புதன், 30 ஏப்ரல், 2014

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!

செல்லப்பா சார் தன்னுடைய வலையிலே  இந்தக் காலத்து கலாச்சாரத்தைப் பற்றி எழுதி  இருந்தார்.கொஞ்சம் என்ன ரொம்பவே  வருத்தப்பட்டு தான் எழுதி இருந்தாப்போல...   
+Chellappa Yagyaswamy  அதுக்கு நிறைய பின்னூட்டங்கள். அது படித்துக்கொண்டு வரும்போது ஒரு சத்தம் கேட்டது.  செல்லைப்  பார்த்தேன்.ஒரு மெசேஜ் வந்திருக்கு.  யார் என்று பார்த்தேன். அட. செல்லப்பா  சார் தான் போன் செய்து  இருக்கிறார்.

திடீர் என்று நினைவு வந்து, வீட்டின் டி.வி. ரூம் நோக்கி கத்தினேன். அங்கே தான் என்  வீட்டுக்காரி, தினசரி மாலை 5.59 முதல் இரவு 11.01 வரை சங்கமம். 

மீனாட்சி, நம்ம ப்ரண்ட் செல்லப்பா சார் புத்தகம் முழுக்க படிச்சுட்டயா ? அவர் வர ஞாயிறு வந்தாலும்  வருவார்.

கொச்சடயான் படத்துக்கு நமக்கும் சேர்த்து பர்ஸ்ட் ஷோ ரிசர்வ் பண்ண உங்க ப்ரண்ட் ஆவிக்கு  செல் .போடுங்க..

மணப்பெண்ணின் சத்தியம் பாட்டு தியேட்டர்லே கேட்கணும். சாரங்க ராகம் அதுலே வருது சூப்பர். 

அது  இருக்கட்டும். நான் "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " படிச்சு முடிச்சாச்சா அப்படின்னு கேட்டேன்.

நேத்திக்கே வெண்டை காய் சாம்பார் பண்ணியாச்சே. என்றாள்.

என்னது சாம்பார் ஆ ? அந்தக் கால ஜெமினி கணேசன் சமாசரமாச்சே

என்று வியந்தபோது, 

ஜூனியர் கிச்சன் போட்டி லே இன்னிக்கு போண்டா ... என்றாள் இவள்.

ஏண்டா இவகிட்ட பேசுறோம் என்று இருந்தது.  ஒரு வேளை நாம் பேசுவது கேட்கவில்லை போல்  இருக்கிறது. இ. என். தி. ப்ராப்ளமா இருக்குமோ, இருக்காது.  டி.வி.லே கான்சென்ட்ரேசன் போல இருக்கு. 
இப்ப கருத்தம்மாவிலே ரொம்ப முக்கியமான சீன் .   இது முடிஞ்சு,  பின்னே,தெய்வம் தந்த வீடு, புதுக்கவிதை, சரவணன் மீனாச்சி, சூப்பர் ஜூனியர் சிங்கர் என்று காலம் தாழ்த்தினால், எனக்கு என்ன கேட்கனும் அப்படின்னே மறந்து போயிடும் .

மீனாட்சி !! அதெல்லாம்  கேட்கல்ல. தாத்தா தோட்டத்து... என்று ஆரம்பித்தேன்.

உங்க பெங்களூர் பி.ஹெச். இ. எல். தாத்தா கதை இன்னமும் முடிக்கல்ல..

இவ ஒரு வேளை ஜி.  எம்.பி. சார் கொடுத்துட்டு போன புத்தகத்தைப் பத்தி பேசுகிறாளோ  என்று தோன்றியது.

அந்த புத்தகம் படிச்சாச்சா ஒன்னு இரண்டு கதையாச்சும் ?

வடிவேலு  காபி வித் டி. டி. சூப்பர் என்றாள்.

யாரு டி. டி. ? நம்ம திண்டுக்கல் தனபாலன் சாரா ?
+Dindigul Dhanabalan
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா ....

