வெள்ளி, 18 செப்டம்பர், 2015

சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க.

சும்மா சாப்பிட வாங்க அம்மா கூப்பிடறாங்க.

 ஆம்.திரு தி. தமிழ் இளங்கோ அவர்களும் திருமதி கீதா , திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அழைக்கின்றனர்.  மா நாட்டில் பங்கு கொள்ள, அறுசுவை யோடு கூடி விருந்து உண்ண, செவிக்குமோர் உணவு அருந்த,
அதெல்லாம் சரிதான்.
ஆனால், 
சுப்பு தாத்தாவின் மனசுலே ஒரு ஐடியா கீது.

பதிவர் மாநாட்டில் புதியதோர் போட்டி. ஐந்து போட்டிகளுடன் சுவை மிகுந்த ஆறாவது போட்டி.வச்சா என்ன ங்கறேன்.
 என்னைபோன்ற சாப்பாட்டு இராமன்களுக்காக. விரைந்து செயல் படுக. உடன் தமது பெயரை பதிவு செய்து கொள்ளவும்.
சாப்பிட வாங்க அம்மா கூப்பிட றாங்க. 

புதுகை மா நாட்டுக்கு எல்லோரும் வாருங்க.  
இங்கே சுப்பு தாத்தா பதிவர்  மா நாட்டில் ரசித்து எப்படி சாப்பிடுகிறார் என ஒரு கனவு காட்சி.  ஏங்க !  அம்மா !! இத்தனை போட்டி கீது !! ஒரு போட்டி சாப்பாடு போட்டி வச்சா எம்புட்டு நல்லா இருக்கும் ? இந்த தாத்தாவுக்கும் ஒரு ப்ரைஸ் கிடைக்கும் இல்லையா ?

போட்டி விதிகள். ( அப்படியே இருக்கணும் நு அவசியம் இல்ல. அங்க இங்க சுப்பு தாத்த கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாரு.)



1. குறைந்த பட்சம் 20 இட்லி சாப்பிடுபவர்களுக்கு ஒரு ஆறுதல் பரிசு.
2. 20 முதல் 30 சாப்பிடுபவர்களுக்கு ஒரு காபி மேகர் . ப்ரெஸ்டிஜ்.
3. 30 முதல் 40 சாப்பிடுபவர்களுக்கு பிரஷர் குக்கர்.
4. 40 முதல் 50 சாப்பிடுபவர்களுக்கு மைக்ரோ ஓவன்.
5. 50 க்கு மேல், ஒரு தங்க நாணயம் .5 கிராம்.

ஒவ்வொரு பரிசினையும் எந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஸ்பான்சர் செய்யலாம்.  அவர்களது பேனரை மா நாட்டில் அமைக்கலாம்.

 50 இட்லி சாப்பிட்டு விட்டு 1/2 கிலோ சக்கரை பொங்கல் சாப்பிட்டால்
இரண்டு ஐந்து கிராம் தங்க நாணயங்கள்.

அதற்கு மேலும் ஐந்து மெது வடைகள் சாப்பிடுபவர்களுக்கு 3 ஐந்து கிராம் தங்க நாணயங்கள்.

அதையும் சாப்பிட்டபின் லஞ்ச் எங்கே பொடராங்கோ என்று கேட்பவருக்கு 6 கிராம். தங்க நாணயம்.

சாப்பாடு செலவு அத்தனை செலவும் நான்தான் ஏத்துக்குவேன் என்று
திண்டுக்கல் தனபாலன் அடம் பிடிப்பார். 
சரி என்று சொல்லிவிடுங்கள்.

பதிவர் கவனத்துக்கு:

மொத்தம் 50000 இட்லிகள் மட்டுமே ஆர்டர் செய்யப்பட்டு இருப்பதால், முதலில் பதிவு செய்பவர்களே சாப்பாடு போட்டியில் பங்கு கொள்ள இயலும்.
இந்த விதி எக்காரணம் கொண்டும் தளர்த்தப்படாது.

இட்லிகளின், அதன் சட்னிகளின் சுவை பார்த்துவிட்டு, பிறகு பங்கு எடுப்பேன் என்று சொல்பவர்கள்  அவர்களுக்காகவே

வள்ளுவன் கூறியது

தூங்குக தூங்கிற் செயற்பால, தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

உடன் பதிவு செய்க.தமிழ் வலைப் பதிவர் மாநாட்டுக்கு. தகவல் மையம் இதோ.www.bloggersmeet2015.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக