புதன், 13 மே, 2015

ஆதார் கார்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம்

ஓம் கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே ...

என்று சத்தமாக மைக்கில் அந்த அர்ச்சகர்
வினாயகப்பெருமானுக்கு

சங்கட ஹர சதுர்த்தி அன்று



 அந்த வக்கிர துண்டனுக்கு
அர்ச்சனை செய்து கொண்டு இருந்தார்.
எனக்கோ அந்த சங்கர் மகாதேவன் பாட்டு பாடி அர்ச்சனை செய்தால் என்ன என்று தோன்றியது.  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

+Thenammai Lakshmanan
மனதின் இன்னொரு பக்கமோ திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் பதிவில் வெளி வந்த விநாயகனின் 108 தமிழ்ப் பெயர்களை உச்சரித்துக்கொண்டே இருந்தது.
ஓம் சக்திவிநாயகா போற்றி

ஓம் சிவனார் தவப்புதல்வா போற்றி

ஓம் முழுமுதற் பொருளே போற்றி

ஓம் மூலாதார மூர்த்தியே போற்றி

ஓம் உமையவள் மதலாய் போற்றி

ஓம் உத்தமர் உள்ளத்தாய் போற்றி

ஓம் மாங்கனி பெற்றாய் போற்றி

ஓம் அவ்வைக்கருளினாய் போற்றி

ஓம் கந்தனுக்கு மூத்தோய் போற்றி

ஓம் சித்தி புத்தி நாதனே போற்றி


கோவிலில் சரியான பக்தர் கூட்டம்.
ஒவ்வொருவரும் முந்திக்கொண்டு தனது நக்ஷத்திரம், ராசி, பெயரைச் சொல்லிக்கொண்டு வர,
நானும், அந்த கூட்டத்தில், நூறோடு ஒன்றாக,

கோத்திரம், ராசி, நக்ஷத்திரம், பெயர் சொன்னேன்.

பக்கத்தில் நின்று கொண்டு இருந்த கிழவருக்குத் தாங்க முடியாத ஆச்சரியம்..

என்ன சார் அதிசயமா இருக்கு !
 என்றார் .

இன்னிக்கு பால் கொழுக்கட்டை நைவேத்யம். அதிலே என்ன ஆச்சரியம் !! என்றேன்.

அது இல்லே
என்றார்.

பின் என்ன கொண்டக்காய் சுண்டலிலா ..?  தேங்காய் போட்டு இருக்கும். உங்களுக்கு டயாபெடிஸ் என்றால் என்னிடம் அதை கொடுத்து விட்டு...என்று இழுத்தேன்.

அதெல்லாம் இல்லை
என்றார்.

பின் என்ன ?

அது எப்படி நீங்களும் அதே கோத்திரம் . அதே ராசி, அதே நக்ஷத்திரம், அது மட்டும் இல்லாம் அதே பெயர்...!!

அதுனாலே என்ன ஆச்சரியம் !!

இல்ல, கொஞ்ச நேரம் முன்னாடி தான் நானும் கௌசிக கோத்ரம், கும்ப ராசி, அவிட்டம் நக்ஷத்ரம், நாராயணன் அப்படின்னு என் பெயருக்கு அர்ச்சனை செய்தேன்.  இப்ப நீங்களும்..... ??

அது பேரு நான் இல்ல... அது என் பேரன் பெயர்.

அது சரி.. என் பெயரோட மட்டும் இல்லை, எல்லாமே ஒண்ணா இருக்கே...!!

நான் அப்படி இருப்பது சாத்தியம் தான். என்று சொல்லி கேட்பதற்கு அவருக்கு அவ்வளவு பொறுமை இல்லை.

நான் 50 வருஷமா அர்ச்சனை பண்ணிண்டு இருக்கேன். என்றார். தொடர்ந்து எல்லாம் அந்த பகவத் சங்கல்பம் என்றார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்குச் சரியாக புரியவில்லை.
இருந்தாலும், அதற்குள், பிரசாதங்கள் கையில் விழுந்த படியால், அந்த
சக்கரை பொங்கல்,பால்  கொழுக்கட்டை சுவையில் மனதை செலுத்தினேன்.
சாப்பிட்டு விட்டு தான் அவர் நினைவு வந்தது.

பக்கத்தில் ஒரு பாட்டி ஸ்ரத்தையா பாடிக்கொண்டு இருப்பதை ரெகார்டு போட்டார்கள். ஏதோ கேட்ட குரல் போல இருக்கே என்று கேட்டென்.

அடடா !! இது என் அகத்துக்காரி குரல் அல்லவா !!
இதுவரை யூ ட்யூபில் 2,35,988 பேர் கேட்டு இருக்கிறார்கள் என்றதில் இருந்தே விநாயகன் மேல் எத்தனை பக்தி எத்தனை பக்தி மக்களுக்கு என்றும் நினைத்தேன்.



அவரைக் காணோம்.

எத்தனையோ பக்தர்கள் விநாயகருக்கு.. லட்சக்கணக்கில், ஏன் .? கோடிக்கணக்கில்.!  அதில் ஏதாவது பத்து பேருக்கு எல்லாம் ஒன்றாக இருப்பதில் என்ன ஆச்சரியம் ! என்று நினைத்துக்கொண்டேன்.

இந்த நிகழ்வையும் சில நாட்களில் மறந்தே போய்விட்டேன். அதை மறக்க முடியாமல்,

நேற்று முன் தினம் ,

அந்த பிளாட்பாரம் விநாயகரை தரிசித்தவாறு செல்கையில்,
 சார் ! 
என்று
யாரோ கூப்பிட நிமிர்ந்தேன்.

இவரை நான்  எங்கோ பார்த்திருக்கிறேன். எங்கே என்று நினைவில்லையே என்று என்னையே நான் கேட்டுக்கொண்டு இருக்கும்போது,

சார் !! என்னை நினைவில்லையா...

நினைவு இல்லை என்று சொல்ல முடியவில்லை. இருந்தாலும் சரியாக நினைவு இல்லை. முகம் பார்த்தால் போல் தான் இருக்கிறது என்று நெளிந்தேன்.

நான் தான் சார் ...  அவிட்ட நக்ஷத்திரம். கும்ப ராசி.. .
 என்றார்.

சட் என்று நினைவுக்கு வந்தது. அந்த சங்கட ஹர சதுர்த்தி நாள்.

ஆமாம். அன்று சதுர்த்தி அன்று அந்த தன்வந்திரி கணபதி கோவிலில் சந்தித்தோம் இல்லையா...

ஆமாம்.  நானும் நாராயணன். நீங்களும்.....
என்று தொடர்கையில் அவரை வெட்டி,

சார்..அந்த நாராயணன் என் பேரன். என்றேன்.

அது சரி. நீங்கள் போன சதுர்த்திக்கு கோவிலுக்கு வரவில்லையோ !!

ஆமாம். மறந்து விட்டது.

அது எப்படி. சதுர்த்தி மறந்து போகும்.  முக்கியம் இல்லயோ ..

ஆமாம். ஆனால் மறந்து போயிடுத்து.  என்றேன்  அபாலஜெடிக்கா,

பரவா இல்லை. எனக்கும் சௌகரியமா போய்விட்டது.

என்ன சௌகரியம். !!

நீங்கள் வந்திருந்தீர்கள் என்றால் இரண்டு பேரும் திரும்பவும், அதே கோத்திரம், அதே ராசி, அதே நக்ஷத்திரம், அதே பெயர் ..நல்ல வேளை நீங்கள் வரவில்லை.

நான் வந்தால் என்ன அசௌகரியம் என்று அப்பாவியா கேட்டேன்.

எனக்கில்லை...

பின் யாருக்கு ?

புள்ளையாருக்கு ஸ்வாமி..!! யார் அர்ச்சனை பண்றாங்க என்று சரியா தெரியாம போயிடுச்சுன்னா ??

ஓஹோ...

அப்ப நான் வந்திருந்தா என்ன செய்து இருப்பீர்கள் என்றேன்.

எதற்கும் இருக்கட்டும் என்று தான் கொண்டு போய் இருந்தேன்.

எதை ?

ஆதார் கார்டு.

ஆதார் கார்டா !! அதற்கும் அர்ச்சனைக்கும் என்ன சம்பந்தம் ??? !!!!

ஆமாம். ஆதார் கார்டு தான். 
அர்ச்சகர் தான் சொன்னார். 
என்னோட சந்தேகத்தை அவர்கிட்டே சொன்னப்ப, 

அவர், 

எதுக்கு உங்களுக்கு சம்சயம் !! கோத்ரம் ப்ரவரம் சொல்லும்போது, ஆதார் கார்டு நம்பரையும் சேர்த்து சொல்லிட்டா போச்சு...
என்றார்.
 நீங்களே சொல்லுங்க...

கோத்ரம், ராசி, நக்ஷத்ரம், பெயரோட, அந்த நம்பரையும் சேர்த்து அர்ச்சகர் படிச்சா நல்லதில்லையா..  நம்மதான் அர்ச்சனை செய்யறோம் என்பது துல்லியமா தெரிந்துவிடும் இல்லையா...

ஆஹா !!

ஆதார் கார்டுக்கு இப்படியும் ஒரு உபயோகம் இருக்கிறதா !!!
மன்மோகன் சிங் வாழ்க.
நிலேகாணி வாழ்க.

வெள்ளி, 8 மே, 2015

கொன்னா பாவம் தின்னா போச்சு..

 கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..
கொன்னா பாவம் தின்னா போச்சு..


ன்ன இது..காலை லேந்து  தேஞ்சு போன ரிகார்டு மாதிரி ஒரே வரி சொல்லிகினே இருக்கீக.... 

என்றாள் என் இடப்பக்க வாசினி. 

ஆமாம். உலகத்துலே பொதுவா ஒரு எண்ணம் இருக்கு. எதை செஞ்சாலும் எந்த பாவச் செயல் செய்தாலும்  பண்ணிட்டாலும் அதற்கு ஒரு பரிகாரம் செஞ்சா பண்ணினா சரியா போயிடும் அப்படின்னு...

நானும் பார்க்கறேன். எந்தத் தொழிலிலும் ஒரு நியாயம் தர்மம் வேண்டாமோ ?

எல்லோருமே சேர்ந்து செய்யும்போது அநியாயமும் நியாயம் ஆகிவிடுகிறது. போகிற போக்கிலே அதுவே விதியும் ஆகிவிடுகிறது. அது தான் சட்டமோ என்ற பிரமையும் ஏற்படுகிறது இல்லையா...

சம்பாதிக்கிற வயதிலே, செய்யக் கூடாதது எல்லாம் செய்து, பணம் சேத்துடராங்க  .. பின்ன சேகரித்த  பணத்தினாலே அவங்களுக்கு  எந்த ஒரு நிம்மதியும் கிடைக்காத போது, சேர்த்த பணத்தில் ஒரு பகுதியை, அத தானம் தருமம் அப்படின்னு செலவு பண்ணி, தனது பாவத்துக்கெல்லாம் ஒரு எஸ்கேப் ரூட் தயார் பண்ற மாதிரி, நீர் மோர் பந்தல், ஸ்கூல் காலேஜ் படிக்கிற பசங்களுக்கு ஸ்காலர்ஷிப், வாரத்திலே ஒரு நாளைக்கு தரும வைத்தியம், போதாக் குறைக்கு காசி, கயா , ராமேஸ்வரம். 

ஆமாம். சிலர் பார்க்கிற பார்த்த உத்தியோகத்துக்கும் அவக சேத்து வச்சு இருக்கற சொத்துக்கும் சம்பந்தமே இல்லை. 

அவுங்களுக்குத் தெரியாதா இது மாதிரி சம்பாதிப்பது எல்லாம் பாவம் அப்படின்னு ?

அதுக்குத்தான் ஒரு எஸ்கேப் ரூட் இருக்குதுல்ல..  பரிகாரம் அப்படின்னு..

இருந்தாலும் ??


அது சரி. இன்னாதான் பாவம் அப்படின்னு எதுனாச்சும் ஒரு லிஸ்ட் இருக்குதா என்ன ?

ஏன் இல்லாம !! ஒவ்வொரு மதத்திலும் அவங்கவங்க மத கோட்பாடுகள் பத்தி சொல்லி இருக்கிற புத்தகத்திலே எது எல்லாம் கொடிய பாவம் அப்படின்னு சொல்லி இருக்காக..
ஆமா.. உதாரணமா, கிருஸ்துவ மதப்படி, 

There are six things the Lord hates, seven that are detestable to him: haughty eyes, a lying tongue, hands that shed innocent blood, a heart that devises wicked schemes, feet that are quick to rush into evil, a false witness who pours out lies and a man who stirs up dissension among brothers” (Proverbs 6:16-19).

காம, குரோத, லோப, மோக , அஹங்கார இதெல்லாம் பாவம் அப்படின்னு சீக்கிய தர்மம் சொல்லுது. இங்கன பாரு.  விளக்கமா எழுதி இருக்காக. 



புத்த மதத்திலே சொல்லுவது.


The five most serious offenses in Buddhism. Explanations vary according to the sutras and treatises. The most common is (1) killing one's father, (2) killing one's mother, (3) killing an arhat, (4) injuring a Buddha, and (5) causing disunity in the Buddhist Order. It is said that those who commit any of the five cardinal sins invariably fall into the hell of incessant suffering. 
  1. Injuring a Buddha
  2. killing an Arhat
  3. Creating schism in the society of Sanghaரு 
  4. Matricide
  5. Patricide

கருட புராணத்திலே ஒரு பெரிய லிஸ்டே போட்டு இருக்காங்க.. அதப் படிச்சா மூச்சு வாங்குது...நீயே படிச்சுக்க...

அப்படியா !!!  இதான் அந்த லிஸ்டா ?

மனித சமுதாயத்துக்கு அப்படின்னே பொது லிஸ்ட் ஒருவர் எழுதி போட்டு இருக்காரு. 

யாருங்க..


வள்ளலார் இராமலிங்க அடிகளார். 



அப்படியா..!!

அவர் எழுதி இருக்கிற பாவப் பட்டியல்  இதோ படிக்கிறேன். கேளு..

சத்தமா படிங்க...



நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! 

ஆசை காட்டி மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!

அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! 

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென் றறியேனே!





பட்டியல்  விரிவா இருந்தாலும் விளக்கமா  இருக்குதே !! எதுனாச்சும் ஒண்ணுலே  எல்லாருமே மாட்டிடுவாங்களே !!

ஆமா..
வள்ளுவர் ஒன்று சுருக்கமா, விளக்கமா 
சொல்லியிருக்காரு. 

எது பாவம் அப்படின்னு சொல்லாது, அறவழி செல்லவேண்டும் அப்படின்னு சொன்னா, எதெல்லாம் தவிர்க்கப்படவேண்டியது என்று சொல்லி இருப்பது 
தெளிவா இருக்குதுல்லே !!

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

ஒரு விஷயம் பார்த்தீகளா ?

என்ன ?

இந்த நாலுலே முதல் மூன்றும் எண்ணங்கள் ஆக மனதிலே தோன்றும் . அப்பவே அதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வச்சுடணும். விட்டீங்க அப்படின்னா, அடுத்த நாலாவது இன்னாச் சொல் என்பது , எண்ணங்கள் என்ற நிலையில் இருந்து சொல் ஆக உருவெடுத்து,  மாறுது கவனியுங்க..

ஆமா..

இந்த சொல் என்னும் நிலையில் இருந்து எண்ணங்கள் செயல் உருவம் எடுக்கும்போது , அந்த இன்னாச் செயல் பாவம் ஆக கருதப்படுகிறது.


அப்ப, சொல்லிப்போடுங்க.. இன்னாச் செயலை செய்யக்கூடாது. அத செஞ்சுட்டு, என்ன பரிகாரம் என்ன பரிகாரம் என்று தேடி அலைவதில் அர்த்தம் இல்லை. 

வூட்டுக்காரி  எப்பவுமே கரெக்ட். 
********************************************************************************************************
********************************************************************************************************
**********************************************************************************************************


If negative thoughts, insecurities, doubts come into the mind, chant Om Namah Shivaya. This itself will put you on the right track. What was meant to happen, happened. Move on. - Sri Sri Ravi Shankar

Wisdo

திங்கள், 13 ஏப்ரல், 2015

அட்சய திரிதியை

சென்ற ஞாயிற்றுக்கிழமை.
பக்கத்து கல்யாணி கல்யாண மண்டபத்துலே
**ராதா கல்யாண மகோற்சவம்.


திவ்ய நாம சங்கீர்த்தனம்
காலை 9 மணி முதலே துவங்கி விட்டது.
கோவிந்தா கோபாலா, ராதே கோவிந்தா..
ஹரே கிருஷ்ணா
ஜெயதேவா அஷ்டபதி
நீரஜ தல நயன ...சுகம். **


பிரமாதம்.
சம்பிரதாயமா,
ப்ரவரம் சொல்லி மாங்கல்ய தாரணம்.**




அப்ப தான் தெரிஞ்சது.
நம்ம யது குல வம்சி பன்சீதாரி கிருஷ்ணர்  ஆத்ரேய கோத்ரம்.
ராதாவுக்கும் என்ன கோத்ரம். சொன்னர்கள். காதுலே சரியா விழல்லே.

யதுகுல வம்ச சம்பிரதாயங்கள் இங்கே பார்க்கலாம்.

பிறகு நலங்கு, சோபானம். எல்லாம்

ஒரு எண்பது வயதுக்கும் மேல் இருக்கும் அந்த பாகவதருக்கு.
 எல்லா பாடல்களுக்கும், முக்கியமா அஷ்டபதிக்கு அவர் நடனமாடியது கண்களை விட்டு விலகுமா என்ன !!  ஐம்பது வருஷங்களா இந்த மாதிரி உத்சவ சம்பிரதாய கீர்த்தனைகளிலே அவர் பாவத்துடன் அபிநயம் செய்யறாராம். அவருக்கு ஏகப்பட்ட மரியாதைகள். சம்பாவனைகள்.

எனக்கும் மனசுலே கொஞ்சம் பொறாமையாத்தான் இருந்தது.
நான் பார்த்தது எல்லாம்என்ன இந்த பெரிய வேலை  !! , என்னத்த கண்டோம். !! இந்த மாதிரி ஒரு ஜாப் லே இருந்திருந்தா இன்னும் பப்ளிக் அடோரேஷன் அமக்களமா இருந்திருக்குமே..

ஆனா அந்தப் பெரியவர் முதியவர் அவர்பாட்டுக்கு கிருஷ்ணனைச் சுற்றி மயங்கும் கோபிகைகள் மாதிரி நர்த்தனம் ஆடுகிறார்.
ராதே ஷ்யாம். ராதே ஷ்யாம். அதுலே அவர் லயித்து போய் இருக்கிறார். அவருக்கு அந்த உலகம் தான் த்ருச்யம். நிஜம்.


எந்த ஒரு தொழிலும் ச்ரத்தையுடன் செய்யும்போது அதில் இருந்து நமக்கு கிடக்கும் ஆத்ம திருப்தி , அதுவே போதும். மற்றவர் சன்மானம், புகழ்வது எல்லாமே இரண்டாம் பட்சம்.

இந்த ஆத்ம திருப்தியைத்தான் துளசி தாசர்    ராம் சரித மானஸ் எழுதியபோது அது எதுக்காக எழுதினார் என்று கேட்கப்பட்ட பொழுது "ச்வாந்தஸ் ஸுகாய " என்று சொன்னார்.

 பணம் வேண்டும், புகழ் வேண்டும் உண்மை தான். ஆனால் அதுக்கும் மேலே மனிதனுக்கு மனசு திருப்தி வேண்டும். அதனாலே மனசு அமைதி  .பெற வேண்டும். இல்லையா !!

 நாலு மணி நேரம் நேரம் பொழுது போனதே தெரியல்ல.பக்கத்துலே ஒரு வைதீகமா உடுத்தி இருந்த ஒரு மாமி, பாகவதர் பாடும் ஒவ்வொரு ஸ்லோகம், பாட்டும் என்ன ராகம் அப்படின்னு சொல்றது மட்டும் இல்லாம, இந்த ராகத்துலே என்ன சினிமா பாட்டு லேடஸ்டா வந்து இருக்கு அப்படின்னு சன்னமா சொல்றா.

சம்பிரதாயமா, வண்ண மய கோலங்கள், மாலைகள், ராதே ஷ்யாம் கோஷங்கள்.

மங்களம் அப்ப தான் பாடி முடித்தார்கள். வழக்கமா, மத்யமாவதி லே தான் நீ நாம ரூப முலகு பாடுவார்கள்.
இப்ப, வேற ராகம். அப்படியே மனசை இழுத்துக்கொண்டு போறது. பக்கத்து மாமி காதோரமா "பொய் சொல்லக்கூடாது என் காதலி " அப்படின்னு சொல்றப்போ,

 " மாமி, இது ராதா கல்யாணம் இல்லயோ ! இங்கே போய், காதலி அப்படின்னு எல்லாம் என்று இழுத்தேன்."

"இல்ல மாமா, இது த்விஜாவந்தி ராகம்.
அந்த பொய் சொல்லக்கூடாது பாட்டு என்ன ராகமோ அதில் தான் பாகவதரும் மங்களம் பாடுகிறார் " என்றாள் கூடவே,
இன்னும், விஸ்வரூபம் படம் பார்க்கலையோ !!
உனைக் காணாது ....பாட்டு. கமல் என்னமா டான்ஸ் ஆடறார் !! நீங்க பார்க்கலையா !!  என்றார்.


பலே என்றேன்
இந்த பூலோகத்தை வெகேட் பண்ணுவதற்கு முன்னாடி எப்படியும் அந்த விஸ்வரூபம் படம் பாத்துவிடணும் என்று தீர்மானம் பண்ணிக்கொண்டேன். .

இன்னிக்கு லோகத்துலே சாஸ்திரம்  சம்பிரதாயம் சங்கீதம் இந்த அறிவை விட, சினிமா அறிவு அதைவிட ரொம்ப முக்கியம்.

ராதே ஷ்யாம்... ராதே ஷ்யாம்...


அட்சதை, பூ வாங்கிண்ட கையோட, கூட்டம் மொத்தமா அப்படியே லிப்ட் பக்கத்துலே மாடிப்படிலே பிரசாதத்துக்காக, சாப்பாடுக்காக ....நூத்துக்கணக்கிலே ....வரிசையா...


சுப்பு தாத்தாவுக்கும் கல்யாண சாப்பாடு சாப்பிட ஆசை தான்.
ஆனா இந்த கூட்டத்துலே ...
நமக்கு சரிப்பட்டு வருமோ !!

நமக்கு வேண்டியது போட மாட்டார்கள்.
அவர்கள் போடுவது நம்ம வயிறு ஜீரணிக்காது.\
எதையாவது வாய்க்கு ருசியா சாப்பிட்டு விட்டு, ஏதாவது கோளாறு ஆகிவிட்டது என்றால், .....உடம்பு ஒரு பக்கம் இருக்கட்டும். கிழவிக்கு பதில் சொல்ல முடியாது.

வயசாயிடுத்து அப்படின்னா, தாடை இரண்டுக்கும் நடுவிலே இருப்பதை கட்டுப்படுத்தணும் அப்படின்னு வசனம்.

சின்ன வயசிலே எதை ?
அப்படின்னு +Durai A அப்பாதுரை சார் கேட்பது காதில் விழறது.
அதுக்கு அப்பறம் பதில் சொல்லலாம்.

சாப்பாடு வேண்டாம். நேரமும் ஆகிவிட்டது.
இந்தப் பழம் புளிக்கும் அப்படிங்கற கதையா, வீட்டுக்குத் திரும்பினேன்.

  வீட்டுக்காரி கிட்டே எங்கே போகிறோம் அப்படின்னு கூட காலைலே சொல்லாம வந்துட்டோமே அப்படின்னு அப்பத்தான் ஞாபகம் வந்தது. ஹார்ட் ஒரு லப் டப் கூட அடிச்சுக்கறது.
இன்னிக்கு லப்ட் அண்ட் ரைட் வாங்கப்போறா .. என்று நினைத்துக்கொண்டேன்.

வீட்டுக்கு போயி, சிசுவேஷன் என்னவா இருந்தாலும் மேனேஜ் பண்ணத்தானே வேண்டும். லட் அஸ் க்ராஸ் த ப்ரிட்ஜ் வென் இட் கம்ஸ். அப்படின்னு மனசுக்குள்ளே சொல்லிண்டேன். என்னவா இருந்தாலும் தைரியம் புருஷ லக்ஷணம் .

நடுவில் பெரியார் பூங்கா வந்தது. 4 மணிக்குத்தான் கதவு திறப்பார்கள். அது எப்ப திறக்கும் என்று என்னைப்போல் கிழம் கட்டைகள், பல இளம் ஜோடிகள் 3 மணிலேந்து காத்துக்கிடப்பார்.
 காரணம் இல்லாம இல்ல.

நல்ல இடமா பாத்து யாரும் டிஸ்டர்ப் பண்ணாதபடி உட்கார்ந்தாத்தான் காலட்சேபம் பண்ண முடியும்.

தப்புன்னு சொல்ல முடியாது.  அந்தக் காலத்து லே நம்ப செய்யாததையா இந்தக் கால இளசுகள் செய்யறாங்க ? இல்லயே....என்ன நம்ம ஜாடை மாடையா செஞ்சதை பப்ளிக்கா செய்யாரங்க...

அவங்க தைரியத்துக்கு ஓ போடவேண்டாமா!!

நினைச்சுண்டே பூங்காவைத் தாண்டும்போது, கீழே உட்கார்ந்தும் படுத்துக்கொண்டும் இருந்த ஒரு பெரியவர் னு சொல்லக்கூடிய வயசை இன்னும் பத்தே வருஷத்திலே எட்டக்கூடிய ஒரு நண்பரைப் பார்த்தேன். அடிக்கடி பார்க்கில் பார்த்து பேசுவேன். இருந்தாலும் அவர் பெயர் அவர் யாரென்று முழுக்கவும் தெரியாது.

என்ன இங்கே இந்த நேரத்துலே அதுவும் பிளாட்பாரத்துலே...என்று கேட்கும்போதே .... அந்த நெடி, வாசனை ....(  938 ஞாபகம் வர்றது. )

என்ன ஸ்வாமி !! பகல் நேரத்துலே கூடவா இத கெட்டியா புடிச்சுட்டு இருக்கீக..
என்றேன்.  ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்ற தோரணையில் இருந்த அவர் கஷ்டப்பட்டு, கண்ணைத் திறந்து என்னை ஒரு ஜாடையாக பார்த்தார்.




 சொல்லுங்க என்றேன்.

"சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ"

ஆமாம். கீதைலே வரது .பகவான் சொன்னது.
 என்றேன்.வில்லங்கம் ஏதோ ஆரப்போரது என்ற உணர்வோடு.

"அர்த்தம் என்ன சொல்லுங்கோ...எல்லா தர்மத்தையும் விட்டுட்டு என்னைச் சரணம் அடை " அப்படின்னு... கீதைலே பகவான் சொல்லி இருக்கார் இல்லையா..



அதுக்காக...என்றேன்...அப்பாவியாக.

நான் இதுக்கு சரணம் அடைந்துவிட்டேன்
என்று பாக்கெட்டில் இருந்து ஒரு பாட்டிலைக் காட்டினார்.

சிவா சிவா..நாராயணா...நாராயணா...என்று சொல்லிக்கொண்டு மேலே நடந்தேன்.
.............................
......................................................
................................................................................
அபார்ட்மெண்ட்  வந்துவிட்டது. லிப்ட் ஒர்க் பண்ண வில்லை. அதுக்கும் ரெஸ்ட் வேணும் இல்லையா. படி ஏறி
                            ------------
            ---------------------
-------------
              
ப்ளாட் முன் வந்து,
பெல் அடித்தேன். கதவு திறந்தது. வீட்டுக் கிழவி ராக்ஷசி பிரசன்னமானாள்.


பை த வே,  நான் ராக்ஷசி அப்படின்னு சொல்றேன் என்பதற்காக,

ஹவுஸ் வைப்ஸ் ஹோம் மேக்கர்ஸ் யாரும் கோவிச்சுக்க கூடாது.
அமைதி, அமைதி,

இங்க்லீஷ் லே rakshasi அப்படின்னு எழுதினா ராக்ஷசி , ரக்ஷசி இரண்டும் படிக்கலாம்.

ராக்ஷசி அர்த்தம் புரியறது.
ரக்ஷசி அப்படின்னா காப்பவள். .

இரட்டைக் கிளவி..இந்த சொல்லோ. ? ஒரே சொல்லுக்கு ஒரே ஸ்பெல்லிங் இரண்டு பொருள்.
+mohan gurumurthy விலா வாரியா நிகண்டுவிலேந்து சொல்வார்.

இந்த வீட்டுக்காரி என்று சொல்பவள், எங்க வூடு மட்டுமல்ல, எல்லோர் வூட்டிலேயும் எல்லோருக்கும் கிட்டத்தட்ட இதே கதை தான்.கொஞ்சம் அஞ்சு பத்து பர சென்ட் மேலே கீழே ...அம்புட்டுதான்.

அவள்,

அடக்கு அடக்கு என அகமுடையானை அடக்குவாள் . 
மடக்கு மடக்கு என்று மடக்கியும் பேசுவாள்.
கிடுக்கி போட்டு கணவனைத்தோண்டி எடுப்பாள். இருப்பினும்
தடுக்கி விழும்போதெல்லாம் அவனைப்  பொறுமையுடன்
தாங்கிப் பிடிப்பாள்.

ஒரே நேரத்துலே லா அண்ட் ஆர்டர், ஹோம், பைனான்ஸ் மினிஸ்டர் அவள் தான்.

மெதுவா,

ராதா கல்யாணம் போய் இருந்தேன். அதான் நாழி யாயிடுத்து.....என்றேன்.

அத நான் கேட்கல்ல..

அப்ப எதை கேட்கறே...

நான் எதை கேட்பேன்னு கூடவா உங்களுக்குத் தெரியல்ல ?
என்று ஒரு அஸ்த்ரத்தை வீசினாள்.

தெரியல்லையே...

இத்தனை வருஷமா, உங்களுக்கு என்ன தெரியும் என்ன தெரியாது அப்படின்னே எனக்குத் தெரிஞ்சுக்க முடியல்ல... உங்களைச் சொல்லி என்ன குத்தம் ?

அது சரி, நீ என்ன கேட்கிறே அப்படின்னு சொல்லேன்..
என்று சமாதானக் குரலில்
கெஞ்சினேன் என்று சொன்னால் கொஞ்சம் யீகோ க்ளாஷ் ஆகிவிடும்.
கேட்டேன்.

இன்னும் இரண்டு நாள்லே என்ன வர்றது தெரியுமோ ?

என்ன ? இன்னிக்கு ஞாயிரு..இரண்டு நாள்லே செவ்வாய் கிழமை வரும்.

அதுக்கு அடுத்த செவ்வாய்?
என்று என்னைப் பார்த்தாள்.

அடுத்த செவ்வாயா ? தெரியல்லையே...

இதப் பாருங்க..தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிச்சதெல்லாம் போதும்.

நான் எங்கே நடிக்கறேன் !! உண்மையாகச் சொல்றேன்.

சரி. நான் சொல்றேன். அட்சய திருதியை வர்றது.


அன்னிக்கு என்ன உங்காத்துலே யாருக்காவது திதியா ? என்றேன் அப்பாவியாக...

மட் என்று நெத்தியை இரண்டு விரலாலே தட்டிக்கொண்டாள்.

"எனக்குன்னு வாய்ச்சு இருக்கீங்களே ..என்னோட அப்பா அம்மா எனக்கேன்னு ஒன்னு பார்த்து வச்சாங்களே ..அவங்களைக்  கேட்கணும் அந்த என்னுடைய அத்ருஷ்டத்தை சொல்லணும்" என்றாள்.

அதுக்கு இன்னும் கொஞ்சம் டயமாகும் போல..என்று முனகினேன்.
ஏன் நல்லாத்தானே இருக்கு.அப்படின்னு சத்தமாக சொன்னேன்.

அட்சய திரிதியை க்கு, உலகமே தி.நகர் லே இருக்கு. 
 உங்க உலகமோ, யாரு பாட்டு பாடுவாங்க..யாரு பாட்டை எந்த ராகத்துலே பாடுவோம் அந்த திசைலே இருக்கு.


ஓஹோ...கோல்டு வாங்கணும்  எதுனாச்சும் அப்படிங்கறையா...

ஒ.கே. கொஞ்சமா, விரலுக்குத் தகுந்த வீக்கமா, கைக்குத் தகுந்த எள்ளுரண்டையா சொல்லு என்றேன்.

ஒன்னும் பெரிசா வேண்டாம்.

அப்ப சின்னது எது ? பெரிசு எது?

இந்தாங்க.. வீண் வம்பு எல்லாம் வேண்டாம்.
நான் ஒரு லிஸ்ட் தர்றேன். போய் இன்னிக்கே ஆர்டர் பண்ணிட்டு வந்தாத்தான்
அட்சய திரிதியை அன்னிக்கு கிடைக்கும்.

என்ன லிஸ்ட் என்றேன்.

ஒரு ஏ 4 சைஸ் பேப்பர் லே
கலர் கலரா சிவப்பும், பச்சை, நீலமா எது எதுவோ...எழுதி இருக்கிறது.
என்னிடம் தர....

என்ன இதெல்ல்லாம்...எனக்கென்ன ஒன்னும் புரியல்ல... என்றேன்.

காந்த நாண் புள்ளிகை  2 லே
கலாவம்-3 லே
காறை -2 லே
கச்சோலம்.. 3 லே


இதெல்லாம் என்ன?  கத்திரிக்காய், கடாரங்காய் அப்படின்னு சொன்னா புரிஞ்சுக்கலாம்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல. இதெல்லாம் ஆண்டிக் ஜ்வல்லெரி . அதுக்கின்னே சில கடைகள் இருக்கு. உஸ்மான் ரோடு பக்கத்துலே அந்த காலத்துலே பெண்கள் அணிந்த நகை.எல்லாமே வச்சு இருக்காங்களாம். 

மாங்காய் மாலை, காசு மாலை இப்படியா...

இதெல்லாம் அத விட ஆண்டிக்விடி ஜாஸ்தி. !!

அப்ப ரொம்ப விலையா இருக்குமே !!

அட்சய திருதியைக்காக அஞ்சு பர்சென்ட் கம்மி. டிஸ்கவுன்ட் தாராங்க..

இதெல்லாம் என்ன சொல்லு முதல்லே..

நீங்க உங்க ப்ரண்ட் மோகன்ஜி வலைக்குப்போய் பாருங்க...அவங்க வீட்டு மாமி தான் சொன்னாங்க..அவங்க போன வருஷமே ஒன்னு இரண்டு வாங்கிட்டாகளாம்.

நான் வாங்கிட்டேன்..அப்ப நீங்க. ...அப்படின்னு செல்லிலே கேட்கறாங்க..

நீ என்ன சொன்னே?

இந்த கஞ்சன் சாரி, கஞ்சர் கிட்ட சொல்றேன். வாங்கித்தந்தாரா இல்லையா ன்னு அட்சய திருதியைக்கு அப்பறம் சொல்றேன். என்றேன்.

சரி, இதெல்லாம் என்னன்னு பிரண்டு அதான் மோகன்ஜி வலைக்கு போய் பார்த்தேன்.





காந்த நாண் புள்ளிகை - கழுத்தில் அணியப்படும் வடம். வளையமொத்தது.

கலாவம் - இடுப்பில் தொங்கவிடப்படும் சரங்களின் வரிசை.

காறை - கழுத்தில் அணியும் சங்கிலி வகை

கச்சோலம் -. ஒட்டியாணம்

இதெல்லாம் ரசிக்க முடியும். வாங்க முடியுமோ ???!!!!நமக்கு வர்ற பென்ஷன் லே வருஷத்துக்கு ஒரு பவுன் வாங்க முடியுமோ அப்படின்னு சந்தேஹம்.

+Geetha Sambasivam அவங்க தான் தீர்ப்பு சொல்லணும்.

இதெல்லாம் ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு வாடகைக்கு தர்ற கடைகள் எங்கனாச்சும் இருக்கா ?

பத்து நாளைக்கப்பறம் வூட்டுக்காரிக்கு அதுலே லயிப்பு மவுசு குறைஞ்சுடும்.  நான் லாக்கர் லே வச்சுட்டேன் அப்படின்னு சொல்லிட்டு திருப்பி தந்துடலாம்.

எதுவுமே
கிடைக்காத வரைக்கும் தான் அதுமேலே லயிப்பு.
கிடைத்தபின்னோ சலிப்பு.

நாளாச்சுன்னா புளிப்பு...

மனுஷ்யன் மனசுக்கு
என்று கிடைக்குமோ இனிப்பு ???


ராதையாகப் பட்டவள் கிருஷ்ணனை அடைய மனம் கொண்டாள்.
ஜீவாத்மா பரமாத்மாவை அடைய விரும்பும் லக்ஷ்யம். இது ஆதர்சமேலான பேரின்பம்  என்று ஆன்மிகம் சொல்வது.

அந்த பேரின்பத்தை  ஒரு க்வார்ட்டர்  போட்டாலே போதும் என்று நினைப்பவர் பூங்கா வாசலில் பார்த்த நண்பர்.


நமக்கு கிடைப்பது எது சாத்தியமோ அது தான் இன்பம் என்பது மூன்றாவது.

எது ரைட் சார் ???









செவ்வாய், 27 ஜனவரி, 2015

கூடு விட்டு கூடு


 முன்னுரை 
  
இது கதையா நிஜமா !!
நடக்குமா நடக்காதா !! நடப்பதற்கு சாத்தியமா !!
எல்லாமே படிப்பவர் கற்பனைக்கு யூகத்திற்கு விட்டு விடுகிறேன் 
என்றாலும் ஒரு எச்சரிக்கை.

இது முதிர்ந்தவர்களுக்கான பதிவு என்று சொல்லாவிட்டாலும் கூட 
தத்தம் மனதை திறந்து வைத்திருப்பவருக்கான பதிவு. (for readers with an open mind)

மேலே தொடருமுன் இறுதியில் உள்ள சிறு குறிப்பு
இப்பவே படிக்கலாம். கடைசியிலும் படிக்கலாம்.  **************************************************************************

************************************************************************** 



ய ஏவம் வேத

என்னது?
என்றாள் என் மனைவி.

வேதம் அப்படித்தான் சொல்கிறது
 என்று அர்த்தம்.

எது. ?

அதான் வேதம்..

அது இருக்கட்டும்.
நாளைக்கு காப்பி பொடி இல்லை  என்று நான் காலைலேந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்.
அத முதல்லே கேளுங்க..

இதோ ..வாங்கிண்டு வர்றேன்...
என்று பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினேன்.

ஐம்பது  மீட்டர் கூட எங்கள் ரோடில் சென்று இருக்க மாட்டேன். எங்கள் வீதியிலேயே நேற்றைக்கு  பார்க்லே பார்த்த அதே பெரியவர் ( ஆமாம், என்னைவிட பெரியவர்) என்னைப் பார்த்து விட்டார்.

அடடா.. நேத்திக்கே உங்க கிட்ட பேசணும் அப்படின்னு இருந்தேன். டைம் இல்ல அப்படின்னு சொல்லிட்டு போயிட்டீங்க..
வாங்கோ..ஒரு அஞ்சே நிமிஷம் என்கிட்டே அவசியம் பேசணும்...

சரி
என்று  பார்க் பெஞ்சில் அமர்ந்தேன்.

சொல்லுங்க....என்றேன்.

நேரடியா டாபிக் வந்துட்டுமா ?

வாங்க.

கூடு விட்டு கூடு பாயறது அப்படிங்கற வித்தை சித்தர்களுக்குத் தெரியும் என்று சொல்கிறார்களே...அது பத்தி எதுனாச்சும் சொல்லுங்களேன்.

சித்தர்கள் என்ன செய்தாங்க..என்ன செய்வதற்கான திறமை படைத்தவங்க என்பதை எல்லாம் எனக்கு முழுமையா தெரியாது.  எனது வலை நண்பர் ஒருவர் வலையில் வேணும்னா படிங்க... ஆருடம் பற்றி கூட படிக்கலாம்.

ஆனா நான் ஒண்ணு சொல்லட்டுமா ?

என்ன?

சித்தர்கள் என்ன ?  நாமே கூடு விட்டு கூடு தானே பாய்ந்து கொண்டு இருக்கிறோம் .!!

புரியல்லையே...

நாமா..?

 சந்தேஹத்துடன் என்னைப் பார்த்தார். தன்னையும்  பார்த்துக்கொண்டார்.பார்க்கில் பல வகையான உடற்பயிற்சிகள் செய்யும் அனைத்து ஆயுள் விரும்பிகளையும் பார்த்தார்.    தம்மைச் சுற்றி ஏதேனும் கூடுகள், வலைகள் தென்படுகின்றதோ என்று பார்த்திருப்பார் போலும் !!!

அந்த மாலை வேளையில் பூங்காவின்  நடக்கும் பாதையில் சாரி சாரியாக மக்கள் வேக வேகமாக நடக்கிறார்கள். சிலர் கையில் ஸ்டாப் வாச் வைத்துக்கொண்டு ஓடுகின்றனர். சிலர் ஜாக் செய்கிரார்கள். சிலர் யோகா ப்ராக்டிஸ் செய்கிரார்கள். சில சின்னஞ்சிறுசுகள்  இனம்புரியாத கற்பனை உலகில் சஞ்சரிக்க, அந்த ஸ்டேஜைத் தாண்டி வந்த சில  அம்மாக்கள் ஓடும் தன்  குழந்தைகள் பின்னே மூச்சிரைக்க  ஓடுகிறார்கள். சில பாட்டிகளும் தாத்தாக்களும் ஆங்காங்கே பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு
பழைய கதை பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்

மற்றும் பலர்,, வல்லாரை சூப், இஞ்சி சூப், தூதுவளை சூப், கொள்ளு சூப், வேப்பிலை சூப், நெல்லிக்காய் ஜூஸ், வெந்தயக்கீரை ஜூஸ், வெந்தயம் ஜூஸ், கீழா நெல்லி ஜூஸ், முருங்கக்காய் ஜூஸ்,மனத்தக்காளி  சூப்,என்று பல தினுசான வியாதிகளுக்கு பல தினுசான சூப் களை கப் ஒன்றுக்கு ரூபா 20 வீதம் வாங்கி  குடிக்கின்றனர். 

தொடர்ந்து மார்க்கண்டேயன் ஆ இருக்க வேண்டுமா ?
 தொடர்ந்து எங்கள் லேகியத்தை 90 நாள் சாப்பிடுங்கள்
விலை 900 ரூபாய் மட்டுமே.. என்றால், இன்னிக்கு அறுபது வயதுக்கும்  மேற்பட்ட காளைகளில் நூத்துக்கு 99.99 பேர் எஸ் அப்படின்னு சொல்லுவார்கள்.

நிலைமை அப்படி  இருக்கிறபோது, இருக்கும் கூடு விட்டு இன்னொரு கூடு எதுக்கு ? இதையே அப்பப்ப தச்சு ஓட்டுபோட்டு வைத்துக்கொள்ளலாம் . எத்த்தனையோ லேகியம், சூர்ணம், பஸ்பம் இல்லையா.?

பெரியவர் மனசில் ஓடிய சிந்தனைகள் எனக்குத் தெரியாமல் இல்லை.

பெரியவர் என்னைப் பார்த்தார்.

எதுக்கு இந்த டாபிக் அப்படின்னா, சும்மாவே இருக்க முடியல்ல. பணம் காசு நிறையவே இருக்கு. .  பழைய வீடு போய் , புத்தம் புதிசா பிளாட் லே குடி வந்தாச்சு. ஆனா எது வேணுமோ அது இல்லை.

அப்படித்தான் எல்லோருக்கும் என்றேன்.

வீடு பழசா இருந்தப்போ வராத சொந்த பந்தம் எல்லாம் இப்ப புத்தம் புதிசா இருக்கிற வீட்டிலே அஞ்சு நாள் பத்து நாள் விருந்தாளியா வர ஆரம்பிச்சுட்டாங்க..

அப்படியா...என்றேன்.

அவங்களோட எப்படி மனசு ஓட்டும் சொல்லுங்க. 
அதான் உங்களோட கொஞ்ச நேரம் பொதுவா, ஆத்மார்த்தமா, மனச் சாந்திக்கு எதுனாச்சும் பேசுவோம் என்று கூப்பிட்டேன்.

பேசுவோமே...என்றேன்.

எது உங்க ஊர் ? எங்கே இருந்து வர்ராப்பல ?

தெரியல்ல என்றேன்.

இப்ப எங்கே போகறதா கிளம்பி இருக்கீக.. என்றார்..விடாமல்.

தெரியல்ல என்றேன் அதற்கும்.

அதற்கும் தெரியல்லையா.  ரொம்ப பிலசாபிகல் ஆ பேசறீக..
என்னை கேளுங்க. நான் சொல்றேன்.

சொல்லுங்க என்றேன்.

பக்கத்திலே புதுசா அபார்ட்மெண்ட் வந்து இருக்கே அதுலே பிளாட் ஒன் ஜி. ஓனர் . நான்.

அப்படியா அதுக்கு முன்னாடி ?

அதே இடத்திலே பழசு அபார்ட்மெண்ட் இருந்தது. 1960 லே கட்டினேன். 3000 சதுர அடி. தனி வீடு. தோட்டம் எல்லாம். 

ம்..

அம்பது வருசத்திலே சிதிலமாயிடுத்து. ரிபேர் பண்ணி மாளல்ல. 

சரிதான்.

போன வருஷம் அதாவது நான் சொல்றது 2013.  ஒரு ஜாயிண்ட் டெவல்ட்பண்ட்பண்ணலாமே அப்படின்னு ஒரு ஐடியா வந்தது. 
ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோமொடர்  வந்தார். மொத்தம் 8 பிளாட் கட்டுவோம். உங்களுக்கு 2 தர்றேன். என்றார். சரின்னு சொல்லிட்டேன். 
பழசு வீடு போயி புதுசா பிளாட் 2 கிடைச்சுடுத்து. அபார்ட்மெண்ட் வந்துடுத்து. கையிலே கொஞ்சம் காஷும் வந்தது.

பலே என்று சொல்வதுடன் நிற்காமல்,

 புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.


என்றேன்.

புரியல்லையே...
என்றார்.

நீரே தான் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறீர்கள் ,  இல்லையா...என்றேன்.

அப்படியா...
 
ஒரு வீடு பழசா போயிடுத்து அப்படின்னா, அத இடிச்சுட்டு புது வீடு கட்டி குடி போய் இருக்கீங்க..இல்லையா...

அப்படித்தான் நம்ம  உடம்பினுள்ளே உயிர் இருக்கு. அது இந்த உடம்பு பழசாய் போய்நம்ம சொல்ற பேச்சை கேட்பதில்லை. நமக்கு நம்ம கை கால்களே சொந்தம் இருக்கோ இல்லையோ என்ற சந்தேஹம் வந்து விடுத்து. அப்ப, இத இன்னும் ஒட்டு போட முடியாது அப்படிங்கற நிலையிலே இன்னொரு உடம்பை நாடி போயிடரது நம்ம உயிரு ....அப்படின்னு வள்ளுவன் சொல்றார்.

எக்சாக்ட் லி.  
நல்ல தத்துவம் பேசறீக.. என்றவர், தொடர்ந்து, ஆனா என்னதான் இருந்தாலும் பழைய வீட்டை இடிச்சு தள்ளுடா அப்படின்னு கன்ட்ராக்டர் கிட்ட சொல்வது போல, டாக்டர் கிட்ட இந்த உடம்பை காலி பண்ணுங்க அப்படின்னு சொல்ல முடியுமா என்ன ?  சொன்னாலும் தான், எஞ்சினீயர் கேட்பார். டாக்டர் கெட்கமுடியுமோ?

ஆனா உண்மை அதுதானே !! என்றேன், விடாப்பிடியா...

போகட்டும். .நான் இன்னும் புது வீட்டுலே ஒரு பத்து இல்ல, ஒரு பதினைந்து வருசமாவது இருக்கணும். கந்தன்  கோவிந்தன் துணை இருப்பான். 


சரி.

என்ன சரி ? எப்ப வரீக  ?? பெரியவர் டாப்பிக்கை மாற்ற பார்த்தார்.

இல்ல, நம்ம எல்லாருமே ஒரு நோக்கிலே பார்த்தா புது வீடு நோக்கித்தான் போய்க்கொண்டு இருக்கிறோம் .
என்று சொல்லியபடியே எழுந்து கொண்டேன்.

நாளைக்கு வாங்க...

என்றார்.

பார்க் வாசலை கடந்து எதிர்த்த தெருவுக்கு செல்லவேண்டி,  எந்த வண்டியும் , பைக், மோட்டார் வரவில்லை என்று உறுதி செய்து கொண்டு தான் நான் கடந்து செல்ல நினைக்கையில்
............
...............................
.............................................


 நடு மார்பிலோ என்னவோ பளிச் என்று ஒரு வலி

மஸ்குலர் பைன்  என்று மனசுக்குள்ளே தைரியம் சொல்லிக்கொண்டு நடந்தேன்.

அடுத்த அஞ்சு ஸ்டெப் குள்ளாகவே இன்னும் பளீர் பளீர் ...?

இது சாதாரண வலி இல்லை...

உலகம் இருட்டா போகிறது.

என்னது டோட்டலா இருட்டிண்டு வருது ? !!

எங்கே போயிட்டு இருக்கேன் ?????????????????????????????????????
................................................................................................................................
 ..............................................................................................பாதை எல்லாம்...இருட்டு..

கண்ணை திறக்க பார்க்கறேன். முடியல்ல..
லேசா குரல் ஒண்ணு கேட்கறது. யாரோ யாரிடமோ சொல்றாங்க.

"தாத்தா செமி கோமா விலே இருக்கார். மாசிவ் ஹார்ட் அட்டாக்.
வி கான்ட் டல் எனி திங் அட் த மூமன்ட். "

நான் செமி தான் . ஆனா கோமா இல்ல டாக்டர். எனக்கு நீங்க பேசறது லேசா கேட்கறதே அப்படின்னு சொல்லணும் னு  தோணறது. சொல்ல முடியல்ல..

தூங்கறேனோ ...... 

ஆ....ஆ....ஆ....ழ்ந்த உறக்கம்.

தூங்குவது போலும் சாக்காடு.
 .அப்படின்னு சொல்வாகளே !!

.இதானோ அது !!!
இஸ் இட் த பிகின்னிங் ஆப் த எண்ட் ?
இது முடிவின் துவக்கமோ !!

எங்கேயோ போவது போல ஒரு பீலிங்..

.குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.


முட்டையை உடைச்சுக்கிட்டு குஞ்சு வெளிலே போவுது போல இருக்கிறதோ !!

வெளிலே ஒரு சில வினாடிகளில், திடுக்..திடுக்..

என்னது ??
 என் உடம்பு மட்டும் தனியா போயிக்கிட்டு இருக்குது ?
 யாரோ இரண்டு மூன்று பேர் ஒரு ஸ்ட்ரெச்சர் லே என்னை தூக்கிக்கிட்டு..........................

"'நான்"
மட்டும் தனியா இங்கே  இருக்கேன் !!!!

ஓடாதே...நில் நில்.. என்று உடம்பு கிட்ட சத்தம் போடலாம் என்று நினைக்கிறேன். சத்தம் வரவில்லை.


அதன் பின்னே நானும் ஒடறேனோ ....   இல்ல.. நிக்கிறேனோ .....
ஒன்னும் புரியல்ல..

உடம்புக்கும் "எனக்கும்" இருந்த கனெக்ஷன் முடிஞ்சு போச்சோ ???

எல்லாம் முடிஞ்சு போச்சு

நத்திங் லாஸ்ட்ஸ். Nothing lasts.
அப்படிங்கறது எப்பவும் தெரிஞ்ச விஷயம் தானே.

ஸோ , நத்திங் இஸ் லாஸ்ட் ஆல்சோ. Nothing is lost also.

வேதாந்தம் அறிவுறுத்திய சொல்லிகொடுத்த புத்தி சொன்னது.

இந்த பிலாசபி எல்லாம் இப்ப வேணாம் . என்ன ஆவுது அப்படின்னு பார்ப்போம் என்று தொடர்ந்து நடப்பதை கவனித்தேன்.

வீட்டுக்குள்ளே படுக்க வச்ச என் உடம்பு மேல குடம் குடமா தண்ணி ஊத்துறாங்க..

.நான் தான் தினம் குளிக்கிறேனே ...என்னை ஏன் ட்ரபிள் பண்றீங்க..!!!
அப்படின்னு சொல்ல முடியல்ல..

ஒரு நீள் சதுர கண்ணாடி கிளாஸ் கேஸ் லே என்னை  வச்சு,ஏ .சி. போட்டு, மேல இரண்டு மாலையும் போடறாங்க.

வருசக்கணக்கா பார்க்காத சில உறவுகள் வருது.
என் சம்சாரம் பார்க்குதா அப்படின்னு பார்த்தப்பறம் கண்ணைக் கசக்குது.

அத்திம்பேர் மாதிரி ஒரு நல்ல உள்ளத்தை பார்க்க முடியாது...
ஆத்துக்காரி மேல இருந்த கரிசனம் பார்த்தியா ? சொல்றது மச்சினன்.

எதுக்கு அப்படி சொல்றீங்க...இது அவர் பத்னி.

கரெக்டா ஒண்ணாம் தேதி வாங்க வேண்டிய பென்சனையும் வாங்கி கொடுத்தப்பறம்  தான் கிளம்பினார்  பாத்தியா...!!

யூனியன் லீடர் ஒருவர் வர்றார்.  அவரோட பத்து இருபது பேர் திமு திமு.

ஒரு மாலையை போட்டு விட்டு, என் மகனைப் பார்த்து " அவர் மாதிரி ஒரு ஹெச். ஆர். மேனேஜர் பார்க்க முடியாது. மோஸ்ட் பாபுலர். அமாங் வொர்கேர்ஸ். "

சாஸ்த்ரிகள் வர்றார்: சிக்னல் தருகிறார்
குளிகனுக்கு  முன்னாடி கிளம்பனும்.

இன்னும் சற்று நேரத்திலே, என்னை , இல்ல என் உடம்பை தூக்கிகிட்டு ஒரு டாக்சி வான் போவுது.பக்கத்திலே நாலஞ்சு பேரு என்னெனவோ கையில் சுமந்துண்டு.

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே என்று நானும் தொடர்ந்து வேடிக்கை பார்க்க முற்பட்டேன்.

வீடு வரை உறவு. வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை. கடைசி வரை யாரோ.....



கண்ணதாசா... நீ வெறும் பாடகன் அல்ல. த்ரி கால ஞானி.
எனக்கு என்ன நடக்கும் என்பதை ஒரு நாற்பது  வருஷம் முன்னாடியே பாடி இருக்கிறாய்.

இந்த அஞ்சடி மூன்றங்குலம் 64 கிலோ பஸ்மம் ஆகிறது.
அத ஒரு பானைக்குள் அடைச்சு , அத கடல் லே கரைச்சு, ...

பின்னே, 

ஒன்னு இரண்டு மூணு நாலு என்று பத்து நாள் .

நான் பக்கத்திலே இருப்பதை கவனிக்காமலேயே என்னை ஒரு கல் ஆக பாவித்து என் தாகத்தை தீர்த்து,

பத்தாம் நாள் என் அசுர பசியை தீர்ப்பதாக , அண்டா அண்டா வா, சாதம் பல விதமான சாம்பார், பொரியல் கூட்டு, எல்லாம் வடிச்சு, அதுவும் உப்பு போடாம, நட்ட நடுவிலே கொட்டி,
எல்லோரும் சேர்ந்து அழுது, ...



பதினொன்று, பதினிரண்டாம் நாள் பல பல தானங்கள், இரும்பு லேந்து தங்கம் வரை, அரிசி லேந்து பசு மாடு வரை, பல பல வைதீக வல்லுனர்கள்,    அவரவர்களுக்கு வேண்டியது எல்லாம் கட் அண்ட் ரைட் ஆ வாங்கிக்கொண்டு, இனிமே கறப்பதற்கு இவர்களிடம் ஒன்றும் இல்லை என்று முடிவானப்பின் பை பை சொல்லிட்டு போனதும்,


பதிமூன்றாம் நாள், இனிமே யாரும் அழக்கூடாது என்று வாத்யார் சொல்லி, கீதை லேந்து ஸ்லோகம் படிச்சு,


எல்லாரும் புதுசு கட்டிண்டு ,

அவரவர்கள் அவங்கவங்க ஊருக்கு கிளம்ப,

இனிமேயும் , எனக்கு இங்கே நோ ரூம் என்று ஸ்பஷ்டமா தெரிஞ்சு போயி,

நானும் எங்கே போறது அப்படின்னு தெரியாமலேயே கிளம்பினேன்.




அப்பாடி, !!!
 பிரபஞ்சம் இருக்கே... ரொம்ப பெரிசு.ரொம்ப ரொம்ப பெரிசு.
நம்ம வீடு, ஊர், நாடு, உலகம் , பூமி எல்லாத்தையும் பின்னாடி விட்டுட்டு,

இந்த அண்டத்துக்குளே நுழைஞ்சா, அப்பாடி, என்ன அங்கே அங்கே சின்ன சின்ன லைட் லைட்டா மின்னும் மீடியார்ஸ்.... பிளானெட் ...எல்லாமே எதோ ஒரு ட்ராக் லே போவுது. ...

பெரிய பெரிய ஸ்டார் எல்லாம் ...வர்றது.. அத சுத்தி சின்ன சின்ன பிளானெட்

இரண்டு பெரிய காலக்சி ஒண்ணோடு ஒன்னு உரசிக்கொண்டு நடுவிலே இருக்கும் கருப்பு துளைக்குள்ளே  எப்ப விழுவோம் என்று காத்திருப்பது போல் இருந்தன.

அடே...இதான் மில்கி வே யா... .சூப்பர் . ரொம்ப க்ராண்ட் ஆ இருக்கே என்று வாயைப் பிளந்தேன். அப்ப தான் நினைவு வருது. உனக்குத் தான் உடம்பு கிடையாதே...வாயை எப்படி பிளப்பாய். சும்மா பீல் பண்ணிக்கிட்டு வா..என்று எதுவோ ஒன்னு சொல்லுது.

இன்னாது.. நம்ம,   அஸ்ட்ரானமி,ப்ரொபசர் கால்குலஸ் ஸ்ரீனிவாசன் சார் விவரித்த  பிரபஞ்சத்தை விட்டும் நான் போவது போல இருக்கிறதே !!

பிரபஞ்சத்துக்கும் அப்பாலா !!!

2000 ம் ஆண்டிலே வேதாந்தம் கிளாஸ் டி.நகர் லே  போயிகிட்டு இருந்தபோது, ஸ்வாமினி ப்ருஹத் ஆரண்யகம் உப நிஷத் லே இருந்த அத்தனை அத்தியாயமும் விலா வாரியா வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லித் தந்தார்களே.!!

அது எல்லாம் நினைவுக்கு வர்ற,

ஸ்வர்க லோகம், கந்தர்வ லோகம் , பிதுரு லோகம், மட்டும் அல்ல, சத்ய லோகம் சூர்ய லோகம், சந்திர லோகம், நக்ஷத்திர லோகம் அப்படின்னு ஏகப்பட்ட லோகங்கள், 

யார் யாருக்கு,  எது எது இறக்கும்போது நினைவுக்கு வருதோ, அங்க அங்க, அவங்கவங்க பாவ புண்ணியத்திற்கு  தகுந்தபடி போவாங்க என்றார்கள்.ஸ்வாமினி.

அவை தான் வர்றது போல என்று எண்ணி,

சரிதான்.  அதுலே எங்கனாச்சும் நானும்  போய் இறங்குவேன் என்று ...

யோசிச்சுக்கொண்டு இருக்கேன்... ..ஆனா எங்கேயும் பிளைட் லேன்டிங் ஆகிற மாதிரி தெரியல்ல.

"நான் " ஒரு இடத்திலே நிக்கிற மாதிரியும் தெரியல்ல. .போயிகிட்டே இருக்கேன்.

 பூமி லே இருந்தபோது தான் வேலை லே எப்ப பார்த்தாலும் டூரிங்...
 இப்பவுமா என்று சற்று சலித்துக்கொண்டேன். 


  அமெரிக்காவிலே எல்லாம் ஹை வேஸ் லே நடு நடுவிலே ரெஸ்ட் ரூம் வருமே ...அது மாதிரி எதுனாச்சும்......???

ஊஹும்...ஒண்ணுமே காணோம் ....

லுப்தான்சா பிளைட் லே அப்பப்ப லஞ்ச், டின்னர், தருவாங்க..அது மாதிரி இங்கேயும்..... ..  நோ. நோ..
டீ , காபி, பிஸ்கட், வேண்டாம் !! கொறிக்க கொஞ்சம் கடலை எங்கனாச்சும் தரக்கூடாதா..   

அன்ன பூரணி அம்மா !!1 நீங்க இங்கன எல்லாம் பார்க்கலையா..!! என்னது ?! நீங்க எர்த் க்கு மட்டும் தான் இன் சார்ஜா !!!

பரவாயில்ல.
ஆனா, சும்மா சொல்லகூடாது..
தாகம், பசி அப்படின்னு ஒன்னுமே தெரியல்ல...

இன்னும் எத்தனை நாளோ...எத்தனை மாசமோ, இல்லை எத்தனை வருசமோ.

இல்ல இன்னும் எத்தனை யுகம் இந்த ஜர்னி இருக்கும்.  ..  தெரியல்ல...
   பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]
இந்த முடிவில்லா பயணம் அனந்தம் ஆ இருக்கும்போல, முடிவில்லாம...
ஆனா இதுலேயும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்யுது.
 
பிறப்பும் இறப்பும் அற்று, மூச்சும் அற்று, பேச்சும் அற்று, 
மறப்பும் நினைப்பும் அற்று, மாண்டிருப்பது எக்காலம் 

என்று அத்திரிகிரியார் பாடினாரே... அது தானோ இது. !!!

ஞானப் புலம்பல்]
[பத்திரகிரியார் - மெய்ஞானப் புலம்பல்]

என்ன மாதிரி இந்த அண்டத்திலே  இன்னமும் லட்சக் கணக்கான கோடிக்கணக்கானவை இருக்குமோ ?
இவற்றிக்குத்தான் ஆன்மா என்று பெயரிட்டார்களோ !!
இல்ல அது வேறயா...

அது இது எது ??



இந்த நிலையே  தொடருமா.. தெரியல்ல...

ஒண்ணு மட்டும் நிதர்சனமா தெரியுது. எனக்குன்னு எந்த வித உருவமும் இல்லாம எந்த வித விருப்பு வெறுப்பு இல்லாத ஒரு சுக வாழ்க்கையை அனுபவிக்க முடியுது. பிறப்பு இறப்பு,   இன்பம்,துன்பம்,   காய்தல், உவத்தல்,  கருப்பு, சிகப்பு, இருட்டு வெளிச்சம் , எதுவுமே இல்லை.

ஒளி , சுவை, ஊரு, ஓசை, நாற்றம் எதுவுமே எனக்கு இல்லை.

 .சுருக்கமா சொல்லப்போனால்,
  மனித வாழ்வின் 0 வும் இல்லை. 1 ம்.இல்லை. 0 முதல் 1 வரையும் எதுவும் இல்லை.

என்ன ஆச்சரியம் அப்படின்னா, இத்தனை இல்லைக்கு மத்தியிலும் எதுவோ ஒண்ணு  தொடர்ந்து இருந்து கொண்டு வருது.


இந்த முடிவில்லா பயணம் அனந்தம் ..
இதுலே ஒரு ஆனந்தம்
அந்த ஆனந்தத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கும்போது,

இட் ஹாப்பண்ட்.  ஆமாம். அது நடந்தது.

பெரிசா மழை..வெள்ளம் ..என்னை எதுவோ ஒரு அலை  அடிச்சுக்கொண்டு போவுது. பிரளயம் மாதிரி இருக்கு.  அதுலே எங்கேயோ எதனுடையோ கலந்து, பூமிக்கு நான் திரும்பி வந்து சங்கமம் ஆவது போன்று பிரமை. தோற்றம்.


மண்ணிலேந்து மரத்துக்கு போகிறேன். மரத்தில் இலையாகிறேன் . காயாகி, பழம் ஆகிறேன். அதை எதோ ஒரு பறவை கொத்தி கொத்தி சாப்பிட, அந்த பட்சியை யாரோ அம்பால் எய்து கொன்று, அவித்து கொண்டு வந்து சமைத்து, உணவாக்க , அதை எடுத்து ஆஹா, என்ன ருசி என்று  அவனும் அவனது மனைவியும்  சாப்பிடுகிறார்கள். .

{சர்வேஷாம் பூதானாம் ப்ராநேணிவிஷ்டக. 
(எல்லா உயிரனங்களுமே பிராணனை பிரதானமாக் கொண்டவை. அந்த பிராணன் அன்னம் தான் என்கிறது பிருஹத் ஆரண்யகம் ஒரு இடத்தில். ) அன்னம் ச ப்ரும்ம, அஹம் ச ப்ரும்ம, போக்தா ச ப்ரும்ம -  யானும் பிரும்மன். எனக்கு உனவளித்தவனும் பிரும்மன். எனக்கு அளிக்கப்பட உணவும் பிரும்மனே. 

இப்ப புரிஞ்சுபோச்சு. 
இதத்தான் " உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே!!" சொல்லி இருக்காக.}

ஐ ஹாவ் நோ ரோல் டு  ப்ளே .
எல்லாமே எனக்கு அப்பாற்பட்டு நடக்கிறது.

இன்னமும் நான் எங்கெங்கே போவேன்... ?
என்று தெரியாத சூழ்நிலை. 

எதிர்பாராம.....  

ஒரு இருட்டு குகை... அதுக்குள்ளே ஒரு நீர்த்துளி போல ஒரு நீர்த்திவலை ஆக ,நான்  நுழையராப்போல ஒரு உணர்வு. 

[கையிலே அந்த சாம்சுங் ஐ பாட் இருந்தா ஒரு போடோ புடிச்சு இருக்கலாம்.
வாட்  எ பண்டாஸ்டிக் மூமெண்ட்.]

சுற்றி வர எல்லாப் பக்கமும் ஜலம் ஜலம் ..
என்னெனவோ  அதுலே மிதக்க  ...
நான் மட்டும் விறு விறுப்பா என் வாலை நீட்டிகிட்டு ஓடிகிட்டு இருக்கேன்.
சட் னு ஒரு கணம் எதோ ஒன்னு டக் னு என்னை கெட்டியா புடிச்சுக்குது.

உன்னை விடமாட்டேன்.. உன்னிடம் நானே
என்று அந்தக் காலத்து பானுமதி பாடுவாளே அந்த மாதிரி.

அந்த பிடிப்பு சுகம்.


இது நடந்து
ஒரு அஞ்சு ஆறு வாரம் இருக்கும்.  டக் டக் அப்படின்னு ஒரு துடிப்பு என்கிட்டேந்து வருது....

இன்னும் அஞ்சு ஆறு வாரம்  .. அட எனக்கொரு தல .!!!!

இன்னும் இரண்டு மூணு மாதம்   அதற்குள்ளேயே
எனக்குன்னு ஒரு உருவம் வருது... அட, கால், கை, எல்லாம் ...  எங்கே இருந்தோ ஒரு   குழாய் என் தொப்புளுக்கு கனெக்ஷன் தருது.

இன்னும் ஆறு, எட்டு, மாதமா நாட்கள் ஓடுகின்றன. .  நான் பெரிசு ஆகிகிட்டே வர்றேன். இருந்தாலும் நான் இருக்கும் இடத்தை சுத்தி சுத்தி அதே  இடத்திலேயே உருண்டுண்டு வர்றேன்.

ஒன்பது முடிஞ்சுடுத்து. ஆனா பத்திலே பத்து நாள் கூட ஆகியிருக்காது.

ஒரு கணம், இனிமே இங்கே இருக்க முடியாது..ஓடி விடணும் அப்படின்னு ஒரு வெறி. எங்கேந்து தான் அத்தன எனர்ஜி எனக்கு வருதோ ??!!!

தலைய முண்டி முண்டி பார்க்கிறேன். வெளிலே போவதற்கு வழி இருக்கான்னு தேடறேன்...  முண்டி முண்டி முன்னே போக முயலவும் செய்கிறேன்.

அதே சமயம்,
தலைப் பக்கம் ஒரு சின்ன வலி.

யோவ்..!
.யாருய்யா. என் தலைய புடிச்சு இழுக்கிறீங்க...?

கத்த முயல்கிறேன்.

ஆனா, அதற்குள், .....

ஆஹா.. வந்தாச்சு....
ஒரு விடுதலை உணர்வு என் உடல் முழுவதும் பரிணமிக்கிறது.
ஆடுவோமே..பள்ளி பாடுவோமே..ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என..

க்வா ...கவா....
யார் கத்துவது ?
நான் தான்.
புதுசா பிறந்து இருக்கிறேன்
 பூரிப்பில் கத்துகிறேன்.

புதிய வானம்...புதிய பூமி, எங்கும் பனி மழை பொழிகிறது....

யாரோ ஒரு அசுரன் ஒரு கத்திரிகோல் வைத்து என் தொப்புளை வெட்டி, பாண்டேஜ் போடுறான். .
இன்னொருவன் சுடு தண்ணியினால் என்னை குளித்து விடுகிறான்.

ஆஹா..அன்னிக்கு போகும்போது ஒரு குளியல்.
இன்னிக்கு வரும்போது ஒரு குளியலா !!

ஆனந்தம் பிரும்மானந்தம்...

சந்தோஷத்தில் திரும்பி திரும்பி, .... க்வா ..  .கா...கா....

சுற்றி உள்ளவர்கள் புன்னகை..  ஆங்காங்கே குரல்கள்.

பையன் புறந்திருக்கான் . பரணி நக்ஷத்திரம். தரணி ஆளப்போறான் . 

குரு உச்சத்திலே இருக்கான் ஒய்..!  குருசந்திர யோகமாக்கும் !!

ஆஹா. நான் பிறந்துவிட்டேனா மறுபடியும் !!!

தூங்கி விழிப்பது போலும் பிறப்பு'



என்ன ஒரே தூக்கா தூக்கி அணைத்து , என் வாயில்  ஒரு பஞ்சு மிட்டாய் மெத்தையை  அடைக்கிறாள் யாரோ...

ஆஹா...என்ன ஊற்று..!! என்ன அம்ருதம் !!

சுகம். சுகம். அந்த சுகத்திலே கண்கள் சுற்ற, தூங்கிபோகிறேன்.

இருந்தாலும், சுற்றி வர நடப்பதை உணர முடிகிறது.
வீடு முழுவதும் கல கல சிரிப்பு, கல்கண்டு வாரி இரைகிறது.
கொண்டாட்டம். புரிகிறது.பலருக்கு பல வகை தானங்கள்.

திண்ணையில் ஒரு தொண்டு  கிழவரிடம் வந்து யாரோ .

தாத்தா...உங்களுக்கு கொள்ளுப்பேரன் புறந்தாச்சு ...இந்தா கல்கண்டு. வாயைத் தொற ...


 புனரபி ஜனனம். புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்


தாத்தா... ஏ தாத்தா... எந்திரு தாத்தா...

என்ன தாத்தா எழுந்திரிக்கவே மாட்டேங்கறாரு !!!


*******************************************************88

குறிப்பு;
(ராபர்ட் லான்சா என்று ஒரு நார்வே பயோ சயின்சஸ் பார்டிகில் பிசிக்ஸ் விஞ்ஞானி , அவர், தனது ஆராய்ச்சியின் முடிவில், மனுஷன் இறந்து புதைக்கப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும் ஒரு 20 வோல்ட் எனெர்ஜி மீதம் உள்ளது  என்றும் ஆனால் அந்த சக்தி  எங்க போகிறது என்று ஆராய இயலவில்லை என்றார். அவருடைய ஆராய்ச்சியைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதியும் இருந்தேன். )

அவரது ஆராய்ச்சியின் உட்கருத்தையும் விவரத்தையும் எனது பல க்வாண்டம் பிசிக்ஸ் , பார்டிகில் பிசிக்ஸ் , பி.ஹெச்.டி. வரை படித்த நண்பர்களுக்கு அனுப்பித்து கேட்டதில், அவர்களும் இந்த ஆராய்ச்சியின்  செயல் முறையிலோ அல்லது முடிவிலே எதுவும் முரணானது இல்லை. (.No inconsistency in the process of evaluation or description of the objects of the paper.)

ஈன்ஸ்டீன் சொல்லியது போல ஒரு பொருள் தனக்குப் புலப்படவில்லை அல்லது புரியவில்லை என்பதனால் அது இல்லை என்று அர்த்தம் இல்லை. 

இந்த "கதை" இந்த கருத்தினால் உந்தப்பட்ட ஒன்றே. 

















சனி, 17 ஜனவரி, 2015

உறவு.



உறவு.

எனது இசை ஆசிரியர் திரு ஜெய்கீ இயற்றிய, மெட்டு அமைத்த ஒரு பாடல் இதோ.

கீ போர்டு மற்றும் பியானோ, ட்ரம்ஸ், வயலின், வாய்ப்பாட்டு, கற்றுத்தரும்
இவரது பீதோவன் இசைப் பள்ளி,  வளசரவாக்கம் ராதாக்ருஷ்ணன் சாலை, கல்யாணி கல்யாண மண்டபம் அருகே உள்ளது.



.