என்ன இது ? நம்ம கேட்டதும் இவ பதில் கொடுப்பதும் ஒன்னுக்கொன்னு சரியில்லையே. ? என்ன கோபமோ தெரியல்லையே. இன்னிக்கு நான் முழிச்ச வேளையே சரியிலையே !!

என்று நினைத்துக்கொண்டு

இருந்தாலும் இவளை, கொஞ்சம் விட்டுத் தான் புடிக்கணும் .
துணிவே துணை. என்று மனதில் சபதம் இட்டுக்கொண்டு,


யார் ஜட்ஜ் மகாஜன் சாரா ?

அந்த மைலாபூர் மாமி பழைய நினைவுகள் எல்லாம் எழுதிட்டு வராங்க..நீங்க படிக்கலையா? அந்த குழ்ந்தை லாப் டாப் லே என்ன ஒரு அழகு !! என்று முறுவலித்தாள்
+revathi narasimhan
நான் விடவில்லை.

யாரு லஸ் சர்ச் ரோடிலே இருக்காங்களே அவங்களா ?

மாந்துரையான் பத்தி வை.கோ. மாமா சொன்னது தான்  சரி.
+Gopalakrishnan Vai.
என்னவோ இவளுக்கு ஆயிடுத்து.   பூச்சி கடி, தேளு கடி, பாம்பு கடிக்கெல்லாம் ஷஷ்டியை நோக்கி சரவண பவனார் சொல்லும் வானபட்டரை மாரியம்மன் ஆத்தா அர்ச்சகர் ஸ்ரீ வித்யா உபாசகர்,  கிட்ட சொல்லி,
இதுக்கெல்லாம் ஒரு சொலுஷன் இருக்கான்னு கேட்கலாம் என்று நினைத்துக்கொண்டபோது 
சங்கரா டி.வி. லே ஒரு அட்வர்டைஸ்மென்ட் வருது. 

ஆண்டவா, கொஞ்சம் சீக்கிரமா வா எனக்கு உசிரே போகுது என்று சகல தேவதா தேவிகளையும் பாராயணம் செய்து கொண்டு, அதே சமயம், 
மனுஷ்ய ப்ரயத்னத்தையும் விட்டு விடக்கூடாது என்ற வசனம் இருக்கிறபடியால்,

இங்கே பாரு, மீனாச்சி.. எனக்கு பொறுமை அவுட் என்று இரைந்தேன்.

என்ன அவுட் ? .. என்று பதில்  வந்தது.
அதைத் தொடர்ந்து,
அடடே .. நானும்  அவுட். out என்றாள்.

என்ன அவுட் ?  அதான் வர்டிகலா இருக்கியே. அப்பறம் என்ன அவுட் ?
என்று     
 னேன்.


அத சொல்லலே.
விஜய் டி.வி. லே. அது இது எது நடக்குதுல்லே..

 ஆமாம்.

அதுலே மாத்தி யோசி அப்படின்னு ஒரு நிகழ்ச்சி.

ஆமாம். என்ன  கேட்டாலும்,அதற்கு மாறாக வேற எதுனாச்சும் சொல்லணும்.
அதத்தானே  சொல்றே.

ஆமாம். நான் ஒரு நாளைக்கு போய் கலந்துக்கலாம் அப்படின்னு நினைச்சேன்.
அது தான் இப்ப ஒரு ரிகர்சல் பண்ணிப் பார்த்தேன்.
ஆனா தோற்று போய் விட்டேனே !!

அப்ப நான் ஜெயிச்சுட்டேனா..?

அடையார் ஆனந்த பவனில் அல்வா சாப்பிட்டது மாதிரி ஒரு பீலிங் 

இந்த சந்தோசம் எத்தனை தடவை கிடைக்கும் !!

எனக்குக் கிடைத்தது போல் எல்லோருக்கும் 
அட்சய திருதீயை நல்ல நாளன்று, தங்கம் வேண்டாம், வைரம் வேண்டாம். நவரத்னங்களும் வேண்டாம். 

அட் லீஸ்ட் லைப் லே ஒரு நாளாச்சும் இந்த கணவன் மார்கள் ஜெயிப்பதற்கு அருள் செய்யம்மா 
என்று கன்னத்திலே போட்டுக்கொண்டு 

தஞ்சாவூர் பிரண்டு துரை செல்வராஜ் அவர்கள் வலையிலே நான் பார்க்கும் 

+துரை செல்வராஜூ

சந்திர கலாதரி, சந்திர ஜடாக்ஷரி, மஹாலக்ஷ்மி, தேவி  எல்லார் முன்னால் மானசீகமா உட்கார்ந்து கொண்டு  பாட துவங்கினேன். 

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!



ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

நினைச்சது கிடைக்கல அப்படின்னா

கையில் பையை எடுத்துக்கொண்டு கழுத்தில் செல் தொங்குகிறதா என்று கவனமாக பார்த்துக்கொண்டு ,

செருப்புகளை சரியாகத்தான் போட்டுக்கொள்கிறேனா என்று கவனித்துக்கொண்டு,

வாசல் கதவை திறக்கும்போது,
இவள் குரல் கொடுக்கிறாள்.

என்னங்க ?

என்ன சொல்லப்போகிறாய் என்று கேட்கலாம் என்று நினைத்தேன். கேட்கவில்லை. அது தான் டி.வி. லே பாடிக்கொண்டு இருக்கிறதே !!



 எங்கே போறீங்க அப்படின்னு கேட்க கூடாது அப்படின்னு தெரியுமில்ல..

தெரியுமே..

அப்ப ஏன் நான் எங்க போறீங்க அப்படின்னு கேட்கணும் னு எதிர் பார்க்கிறீக ?

நானா !! இல்லையே எதிர்பார்க்கவில்லையே..

அப்ப எங்க போறீக அப்படின்னு சொல்ல மாட்டீக ... நானும் கேட்க கூடாது.

இல்லயே நீ கேட்கலாமே...?

நான் கேட்டுத்தான் சொல்வீகளா ?  எல்லா விஷயத்தையும் அப்படித்தான் இந்த ஊட்டுலே இருக்குதா என்ன ?

சர்தான்.  இன்னிக்கு ஆரம்பிச்சுட்டாய்யா...

எங்க போறேன்னு சொல்லணும் அப்படித்தானே..

பொய் சொல்லகூடாது பாப்பா... என்றது டி.வி.


என்ன பாக்கறீங்க ?

ஒன்னுமில்லையே...

என்ன ஒன்னுமில்லையே.. நீங்க பாத்தது பார்க்கப்போறது எல்லாம் நான் என்னான்னு பார்த்துட்டேன்.

ஐயையோ...   ? நான் அந்த வூட்டு அம்மா அனுப்பியிருந்த ஜாதகத்தை தான் பார்க்கலாம் அப்படின்னு போயிட்டு இருக்கேன்.

அதத்தான் நானும் சொல்றேன்.

பார்க்காதே ..பார்க்காதே... பார்க்காதே...




எதுக்கு அப்படி நல்ல காரியத்துக்கு போகும்போது அபசகுனமா சொல்றே ?
என்றேன் .

சொல்லிட்டேன். இந்த ஜாதகம் எல்லாம் சரிப்பட்டு வராது. 

என்னது ?

அதான்.  அப்படித்தான். 

எப்படி ?

நான் சொல்றேன் இல்ல.  அந்த அம்மா வந்து கேட்டா ஜாதகம் பொருத்தம் இல்ல. அப்படின்னு சொல்லிப்போடுக. 

அப்ப அடுத்த வாரத்துலே இன்னொரு சாதகம் கொண்டு வருவாங்க இல்லையா ?

அதுக்கும் அப்படியே சொல்லுங்க...

எத்தனை நாளைக்கு சொல்றது ?

நீங்க என்ன காசு வாங்கிண்டு சொல்றீகளா ? இல்லை இல்லையா.  பொய் சொன்னா பரவா இல்லை. 

ஏன் பொய் சொன்னா பாவம் இல்லையா ?

ஆயிரம் பொய் சொல்லியும் கல்யாணம் பண்ணலாம். தப்பில்லை.  

நீ அதுக்காக ஜாதகம் பொருத்தம் இல்ல அப்படின்னு பொய் சொல்லிட்டு இருந்தா ..  எத்தனை நாளைக்கு ஓடும் ?

ஒடரவரைக்கும் ஓடட்டும். 

எதுக்காக இப்படி சொல்ற.?

நான் சொல்றபடி செய்யுங்க.   பொண் பாவம் பொல்லாது. 

ஏதோ புரிந்தால் போல் இருந்தது.

காந்தர்வம், கர்ப்ப நிச்சிதம், இதுக்கெல்லாம் ஜாதகம் கிடையாது அப்படின்னு நீங்க தானே சொல்லி இருக்கீக.. 


புரியுது. என்றேன்.
இவ  போன வாரம் பார்க்கிலே அந்த பொண்ணோட மணிக் கணக்கா பேசிக்கொண்டு இருந்தது வெள்ளை கருப்பா மனசுலே வந்து வந்து போனது.

என்ன புரியுது.?..

ஒரு மாதம் கழிந்தது.
பெண்ணின் தகப்பனார் வந்தார்.
எனக்கு சட்டுன்னு யார் என்று புரியவில்லை.

"நான் தான் அந்த பொண்ணோட அப்பா. என் மனைவி உங்ககிட்டே வந்து
என் பொண்ணோட ஜாதக பொருத்தம் கேட்பாளே.. ஞாபகம் இருக்கா..'/

நினைவு வந்தது.  அந்த பொண்ணோட அப்பாவா ?  இந்த தடவை இவர் ஒருவேளை ஜாதகம் எடுத்துண்டு வந்திருப்பார் என்று நினைத்தேன்.

ஒரு ஜாதகம் தான் தந்தார். அது அவர் பெண் ஜாதகம்.

பையன் ஜாதகம் ?

"அது அப்படி ஒன்னும் இல்ல.  ஒரு சந்தேகம். அதுனாலே தான் வந்தேன்.

'என்றார்.

என்ன ?

இவளுக்கு விவாஹம் இப்படித்தான் நடக்குமோ ?
வந்தவர் கேட்டார்.

இவர் என் கிட்டே முதல் லேயே அத சொல்லிட்டார்.  சுபஸ்ய சீக்ரம். 
சீக்கிரம் நீங்களே முன்னே நின்னு முடிச்சு வையுங்கோ.

என்றாள் என் தர்ம பத்னி.

இது கடவுள் அமைத்து வைத்த மேடை சார். என்றேன்.

புரியல்ல என்றார்.


இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்தாரே தேவன் அன்று    

வாசலில் மணி அடித்தது. 

எழுந்து போய் திறந்தேன். 

பூ அம்மா .  ரோஸ் , மல்லிகை , முல்லை எல்லாமே இருக்கு என்றாள் பூ விற்கும் பெண்.

ஜாதி இல்லையா ? என்றாள் மனைவி. 

அதுக்கு இப்ப சீசன் இல்லைம்மா. என்றாள் வந்த பெண். 

நினைச்சது கிடைக்கல அப்படின்னா, கிடைச்சத நினைச்சுக்க கத்துக்கணும் என்றேன். எதோ ஒரு தத்துவம் சொன்ன பெருமிதத்துடன் வந்தவரை பார்த்தேன்
வாடின மாதிரி இருக்கே என்றாள் என் மனைவி. 

வெய்யில் இல்ல ? வாடறதுக்கு முன்னாடி வச்சுக்க அம்மா 
என்றாள் பூக்காரி. 

புரிஞ்சுண்டேன் என்று எழுந்தார் பெண்ணைப் பெற்றவர். 

**************************************************************************


"There may be flaws in any action, any situation or any person. Treat a flaw as you would treat a flower. Just as a flower has to wither away after sometime, so does a flaw. "

+Sri Sri Ravi Shankar