வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஏரேழு பிறவியிலும்...!!!

நவராத்திரி தசரா என்று
நாடு முழுக்க அமக்களம்.

இங்கே எங்கு பார்த்தாலும் எந்த வலைப்பதிவு பக்கம் திரும்பினாலும் லக்ஷ்மி,
அபிராமி, சரஸ்வதி, வாணி, காளி, பூஜை , பாடல்கள்.

தோத்திரங்கள், துதிகள், பா மாலைகள்.

வண்ண வண்ண படங்கள். கொலு பொம்மைகள். நடனங்கள்.

ஆல்மோஸ்ட் தினசரி காலை, லாப் டாப் வாக்கிங் போது மீட் பண்ணும்,
ராஜேஸ்வரி, பார்வதி ராமச்சந்திரன், வாசுதேவன் திருமூர்த்தி , சசிதரன்,
 துரை செல்வராஜ் , கீதா சாம்பசிவம் ,

+Thenammai Lakshmanan 
திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களோ ஒரு படி மேலே சென்று கோவில்கள், வீடுகளில் காட்சி அளித்திடும் கொலு படங்களை இட்டு நம்மை
ஒரு தெய்வீக பரவசத்தில், ஆனந்தத்தில் முழுக அடித்துள்ளார்.

ஒரு சாம்பிளுக்கு அவங்க வலை லேந்து ஒன்னே ஒன்னு ஸ்டீல் பண்ணி போட்டு இருக்கிறேன். கோவிச்சுக்காதீக அம்மா. அதான், தாங்க்ஸ் சொல்லிட்டேன் இல்லையா !!

புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பர்பெக்ட் கொலு அதி சுந்தர்.

 அத அங்கனேயே போய் பாருங்க. எங்கயா?  இங்கே சொடுக்குங்க.
நன்றி: ராஜேஸ்வரி 

எல்லோருமே தங்களுடைய வலையிலே நவராத்திரி விழா வை கோலாகலமா கொண்டாடி இருக்காங்க.



அபிராமி, லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி, மா காளி
எல்லோருமே முன் வந்து நமக்கெல்லாம் அருள் புரியரப்போ,
நாமும்
அவங்களுக்கெல்லாம் மாலை போட்டு, தோரணம் கட்டி,
நெய் விளக்கு ஏத்தி,
கையிலே கிடைக்கிற நம்ம வெச்சு இருக்கிற எல்லா ஆயுதங்களை அதாவது டூல்ஸ் பார் அவர் ப்ரொபஷன் , நம்ம தினசரி வேலைக்காக இருக்கிற உபகரணங்களை எல்லாம் கொலு முன்னாடி வச்சு, சந்தன குங்குமம் இட்டு,
சூடம் ஏத்தி
பாயசம் எல்லாம் நைவேத்தியம் பண்ணிட்டு

வூட்டுக்காரி சமைச்சு வச்சு இருக்கிற லஞ்செல்லாம் சாப்பிட்டு முடிச்சபிறகு

அப்பாடி அப்படின்னு ஈசி சேர் லே சாயிரபோது  தான்,

கண் முன்னாடி வந்து நிக்கறது இந்த

கொண்டக்கடலை சுண்டல்.

உடம்புக்கு ஆகுமா ஜீரணம் ஆகுமா அப்படின்னு எல்லாம் யோசிக்காம,

அடுத்து வர்ற இரண்டு நாளும் சனி, ஞாயிரு ஆச்சே, டாக்டர் கூட இருக்கமாட்டாகளே அப்படின்னு யோசிக்காம,

வூட்டுக்காரி அந்த பக்கம் பாக்கும்போது,

ஒரு பிடி பிடிச்சோம் பாருங்க.

ஆஹா..

என்ன சுகம் என்ன சுகம். !!!

ஆத்தா.. அபிராமி,

அது வேணும், இது வேணும் அப்படின்னு எல்லாம் அபிராமி பட்டர் பாடி இருக்காரு அது உண்மை தான்.
  ***************************************************
 கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி யகலாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத தொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில் லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே!
*************************
அதெல்லாம் வேணும் தான்.
கூடவே அறுபது வயசுக்கப்பறம் பென்சனும் வேண்டும்.
அது இருந்தாலும், அபிராமி, அன்னையே !!
எது இருந்தாலும்,
எது இல்லாவிட்டாலும், 
 எத்தனை ஜனுமம் எடுத்தாலும்,

ஏரேழு பிறவியிலும்,  இந்த
நன்றி: கீதா சாம்பசிவம் மேடம்.

+Geetha Sambasivam 

இந்த பர்டிகுலர் கொத்துக்கடலை சுண்டல் வேண்டுமப்பா...
என்று மனசுக்குள்ளே சொன்னார் சுப்பு தாத்தா.

இன்னொரு பிடி, இன்னொரு பிடி, அப்படின்னு எல்லாத்தையும்,
தின்னு முடிச்சார்.



என்ன சுகம் என்ன சுகம். !!
என்ன அப்படி ஒரு மணம் !!

இந்த சுண்டலுக்காக ஆயுத பூஜையா ?
அல்லது ஆயுத பூஜைக்காக சுண்டலா ?

 அப்படின்னு வேற மனசுக்குள்ளே ஒரு சந்தேகம்.

நோ. நோ. இன்னிக்கு அப்படி எல்லாம் சிந்தனை நோ செய் மனமே.

 அந்த பரந்தாமன் அருள் இருந்தால், எல்லாமே கிடைக்கும்.
நல்லது நடக்கும். நல்லது கிடைக்கும்.

கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ. ,த்ரிவிக்ரமா, வாமன, மதுசூதனா,ஸ்ரீதரா, மாதவா, பத்மநாபா, தாமோதரா,

 என்று மறுபடியும்


எல்லா தைவத்தையும் பிரார்த்தனை பண்ணும்போதே

ஏதோ வயித்தை கலக்கறது போல் இருந்ததால்,

பாத் ரூம் செல்கிறார்,.

சுப்பு தாத்தா.

மே காட் ஸேவ் ஹிஸ் ஸ்டமக்.

+Balu Sriram
sir !!
ஹெல்ப் ஹெல்ப்  !!!

7 கருத்துகள்:

  1. நமது தளத்தையும் குறிப்பிட்டமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
    அம்பாள் அவள் இருக்க ஒரு குறையும் வாராது..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை வரும்போது காமாட்சி அம்மனை தரிசிக்கவேண்டும்.

      நண்பர் துரை செல்வராஜ் அவர்களையும் சந்திக்கவேண்டும்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  2. என்ன சுகம் என்ன சுகம். !!
    என்ன அப்படி ஒரு மணம் !!

    இந்த சுண்டலுக்காக ஆயுத பூஜையா ?
    அல்லது ஆயுத பூஜைக்காக சுண்டலா ?

    அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைக்களுக்கும் அளவில்லை.
      அந்த பண்டிகைகளை சாக்கு வைத்துக்கொண்டு, நாம் வித விதமாக தின் பண்டங்கள் செய்து சாப்பிடுவதற்கும் அளவில்லை.

      உண்மையாகச் சொல்லப்போனால், இந்த வெவ்வேறு தெய்வங்கள், அந்த அந்த கடவுளுக்கு ஒவ்வொரு நாள் உற்சவம், அதற்கான நெய்வேத்தியம் எல்லாமே ஒரு விதமான,

      அன்றாட வாழ்க்கையில் இருக்கும் bordom ஐ குறைத்து, ஒரு sensational departure from routines கொடுத்து

      வாழ்வை இனிதே அனுபவிக்க உதவுகிறது என்று தான் சொல்லவேண்டும் போல தோன்றுகிறது.

      இன்னும் 30 நாட்களில் தீபாவளி, அதற்கான ச்வீட் வகைகள்.
      எல்லாமே இனிப்பு தான்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  3. கொண்டக் கடலை இன்னா அவ்வளவு இஷ்டமா தாத்தா ம்.ம்..ம்
    என்ன சுகம் என்ன சுகம். !!
    என்ன அப்படி ஒரு மணம் !! ஹா ஹா நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்...!
    சாயி பாடல் கேட்க முடியலையே தாத்தா sorry என்று வருகிறதே. மிக்க நன்றி ஐயா தங்கள் கருணைக்கு ஆண்டவன் அருள் என்றும் தங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாயி சரணம் என்று இனியா பாட்டமைத்து
      சுப்பு தாத்தா மோகன ராகத்தில் இசை அமைத்து
      இருக்கும்
      பாடலை,
      இங்கும் கேட்கலாம்.

      www.menakasury.blogspot.com
      சுப்பு தாத்தா.

      நீக்கு
  4. இன்று தான் நான் நவராத்திரி பதிவுகள் சுற்றுக்குத் துவங்கினேன்..(நேர பிரச்னை).. 'ஆலோசனை' பற்றிக் குறிப்பிட்டதற்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தங்களுக்கு..திருமதி.தேனம்மை அவர்களின் பதிவுகள் பார்க்கும் நல்வாய்ப்பு உங்களாலேயே கிட்டியது..அதற்காகவும் தங்களுக்கு நன்றி சொல்கிறேன்!.

    பதிலளிநீக்கு