திங்கள், 7 மார்ச், 2016

கண் ஒன்றைத் திறவாயோ ?

எங்கே எந்நேரத்தில்
என்னை அழைப்பாயோ ?
புன்னைவனீச்வரா என்
முன்வினை தீராயோ

பாவைக்கு உயிர் கொடுத்தாய் -பூம்
பாவைக்கு உயிர் கொடுத்தாய்
புன்னை மரத் தலத்தானாய்
சம்பந்தன் பாடிய
மடமயிலைக் கோவில் கொண்டாய் .

காத்திருப்பேன் எக்காலம் ?
கபாலீச்வரா ?
கருணா சாகரா ! நின்
கருணை நான் வேண்டி நின்றேன்.
கண் மூன்றைத் திறவாவிடினும்
கண் ஒன்றைத் திறவாயோ  ?
.....
(எங்கே என் நேரத்தில்....)




கபாலீஸ்வரன் அமர்ந்த தலத்தில்
திருஞான ம்பந்தன் பாடிய பாடல் இதோ:




.
மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
 கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் 
ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்
  கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய். "






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக