புதன், 11 டிசம்பர், 2013

தாத்தா.. தாங்க்ஸ்

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே  

இன்னாம்மா இப்படி மனசு குஷியா இருக்கு ?
அப்படின்னு ஊட்டுக்காரி கிழவியை உசுப்பேத்தலாம்  என்று ஒரு கணம் நினைத்தேன்.

 ஆனால், அவளுக்கு மூட் சரியா இல்லையா என எனக்குத் தெரியவில்லை.
சைலண்டா இருக்கிறாள். 

 .மலரே மௌனமா 

அப்படின்னு கேட்க வாய் எடுத்தேன். ஊ ஹூம் அதுவும் வேண்டாம். 
 நான் எதோ கேட்க அவள் ஏதோ புரிஞ்சுண்டு அது வேறு புதுசா வம்பில் மாட்டிக்கொள்ள சுப்பு தாத்தா இன்னிக்கு நாட் ரெடி.

    இன்னிக்கு கண்டிப்பா மெது வடை பண்ணித் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறாள் 
 ஏதாவது சொல்லி மெது வடை கான்சல் ஆகிவிடுமே என்ற பயம் தொத்திக்கொண்டது. 
 இன்னிக்காவது let better wisdom prevail.
GO WITH THE WIND . 

வார்த்தை தவறிவிட்டால் என்ற பாட்டு திரும்பவும்  பாடக்கூடாதே.  என்னடி மீனாச்சி, மெது வடை என்னாச்சி  
Add caption

காலைலேந்து நாலு போன் கால். ஒவ்வொரு தடவையும் பேரப் பசங்க கிட்டேந்து தான் வந்திருக்கும் அப்படின்னு ஆவலுடன் எடுத்தா...

" சார், இன்னிக்கு நீங்க  ப்ரீயா இருந்தா நான் வரவா சார் " என்று அந்தப்பக்கத்திலேந்து குரல்.

இன்னிக்கு என்ன, என்னிக்குமே ப்ரீ தான். நானும் ப்ரீ, என்னுடைய சோதிட சர்வீசும் ப்ரீ. 

 காசுதான் கிடையாதே , கேட்டுத்தான் பார்ப்போமே என்று என் நண்பர்கள் அவர்கள் சுற்றங்கள், உற்றங்கள், முக நூல் அறிமுகங்கள் அவ்வப்போது வீட்டுக்கு வருவது இப்போதெல்லாம் வழக்கமாக போய்விட்டது.  

அதற்காக பிரசவத்துக்கு இலவசம் என்று போர்டு போட்டுக்கொள்வதும் இல்லை. நான் ஒரு ப்ரொபஷனல் இல்லை.ஒரு ப்யூர் அண்ட் சிம்பிள் அகடமிஷியன்.

      வருபவர்களுக்கு நான் ஏதோ இலவசமாக சேவை செய்கிறோம் என்ற எண்ணம்  இல்லை. சொல்லப்போனால், அவர்கள் தான் என்னை கீப் மீ எங்கேஜ்டு THE BEST WAY TO LOSE YOURSELF IS IN THE SERVICE OF OTHERS. மன உலைச்சல்களில் அவதி உறும் நண்பர்களுடன் அளவளாவுதல், அவர்களுடைய பிரச்னைகளை அப்ஜெக்டிவ்வாக அசெஸ் செய்யமுடிகிறது. இந்த வாய்ப்பு .காசில்லாத LEARNING EXERCISE..மற்றவர்கள் துன்பங்களில் பங்கு கொள்ளும்போது நம் துன்பம் (அப்படி ஒன்று இருந்தாலும் ) மறைந்து போகிரது. 

 
வாசல் பெல் அடித்தது.      காலை 10 மணிக்கே வருவதாகச் சொன்னவர் 9.30 க்கு வந்துவிட்டார்.

வந்தவர் எனது பழைய நண்பரின் first son . வந்தவரை ஒரு நாற்பது  வருடம் கழித்து பார்க்கிறேன். இன்னும் ஐம்பதை  தாண்டி இருக்கமாட்டார் என்று தோன்றியது . இருந்தாலும் தலை பாதி நிரை . கையில் புதுசா  பிங்க் கலர் பை. தி.நகர். எல்.கே.எஸ்.கிப்ட்.  
           நான் நரசிம்மன். உங்களை,  ... நான் சின்ன பையனா இருந்தபோது தஞ்சாவூருலே பார்த்தது. அப்பறம் பார்த்தது இல்லே.  நாப்பது  வருஷம் இருக்கும் நாங்க தஞ்சாவூரை விட்டு இங்கு வந்தது..
         இருக்கும். முதல்லே உட்காருங்கோ..
             
அப்பா தான் சொன்னார்.   சூரி கிட்டே சொல்லு எதுனாச்சும் சொல்யுசன் கிடைக்கும்  அப்படின்னு சொன்னார்.
ஒரு அஞ்சு நிமிஷம் தான்.உங்களை ரொம்ப சிரம படுத்த மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே  அங்கிருந்த  ஈசி சேரில் உட்கார்ந்தார். புதுசா இருந்தது கைப்பை.

 அதில் இருந்து ஒரு பழைய நோட் புத்தகத்தை திறந்து  ஒரு பக்கத்தை எடுத்தார். என்னிடம் நீட்டினார். .  

பர்ஸ்ட் ,ஒரு  காபி ஸ்ட்ராங்கா சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு, மீனாச்சி என்று உள்ளே கிச்சன்  பக்கம் கண்ணிட்டேன்.

பார்க்கப்போனா..வேண்டாம். அப்படின்னு சொல்லணும் தான்  சார். ஆனா உங்க வீட்டு காபி ரொம்ப நன்றாக இருக்கும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்வார்.

அதற்குள் காபி வந்து விட்டது.

எனக்கு சக்கரை அதிகம் கூடாது என்று ஒன்று மில்லை என்றார். என்னைப் பார்த்தார்.

நீங்க ? என்றார் .
என் மனைவியைப் பார்த்தார்.

அவர் இப்பத்தான் இரண்டாவது காபி சாப்பிட்டார். நீங்கள்  சாப்பிடுங்கள் என்றாள் என் இல்லக்கிழத்தி.

மாமி,
நான் சௌண்ட் எஞ்சினியர்.
உங்காத்து  மாமாவோட அத்யந்த பிரண்டு ராமனோட செகண்ட் ஸன். இது   என்னோட மூத்த பெண் வந்தனா ஜாதகம். . போன வருஷம்  ஐ.ஐ.டி லே டிஸ்டிங்கஷன் .. ரிசல்டு வரத்துக்கு முன்னாடியே காம்பஸ் செலக்சன் ஆகிடுத்து.

ஆமாம். இப்ப எல்லாம் அந்தக் காலம்  இல்லையே .படிச்சுட்டு வேலை கிடைக்குமா கிடைக்காதா அப்படின்னு கவலைப்படரதுக்கு.!! ஐ.ஐ.டி. லே படிச்ச இரண்டு பேருக்கு ஒரு கோடி offer வந்து இருக்காமே !! 

நம்ம செலக்ட் பண்றதுக்கு அப்படின்னு இப்ப இல்ல. முன்னாடியே தானாவே செலேக்சன் ஆகிடறது.  பொண்ணு புத்திசாலியாவும் இருந்து லக்கியாவும் இருக்கறது கிரேட். என்கிறாள் என் மனைவி. 

நீயா நானா பார்க்க ஆரம்பிச்ச பின்னே  இவள் , கோபிநாத் மாதிரி ஈரெட்டா  but இண்டெலிஜெண்டா பேச கத்துண்டு இருக்காள்.. காலரை தூக்கிவிட்டுக்கொள்ள சட்டைக்குபின்னால் கையைக் கொண்டு போனேன்,. சட்டையே போட்டுக்கவில்லை என்று தெரிந்தது.  


அவ ஜாதகம் எப்படி இருக்கிறது  அப்படின்னு தெரிஞ்சுண்டு போக வந்தேன் என்று என் மனைவியைப் பார்த்து சொன்னார்.

சரிதான். ஒரு அர்த்தத்தோட இவள் என்னை பார்த்தாள்.

இந்தக்கிழத்துக்கு இன்னிக்கு வேலை கிடைச்சாச்சு.என்று மனசுக்குள் அசை போட்டுக்கொண்டு இருப்பாள். எனக்குத் தெரியும்.
ஆனா, சத்தமா, 

பகவான் அவரவர்க்கு அப்படின்னு ஒரு முடிச்சு போட்டு இருப்பான். பெத்தவாளுக்கு இப்ப எல்லாம் அதிகமா கவலை குழந்தைகள் வைக்கிறதில்லை..என்று ஆரம்பித்தாள்.

வந்தவர் கிழவி கமெண்டை ரசித்தாற்போல் இல்லை.

நீங்க பாத்து சொல்லுங்க சார். என்றார் வந்தவர் காபியை ஒரு மடக் குடித்தவாரே ..

சக்கரை போதுமா சொல்லுங்கள் என்றாள் என் மனைவி.

காபிலே சரியாத்தான் இருக்கு.  எதுலே இருக்கணுமே அதுலே இல்லையே என சன்னமாக அவர் சொன்னது விழுந்தது.

ஜாதகத்தை பார்த்த எனக்கு உடன் பெண்ணின் வயது தான் கண்ணில் பட்டது. வயது 23  அல்லது 24 தான் பெண்ணுக்கு இருக்கும். திருமணம் குறித்து தான் வந்திருகார்  . ஆனால்,  இந்தக் காலத்துலே பெண்ணைப் பெற்றவர்கள்  பெண் ஒரு வேலையிலே இரண்டு மூன்று வருஷம் ஆகி செட்டில் ஆனபிறகு தானே அடுத்ததை பற்றி யோசனை பண்ணுகிறார்கள். ..என் மனசு இன்னொரு ட்ராக்கில் ஓடியது .

சட் என்று  அவர்  கண்களை கூர்ந்தேன்.

நான் ஒண்ணுமே சொல்லல்ல.  இன் பாக்ட் , சொல்லும்படியாவும் இல்ல.  நீங்களே எல்லாம் பாத்து சொல்லுங்கோ என்கிறார்.

முதல்லே காபியை குடிங்க.. அப்பறம் இவர் எல்லாத்துக்கும் சொல்வார். கவலைப் படாதீர்கள். பெருமாள் பார்த்துப்பார் எல்லாத்தையும் என்றாள் இவள்.

பெருமாள் பார்த்துப்பார் என்று தானே  நினைச்சுண்டு இருந்தோம் நானும் அவளும். ஆனா, இவ...என்று ஏதோ துவங்கி நாக்கைக் கடித்துக்கொண்டு நிறுத்தி...

பத்து செகண்டு கழித்து

அந்த எப்.எம். ரேடியோ சத்தமா இருக்கிறது போல் இல்லை ?
என்றார் வந்தவர்.
இங்கிதம் தெரிந்த என் வீட்டுக் கிழவி சத்தமில்லாமல் அங்கிருந்து நழுவினாள் .

அந்த ரேடியோவில் ஏதோ சங்கீதம் ,SO BLARING.
 இந்தக்காலத்து நபர்களுக்கு அந்த காலத்து ஓல்டு இஸ் கோல்டு ப்ரோக்ராம்.

மறுபடியும் ஜாதகத்தில் கண்ணை திருப்பினேன். அஞ்சு நிமிஷம் அமைதி.
ஜாதகம் நன்றாகத்தான் இருந்தது. அதில் எந்த வித குறையும் இருப்பதாகப் படவில்லை.

ஒண்ணும் பிரச்னை இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே...என்று இழுத்தேன்.

இருக்கே... என்று அவர் இழுத்தார்.

நரசிம்மன்  ! எனக்கு தெரிஞ்ச விதத்தில்  ஜாதகம் நன்றாகத்தான் இருக்கிறது. பார்க்கப்போனால் குரு பலன் வர நேரம். பெருமாள் அனுக்ரஹம் பண்ணினால் சீக்கிரமே எனக்கு கல்யாண சாப்பாடு கிடைக்கும். மெது வடை இரண்டு கூட போடணும். பட்டர் கிட்டே சொல்லிடுங்கோ இப்பவே..

சீக்கிரம் கல்யாணம் நடந்துடுமா.. ???
நீங்க என்ன சார்  சொல்றேள் !
வந்தனாவோட அம்மா அதான் என்னோட ஆத்துக்காரி
 இந்த பொண்ணு சொல்ற படி நடந்ததுன்னா
 உயிரை விட்டுடுவா ஸ்வாமி...

அப்ப உங்க மிசர்சுக்கு ஏதாவது பிரச்னையா..? அவள் ஜாதகம் இருக்கா ? 

சுப்பு தாத்தா வெகுளி . எல்லாரும் நம்பணும். 

சார், நீங்க ரொம்ப கிண்டல் பண்றேள். பிரச்னை பண்றதே  இந்த பொண்ணு தான்.

என்ன பிரச்னை ? என்று நான் கேட்டு முடிக்கவில்லை.

 பூக்களைத் தான் பறிக்காதீக ..  காதலைத் தான் முறிக்காதீங்க....
 என்று எப்.எம்.ரேடியோ அலறியது. என் கேள்விக்குத்தான்   காத்திருந்தது போல.  

(உங்க மனசுலே ஒரு கேள்வி எழுந்தது அப்படின்னா அதற்கான பதில் எங்கேயோ இருக்கிறது. அதை நோக்கி நீங்கள் போவீர்கள் . இது நிச்சயம். ) So says my Guru, tells my good friend Mr.Venkataraman. thank u sir. 

அவரை ஒரு அர்த்த புஷ்டியுடன் பார்த்தேன். எனக்கு புரிந்து விட்டது.

அத, அத அதைத்தான் நான் சொன்னேன்
என்று அவர் சொல்லவில்லை. அவர் பார்வையே சொல்லியது.

மாமி, கொஞ்சம் ரேடியோவை சன்னமா வையுங்களேன்
என்று ஒரு அப்பீல் பண்றார். வந்தவர்.

இதோ செஞ்சுட்டேன். சொல்றாளே தவிர செய்யல்ல. 

நரசிம்மனா.. அதானே உங்க பேரு.

ஆமாம்.

உங்க பொண்ணு, வந்தனாவா,  அவ சொல்றத நீங்க கேட்கணும் அப்படின்னு நினைக்கிறா  இல்லையா ..  ?

அந்த நீங்கன்னு நீங்க சொல்றதுலே   நான் இன்க்லூடட்  இல்ல. என் வீட்டுக்காரி.

சரி. அவளுக்கு என்ன பிரசனை.

சார் . நீங்க என் அப்பாவோட க்ளோஸ் பிரண்டு அப்படிங்கரதுனாலே சொல்றேன்.  தன்னோட வயத்துலே பிறந்த பெண் தான் சொல்றபடி தான் கேட்கணும் அப்படின்னு என் பார்யாள் நினைக்கிறாள். 

ஏன் ?

ஏனா ? அவளுக்கு அவள் பிறந்த வீட்டுலே தெரிஞ்சா  கௌரவக் குறைச்சலா போயிடும் அப்படின்னு சொல்றா.  அவ சொல்றதும் நியாயமாகத்தான் தோன்றது.   மேற்கொண்டு.....

என்ன ?

அவ சொந்தத்தில் தெரிஞ்ச இரண்டு பையன்கள் இருக்கிறாங்க. நல்ல குடும்பம். நம்மைவிட ஹை லிவிங். ஒரு பையன் ஆல்ரெடி அமெரிக்கன் சிடிசன். இன்னொரு  பையனுக்கு க்ரீன் கார்டு கிடைக்கப்போறது. அங்க தான் அலையன்ஸ் வச்சுக்கணும் அப்படின்னு பிடிவாதம். இந்த இரண்டுலே ஒண்ணு சூஸ் பண்ணட்டுமே அப்படின்னு சொல்றாள்.

பொண்ணு என்ன அதுக்கு  சொல்றா?

சார், நிஜத்தை சொல்லணும் னா , அவ அம்மா சொல்ற அலையன்சு  பத்தி தீவிரமா பேச ஆரம்பிச்ச பின்னே தான் , இது எல்லாம் ........எங்களுக்குத் தெரியறது....  ...

 ((1,2,3..........4... 10 செகண்டு வால் க்ளாக் சத்தம் இப்ப கேட்கிறது. ) 

பெருமாள் அவர் தூங்கிண்டு இல்ல. நாங்களும் தூங்கிண்டு தான் இருந்திருக்கோம். .. 

இந்த பையன் படிச்சவன் தானே..

ஆமாம்.

கூட வேலை பார்க்கிறானோ...?

ஆமாம். ஒரு வருசமா...

அப்பா அம்மா எப்படி ?  குடும்பம் எப்படி ?

நல்லவா தான் அப்படின்னு பொண்ணு சொல்றது. நான் எப்படி போய் பார்க்கமுடியும் ?

பையனைப் பார்த்தீகளா ?

முந்தா நாள் அன்னிக்கு அவ ஆபீஸ் லே காண்டீன் லே எனக்கு இன்ட்ரொட்யூஸ் பண்ணி வச்சாளே ? நல்ல டீசெண்டா இருக்கான். இவ இருப்பதற்கு மேல் டையர் லே இருக்கிறான் போல் தோன்றுகிறது. பாசிபிளி ப்ராஜக்ட் மேனேஜர் காடர்.

பின்னே என்ன ?

நமக்கு ஒரு சம்பிரதாயம் இருக்கிறது இல்லையா..
கூட பந்துக்கள் அவர்களோட பந்துக்கள் இருக்கிறவா நம்ம மேல வச்சு இருக்கிற மதிப்பு இதெல்லாம் பார்க்கணும் இல்லையா..?  நாளைக்கு ஒரு நல்லது கெட்டது  எல்லாத்துக்கும் எல்லாரும் வரணும் இல்லையா ?

நரசிம்மரே.. உங்க பொண்ணுக்கு தன் ப்யூசர் மேல அக்கறை இருக்காதா என்ன ? இஸ் ஷி நாட் காம்பிடண்ட் டு அனலைஸ் த சிசுவேஷன் ?

அப்படி இல்லை.  ஷி  இஸ் ரியலி  ஸ்மார்ட் அண்ட் இண்டெலிஜெண்ட்.

அப்போ, த ப்ராப்ளம் இஸ் மோர் வித் அஸ் இல்லையா ?

சார் ! நான் உங்ககிட்டே ஜோசியம் பார்க்கத்தான் வந்தேன். நீங்க சைகாலஜிஸ்ட் ஆ பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறீர்கள். ....

 ஐ ஆம் ஒன்லி அனலைசிங் யுவர் ப்ராசஸ் ஆப் தாட்.

அடுத்தவளுக்கு கஷ்டமா ஆயிடுமே..?  ஹூ வில் ஹாவ் அலையன்சு வித் அஸ் . 

அப்ப, மூத்தவளா பிறந்தா சாக்ரிபைஸ் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறேள்.

நான் மட்டும் இல்ல. நம்ம சமூகம் சொல்றதே..

அவரவர் வாழ்வை அவரவர் முடிவு செய்ய கூடிய ஒரு சூழ்நிலையை உண்டு பண்ண முடியாதா பெற்றோர்களாலே...?

முடியும். இல்லைன்னு சொல்லல. இன் பாக்ட் , அடுத்தவ மூத்தவ கட்சி.
என்னைப் பத்தி கவலைப்படாதீங்க அப்பா  பி போல்டு அப்படின்னு சொல்லிட்டா.. 

அப்ப என்ன பிரச்னை ?  எஸ்ஸுனு இங்கிலிஷ்லே சொல்லிடுங்க...

திரும்ப திரும்ப என்னை சொல்லாதீக.   நான் ஒத்து போகணும் அப்படின்னு தான் சொல்ரேன்.  நான் இப்பவே போன் போட்டு என் பார்யாளை வரச்சொல்றேன். நீங்க கன்வின்ஸ் பண்ணுங்க. ப்ளீஸ் ,


கார்த்தி அப்பா.. அப்படின்னு பக்கத்து ரூம்லே ந்து ஒரு சத்தம்.
கொஞ்சம் இருங்க. என்னன்னு பார்த்துட்டு வரேன் அப்படின்னு அடுத்த ரூமுக்கு சென்றேன்.

என்ன விஷயம். கூப்பிட்ட ?

இன்னிக்கு, நான் பேச நினைப்பதெல்லாம் என்னங்க.. நீங்க பேசறீங்க...

அது சரி. எதுக்காக கூப்பிட்ட ?

உங்க பிரண்டு பெங்களூரு லேந்து இரண்டு தரம் போன் பண்ணிட்டார். அஞ்சு நிமிஷம் கழிச்சு பேசறேன்னு சொல்லி இருக்கார். இந்தாங்க. இந்த செல்லை பிடிங்க.. என்று ஒரு செல்லை என்னிடம் திணித்தாள்.

செல்லை வாங்கிக்கொண்டு, நரசிம்மன் அமர்ந்திருந்த ஹாலுக்குச் சென்றேன்.

இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தார் என்று தோன்றியது.

யார் ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒரு முப்பது செகண்டு ஓடியிருக்கலாம்.

சார், இன்னும் ஒரு விஷயம் இருக்கு. எனக்கு இரண்டே பெண்கள் தான். பையன்கள் இல்லை.

இனிமே நோ சான்ஸ். வீட்டுக்காரிக்கும்   வயசாயிடுத்து. என்றேன்.

உங்களுக்கு எப்பவுமே கிண்டல் தான்.
நமக்கு வயசானப்பறம் எங்க போய் இருப்பது ? நமக்கு ஒரு ஆதாரம் வேண்டும் இல்லையா ?  

ஸோ , த ப்ராப்ளம் கன்சர்ன்ஸ்  யூ,        நாட் யுவர் டாட்டர்.

செல் அடித்தது.

எடுத்தேன்.

பிரண்டு வெங்கடராமன் தான் பேசினார்.

நம்ம காலனிக்கு ஆதார் கார்டு கொடுக்க,   தேதி ,போட்டோ எடுக்கிற  இடம் எல்லாம் அசோசியேஷன் நோட்டிஸ் லே போட்டிருக்கு அப்படின்னு சந்திரசேகர் சொல்றாரே...

அப்படியா...ஆதாரம் வந்துடுத்தா !! போய் பார்த்துட்டு வர்றேன். சத்தமா பதில் சொல்லிக்கொண்டே வந்தவரையும் பார்த்தேன். 

அப்படியே அந்த லிஸ்டுலே என்னோட நம்பர் என்னன்னு பார்த்துட்டு போன் செய்யுங்க.  என்றார்.

செல்லை வைத்துவிட்டு நரசிம்மனை பார்த்தேன்.

நரசிம்மன், பகவான் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆதார் போட்டு இருப்பார் என்றேன். நெய்க்கு தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதரமா? அப்படின்னு ஒரு வசனம் இருக்கு தெரியுமோ ?

இப்ப பிலாசபி பேசறேள்.

அது சரி. அப்பா எப்படி இருக்கார் ?

அவருக்கென்ன ? தினப்படி கீதை பாராயணம் பண்ணிண்டு இருக்கிறார்.

அவர் கிட்ட கேட்கலையா ?

அவர் விஷயம் தெரிஞ்சன்னிக்கே :
நான் என்னத்தடா சொல்றது ? நீயாச்சு, உன் பொண்ணாச்சு.. அப்படிங்கறார். 

லோகத்துலே நடக்கிரதுக்கெல்லாம் நம்ம   ஒரு சாட்சி தாண்டா..எல்லாத்தையும் என் தலை மேல் போட்டுடு அப்படின்னு பெருமாள் சொல்லி இருக்காராமே..

அனன்யாஸ் சிந்தயிந்தோ மாம் யே ஜனா பர்யுபாசதே
தேஷாம் நித்யம் அபியுகதானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம்.
ஸ்லோகம் வேர சொல்றார். 

மேலே, நான் ஒண்ணும் சொல்றதுக்கில்ல. என் பிரண்டு சூரிக்கிட்டே கேட்டுக்கோ அப்படின்னு சொல்லிட்டார். அதான் நானும் வந்தேன். 

எனக்கு மனசுக்குள்ள் சிரிப்பு வந்தது.
அவர் அந்த காலத்து லப்ட் கம்யூனிஸ்ட்.
மிலிடண்ட் ட்ரேட்  யூனியனிஸ்ட்.
இன்னிக்கு ராதே ஷ்யாம்.   ரைட் அபௌட் டர்ன். 

நரசிம்மன் !!
இட் இஸ் குட் வி கோ பை த ஸ்ட்ரீம். என்றேன்.


புரியறது. வரேன். என்றார்.  
பத்திரிகையோட வாங்கோ என்றேன்.
         
                             *****************************************


இரண்டு நாள் கழிச்சு ஒரு போன் வந்தது.

என் மனைவி போனை எடுத்தாள். எதோ இரண்டு வார்த்தை பேசிவிட்டு என்னிடம் போனை தந்தாள்.

யாருன்னே தெரியல்லே. சின்ன பொண்ணு குரல் மாதிரி இருக்கு.

சூரி ஹியர் என்றேன்.

தாத்தா தாங்க்ஸ் .

தாங்கஸா ? நீங்க யாரு. ?

நானா ?

ஆமாம்.

நான் உங்க தஞ்சாவூர் ப்ரண்டோட பேத்தி.     நரசிம்மன் டாட்டர்.

ஹலோ .. என்ன ஆச்சு.

அதான் சொன்னேனே. தாங்க்ஸ்.

அப்பறம்

விழுப்புரம். ...

கல கல என்று சிரிப்பு. 
வரப்போரத்து ஓடையிலே புதிய வெள்ளம்  பாய்ஞ்சு வராப்போல .....

போன் கட் ஆகிவிட்டது.
ஆனா அந்தப்பிஞ்சு மனசுக்குள்ளே இன்னிக்கு இருக்கும் ஆனந்தம்  
கண்டின்யூ ஆகும் பார் எவர் அண்ட் எவர்.

அது என்ன விழுப்புரம்?
 புரியவில்லை.
கிழவி கிட்டே கேட்டேன்.

என்ன இது கூட தெரியாம.  சரியான .ட்யூப் லைட்..
அங்க தானே  ட்ரைனுக்கு  என்ஜினை மாத்தறா?

அப்படின்னா ?
மக்கு மக்கு.  அப்பா அம்மா என்ஜினை கயட்டிட்டு மாப்பிள்ளை என்கிற டீசல் என்ஜினை மாட்டி இருக்கா...
இந்த மாதிரி சமாசாரங்கள் லே கிழவி ஆல்வேஸ்  எ லிட்டில் அஹெட்.
காதல் ஓவியம் பாடும் காவியம்.

இந்த இளசுகளுக்கு  ஆசைகள் எங்கிருந்து வருகுதோ !!
எல்லாமே அந்தந்த வயசுக்கான கெமிஸ்ட்ரி. 
அந்த ஹார்மோன் படுத்தற பாடு எல்லாம் 
 ரஹ்மான் ரசிகர்களுக்குத்தானே புரியும்.. 

கிட்டப்பா காலத்துலே இருக்கிற நமக்கு இதெல்லாம் 
எட்டாதப்பா...

யுகத்துகேற்ற சங்கீதம். சுகம். 

என் மனசுக்குள்ளே  அந்தப்படம்  ப்ளாக் அண்ட் வைட்டாத்தான்  ஓடியது.

காதில் சத்தம் ஒன்றும் வரவில்லை.
காரணம் காதை ஓரம் கட்டிவிட்டு

மூக்குக்கு வந்தது.ஒரு சூப்பர் ஸ்மெல்.  நறுமணம்.

அந்தந்த வயசிலே அந்தந்த ஆசை.
அப்படின்னு வியக்க வைத்தது.

இந்த பெரிசுக்கு இன்னும்
சின்ன சின்ன ஆசை.

மெது வடை.கொஞ்சம்  கொத்தமல்லி சட்னி
மெது வடை கொஞ்சம் தேங்காய் சட்னி.
அதுவே எனக்கு
திவ்ய நாம சங்கீர்த்தனம்.

யார் யாருக்கு எப்ப எப்ப என்ன என்ன கொடுக்கணும் அப்படின்னு
அவனுக்கு நன்றாவே தெரியும்.




வாழ்வே இனிமை.
மெதுவடை கொத்தமல்லி சட்னி பண்ணிக்கொடுத்த பட்டினியே ..

சீ சீ ... பத்தினியே என் தர்ம பத்தினியே
நீ மட்டுமல்ல.

எல்லோரும்
வாழ்க வளமுடன்.  

இரண்டு தரம் சத்தமா சொன்னா போதுமா ?
இந்த கணக்கு இந்த பார்முலா புரிஞ்சாலே போதுமே.

H =  R - E 
So simple a mathematical formula.
If u want to keep your HEAD high and keep high your esteem,
understand this simple equation.

Happiness is just Reality minus Expectations. 

 யாரு சொன்னாவா ?  இங்கே போய் பாருங்க. 




*******************************************************************************

கற்பனை ஆங்காங்கே கலந்த உண்மைக்கதை. உண்மை இருக்கும் இடங்களிலே பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

பொய்மையும் வாய்மை இடத்த
பொய் தீர்ந்த நன்மை பயக்குமெனின்.







வெள்ளி, 6 டிசம்பர், 2013

மாறி வரும் உலகத்துலே...


காலம் ரொம்ப மாறிப்போச்சுங்க ...

 ஏன் அப்படி சொல்ற...?

 நம்ம காலத்துலே இருந்த மாதிரியா ஊர் உலகம் சனங்க இருக்குது ?

புரியல்லையே...

 என்ன இல்ல.. படிப்பு மாறிப்போச்சு . ஸ்கூலு எல்லாமே மாறிப்போச்சு.

எல்லாம் காசேதான் கடவுளப்பா அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா  அப்படில்ல இருக்குது..

நீங்க படிச்ச மாதிரியா இப்ப இருக்குது ?

நான் என்னத்த படிச்சேன் ..?

அப்ப நீங்க ஒண்ணுமே படிக்கலையா... உங்க அம்மா என் புள்ள கிராஜுவேட் அப்படி எல்லாம் சொன்னாகளே ?  என்னாத்த தான் படிச்சீக..?

நான் உன்னை நினைச்சேன். பாட்டு படிச்சேன். 

அது தான் காமெடியா முடிஞ்சு போச்சுல்லே..இப்ப எதுக்கு அதெல்லாம் ?

அப்ப வேற என்ன மாறிப்போச்சு ?

இப்ப படிக்கிற புள்ளைங்க என்ன கொட்டம்  அடிக்கிராக..  பாடுறாக...படிச்சுபாத்தேன்...ஏறவில்ல    பாருங்க..


ஆமா.. அப்ப பசங்க வாத்தியார்  வராருன்னா  பயப்படுவாக.
 இப்ப வாத்தியார் அம்மா  பசங்களை பாத்து பயப்படுராக.. நமக்கு இன்னா அப்படின்னு ஒதுங்கி போயிடராக ....

 நம்ம பசங்க படிச்ச படிப்பு மட்டும் இல்ல. பாத்த வேலை மாறிப்போச்சு.நேரம் மாறிப்போச்சு.  ஆணுங்க பொண்ணுங்க அப்படின்னு வித்யாசம் இல்லாம் நைட் புல்லா வேலை பாக்குராங்கலாமே ...

அது அப்படி இல்ல மீனாச்சி.  இங்கன இருக்கறவங்க போன் மூலமா கம்ப்யுடர் வழியா அமெரிக்காவிலே இருக்கறவங்க ஆபீஸ் லே ஒர்க் பண்றாக. அவங்க டைம் வேற இல்லையா.  

அதுனாச்சும் கிடக்கட்டும். அப்பைக்கெல்லாம் பையன் வெளியூரா இருந்தா பொண் குடுக்கவே பயப்படுவாக இல்லையா.

இப்ப பையனுக்கு அமெரிக்காவிலே வேலையா , லண்டனிலே வேலையா, 
ஜெர்மனிலே செந்தேன் நிலவா ஹனி மூனா , அப்படின்னு இல்ல கேட்கராக 

அது மட்டும் இல்லீங்க..பொண்ணு வீட்டுக்காரங்க... கலியாணம் முடிஞ்ச கையோட பெத்த அம்மா அப்பாவை கூட மறக்கடிச்சுட்டு அங்கனவே செட்டில் ஆகிடராகளே...இன்னாத்த சொல்ல ? கீதா அம்மா புட்டு புட்டு வைக்கிறாங்க ...சரியா படிங்க..

மீனாச்சி, நீ போற ரூட் சரியா இல்லயே...

நான் சரியாத்தாங்க சொல்றேன்.
 கட்டற உடையும் மாறிப்போச்சுங்க..  அப்ப எல்லாம் பொண்ணுங்க.. சிறுசுங்க பாவாடை தாவணி போட்டு என்ன அழகு அழகா...

ஆமாம். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா அப்படின்னு கிரங்கிபோய் உருகுவாங்க,இல்ல. !!

. இப்பஎங்க பார்த்தாலும்  நீல ஜீன்ஸ், கருப்பு  பனியன் எங்க காலத்துலே இதெல்லாம் நாங்க நினைச்சுகூட பார்க்க முடியாதுங்க.. இப்ப இருக்கிற சுதந்திரம் எங்களுக்கு எல்லாம் கிடையாது இல்லையா.

.பொண்ணுங்க கர்நாடக சங்கீதம் மட்டுமில்ல, வெஸ்டர்ன்  பாட்டு சூபரா பாடுது.  இங்கே பாரு. அற்புதமா இப்படி ஒரு ராக் பாடல் 



ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாடி ஒரு தமிழ் நாட்டு பொண்ணு பாடும் அப்படின்னு கற்பனை கூட பண்ணி இருக்க முடியாதுல்லே... அப்படி பாடுதுங்க ..

  அதே சமயத்துலே  பாக்காதே..பாக்காதே  அந்த பாட்டும் நல்லாத்தானே இருக்கு. ..

  அது பூஜாவுங்க...அவங்க இந்த சூப்பர் சிங்கர் லே இல்லீங்க.. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவங்க பைனல் வந்தவங்க. என்ன சூப்பர் ஆ பாடுறாக..

 அடே ஆமாம். சரிதான்.நீ சொல்றது  ... பாட்டு கூட இல்ல மாறிப்போச்சுல்ல 
அந்த படத்துலே ஒரு தமாசு கீது.  

!!! பாக்காதே பாக்காதே அப்படின்னு பாத்துகிட்டே சொல்றாக இல்ல. 

 இந்த அம்பது வருசத்துலே ஒரே பாட்டை எப்படி எல்லாம் மாத்தி பாடுறாக..

 அப்படியா..  அந்த மாதிரி ஒரு பாட்டை சாம்பிளுக்கு போடு பார்ப்போம்.

 இன்னாத்த சொல்ல
முதல்லே ஷபனா ஆஸ்மி பாடுராப்போல இங்க ஒரு பியூசன் பாட்டு
 தாயே யசோதா.  ராகம் தோடி.

 பாட்டு என்னவோ நல்லாத்தான் கீது. 
இருந்தாலும் அந்த ஒரிஜினல் யசோதா அம்மா இன்னிக்கு வந்தாக அப்படின்னு வச்சுக்க, ஓடிப்போய் விடுவாங்க.  அந்த மாதிரி ஒரு பயமாவும் கீது.


அப்ப  இதே பாட்டை சூப்பர் சிங்கர் லே அமெரிக்காவிலே வந்த பிரகதி
பாடி கேட்டு பாருங்க...

 நம்மை எல்லாம் பிரமிக்க வச்சுட்டாக அப்படின்னு தான் சொல்லணும்
 அதே தாயே யசோதா பாட்டு.   அதே தோடி ராகம்.

 இங்கன சுதா ரகுநாதன் முன்னாடி பாடி அவங்க கிட்டே என்னாம்மா அப்ளாஸ் வாங்குராக... யம்மாவ். !!!!

பாட்டு அதே தாங்க.  ராகமும் அதேதாங்க.

உண்மையை சொல்லப்போனா எங்க அம்மா 1920 லே பிறந்தவங்க.
 எனக்கு சொல்லிக்கொடுத்தது இது மாதிரி தான். நானும் தோடி ராகத்துலே மெட்டு போடனும் அப்படின்னா இப்படித்தான் போடுவேன். ..


சங்கீதம் அப்படியே தாங்க இருக்குது  அத வெளிப்படுத்தறது காலத்துக்கு காலம் மாறிக்கிட்டே போவுது.

இதெல்லாம் அப்படி தாங்க. மக்களோட ரசனைக்கு தகுந்தபடி மாறிக்கிட்டே தான் இருக்கும்.
ஆனா ஒரு விஷயம் மட்டும்  அடிப்படையிலே மாறவே மாறாது..

என்னங்க அந்த மனிதன் மாறவில்லை அப்படின்னு கண்ணதாசன் எழுதினாரே அதுவா ?

இல்ல..

அப்ப என்ன ?

அதை கொண்டு வா சொல்றேன்.

என்னங்க அது மாறாம இருக்கறதா ?  எத கொண்டு வர சொல்றீக...

அதான் மீனாச்சி.  இட்லி உப்புமா 
நேத்திக்கு செஞ்சு வெச்ச இட்லி .
அதுலே பத்து பதினைஞ்சு மிச்சம் அப்படின்னு சொன்னீல்ல..

ஆமாம்.

அத அப்படியே சின்ன வாணலி லே போடு. ஸ்டவ்வை லேசா பத்தவை. 
போட்டு ?

முதல்லே நல்ல எண்ணை இரண்டு ஸ்பூன் ஊத்து. பின்னே பெருங்காயம், கடுகு, ஒரு மிளகாய், கொஞ்சம் மஞ்சத்தூள் போடு...

போட்டு....

அந்த இட்லியை நல்லா உதிர்த்து அதுலே போட்டு, பொன் நிறமா வரும் வரை ப்ரை பண்ணு. அது தான் இட்லி உப்புமா 

உப்பு ?

ஆமாம். உப்பில்லா பண்டம் குப்பையிலே இல்லையா...
ஆனா இட்லியிலே உப்பு இருக்கும்.  அதுனாலே கொஞ்சமா போடு.

அப்பறம்.....????

அன்பே வா என் முன்பே வா அப்படின்னு பாடிக்கினே வா. 

அல்வாத்துண்டே வா சொல்லிகிட்டே நான் சாப்பிடறேன்.

என்னங்க சைலண்டா ஆகிட்டீக..

அந்த பாட்டிலேயே அமுங்கி போயிட்டேன்..

ரொம்ப நேரம் ஆயிடுச்சுங்க...நீயா நானா ஆரம்பிச்சுடுச்சுங்க...
இன்னிக்கு மட்டும் நீங்களே அந்த இட்லி உப்புவாவை பண்ணிடுங்களேன்.

என்னங்க..சொல்ல மறந்துட்டேன். முளை கட்டின பயிறு போட்ட
சைட் டிஷ் இன்னிக்கு ஸ்பெஷல் . ஸ்ப்ரௌட் மிசால் அப்படின்னு ஒரு டிஷ் இங்கன போய் பாருங்க... அதையும் செஞ்சுடுங்க.

இன்னிக்கு மட்டும் , இன்னிக்கு மட்டும் அப்படின்னு தினம் தினம் சொல்லிக்கிட்டு லே இருக்கே...

இன்னிக்கு ஒண்ணு, நாளைக்கு ஒண்ணு அப்படின்னு இந்த மீனாச்சி எப்பவுமே கிடையாதுங்க..

நேக்கு தெரியும் மீனாச்சி. நீ ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்னாபோல..

அட...?  கோச்சடையான் பொங்கலுக்கு வரும் அப்படின்னு போட்டிருக்காக.. இப்பவே ரிசர்வ் பண்ணிடுங்க..

முதல்லே எப்ப கோச்சடையான் ஆடியோ வருதுன்னே தெரியல்லையே..

.உங்க ப்ரெண்ட் ஆவியைக் கேளுங்க..கரெக்டா சொல்லுவாரு. . செல்லை கொண்டு வரேன். நீங்க உப்புமாவை ரெடி பண்ணுங்க.. 

மாறி வரும் உலகத்துலே...???

இட்லி ஒன்றே நிரந்தரம்.

புதன், 27 நவம்பர், 2013

மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா.

என்னது ஒரு தினுசா சுகமா ஒரு வாடை வருது ?
அப்படின்னு தாத்தா மூக்கை இன்னும் நன்னா உறிஞ்சி இழுத்து  பார்த்தாற்போல.

ஆமாம். நிசமாத்தான்.
நல்ல ஏதோ ஹல்வா மாதிரி வாடை வருதே !! ஆனா
என்ன இந்த கிழவியாவது அல்வா பண்றதாவது !! இந்த ஜன்மத்துக்கில்லை.

அப்ப என்ன அந்த வாசனை அப்படின்னு பார்த்தால்,
ஆமாம். லாப் டாப் லேந்து தான் வருது.

இப்ப எல்லாம் ஈ சிகரட் அப்படின்னு சொல்றாப்போல ஒரு ஈ அல்வா வும் வர நேரம் வெகு தூரமில்ல..  ஆல்ரெடி ஸ்மோக் செய்யறவங்க இங்கன போய் படிச்சா தப்பு இல்ல.

 இந்த எலக்ரானிக் டிவைஸ் சிகரட்டை ஊதினா ஸ்மோக் பண்ற பீலிங் வருமாம்.  அதனாலே கொஞ்சம் கொஞ்சமா சிகரட் ஸ்மோக்கிங் நிறுத்தி விடலாம் என்று இதை தயாரிப்பவர்கள் சொல்கிறார்கள்.

அது போல ஈ காபி , ஈ டீ , ஈ வெங்காய மசால் ரோஸ்ட், ஈ அல்வாவுக்கும் ஒரு நாளைக்கு ஒரு டிவைஸ் வரும் என்று திடமாக நம்புகிறார்.சுப்பு தாத்தா.

எல்லா புதிய கண்டுபிடிப்பவைகளுக்கு முன்னாடி ஒரு கனவு காணனும். அப்பத்தான் அதற்கான ஒரு சாத்தியக்கூறு இருக்கிறதா அப்படின்னு மூளை தேடும். So dream before U discover anything.
 

   அன்னிக்கு க்ராண்ட் ஸ்வீட்ஸ்,அடையார் ஆனந்த பவன் எல்லாமே அம்பேல் ஆயிடும்.

தயிர் வடை க்கு பதிலா தயிர் வடை வாடையே மலிவா கிடைச்சா நல்லது தானே.

+Durai A அப்பாதுரை சார் வரன்னிக்கு எந்த ஈ வடை, ஈ பொங்கல், ஈ பேப்பர் ரோஸ்ட் அப்படின்னு செஞ்சு கொடுத்தே ஒரு வகையா மேனேஜ் செஞ்சுடலாம்.


என்ன இந்த ஐ.ஐ.டி லே படிச்ச பசங்க பொண்ணுங்க  ஈ பொங்கல் , ஈ இட்லி, ஈ பிஸ்ஸா , அப்படின்னு இந்த வாடைகளையே கம்ப்யூடர் மூலமா ஸ்டிமுலேட் பண்ணி நம்மை ஒரு வகையா அடிக்ட் ஆக்கிவிடுவாங்க.

ஆனா அதுவரைக்கும் சுப்பு தாத்தா.இருக்கணுமே.மேஷ ராசிக்கு அஷ்டமத்துலே  எட்டிலே வேற சனி வரப்போறாரே .

அதுவரைக்கும் என்ன செய்யறது ?

அல்வாவே ...

வாராய். நீ வாராய்.. என்று பாடிக்கொண்டே இருப்பதால்  லாபம் எதுவும் இல்லை.

லோகத்துலே செய் இல்லைன்னா செத்து மடி. do or die அப்படின்னு இங்க்லிஷிலே சொல்லி இருக்கு இல்லையா ?

 1980லே என் நண்பர் வெங்கடரமணி சுத்தமா,சத்தமா சொல்வார்.

ஆடிட் லே அவர் தான் எங்களுக்கு சீனியர். அநேக விஷயங்கள்  கீதைலே போட்டு இருக்கு அப்படின்னு அடிக்கடி சொல்வார்.

 அது எதுக்கு கீதைலே போடணும். எங்க வீட்டு சீதையே  தினமும் சொல்றது தானே அது என்று நினைப்பேன். சொல்லமாட்டேன். அவர் கிட்ட ஒரு முதல் மரியாதை எப்பவுமே எனக்கு.

ஹல்வா  திரும்பவும் நினைவுக்கு வருகிறது. ஞாபகம் வருதே.வந்தது.

உடன் ,  வீர தீரத்துடன் பாண்ட் நாடாவை இறுக்கி முடிஞ்சுண்டு, சட்டையை சரியாத்தான் போட்டு இருக்கேனா அப்படின்னு கன்பர்ம் பண்ணிண்டபிறகு

எதிர்த்த வெஜிடபிள் கடைக்கு சென்று அரை கிலோ பம்ப்கின் வாங்கி. வந்தேன்.  பம்ப்கின் அப்படின்னா மஞ்சள் கலர் பூசணிக்காய். மெட்ராஸ் லே இத சில பேரு பரங்கிக்காய் அப்படின்னும் சொல்றாக.

ஹல்வாவுக்கு வேண்டியது மற்றதெல்லாம் அதாவது நெய்,பாதாம்பருப்பு, மிந்திரி, திராட்சை,ஏலக்காய் வீட்டில் எங்கெங்கே என்ன என்ன இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

ஸோ , ஒரு சிறிய வாணலி பத்திரத்தில் பம்ப்கின்னை நல்ல சின்ன சின்ன துண்டமா நறுக்கி , நீர் ஊற்றி வேக வைத்து, ஸ்டவ்வை சன்னமாக எரிய வைத்து , அடி தீஞ்சு போகாம பக்கத்துலே இருந்து பாத்து பாத்து ,

பம்ப்கின் உடைய   அந்த பச்சை வாடை அடங்கிய உடனே, கொஞ்சமா அந்த ஹலுவா அழகிலே அசந்து போய், அதை அழகே அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்,  , என்று முனுமுனுத்துக்கொண்டே சக்கரை 10 ஸ்பூன் போட்டு, நல்ல கிளரி, விட்டு,

கேசரி பௌடர் , பொடி செய்த ஏலக்காய், போட்டு,

பக்கத்தில் இன்னொரு ஸ்டவ்வில், ஆவின் நெய் எடுத்து அதில் பத்து மிந்திரி, ஐந்து பாதம் , ஒன்றிரண்டு பிஸ்தா போட்டு, மிந்திரி நல்ல பொன் நிறம் வரும் வரை,

 காத்திருந்தேன் காத்திருந்தேன், என காத்து,

அந்த பம்ப்கின் சக்கரை கலவையை நன்றாக ஒரு பேஸ்ட் ஆகி விட்டதா என்று கவனித்து பார்த்து, அதற்குப்பின் அதற்குள்ளே அந்த நெய்யில் பொரித்த மிந்திரி,பாதம் பிஸ்தா வை கலந்து ,

ஆஹா, ஆஹா , என்னமா மணக்கிறது.

இந்த வாசத்துக்கு ஒரு உதாரணம் சொல்லணும் அப்படின்னா,
மனசுக்குள்ளே மறைஞ்சு மறைஞ்சு வரும் அந்த பாடல் ட்யூன் :

இப்ப காதிலேந்து மூக்குக்கு வந்தது
 காற்றிலே வாசமே காதலின் சுவாசமே .  

  அந்த வாணலியைத் திறந்தேன்.

(Courtesy:thank U Sangeetha Nambi Madam for your excellent recipes blog )

இதுதான் பம்ப்கின் அல்வா.
மனமனக்குது. ருசி அப்படின்னு குறைச்சு சொல்லிடக்கூடாது. தேவாம்ருதம்.


அல்வா வாணலியை ஒரு கிடுக்கியினாலே பத்திரமா தூக்கி நடு ஹாலிலே இருக்கிற ஊஞ்சல் முன்னாடி இருக்கிற மேசை மேலே வைச்சேன்.

அந்த ஊஞ்சல்லே உட்கார்ந்துண்டு இந்த ஹல்வாவை ருசிச்சிண்டு, டி.வி.லே அந்த காலத்து ஆஷா போன்ஸ்லே பாட்டு ஒண்ணு கேட்கணும் அப்படின்னு மனசு ஓடறது.  இல்ல பறக்கறது.


அத கொஞ்சம் ஒரு ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டேன். போட்டா அப்படியே வழுக்கிட்டு வயத்துக்குள்ளே போயிடுத்து.

ஆஹா என்ன சுகம் என்ன சுகம் !!!

அடுத்த பீஸ் எடுத்து வாய்க்குள்ளே போடறதுக்குள்ளே அது ஸ்பூன் லேந்து நழுவி கீழே விழுந்து விட்டது .

அத எடுக்க குனிந்தேன் பாருங்க...
குனிஞ்சு எடுக்கவும் செஞ்சுட்டேன்.
எழுந்திருக்கும்போது அந்த டேபிள் மேலே தலை இடிச்சு,
அய்யய்யோ ..

டேபிள் மேலே இருக்கற அந்த அல்வா வாணலி அப்படியே கவிழ்ந்து
எல்லா அல்வா வும் கீழே கொட்டி.....

என்ன ஒரு அதிருஷ்டம்...

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே.....
அல்வா வாணலி தலை கீழா கவிழ்ந்து கிடக்கிறது.


என்ன இது கால சர்ப்ப யோகம் !!! (ஜாதகத்திலே ராகுவுக்கும் கேதுவுக்கும் நடுவிலே எல்லா கிருகங்களும் இருந்தா இந்த யோகம். இது என்ன படுத்தும் எப்படி படுத்தும் அப்படி எல்லாம் விலா வாரியா படிக்க சுப்பையா வாத்தியார் பதிவுக்கு செல்லவும். )

 சர்விஸ் டயத்தில் தான் ரொம்ப படுத்தியது. ரிடையர் ஆகி 12 வருஷம் ஆகிவிட்டது. என்னை இன்னுமா படுத்தும்.?


அப்படின்னு என்னையே நொந்து நூடுல்ஸ் ஆனபோது

ஊட்டுக்காரி கிழவி வரா...

எனக்கா கை கால் எல்லாமே உதர்றது. இதெல்லாம் தேவையா மத்தியான நேரத்துலே.. என்று கண்டிப்பா சத்தம் போடுவா ..அந்த சத்தம்

அய்யய்யோ?
ஆபத்பாந்தவா அனாத ரக்ஷகா என்று நான் கிருஷ்ண பரமாத்மாவை கூப்பிடலாமா என்று யோசிப்பதற்குள்

என்ன சத்தம் இந்த நேரம்...
என்று அந்த புன்னகை மன்னன் ஒரிஜினல் பாட்டை பாடிட்டே ... வரா.. வரா எங்க ஊட்டுக்கிழவி

என்னமா அந்த கிருஷ்ணன்  பாடுறான் அப்படியே ஜூனியர் எஸ்.பி.பி. மாதிரி இருக்குது. என்னங்க.. அந்த விஜய் டி.வி.பாக்கலியா ..?
அப்படின்னு கேள்வி  வேற ...



புன்னகை மன்னன் பாடலை எப்படி வைரமுத்து சார் இயற்றினார் என்று அவரே சொல்றார் பாருங்க.. ..

ஒரு காதலனும் காதலியும் நதியோரம் செல்கிறார்கள். எல்லா விதமான காதல் உணர்வுகளோடும் செல்லும் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். தற்கொலை செய்துகொள்ள செல்கிறார்கள். 

கிழவி எங்கே கீழே விழுந்து கிடக்கிற அல்வா வாணலி யைப்பார்த்து விடப்  போகிறாளோ என்ற பயத்திலே,.

அவளை திசை திருப்பும் முயற்சியிலே

இங்கே இந்த பாரு.


நான் இந்த பாட்டு  கேட்டுட்டு இருக்கேன்.

ஆகம்  மலஹர்

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு இசை.
நம் தொல்லைகளுக்கு சிறிது நேரம்
விடுதலை கொடுக்கும் இசை.

மத்ததெல்லாம் அப்பறம் பாத்துப்போம்யா. இதை கொஞ்சம் கேட்போம் அய்யா.என்று இதில் லயித்து இருந்தேன்.

அப்படின்னு சொல்லிகிட்டே ஒரு சிகப்பு டவலை எடுத்து அந்த கொட்டிய அல்வாவை பாதி மூடினேன்.



நல்ல வேளை . கிருஷ்ண பரமாத்மா காப்பாத்திவிட்டார்.

 கொட்டிய அல்வா வை கவனிக்காமலே அந்த இசையை மட்டும் சிறிது நேரம் ரசித்து விட்டு,

அன்னிக்கு இளையராஜா முன்னாடி நம்ம வீரமணி ட்ரம்ஸ் இன்னும் நல்லா இருந்தது இல்லையா... என்றாள். இன் பாக்ட் அந்த கிரியேடிவிடி பிலான்க்ஸ் டு லெப்ட் ப்ரைநீஸ் ஒன்லி. என்று சொல்லி மனைவி என் கண்களை விட்டு மறைந்தாள் .

ஆப்டர் நூன் காட் நாப் பூனைத் தூக்கம் அவளோட பாக்கியம்.  அவள் பேசாமல் தூங்கிக்கொண்டு இருப்பது என்னோட  பாக்கியம்.


 நானோ,
அந்த இசையிலே தூங்கி இருப்பேன்  போல இருந்தது. அதில் ஒரு கனவு. ஓஷோ மெடிடேசன் சென்டரில் வீரமணி ட்ரம்ஸ் வாசிக்கிறார்.  2010 ல் நான் அனுபவித்த நிகழ்ச்சி. திரும்பவும் ஒரு தரம் மனத்திரையில்.

நீங்களும் கேட்கவேண்டும்.  கேட்பீர்களோ தெரியாது.

சூரி சார் !! என்று ஒரு குரல்.
யாரது ? கூவுது? என்று கணினியைத் திறந்தால் ...!!!

எனக்கென்றே ஒரு பதிவு இட்டு இருக்கிறார்கள்.  தனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ... ஒரு மூத்த பதிவர்.  

இந்தக்காலத்து மாமியார்கள் மருமகள்   பற்றிய சிறப்பாய்வு அங்கே.

 மருமகள் கொடுமையாம்.  திருமணத்திற்கு இருக்கும் பெண்கள் எப்படி எல்லாம் டிமாண்ட்ஸ் செய்யறாங்க.. அப்படின்னு ..அவங்க நோக்கிலே ...

அதை விட சிறப்பு பின்னூட்டம் வழியா நறுக் நறுக் என்று ஒரு பெண் பதிவர் கோர்ட்டில் க்ராஸ் எக்ஸாம் போல் கேள்வி கேட்கிறார்.

(தொடரும்.....)

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கார்த்திகை தீபம்.


கார்த்திகை தீபம்.


பக்தி பரவசத்தில் ஒரு பக்தர் பாடுகிறார்.

புதன், 6 நவம்பர், 2013

யார் சரி யார் தப்பு ?

செவ்வாய் கிரகத்திற்கு செவ்வாய்கிழமை அன்று ஒரு செயற்கை கோளை அனுப்பியிருக்கிறார்கள் நமது அரசாங்கம்.
Add caption

ரூபாய் 450 கோடி செலவு தான் . இதனால் என்ன லாபம் என்று நேற்று எங்கள் காலனி வெட்டி அரட்டை கிழடுகள் போட்டி போட்டு வாதித்துகொண்டு இருந்ததில் காதில் விழுந்த சில கருத்துக்கள் விமர்சனங்கள்.

1.  கந்த சஷ்டி அன்று முருகப்பெருமானை தரிசனம் செய்ய அனுப்பி இருக்கிரார்கள்.

2.  செவ்வாயில் தண்ணீர் இருந்தால் அதை குழாய்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரலாம்.

3.  சென்னையில் இட நெருக்கடி முற்றிப்போய் விட்டது.  புதிய பிளாட்கள் அங்கே அமைக்க முடியுமா என்று பார்க்கலாம். '

4.  மன்மோஹன் சார் இன்னும் அங்கு மட்டும் தான்  போகவில்லை.  அடுத்து வரும் எலக்ஷனுக்குள் போகலாமா என்று முடிவு செய்யலாம்.



5. ஹரிஹோட்டாவில் வேலை செய்பவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்துகொண்டே இருக்கவேண்டும். இல்லை என்றால் சோம்பேறி ஆகிவிடுவார்கள்.

6. உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாகும் வாய்ப்பு.

7.  இங்கே இருந்து செவ்வாய்பேட்டை பக்கம் தானே. அதற்கு எதற்கு 450 கோடி செலவாகிறது என்று சொல்கிறாங்க...  பகற்கொள்ளையா தெரியறது ..

8.  இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதா இல்லையா என்று ஆளுக்கு ஆள் மந்திரி சபைலே சொல்றாக.  நம்ம எதுனாச்சும் முடிவு எடுத்து இளவரசர் ராகுல் எதுனாச்சும் சொல்லிட்டா ஆபத்து. பேசாம கொஞ்ச நாளைக்கு அங்க போய் ரெஸ்ட் எடுத்துப்போம் அப்படின்னு மன்மோஹன் சார் முடிவு செஞ்சா அதுலே என்ன தப்பு சாரே ?

8. இனிமேல் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் எல்லாருமே நாங்க ஒரு ட்ரிப் போயிட்டு வந்துட்டோம். இனிமேல் செவ்வாய் எங்களை ஒண்ணும் செய்யாது என்றும் சொல்லலாம்.


யார் சரி யார் தப்பு ?
*******************************************************************

இது ஒருபுறம் இருக்க, கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிரார்கள் என்று கண்ணீர் விடும் அரசாங்கம் ஆம் ஆத்மிக்காக அல்லும் பகலும் உழைக்கும் இந்த அரசாங்கம் இந்த செலவு செய்யலாமா என்று ஒரு கேள்விக்கு ஐ.எஸ். ஆர். ஓ. நிறுவனம் என்ன பதில் தருகிறது என்பதை இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

How does a country with one of the lowest development levels in the world justify spending on a space program?”

 People who are really serious about knowing about this great feat may click HERE