ஞாயிறு, 5 டிசம்பர், 2021

சுந்தர காண்ட 46 வது சர்கம் . 

அனுமனை பிடித்துக்கொண்டு வருமாறு இராவணன் கட்டளை ஏற்று ஐந்து சேனாதிபதிகள் புறப்பட்டு, 

எல்லாப்படைகளையும் திரட்டிக்கொண்டு, பல்வேறு ஆயுதங்களுடன் புறப்பட்டு அனுமனை , ர்க்கும், போரிடும், இறுதியில் மரணமடையும் கட்டம். 

விரூபாக்ஷன், பூபாக்ஷன், துர்த்தரன், பிரக்சன் , பாசகர்ணன், ஆகிய ஐவர் . 

இவர்கள் புறப்படும்போது,   ராவணன் அவர்களுக்கு சொல்லுவது எல்லாம் இன்றும் போர் நடக்கும் இடத்திலே எப்படி, எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை துல்லியமாக 

எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.  

எதிரியின் பலத்தை அறிந்து செயல்படவேண்டும் ...அவனுடைய உருவைக்கண்டு அல்ல, அவனுடைய அவ்வப்போதைய செயல்களுக்குத் தக்கவகையிலே போர் முறைகளையும் மாற்றி அமைக்கவேண்டும்,  போரில் ஜயம் , வெற்றி என்பது நிரந்தரமல்ல.   ஒரு பொது வெற்றி போல தோன்றும். அடுத்த கணம் அதுவே தோல்விக்கு வித்தாக இருக்க கூடும்.  ஆக, காலம், இடம், தெரிந்து வானரத்தின் அவ்வப்போதைய திறனுக்கு ஏற்றபடி செயல்பட்டு, அவனை பிடித்து வருக....என்று சொல்கிறார் ராவணன். 

அதை ஏற்று சென்ற ஐவரும் அனுமனை கண்டு அவனது அப்போதைய சிறிய வடிவைக்கண்டு வியக்கிடீ=றார்களாம். 

இந்த சின்ன குரங்கா இத்துணை அழிவை தருகிறது என எண்ணி, பல்வேறு பானங்களினால் அனுமனை தாக்க 

அனுமனும் காயப்பட்டு, சினம் கொண்டு மிகப்பெரிய உருவெடுத்து க்ரீச் என்ற ஒலியுடன் ஆகாயத்தை நோக்கி செல்ல, 

அங்கேயும், துறித்தரன் நூற்றுக்கணாக்கான அம்புகளால் அனுமனை அடிக்க, அனுமன் , 

மழைக்காலத்தே, எப்படி மேகங்கள் சூறைக்காற்றால் சின்னா பின்னா படுத்தப்பட்டு, சிதறப்படுமோ , அந்த அம்புகளை சிதறடித்துப்பின்னே 

தன உடலை இன்னுமே பெரிதாக்கிக்கொண்டு, ஒரு  பெரிய மலை போல தன்னை ஆக்கிக்கொண்டு, 

ஒரு கணத்தில் துர்த்தரன் தேரில் மேல் குதிக்க, 

அரக்கன் அந்த தேருடனே தானும் தவிடு பொடியானான்.  என்று வால்மீகி சொல்கிறார். 

இது போலவே மற்ற அரக்கர்களும் ஒருவர் பின் ஒருவராக போர் செய்து மடிந்து போகின்றனர். . கடைசியாக இருந்த இரு அரக்கர்களையும் ஒரு மலைதனை அப்படியே பிடுங்கி எடுத்து அதனை அவர்கள் மேலே அழுத்த அவர்கள் மடிகிறார்கள். யுத்தம் முடிகிறது. 

அந்த  பூமி செந்நிறமாக காட்சி அளிக்கிறது. உடல்களால் அடைக்கப்பட்டு இருக்கிறது. என்று வர்ணிக்கப்படுகிறது. 

அடுத்து யார் வருவாரோ...அவருக்காக, காத்திருப்போம், அதுவரை சற்று இளைப்பாறுவோம் என்று தோரண வாயிலை அடைகிறார் அனுமன்.  இளைப்பாறுவோம் என்று 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக