செவ்வாய், 30 செப்டம்பர், 2014

யாதுமாகி நின்றாய் எனக்கு கண்ணா

இளமதி அவர்கள் கண்ணன் கவிதை ஒன்றை மழை எனப் பொழிந்து இருக்கிரார்கள் அவர்கள் வலையிலே.
நவராத்திரி தினமான இன்று, இக்கவிதையை, நான்கு அல்லது ஐந்து மகளிர்
கொலு முன்னே நடனமாட அழகாக இருக்கும்.

அந்த காட்சியை கற்பனையில் கண்டு ரசித்தேன்.

இளமதி அவர்களின் நன்பர்கள் யாவரும் கானத்தை கண்ணனுடன் இணைந்து கேட்டிடவேண்டும். கண்ணன் புகழ் பாடிட வேண்டும். +ilayanila ilamathy

ilayanila16.blogspot.com

யாதும் ஆகி நின்றாய்.

 peacock kolam.
மயில் கோலம் ஒரு நிமிடத்தில் போடுவது மயில் ஆடுவது போல பிரமிக்கச் செய்கிறது.
திருமதி பக்கங்கள் என்னும் வலைப்பதிவில் 
பாரதியின் பாடல்கள்
இலக்குமி, காளி, வாணி மூன்று தேவியரின் பாடல்களும் இடப்பட்டு உள்ளன.
மயிலை சாந்தநாயகி                                                              நன்றி. 

படம் திருமதி பக்கங்கள். வலை

அந்த முதல் இரண்டு பாடல்களை யாரும் பாடி நான் இதுவரை கேட்டதில்லை.

என்ன செய்வது ? என யோசித்தேன். சரி, நானே பாடிவிடுகிறேன், யாரும் கேட்காவிட்டாலும்  பரவாயில்லை.

இதை விட அற்புதமான துதி எங்கே இனி பாடப்போகிறோம் என நினைத்தேன்.


யாதும் ஆகி நின்றாய். எங்கும் நீ நிறைந்தாய்
என்ற பாடல் சுதா ரகுநாதன் அவர்கள்
ரேவதி ராகத்தில் பாடுகிறார்கள்.


ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஞாயிறு கொலு

ஞாயிறு கொலு
இலக்குமி வழிபாடு.
எங்களுக்கு பாக்யத்தை, வளத்தை வழங்கு, தாயே
என பாடல்.
எல்லோருக்கும் தெரிந்த பாடல்.
பிட்ச்ச்பார்க் கோவில் பின்னணியில்
Dr.M.S.Subbulakshmi bhagyadha Lakshmi baramma.

சனி, 27 செப்டம்பர், 2014

தில்லையகத்து க்ரானிகல்ஸ் துளசிதரன் அவர்கள். அவங்களுக்கு ஜே போடுவோம்.


+Thulasidharan thillaiakathu
 
அவங்க பெரிய மனசு வச்சு, என்னையும் அதாவது 73 வயசான இந்த கிழவனையும்  ஒரு பொருட்டா மதிச்சு,

இந்த வலைப்பதிவிலே என்னைப்பத்தி ,
இல்ல,
என் பதிவுகளைப் பத்தி
எழுதியிருக்காக,

என்ன வலைப்பதிவா?

சீனா என அன்புடன் எல்லோரும் கூப்பிடும்,
சிதம்பரம் சாரு ஆசிரியர் ஆ இருக்கும்,
வலைச்சரம். 

அங்கன வாரத்துக்கு ஒரு ஆசிரியர்.

இந்த வாரத்துக்கு தில்லையகத்து க்ரானிகல்ஸ்
துளசிதரன் அவர்கள்.

அவங்களுக்கு ஜே போடுவோம்.

நீவிர் நீடூழி வாழ்க.


துளசிதளம் என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல். அதை இட்டு அதை அவங்களுக்கு டெடிகேட் செய்வோம்.