பையனுக்கு அமெரிக்காவிலே வேலையா , லண்டனிலே வேலையா, 
ஜெர்மனிலே செந்தேன் நிலவா ஹனி மூனா , அப்படின்னு இல்ல கேட்கராக 

அது மட்டும் இல்லீங்க..பொண்ணு வீட்டுக்காரங்க... கலியாணம் முடிஞ்ச கையோட பெத்த அம்மா அப்பாவை கூட மறக்கடிச்சுட்டு அங்கனவே செட்டில் ஆகிடராகளே...இன்னாத்த சொல்ல ? கீதா அம்மா புட்டு புட்டு வைக்கிறாங்க ...சரியா படிங்க..

மீனாச்சி, நீ போற ரூட் சரியா இல்லயே...

நான் சரியாத்தாங்க சொல்றேன்.
 கட்டற உடையும் மாறிப்போச்சுங்க..  அப்ப எல்லாம் பொண்ணுங்க.. சிறுசுங்க பாவாடை தாவணி போட்டு என்ன அழகு அழகா...

ஆமாம். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா அப்படின்னு கிரங்கிபோய் உருகுவாங்க,இல்ல. !!

. இப்பஎங்க பார்த்தாலும்  நீல ஜீன்ஸ், கருப்பு  பனியன் எங்க காலத்துலே இதெல்லாம் நாங்க நினைச்சுகூட பார்க்க முடியாதுங்க.. இப்ப இருக்கிற சுதந்திரம் எங்களுக்கு எல்லாம் கிடையாது இல்லையா.

.பொண்ணுங்க கர்நாடக சங்கீதம் மட்டுமில்ல, வெஸ்டர்ன்  பாட்டு சூபரா பாடுது.  இங்கே பாரு. அற்புதமா இப்படி ஒரு ராக் பாடல் 



ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி ஒரு தமிழ் நாட்டு பொண்ணு பாடும் அப்படின்னு கற்பனை கூட பண்ணி இருக்க முடியாதுல்லே... அப்படி பாடுதுங்க ..

  அதே சமயத்துலே  பாக்காதே..பாக்காதே  அந்த பாட்டும் நல்லாத்தானே இருக்கு. ..

  அது பூஜாவுங்க...அவங்க இந்த சூப்பர் சிங்கர் லே இல்லீங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க பைனல் வந்தவங்க. என்ன சூப்பர் ஆ பாடுறாக..

 அடே ஆமாம். சரிதான்.நீ சொல்றது  ... பாட்டு கூட இல்ல மாறிப்போச்சுல்ல 
அந்த படத்துலே ஒரு தமாசு கீது.  

!!! பாக்காதே பாக்காதே அப்படின்னு பாத்துகிட்டே சொல்றாக இல்ல. 

 இந்த அம்பது வருசத்துலே ஒரே பாட்டை எப்படி எல்லாம் மாத்தி பாடுறாக..

 அப்படியா..  அந்த மாதிரி ஒரு பாட்டை சாம்பிளுக்கு போடு பார்ப்போம்.

 இன்னாத்த சொல்ல
முதல்லே ஷபனா ஆஸ்மி பாடுராப்போல இங்க ஒரு பியூசன் பாட்டு
 தாயே யசோதா.  ராகம் தோடி.

 பாட்டு என்னவோ நல்லாத்தான் கீது. 
இருந்தாலும் அந்த ஒரிஜினல் யசோதா அம்மா இன்னிக்கு வந்தாக அப்படின்னு வச்சுக்க, ஓடிப்போய் விடுவாங்க.  அந்த மாதிரி ஒரு பயமாவும் கீது.


அப்ப  இதே பாட்டை சூப்பர் சிங்கர் லே அமெரிக்காவிலே வந்த பிரகதி
பாடி கேட்டு பாருங்க...

 நம்மை எல்லாம் பிரமிக்க வச்சுட்டாக அப்படின்னு தான் சொல்லணும்
 அதே தாயே யசோதா பாட்டு.   அதே தோடி ராகம்.

 இங்கன சுதா ரகுநாதன் முன்னாடி பாடி அவங்க கிட்டே என்னாம்மா அப்ளாஸ் வாங்குராக... யம்மாவ். !!!!

பாட்டு அதே தாங்க.  ராகமும் அதேதாங்க.

உண்மையை சொல்லப்போனா எங்க அம்மா 1920 லே பிறந்தவங்க.
 எனக்கு சொல்லிக்கொடுத்தது இது மாதிரி தான். நானும் தோடி ராகத்துலே மெட்டு போடனும் அப்படின்னா இப்படித்தான் போடுவேன். ..


சங்கீதம் அப்படியே தாங்க இருக்குது  அத வெளிப்படுத்தறது காலத்துக்கு காலம் மாறிக்கிட்டே போவுது.

