செவ்வாய், 21 ஜூன், 2022

மனசுலே நின்ன வசனம்

 

மனசுலே நின்ன வசனம்

இந்த தலை பூ கொடுத்து எழுத சொன்னா கொஞ்சம் தர்ம சங்கடம் தான்.
ஏன்னு கேட்டா, அவரவர்களுக்கு , அவரவர் தலைக்கு எது சூட் ஆகுமோ அந்த பூ வை வெச்சுண்டு அழகு பார்க்கிறது, பார்க்க சொல்வது தான் வழக்கம்.
இருந்தாலும், ஒரு வசனம் வாழ்க்கையோட ஒட்டி இருந்தா, அது சினிமா, இலக்கியம் தான் அப்படின்னு இல்ல, வாழ்க்கையிலே நடந்து இருந்தாலும்,
எழுதுங்க....அப்படின்னு ...சொல்றார்.
1965 அல்லது 1966 ஆ இருக்கும் னு நினைக்கிறேன்.
எங்க அம்மா தன்னோட எட்டு குழந்தைகள், அதுலே மூணு பேர் தான் என்னையும் சேர்த்து வேலைக்கு போய் இருந்தாங்க, மிச்ச பேரையும் கூட்டிண்டு,
திருச்சி லே 1943 லெந்து அப்பாவோட இருந்த வீட்டையும் அப்பா வையும் கொஞ்சம் பிரிஞ்சு இருந்து தான் ஆகணும் அப்படின்னு ஒரு சூழ்நிலை. எதுனாலே, யார்னாலே அப்டிங்கறதுக்கும் இந்த டாபிக் க்கும் சம்பந்தம் இல்ல. ஸோ அத அந்தப்பக்கம் வெச்சுட்டு,
மேட்டருக்கு வாங்க ...என்று சொல்வாங்க இல்லையா ...அது போல வாரேன் .
எங்க அம்மா தன்னோட அஞ்சு குழந்தலோட அக்ஞாத வாசம். பக்கத்து பொன்மலை கிட்ட ஆலத்தூர் ன்னு ஒரு சின்ன கிராமம். எஸ். யூ ஆர் ரைட். ஆலத்தூர் சகோதரர்கள். வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு குடி பெயர்ந்தஆச்சு.
1966 1967 ..
மூத்த தங்கை ஸ்கூல் ஸ்டாப். பண்ணியாச்சு. இரண்டாவது தங்கை, அடுத்த தம்பி, திருச்சிக்கு ரயில் போயிட்டு, திரும்பி, சாயந்திரம் அதே டிரைன் லே வரணும்.
அடுத்த இரண்டு வாண்டுகள், அந்த கிராம பள்ளியிலே சேர்த்தாச்சு அப்படின்னு தான் நினைக்கிறேன். சரியா நினைவு இல்லை.
அம்மா தினமும் கிராமத்துலேந்து டவுனுக்கு போயி, அங்க வழக்கமா சில வீடுகள் லே இருக்கிற குழந்தைகளுக்கு , ச ரி க ம ப தா நீ ச , லெந்து , நின்னு கோரி, வனஜாக்ஷி அந்த கீதம் எல்லாம் சொல்லி கொடுத்துட்டு,
அப்படியே, அப்பாவையும் ஒரு கண் எப்படி இருக்கார் னு ஜன்னல் வழியா பாத்துட்டு வருவா. நடந்து போயிட்டு நடந்து தான் வருவா. மொத்தம் 16 கிமி.
எங்க அம்மா சென்னை லே புறந்தவா. அவ அப்பா மைசூர் லே விச்வேச்வஸ்வரய்யா வோட சேர்ந்து அணை கட்டிய எஞ்சினீர். அண்ணா மைசூர் ராஜாவோட டாக்டர். இருந்தாலும், அந்தக்காலத்துலே, புறந்தாம் போறது அப்படிங்கறது ஒரு இமயமலை உச்சிக்கு செல்வது போலத்தான். எனக்கு தெரிஞ்சு, லைஃ டயத்துலே ஒரு தரம் இல்லை இரண்டு தரம் மைசூர் சேலம் போயிருக்கா.
ஜாஸ்தி படிக்கலை இருந்தாலும் பொது அறிவு ஜாஸ்தி. தகிரியமும் ஜாஸ்தி. மனித நேயம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி. நம்மை யாருக்கு பிடிச்சு இருக்கோ அவரோட மட்டும் பேசுவது என்று இருப்பார்.
அவருண்டு குழந்தைகள் உண்டு என்று இருப்பார் ..
ஒரு நாளைக்கு ,எங்க அம்மா திருச்சி லெந்து வரதுக்கு முன்னாடியே, திருச்சி லே படிக்கிற தங்கையும் தம்பியும் வந்தாச்சு.
மூத்த தங்கை அவர்கள் இரண்டு பேருக்கும் செஞ்சு வெச்சு இருக்கிற டிபினை போட்டு, அவர்கள் சாப்பிட்டுண்டு இருக்கும்போது, அவர்கள் இடையே வாய்ச்சண்டை.
திடீர்னு என்ன நினைச்சுண்டான் னு தெரியல்ல, இந்த புள்ள கோபத்துல நான் கிணத்துல குதிச்சுடுவேன் அப்படின்னு தங்கச்சிய பயமூர்த்தினானாம்.
அவளும் , தைரியம் இருந்தா , குதிடா பார்க்கலாம். அப்படின்னு சொல்ல,
இவன் திடு திடு ன்னு கொல்லைப்பக்கம் போயி, அங்க இருக்கிற கிணறு லே , பக்கவாட்டில் இருக்கிற படிக்கட்டு வழியா கீழ் வரைக்கும் போயிட்டான்.
இவன் கிணத்துக்குள்ளே போனதை மந்த இரண்டு தங்கைகள் கவனிக்கவில்லை. கொஞ்ச நேரம் கழிச்சு என்னடா இவனைக்காணோம் அப்படின்னு தேடினப்போ
பின்னாடி கிணத்துலேந்து சன்னமா சவுண்ட் வருது.
அம்மா,...அம்மா...ஏற தெரியல்ல. அப்படின்னு அழ ஆரம்பிச்சுட்டானாம்.
இந்த தங்கைகளுக்கு என்ன செய்யறது ன்னு தெரியல்ல. அம்மாவும் இல்ல. பாதாள கரண்டி யா விடலாம் என்று பார்த்தா அது பக்கத்து வீட்டிலே இருக்காம்.
கிணத்துல தண்ணீர் ஒரு 25 அடி ஏ இருக்கு. இவன் அதுக்கு மேல இரண்டு அடி மேல இருக்கான்.
இந்த இரண்டு தங்கைகளும் பக்கத்து வீட்டுக்கு போயி,
மாமா...மாமா....தம்பி, கிணத்துல விழுந்துட்டான்...னு கத்த...
ஒரு நாலஞ்சு பேர் அக்ரஹாரம் இல்லையா...ஓடி வந்து......
அதுலே ஒருவர் கையிலே கயிறோட இறங்கி, அவனையும் தன்னோட கட்டிண்டு , மேலே வந்து அவனை காப்பாத்தி இருக்கார்.
மேலே வந்ததும் பெரிய தங்கை அவனை இரண்டு மொத்து மொத்தினாளாம்.
அந்த டயத்திலே தான் அம்மா வரா வீட்டுக்குள்ளே இத்தனை பேர்...என்ன என்ன ன்னு கேட்டுண்டு..
ஒருவர் விவரமா ஸ்டோரி சொல்ல,
அம்மா...என் தம்பியை கூப்பிட்டு, அனைச்சுண்டு, சொல்றாளாம்.
டேய்..பாலு...
குதி...கிணத்துல இல்ல,
சமுத்திரத்துலே வேணாலும் குதி.
ஆனா, குதிக்கிறதுக்கு முன்னாடி, எப்படி எழுந்துக்கறது ன்னு யோசனை பண்ணிட்டு குதி.
என்றாளாம்.
எங்க அம்மா சொன்ன நீதி வாக்கியம்
அதான். ரிஸ்க் எடுக்கலாம். எடுத்துக்கத்தான் வேண்டும். பல பல சிச்சுவேஷன் லே .. ஆனா எந்த அளவுக்கு போகணும். எப்படி எப்ப திரும்பி வரணும்
அப்படின்னு ஒரு ரிஸ்க் மேனேஜ்மேண்ட் , க்ரைடீரியா மனசுலே இருக்கணும்.
இன்னும் ஞாபகம் இருக்கு. அந்த தம்பி பிற்காலத்திலே பனாரஸ் யூனிவர்சிட்டி லே பிலாசபி ப்ரோபசர் .
லைஃ டயத்திலே வந்த சூழ்நிலையிலே சவாலே சமாளி என்று சமாளித்ததும் எங்க அம்மா கொடுத்த அறிவுரை தான் னு நினைக்கிறேன்.
அதுக்கு ஆப்போசிட் சுப்பு தாத்தா.
கான்பூர் போ ...ஜாம்சேட்புர் போ ப்ரோமோஷன் லே சொன்னப்போ,....1989 லே .... There were good reasons but.....
ஆனா...ஒன்னு சொல்லணும்.
மானசரோவர் லே கங்கை நீரிலே காலை 5 மணிக்கு இறங்கி விறைச்சு போயி, இருக்கேன்.
எதைக்கண்டு அஞ்சவேண்டுமே அதைக்கண்டு அஞ்சத்தான் வேண்டும். மற்றதை எதிர்கொள்ள வேண்டிய துணிவை ஏற்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும்.
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை..அஞ்சுவது
அஞ்சல் டு அறிவார் தொழில்..
.வள்ளுவர் சொல்லி இருக்கார் இல்லையா.
பிளை டு ரியாஸ் அன்னோன் பட் ஹாவ் ஆள்வேவ்ஸ் ஏ பிளான் டு லேண்ட் சேப்
Fly to areas unknown, but have always a plan to land safe, my boss used to say when i took charge in 1992 as HR man.
As a HR Manager, I did dive into diffiult areas, but always had a plan to swiftly get out of the situation too.
எங்க அம்மா சொல் இன்னிக்கும் நினைவு இருக்கு.
The well is also well in my memory.
May be an image of outdoors
Sankaranarayanan Usha, Anandhi Vaithiyanathan and 14 others
11 Comments
Like
Comment
Send

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக