புதன், 13 ஏப்ரல், 2016

பொறுத்திருங்க

நாலு மணிக்குத் தான் திறக்கும் அந்தப் பூங்கா.

இருந்தாலும் அந்த நாலு பேர் , அதான், 78, 81,84 , 67 இளைஞர்கள் எனக்கு முன்னாடியே அங்கு வந்து இருந்தார்கள்.

நான் நாலு பத்துக்குச் சென்றேன்.
என்ன இவ்வளவு லேட் டா வந்திருக்கீங்க என்றது ஒரு கிழம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா எதுனாச்சும் சொல்வாரு, பொறுங்க என்றார்  ஒருவர்.

நம்ம வர்றது நம்ம கையிலா இருக்கு ! என்று தத்துவம் சொன்னது இன்னொன்று.

"அதெல்லாம் இருக்கட்டும். ஒரு விஷயம் மனசை குடைஞ்சுகிட்டே இருக்கு."
என்றார் அந்த 84 வயது இளைஞர் .

 என்னா  ? என்று ஏகோபித்த குரலில் மிச்ச எல்லோரும் சத்தமிட,
அவர் சொல்றார்.

நாளைக்கு தமிழ் வருடப்பிறப்பு இல்லையா ?

ஆமாம்.

இந்த வருஷம் துர்மிகி லே இரண்டு புத்தாண்டா  ? ஒன்றா ?

புரியல்லே ...

புரியல்லயா...புரிஞ்சவங்க சொல்வாங்க...
பொறுத்திருங்க


*****************************************************************

எல்லோருக்கும் நமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி: சித்ரா சுந்தர் வலைத்தளம் 




 aavin milk parlour near our place.