இதெல்லாம் அப்படி தாங்க. மக்களோட ரசனைக்கு தகுந்தபடி மாறிக்கிட்டே தான் இருக்கும்.
ஆனா ஒரு விஷயம் மட்டும்  அடிப்படையிலே மாறவே மாறாது..

என்னங்க அந்த மனிதன் மாறவில்லை அப்படின்னு கண்ணதாசன் எழுதினாரே அதுவா ?

இல்ல..

அப்ப என்ன ?

அதை கொண்டு வா சொல்றேன்.

என்னங்க அது மாறாம இருக்கறதா ?  எத கொண்டு வர சொல்றீக...

அதான் மீனாச்சி.  இட்லி உப்புமா 
நேத்திக்கு செஞ்சு வெச்ச இட்லி .
அதுலே பத்து பதினைஞ்சு மிச்சம் அப்படின்னு சொன்னீல்ல..

ஆமாம்.

அத அப்படியே சின்ன வாணலி லே போடு. ஸ்டவ்வை லேசா பத்தவை. 
போட்டு ?

முதல்லே நல்ல எண்ணை இரண்டு ஸ்பூன் ஊத்து. பின்னே பெருங்காயம், கடுகு, ஒரு மிளகாய், கொஞ்சம் மஞ்சத்தூள் போடு...

போட்டு....

அந்த இட்லியை நல்லா உதிர்த்து அதுலே போட்டு, பொன் நிறமா வரும் வரை ப்ரை பண்ணு. அது தான் இட்லி உப்புமா 

உப்பு ?

ஆமாம். உப்பில்லா பண்டம் குப்பையிலே இல்லையா...
ஆனா இட்லியிலே உப்பு இருக்கும்.  அதுனாலே கொஞ்சமா போடு.

அப்பறம்.....????

அன்பே வா என் முன்பே வா அப்படின்னு பாடிக்கினே வா. 

அல்வாத்துண்டே வா சொல்லிகிட்டே நான் சாப்பிடறேன்.

என்னங்க சைலண்டா ஆகிட்டீக..

அந்த பாட்டிலேயே அமுங்கி போயிட்டேன்..

ரொம்ப நேரம் ஆயிடுச்சுங்க...நீயா நானா ஆரம்பிச்சுடுச்சுங்க...
இன்னிக்கு மட்டும் நீங்களே அந்த இட்லி உப்புவாவை பண்ணிடுங்களேன்.

என்னங்க..சொல்ல மறந்துட்டேன். முளை கட்டின பயிறு போட்ட
சைட் டிஷ் இன்னிக்கு ஸ்பெஷல் . ஸ்ப்ரௌட் மிசால் அப்படின்னு ஒரு டிஷ் இங்கன போய் பாருங்க... அதையும் செஞ்சுடுங்க.

இன்னிக்கு மட்டும் , இன்னிக்கு மட்டும் அப்படின்னு தினம் தினம் சொல்லிக்கிட்டு லே இருக்கே...

இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு ஒண்ணு அப்படின்னு இந்த மீனாச்சி எப்பவுமே கிடையாதுங்க..

நேக்கு தெரியும் மீனாச்சி. நீ ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்னாபோல..

அட...?  கோச்சடையான் பொங்கலுக்கு வரும் அப்படின்னு போட்டிருக்காக.. இப்பவே ரிசர்வ் பண்ணிடுங்க..

முதல்லே எப்ப கோச்சடையான் ஆடியோ வருதுன்னே தெரியல்லையே..

.உங்க ப்ரெண்ட் ஆவியைக் கேளுங்க..கரெக்டா சொல்லுவாரு. . செல்லை கொண்டு வரேன். நீங்க உப்புமாவை ரெடி பண்ணுங்க.. 

மாறி வரும் உலகத்துலே...???

இட்லி ஒன்றே நிரந்தரம்.

21 கருத்துகள்:

  1. படிக்க சுவையாக இருந்தது உங்கள் பதிவு

    பதிலளிநீக்கு
  2. பாட்டு சமையல்....ம்ம்ம்ம்ம்ம் அசத்துறீங்க போங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டுலே அப்பப்ப பாட்டும் நானே. பாவமும் நானே.

      நீக்கு
  3. ஹாஹாஹா! இன்றைய பெண்கள் குறித்து ஒரு பெண்ணே எழுதிய சுட்டி தரேன். ஆங்கில மூலம் கிடைக்கலை. தமிழ் மொழி பெயர்ப்பும் நல்லாவே இருக்கு! :))))

    http://deepaneha.blogspot.in/2013/12/blog-post.html

    இன்றைய நவநாகரிகப் பெண்மணியால் எழுதப்பட்டது தான். எத்தனை பெண்கள் இதை ஒத்துப்பாங்க??? :))))))

    பதிலளிநீக்கு
  4. இட்லி உப்புமாவா? பண்ணறதே இல்லை. இட்லி மிஞ்சவும் மிஞ்சாது. கரெக்டா எனக்கு நாலு, அவருக்கு நாலு. அதோட மாவை எடுத்து மறுபடி குளிர்சாதனப் பெட்டியிலே வைச்சுடுவேன். :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கு நாலு, அவருக்கும் நாலா ?

      ஒரு அஞ்சு போட்டால் என்ன ?

      சாம்பசிவம் சார், அஞ்சாமல் கேளுங்க ...

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. இட்லி உப்புமா சூப்பர் டிஷ்.. ட்ரை பண்ணிப்பாருங்க கீதா மேடம்..

      நீக்கு
  5. மிசல் தெரியும், மஹாராஷ்ட்ரா பிரபலம். மிசல் பாவ் இன்னும் பிரபலமான ஒண்ணு பாவ் வடா போல!

    பதிலளிநீக்கு
  6. ஆகா... ஆகா... சொல்லப்பட்ட பாடல்கள் அனைத்தும் விரும்பிக் கேட்பவை... அசத்துறீங்க (ஐயா)...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்து இருக்கிறதா அப்படின்னு தெரியவில்லையே !

      நீக்கு
  7. இட்லி உப்புமா அப்பப்போ செய்யறது உண்டு. நீங்கள் லிங்க் கொடுத்துள்ள பாடல்கள் அத்தனையும் தோடி ராக அடிப்படையில் அமைந்தவையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அந்த ஆங்கிள் வேற ஒன்னு இருக்கா ?

      இந்த பாடல்கள் எதற்கும் ( அந்த மூன்றைத் தவிர ) வேறு எதற்கும்
      தோடி ராகத்துக்கும் எந்த பிணைப்பும் இல்லை.

      இந்த பாடல்களுக்கும் இட்லி உப்புமாவுக்கும் தான் சற்று தொடர்பு இருப்பது போல் தோன்றியது.


      கே. பி. சுந்தராம்பா அம்மா. அநித்திய வாழ்வு தனிலே அப்படின்னு ஆறு கட்டை லே பாடும்போது இதற்கு மேல் பாட முடியுமா என்று யோசித்தது உண்டு. ராக் பாடல் பாடுகையில் அதற்கு மேலும் போகலாம் என்று தெரிகிறது. அந்தப் பெண் பாடும்போது சுப்ரானோ பிச் வருகிறது . அமர்க்களம்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. இசை பற்றி அதிகம் தெரியாது.. பாடல்களை ஒரு சாமான்யன் பார்வையில் ரசித்து ஸ்லாகிப்பது மட்டுமே நான் செய்வது.. ஆனாலும் "சுப்ரானோ", "விப்ராட்டோ" எல்லாம் நீங்கள் சொல்லும் போது புரிகிறது.. அந்தப் பொண்ணு நல்லாவே பாடியிருக்கு தாத்தா.. :)

      நீக்கு
  8. செவிக்குணவும் வயிற்றுக்குணவுமாய் அருமையாய் அமைந்த பதிவு!!....ரொம்ப நன்றி!!!..கீதாம்மா.. மிசல் பாவ் ரெசிபி தாங்க ப்ளீஸ்...

    பதிலளிநீக்கு
  9. இட்லி உப்புமாவை விடவும் மிக மிக சுவையான பதிவு.
    இந்தக் காலப் பெண்களின் நடை,உடை, பாவனை என்று அணித்தையும் அலசியிருக்கிறீர்கள். சுவை சேர்க்க அருமையான பாட்டுக்கள். சூப்பர் சுவை.

    பதிலளிநீக்கு
  10. இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டு ஐயா!..
    அன்றைக்கு - அல்வா!.. அடுத்தது - உப்புமா!..

    ஆக மொத்தத்தில் - சுவையோ சுவை!..

    பதிலளிநீக்கு
  11. ஐ.. என் பேவரைட் இட்லி உப்புமா.. நியாபக படுத்தீட்டீங்க.. உலகிலேயே எளிமையா செய்யக் கூடிய சுவையான டிஷ் இட்லி உப்புமாங்கிறது என் அசைக்க முடியாத நம்பிக்கை.. ஆவி'ஸ் கிச்சனுக்கு ஒரு ஐட்டம் ரெடி..

    பதிலளிநீக்கு
  12. தாத்தா பொங்கலுக்கு கோச்சடையான் ஆடியோ வரும் என்று எதிர்பார்க்கலாம்.. ;-)

    பதிலளிநீக்கு
  13. நல்ல சுவையான பதிவு.
    இடலி உப்புமா நல்லாயிருக்கு பாடல்களோடு.

    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல சுவையான பதிவு.
    இடலி உப்புமா நல்லாயிருக்கு பாடல்களோடு.

    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு